Wednesday, December 31, 2008

உருப்புடாதது_அணிமாவின் தியாகம்



சும்மா மொக்கை பதிவுகளை போட்டு பொழைப்பை ஓட்டிகிட்டு இருந்த எனக்கு உருப்புடாதது_அணிமா போறபோக்குல எனக்கு பட்டாம் பூச்சியை பிடிச்சு காலை ஓடிச்சு என் கையிலே கொடுத்து புட்டாரு, பின்னூட்ட பிதா மகன் கொடுததனாலே அதை புல்லா வாங்கிகிட்டேன், கொடுத்ததோடு விடாம இதை பிரிச்சி கொடுங்க ன்னு சொத்தை பிரிச்சி கொடுக்க மாதிரி சொல்லி புட்டாரு.அவரை பத்தி இன்னும் ஒன்னும் சொல்லணும், எனது முதல் பதிவுக்கு முத போணி பண்ணினவரும் அவருதான்.


யாருக்கு திருப்பி கொடுக்கலாம்ன்னு யோசிக்க பாத்தப்ப ஆளே இல்லாத கடையிலே எப்போதும் டீ வாங்க வார என் சக தோழர்கள் குடுகுடுப்பைக்கும், பழமைபேசிக்கும் தான் குடுக்கிறது முறை, இருந்தாலும் யோசிக்கிறேன்.யோசிக்கும் போது கடை பக்கம் வார ஏனைய நண்பர்களை சும்மா விடலாமா, அது தமிழர் பண்பாடு அல்ல.அதனாலே அவங்களுக்காக



நீ


குண்டுசியையே தூக்கி விட்டாயே


என


பாராட்ட ஓடி வந்த


என்னை


கொணிஊசியால்


குத்தி விட்டாயே


-----------------------------------------------


உனக்காக


அதிகாலையில் இருந்து


அந்தி மாலை வரை காத்திருந்தேன்


மனம் மயக்கும் மாலையில்


வந்த நீயும் காதலிகிறாய்


உன்னுடன் வந்த மந்தியை


என நானும் தெரிந்து கொண்டேன்


------------------------------------------------


என்


நிரந்தர காதலி எங்கோ


பசலை நோயால் வாட


அவசர காதலியான


உன்னுடன் எப்படி


பசை போல்


ஒட்டமுடியும்


-----------------------------------------------------


உன்


கொலுசு மணி ஓசைக்கு


மகிழ்ந்தது என் மனம் மட்டுமல்ல


சேட்டுவின் மனமும் தான்


--------------------------------------------------------------


எல்லோரும் போதும் போதும் என்று சொல்லுவது எனக்கும் கேட்கிறது, அதனாலே வாசகர்கள்(?) நலன் கருதி விட்டுறேன், நீங்களும் விட்டுடுங்க,போறதுக்கு முன்னாடி யாருக்கு விருது கொடுகிறதுன்னு சொல்லனுமா, இது வரைக்கும் யார் யார்க்கு எல்லாம் கிடைக்கலையோ அவங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன், இவ்வளவு பெரிய மனசு பண்ணி விருது கொடுத்த எனக்கு பாராட்டு விழா, பரிசு ஏதும் வேண்டாம் என கேட்டுகிறேன் . விருது கிடைச்ச நீங்க என்ன செய்யணுமுன்னு இங்கே பாருங்க

http://urupudaathathu.blogspot.com/2008/12/butterfly-effect.html


Sunday, December 28, 2008

இதை என்னன்னு சொல்ல

உன்

வாசல் படி வரை

வந்த என்னை வதம்

பண்ணிய

நீ

உன்

இதய வாசல் வரை

வர வேண்டும்

என நினைத்தால்

என்

உயிரே போகுது

-----------------------------------------------------------
உன்

கால் கொலுசை

திருடிய எனக்கும்

உன்னை

திருடியவனுக்கும் சிறை

ஆனால்

நான்

இருக்கப்போவதோ

அரை நாள்

அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்


Friday, December 26, 2008

சங்கம் திவால்

சங்க தலைவர் : என்ன பொருளாளரே நம்ம சங்கத்தோட நிதி நிலைமை எப்படி இருக்கு

சங்க பொருளாளர் : சங்கு ஊதுற நிலையிலே இருக்கு , மஞ்ச கடிதாசி கொடுக்க வேண்டியது தான் பாக்கி, சங்கத்திலே கடன் வாங்கி வெளி நாட்டுக்கு போன உறுப்பினார் எல்லாம் கடனை திருப்பி கொடுக்காம கம்பிய நீட்டிடாங்க

சங்க தலைவர் :வெளி நாட்டுல ரூபாய்களை வெட்டி அள்ளிட்டு வந்து கொடுப்போம்னு சொன்னாங்க, இப்ப சங்கத்தையே வெட்டி விட்டுட்டாங்க, சங்க ௬ட்டத்துக்கு வார உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்ல?

சங்க பொருளாளர் : ஒத்த ரூபாய்க்கு சில்லறை மாத்தி வச்சு இருக்கேன், அதை வாங்கி நெத்தியிலே வச்சு கிட்டு போக சொல்லலாம்.

(சங்கத்திலே கடன் வேண்டி விண்ணப்பித்த இரு உறுப்பினர்கள் வருகிறார்கள்)

உறுப்பினர் 1: ஐயா சங்கத்துல 100 ரூபா கடன் வாங்க விண்ணப்பிச்சி 4 வருஷம் ஆச்சு, இதுநாள் வரைக்கும் கால் காசு கையிலே வரலை

உறுப்பினர் 2: என் பெண்டாட்டி முத பிரசவத்துக்கு போறப்ப கடன் கேட்டேன், இப்ப ஆறாவது பிரசவத்திற்கு போயிருக்கா, இன்னும் காச கண்ணுல காட்ட மாட்டுகீங்க , இன்னைக்கு மட்டும் காசு கொடுக்கலை நடகிறதே வேற, காசுக்கு அலங்சியே அரை அடி கால் தேஞ்சு போச்சு.

சங்க பொருளாளர் : அண்ணாச்சி அது பத்திதான் நானும் தலைவரும் யோசிச்சு கிட்டு இருந்தோம்.

உறுப்பினர் 1: நாசமா போச்சு, எத்தனை வருசமா யோசிப்பீங்க, இத நூறு ரூபாயையை நம்பி கல்யாணமும் முடிச்சு ரெண்டு புள்ளைக்கு தகப்பன் ஆகிட்டேன்.

உறுப்பினர் 2: நீ கல்யாணதிற்கு கேட்டது உன் சாவுக்கு தான் கெடைக்கும் போல தெரியுது

சங்க தலைவர் : உங்க கஷ்டம் புரியுது,ஆனா பாருங்க அமெரிக்கா திவால் ஆகிப்போச்சு, ஊரெல்லாம் அதே பேச்சுதான்,வேலை வெட்டி இல்லாத எங்களுக்கும் வேலை இல்லாம போச்சு

உறுப்பினர் 2: ஏலே காசு இல்லனா சொல்லி புடுங்க, அதுக்காக அமெரிக்கா திவால் ஆச்சு, ஆப்பிரிக்கா திவால் ஆச்சுன்னு கதை உடப்புடாது

உறுப்பினர் 1: நீங்க கடன் தரும் வரைக்கும் இந்த நாற்காலி, மேசை எல்லாம் எங்க வீட்டுல இருக்கட்டும்,என் சின்ன வீட்டுக்கு போனா உக்கார முடியல

சங்க பொருளாளர் : அப்படி எல்லாம் செய்யபுடாது அப்பு, ஏற்கனவே நாங்க திருடுனது மிச்சம் இருக்கிற சொத்தே இதுதான்

உறுப்பினர் 2: ஏலே வேட்டியை உருவாம உட்டுட்டு போறோம்னு சந்தோசபடுங்க, வா மாப்ள போகலாம், ஆளுக்கு ஒன்னும் எடுத்துட்டு போவோம்.

சங்க தலைவர் : நல்ல வேலை தப்பிச்சேன், நான் கோவணம் ௬ட போட்டு வரலை .

சங்க பொருளாளர் :தெரியுமே உங்க கோவணத்தை தான் அமெரிக்காகாரன் எப்பவோ உறுவிட்டு போய்ட்டான்னு, சங்கத்துக்குன்னு இருந்த ரெண்டையம் நவட்டிட்டு போய்டாங்க, இருக்க ஒரு ரூபாயை ஆளுக்கு பாதி பாதி எடுத்துக்குவோமா?

சங்க தலைவர்: சங்கத்தை வச்சு கந்து வட்டி பண்ணி கல் காளை மாதிரி இருந்த நம்மளை, திருவோடு எடுக்க வச்சுடான்களே,இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல

சங்க பொருளாளர் :அப்படியே தான்.. இன்னும் கொஞ்சம்.. நீங்க அழுதா இந்த வசனம் கொஞ்சம் தூக்கலா நல்ல இருக்கும், எப்படியாவது கஷ்ட்டப்பட்டு அழுங்க,வேணா தங்க மணியை வரச்சொல்லவா?

சங்க தலைவர் : நானே வயத்தெரிச்சலில் இருக்கேன், என் வாயை கிளறி வாங்கி கட்டாதே, உடைஞ்சு போன சங்கத்தை ஒட்ட வைப்பேன், இது தொலைந்து போன என் கோவணத்தின் மீது சத்தியம்

சங்க பொருளாளர் : தெலுங்கு பட ஹீரோ மாதிரியே கைய காலை ஆட்டிகிட்டு குத்து வசனம் பேசுறீங்க,(யாரவது வந்தா தயவு செய்து விசில் அடிங்கோ) இங்கே தொடரும்ன்னு போடுறீங்களா

சங்க தலைவர் : கடைப்பக்கம் வாரதே ரெண்டு பேரு, அவங்களையும் வர விடாம பண்ணிருவ போல,இந்த அறிவிப்பை சங்க பலகையிலே ஒட்டு

சங்க பொருளாளர் : சரிங்க சாமி

(மறு நாள் காலையிலே அலைகடலென ௬ட்டம், இந்த பதிவுக்கு வார ௬ட்டம் மாதிரி இல்லை, நிஜக் ௬ட்டம்)

சங்க பொருளாளர்: (கைபேசியில்..) தலைவரே சங்கத்து முன்னாடி சினிமா நடிகையை பார்க்க வந்த மாதிரி ஒரே ௬ட்டம்.சங்கத்துக்கு மஞ்ச கடிதாசி கொடுத்தாச்சா?

சங்க தலைவர் : சங்கத்துக்கு கடன் கொடுக்க வேண்டியவன்கிட்ட எல்லாம் வசூல் பண்ணி ரசித்து வாங்கிடு

உறுப்பினர்கள்: நான் தான் முதல்ல வந்தேன்.. நான் தான் முதல்ல வந்தேன்

சங்க பொருளாளர் : இடி விழுந்த இருளாண்டி மாதிரி சொல்லுறாங்க,சங்கத்திலே கொலையே விழுந்தாலும் சலனம் இல்லாம இருக்கும் நிறையை தலைகள் எல்லாம் வந்திருக்கு, நோட்டை நீட்டிவசுல் பண்ண வேண்டியது தான், எல்லோரும் குஸ்புவை பார்க்க வந்தது மாதிரி அவசரப்படாம, கோவிலுக்கு வந்தது மாதிரி வரிசையிலே வந்து துட்டை கொடுங்க

(காசு வசுல் முடிந்த உடனே)

சங்க பொருளாளர் : பணத்தை எண்ணி எண்ணி ரெம்ப அசதி ஆகிப்போச்சி

உறுப்பினர்கள்: எப்ப வருவாக.. எப்ப வருவாக

சங்க பொருளாளர் : தலைவரு இப்ப வருவாரு அடுத்த கடை பக்கம் உளவு பார்க்க போய் இருக்காரு.

உறுப்பினர்கள்: அவரை கேட்கலை, அவுக எப்ப வருவாக..எப்ப வருவாக.

சங்க பொருளாளர் : யாரு அவுக

உறுப்பினர்கள்: அதான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா

சங்க பொருளாளர் : என்னது சில்க் ஸ்மிதாவா எங்க.. எங்க (மனசுக்குள்ளே) அடப்பாவி மக்கா, அவிங்க செத்து பல வருஷம் ஆகிபோச்சுன்னு தெரியாத பச்ச புள்ளைகளா நீங்க, இந்த விஷயத்தை தான் முதல்வர் ஒட்ட சொன்னாரா, படிக்க தெரியாத தாலே இப்படி மாட்டி கிட்டேனே,தெரியாத்தனமா வந்துட்டேன் தலை தெறிக்க ஓடும் முன்னே வழி சொல்லிட்டு போங்களேன்


Wednesday, December 24, 2008

வில்லு விமர்சனம்

இளைய தளபதி விஜய் மீண்டும் ஜெயித்து விட்டார்.தனது வழகமான படங்களை விட வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்து உள்ளது வில்லு. காதல், கோபம், பாசம் மற்றும் சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு அருமை. "இளையபிள்ளை எடுப்பார் கைபிள்ளை இல்லை எடுப்பவருக்கு உதவும் பிள்ளை" என்பதை நிருபிக்கும் படம். சரி சரி முன்னுரைகளை விட்டு கதைக்கு செல்வோம்

கதை படி தஞ்சை அருகில் ஒரு விவசாய குடும்பத்தில் முன்றாவதாக பிறந்த தமிழ் மாறான் தான் விஜய்.சிறு வயது முதல் படிப்பு வராததால் தான் அண்ணன் மற்றும் அக்காள் படிக்க விவசாயம் செய்து உதவுகிறார்.

தனது மாமன் மகளாக வரும் புதுமுகம்(யாருன்னு தெரியலை) நாட்டு வைத்தியம் செய்யும் கதா பாத்திரம் கச்சுதமாக செய்து இருக்கிறார்.

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனைக்காக விஜய்க்கும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினருக்கும் தகராறு வருகிறது. அவருக்கு விஜய்க்கும் மோதல், ஆனால் அவர் மகளுக்கும் விஜய் அண்ணனுக்கும் காதல்.

பட்ட படிப்பு படித்த அண்ணனுக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வேலை. விஜய் அக்காள் கல்லூரியில் முதுகலை பட்டம் படிக்கிறாள்.

உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் சுயருபம் தெரிந்த விஜய்,தனது அண்ணன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், அவரையும் மீறி திருமணம் நடக்கிறது.திருமணம் முடிந்த கையோடு மாமனார் வீடு செல்லும் விஜய் அண்ணன் அங்கேயே தங்குகிறார்.

மகன் தான் வீட்டுக்கு வரவில்லை தாங்களாவது பெரியமகனை பார்க்க போகலாம் என அவரை பார்க்க செல்லும் விஜய் தாய் தகப்பனார் அவமான படுத்த படுகிறார்கள். அதை தட்டி கேட்கும் விஜய்க்கும் அவரது அண்ணனுக்கு இடையே உறவு முறிகிறது.

இந்நிலையில் கல்லூரியில் முதுகலை பட்டம் படிக்கும் நிச்சயிக்க பட்ட அக்காள் திருமணம் நின்று விடுகிறது.

பல வருடங்களுக்கு பிறகு மழை பெய்து நெல் அறுவடை செய்யும் நேரத்தில் கன மழை பெய்து வெள்ளம் வந்து எல்லா வற்றையும் அழித்து போடுகிறது. வெள்ள நிவாரண நிதி அரசாங்கத்தில் இருந்து கொடுக்க படுகிறது.

அந்த நிதியை விஜய் திருடி விட்டதாகவும் மேலும் தன் அதை பார்த்த தன் மாமன் மகளை கொலை செய்ததாகவும் விஜய் கைது செய்து 10 ஆண்டுகள் காவல் தண்டனை விதிப்பதோடு முதல் பாதி முடிகிறது.

( இங்க இடைவேளை படத்துக்கு, பதிவுக்கு கிடையாது,படம் போதும்னு நினைக்கிறவங்க வீட்டுக்கு போகலாம்)

இரண்டாவது பாதியில் விஜய் சிறையில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மூலம் விட்டு போன தான் பள்ளி படிப்பை தொடர்கிறார். அவரின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர் 5 வருட சிறை தண்டனை முடிந்து வெளியே வருகிறான்.

இந்நிலையில் தன் வெளி நாட்டு பட்ட படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வரும் உள்ளூர் சட்ட மன்ற உறுபினரின் இளைய
மகள்(நயன் தாரா) ஊருக்கு வருகிறாள். அவளை பகடை காயாய் பயன்படுத்தி நிவாரண பணம் மற்றும் தன் மாமன் மகள் கொலை ஆகியவைற்றை கண்டு பிடிப்பது மற்றும் நின்று போன அக்காள் திருமணத்தை நடத்துவதுதான் மிதி கதை.

நயன் தாராவை தன் வலைக்குள் விழ வைக்க மேலும் தன்னை சிக்க வைத்த தந்தர காரர்களை விஜய் பயன் படுத்தும் தந்திரம் தமிழ் சினிமாவுக்கே புதுசு (தயவு செய்து நம்புங்க..).

உண்மைகள் தெரிய வரும் விஜய்க்கு அதிர்ச்சி அடைகிறான் ஏனெனில் அவரது அண்ணனும் அதிலே சம்பந்த பட்டிருப்பது தெரிய வருகிறது, அவருடன் மாவட்ட ஆட்சியாளரும்,உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரும் கூட்டு சதி செய்து தன்னை மாட்டி விட்டதை கண்டு பிடிக்கிறார்.

அவர்களால் ஏற்படும் தடைகளை உடைத்து எறிந்து நீதிக்கு முன் அவர்களை நிறுத்தி தர்மத்தை நிலை நாட்டுகிறார்


விஜய் ரெம்ப நாளைக்கு பிறகு தன் நடிப்பை(?) வெளிப்படுத்தி இருக்கிறார். படிப்பின் பெருமையை வழியுறுத்தி அவர் பேசும் வசனங்களுக்கு,பாசத்திற்காக அண்ணனிடம் உருகும் போதும் விசில் பறக்கிறது, இப்படி காதல், மோதல், ஆவலுடன் எதிர் பார்த்தல்(suspense) மற்றும் பாசம் எல்லாம் சரி விகிதத்தில் கலந்து கொடுக்கப்பட்ட ஒரு நல்ல கலவை (நான் சொன்னதான் உண்டு).

கில்லியை 10 மடங்கு வேகம் விறுவிறுப்பு.

நடிகைகள் பாட்டுக்கு மட்டுமல்லாமல் நடிப்புக்கும் சிறிது வாய்ப்பு கொடுக்க பட்டு உள்ளது. வடிவேலு காமெடி பிரமாதம் (இதை விடவா !!)

இவ்வளவு நேரமா யாராவது இந்த கதையை யாரவது வாசித்தால் அவர்களுக்கு ஓன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசை இது நிச்சயமாக திரைப் படமாக வந்தாலும் வரலாம்(தமிழ் ரசிகர்களின் தலை எழுத்து அப்படி இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்)

முடிக்க முன்னாடி ஒரு குத்து வசனம்

படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை)

கதை திருடர்கள் கவனத்திற்கு :

இந்த கதையின் காப்புரிமை(கர்மம் டா சாமி..) யாருக்கும் வழங்கப் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் மீறி திருடுபவர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும்


Tuesday, December 23, 2008

500 பின்னூட்டம் வேணும்

சோமு பதிவு உலகம் வந்து ஒரு வருஷம் ஆச்சி, இவன் என்ன தான் எழுதினாலும் இவன் கடை பக்கம் யாரும் வாரது இல்லை, ஒரு பிரபலமான தமிழ் திரட்டி யில் இவன் இணைந்து இருந்தான். இருந்தாலும் இவன் கடை பக்கம் காத்து ௬ட வரலை, எழுதி எழுதி சலிச்சுபோனான்,இவனோட எந்த பதிவுகளும், அந்த திரட்டியிலே உள்ள "மிளகாய்" இடுகைக்கும், நேயர் விருப்பத்திற்கும் போனதே இல்லை.


சோமுவோட பதிவுகளுக்கு அவனே அனானியா பின்னூட்டம் போட்டும் பார்த்து கருத்து திரட்டி யில் இவன் பதிவு நம்ம ஊரு வானிலை செய்து மாதிரி வராமலே போய்டும்.


அவனோட எழுத்துகள் மேல அவனுக்கே கோபம் வந்திடும், மனதை சமாதான படுத்த அவனாக சில சாக்கு போக்குகளை சொல்லி கொள்வான், கமல் கதை,வசனம் எழுதிற எல்லா படங்களும் நூறு நாள் ஓடுவதில்லை, அதற்க்காக அவர் கதை எழுதாமல் இல்லை, படம் நடிக்காமல் இல்லை, இன்னைக்கு இளைய தளபதி எல்லாராலும்(?) அழைக்க படம் விஜய் ௬ட ஒரு காலத்திலே, இவன் மூஞ்சை எல்லாம் காசு கொடுத்து பார்கனுமான்னு விமர்சிக்க பட்டவர், அதற்காக அவர் நடிப்பதை(?) விட்டு விட்டாரா.


என்னோட எழுத்துக்களுக்கு நானே ரசிகன், அதனாலே நான் தொடர்ந்து எழுதுவேன், இப்படி பல காரணங்களை சொல்லி சமாதானம் அடைவான். என்னதான் ஆறுதல் அடைந்தாலும் கடை காத்து வாங்குதே ன்னு வருத்தமும், வேதனையும் அவனுக்கு உண்டு, எல்லாருடைய கடைக்கும் போய் பின்னூட்டம் போட்டும் பார்த்தான் ஆனாலும் பலன் இல்லை.

எதை பத்தி எழுதினால் தன் கடை பக்கம் வருவான்னு யோசித்த போது,பதிவு உலகத்திலே சிலர் அரசியல் பத்தி எழுதுகிறார்கள், அவர்களை மாதிரி எழுதினால் தனக்கு அரசியல் முத்திரை குத்திவிடுவார்கள், மதம் மத சாயம் பூசப்பட்டு விடும். நாட்டு நடப்புகளை எழுத தெரியாது, தமிழ் இலக்கியங்கள் தெரியாது,ஈழ பிரச்சினையை பத்தி எழுதினா காங்கிரஸ்காரர்களுக்கு பிடிக்காது, அவங்களோட எதிர்ப்பை சந்திக்க வேண்டிய வரும். அதனாலே அவனுக்கு தெரிந்த கவிதை(?), கதை களிலே காலத்தை ஓட்டினான்.எப்படி எழுதினாலும் இவனா அனானியா போட்ட பின்னூடத்தை தவிர யாரும் வருவது இல்லை

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவானாய் தனது கடைசி பதிவை ஆரமித்தான், அந்த பதிவுக்கு தலைப்பு "500 பின்னூட்டம் வேணும்" ன்னு தலைப்பை வச்சி தனது அனுபவத்தை எழுதினான். அவன் என்ன எழுதினான் ன்னு தெரியனுமுன்னா மறுபடியும் மேல இருந்து படிங்க.
எழுதி பதிவை போட்டதும் ரஜினி படம் பாட்சா மாதிரி ஹிட் ஆகிடுச்சி, அந்த பதிவு மிளகாய் இடுக்கைகும், நேயர்கள் தொப்பிக்கும் போய்டுச்சி, தலைப்புக்கு ஏத்த மாதிரி அவனுக்கு 500 பின்னூட்டமும் கிடைத்தது, படம் எடுத்து முடிச்ச உடனே கையில காசு இல்லாத தயாரிப்பாளர் கால் நடையா திருப்பதி போய் மொட்டை அடிக்க வேண்டியவரை, விமானம் ஏறி அமெரிக்கா நியூ ஜெர்சி பாலாஜி கோவில்ல மொட்டை அடிக்கிற அளவுக்கு வந்ததை போல உணர்ந்தான்.

பயங்கர சந்தோசத்திலே அலுவலகம் வந்தான் சோமு, வந்ததும் அவனுடைய மேலாளர் அழைப்பு அனுப்பு இருந்தார், அதை பார்த்து விட்டு புன்னகையுடன் அவருக்கு வணக்கம் செலுத்தினான், அவர் சோமு நீங்க இன்னைக்கு ரெம்ப சந்தோசமா இருக்கீங்க, ஆனா உங்களுக்கு ஒரு சோக செய்தி, கடந்த ஆறு மாசமா நீங்க வேலை ஒழுங்கா செய்ய வில்லைன்னு புகார் வந்திருக்கு, ஒரு பாரம் டேவேலோப் பண்ண முடியலை உங்களாலே, அதனாலே உங்களை வேலை யை விட்டு தூக்குறோம், நீங்க இப்பவே வீட்டுக்கு போகலாம், காவலர்கள் புடை சூழ அவன் வீட்டுக்கு அனுப்பபட்டான், அவன் சந்தோசத்திலே இடி விழுந்தாலும் அடுத்த பதிவுக்கு கரு கிடைத்ததை நினைத்து சந்தோஷ பட்டுக்கொண்டே நடையை கட்டினான்


Wednesday, December 17, 2008

சுயமா வரன்?

அமெரிக்காவிலே இருந்து கொண்டு என்ன தான் குத்தாட்டம், தொடைஆட்டம், கும்மி ஆட்டம் போட்டாலும்,தனக்கு வரப்போகிற மனைவி மட்டும் கலாசாரத்தை கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என ராபர்ட் தன்னோட மனசுக்குள்ள தீர்க்கமா வச்சு இருந்தான், ஆனா அவள் அழகுக்கு இலக்கணம் ன்னு ஒன்னு இருந்தா அதுக்கு இம்மி அளவும் குறை இருக்கப் புடாது என்பதிலேயும் உறுதியா இருந்தான்.

இப்படி ஒரு அகில உலக எதிர்பார்ப்புகளோட பெண் தேடும் வேலைகளை ஆரமித்தான், ஆரம்பத்திலே புகை படம் பார்க்காம பெண் வீட்டிலே போய் பஜ்ஜி,வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு வேண்டாம் என்று சொல்லி விடுவான், அதன் பிறகு முறையை மாத்தினான் புகை படம் பார்த்து அதிலே பிடிச்சு இருந்தா,நேரிலே போய் பார்க்கிறது, இதிலேயும் வழக்கம் போல ஒன்னும் அவனுக்கு பிடிச்ச மாதிரி அமைய வில்லை, புகை படத்திலே நல்லா இருக்கா நேரிலே நல்லா இல்லை, நேரிலே நல்லா இருந்தாலும், அவங்க கிட்ட ஏதாவது குறை இவனுக்கு தெரிந்து வேண்டாம்ன்னு சொல்லி விடுவான்.

இந்த கதை(இந்த பதிவு கதையல்ல) ரெண்டு வருசமா ஓடினது நெடுந்தொடர் மாதிரி, இதற்காக நான்கு முறை அமெரிக்காவிலே இருந்து வந்து போன செலவில் ஒரு ஆயிரம் பெண்களுக்கு கல்யாணம் முடித்து வைத்து இருக்கலாம், இவனுக்கு பொண்ணு தேடி தேடி எல்லோரும் அலுத்து போய்ட்டாங்க, இந்த இரண்டு வருட காலத்திலே ராபர்ட்டும் கொஞ்சம் மாறி இருந்தான், ஆரம்பத்திலே நிலைமையிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக மாற ஆரமித்தான்.கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்.

எப்படியோ ஒரு பெண்ணு பிடித்து போக எல்லோரும் பெண்ணை நேரில் பார்க்க போய்ட்டாங்க,ராபர்ட் அவங்க வீட்டுல சொல்லிவிட்டான், கண்டிப்பாக இதுதான் நான் பார்க்கும் கடைசி பெண், வீட்டுக்குள்ளே போய் வழக்கமான சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்ச உடனே, அந்த பெண்ணுடன் அவன் தனியாக பேச வேண்டும்னு கோரிக்கை வைத்தான்.கோரிக்கை ஏற்கப்பட்டு இருவரும் தனி அறையில் சந்தித்தனர்.ராபர்ட் தனக்கு தேவையான கேள்விகளை எல்லாம் கேட்டான், பொறுமையாக பதிலை சொன்ன அவள், கேள்விகள் முடிந்த நிலையில் , அவனிடம் ஒரு புகை படத்தை நீட்டினாள்.

அதை கையில் வாங்கிய ராபர்ட்

"இந்த பொண்ணு யாரு உங்க சொந்தம்மா, இவங்களுக்கு ஏதும் உதவி செய்யனுமா?"

"நீங்க இவளுக்கு நிறைய பண்ணி இருக்கீங்க"

சொல்லி விட்டு பேரு மூச்சு விட்டுவிட்டு

"சரி அதை விடுங்க.. அமெரிக்காவிலே மக்கள் எல்லாம் எப்படி பழகுவாங்க"

"மனிதாபி மானத்தோட பழகுவாங்க, யாரை பார்த்தாலும் ஒரு புன் சிரிப்போடு வணக்கம் சொல்லுவாங்க, நாம வருகிறது தூரத்திலே தெரிந்தால், நாம வரும் வரைக்கும் கதவை திறந்து காத்து நிப்பாங்க"

"அதை ஏன் நீங்க படிக்கவில்லை"

"ஹும் என்ன சொன்னீங்க"

"ஏன் அங்க இருக்கிற நல்ல பழக்கங்களை நீங்கள் உபயோக படுத்திறது இல்லை"

"நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு புரியலை"

"இதை எல்லாம் நீங்க உங்க நடைமுறை வாழ்கையிலே கடை பிடிக்கிற மாதிரி தெரியலை, நான் கொடுத்த புகை படத்திலே உள்ள பெண்ணை நீங்க ஏற்கனவே பார்த்து இருகீங்க, அவங்களை பார்த்து விட்டு நீங்க போகும் போது என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?"

"என்ன நான் இந்த பெண்ணை பார்த்து இருக்கேனா?!!"

"இந்த பெண்ணை இரண்டு வருடத்திற்கு முன் மதுரையிலே இதை மாதிரி ஒரு சம்பவத்திலே சந்தித்தீர்கள், நீங்க இவளை பார்த்து விட்டு வெளியிலே போகும் போது என்ன சொன்னீங்கன்னு கேட்டாலும் உங்களால சொல்ல முடியாது"

ராபர்ட் பொறுமை இழந்தவனாய்

"எதுவாக இருந்தாலும் நேரடியா பேசுங்க, உங்க பிரச்சனை என்ன?"

"நீங்க கையிலே வைத்திருக்கும் புகைப்படத்தில் இருப்பது நானே தான்"

இது வரை அந்த புகைப்படத்தில் இருந்த உருவ ஒற்றுமையை கவனிக்க முடியாமல் இருந்தவன், அவள் சொன்னதும் மீண்டும் உற்று நோக்கினான், அவளையும், புகைப்படத்தையும்

"இருபத்தி ஐந்து வருஷம் என்னால சாதிக்க முடியாததை, 500 ரூபாய் மேக் அப் சாதித்து விட்டது,இது தான் உங்க எதிர் பார்ப்புன்னு எனக்கு தெரியாம போச்சு?"

அதற்க்கு மேலும் அவனால் அங்கு இருக்க முடியவில்லை, வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான், வந்தவன் வாசலை நோக்கி நடந்தான், வழக்கம் போலே வாசலை கடக்கும் போது அந்த பெண்ணிடம் தான் கண்ட குறையை எல்லோருக்கும் கேட்கும் படி சொல்லி கொண்டு செல்வான், இன்று மாயான அமைதியாய் சென்றான்.


Thursday, December 11, 2008

நான்,Fortran மற்றும் C

என்ன தான் இன்னைக்கு கணணிய தட்டிகிட்டு பொட்டிகடை மாதிரி வியாபாரம் செஞ்சாலும், பழசை கொசு வத்தி போட்டு ஆராய்ஞ்சு பாத்தேன் எப்படி கல்லூயிலே கணணி பாடம் படிச்சேன்னு, இது ஒன்னும் ஆயிரம் வருசக்கதை இல்லை, இன்னையில் இருந்து(2008) 14 வருஷம் பின்னால போனா தெரியும்.
இளநிலை பொறியாளர் படிப்பதற்காக திருச்சி பொறியியல் கல்லூரியிலே முதலாம் ஆண்டு படிச்சுகிட்டு(?) இருந்தேன், அது எனக்கு மட்டுமல்ல எங்கள் கல்லூரிக்கும் தான்.புதுசா ஆரமிச்தாலே என்னவோ எங்களுக்கு ௬ரை கொட்டகை தான் வகுப்பு அறை.
தமிழ் வழியாக பன்னிரண்டு வரை படிச்சதாலே வாத்தியாருங்க இங்கிலிபிசுல நடத்துறது புரியாம வெளி மூலம் வந்த மாதிரி நெளிஞ்சு கிட்டு வகுப்பறையிலே இருப்பேன்,அந்த நேரத்திலே சென்னை நண்பன் ஒருவன் என்னைய பாத்து பரிதாப பட்டு, அவன் சொல்லுறதுக்கு எல்லாம் தலை ஆட்டுற மாங்கா மடையன்(பழமைபேசி விளக்கம் கொடுத்தாச்சு) வேணுமுன்னு நினைச்சு என்னையும் அவன் ௬டத்திலே சேர்த்தான்.அவன் அப்பவே இங்கிலிபிசுல பின்னி படல்(பழமைபேசி விளக்கம் கொடுத்தாச்சு) எடுப்பான்.

பன்னிரண்டு முடிச்சு பொறியியல் கல்லூரி சேரும் முன்னால பல ஆயிரம் ரூபாய்களை முழுங்கி விட்டு மலை முழுங்கியான என்மேல கொலை வெறி கோபத்திலே எங்க விட்டிலே எங்க அப்பாவும்,அம்மாவும்.அதுக்கும் காரணம் இருக்கு, முதல்ல ஒழுங்கா பரிச்சை எழுதலைன்னு இம்ப்ரோவ்மேன்ட் படிக்க ராஜபாளையம் போனேன், அங்கே பீடி(நானே தயாரிச்சது) குடிச்சேன்னு அடிச்சி விரட்டி புட்டாங்க, அதுல ஒரு 15 ஆயிரம் போச்சு. அப்புறமா திருநெல்வேலி கல்லூரியிலே போய் சேத்தாங்க, அங்க ஒரு இருபது போச்சு,என் அண்ணன்(சித்தப்பா மகன்) ௬ட சேர்ந்து கிட்டு அழிச்சாட்டியம் பண்ணினேன்.

குடும்பத்தோட படிப்புக்கு டா டா காட்ட சொல்லலாம்னு கல்லூரி நிர்வாகம் யோசனை பண்ணின நேரத்துல புண்ணியவான் எனக்கு திருச்சி கல்லூரிக்கு சேர அழைப்பு அனுப்பி விட்டு இருந்தாங்க.இங்கே ஒரு இருபதை கட்டிட்டு தப்பிச்சோம் பிழைத்தேன்ன்னு ஓடி வந்தா, தலையை பிச்சு கிட்டு ஓட முடியாம சென்னை நண்பன் ௬ட ஒட்டி கிட்டேன்,அவன் எனக்கு எதுவுமே சொல்லி கொடுகலைனாலும்,நான் அவனுக்கு சிகரட்,தண்ணி எல்லாம் குடிக்க கத்துக் கொடுத்தேன்.அந்த காலத்திலே எனக்கு நல்லா தெரிஞ்சது அது ஒன்னுதான், அன்புமணி ஐயா என்னை மன்னிச்சு விட்ருங்க.
எல்லா பாட வகுப்புகள் எல்லாம் ஆரமிச்சாச்சு, கணணி பாடம் ஒன்னை தவிர, புரிஞ்சும் புரியாமலும் கதையை ஓட்டிகிட்டு இருந்தேன்,இந்த பதிவு மாதிரி,திடீர்னு ஒரு நாள் வாத்தியாரம்மா வந்து நான் உங்களுக்கு கணணி பாடம் எடுக்கப் போறேன்.மொத நாள் அறிமுகத்திலே போச்சு, அடுத்த நாள்ல இருந்து ஒரு முழு நீள ஹிந்தி படம் பாத்த மாதிரி இருந்தது
அவிங்க போர்ட்ரான், சி(fortran,c ) யிலே ப்ராகெட் எல்லாம் போட்டு சிலேபி மாதிரி ப்ரோக்ராம் போட்டாங்க, கூட்டல்,கழித்தல் ப்ரோக்ராம் எழுதிவிட்டு, அதை எக்ஸ்குயுட்(execute) பண்ணும் போது அது அப்படி கேட்கும், நாம இப்படி கொடுக்கணும், அதாவது இன்புட்(input) பத்தி சொல்லி கொடுத்தாங்க.ஒரு நாள்ல இது போய்டும்ன்னு நினைச்சா, தினமும் இதே தொல்லை, அது கேட்கும், நாம கொடுக்கணும், என்னத்தை கேட்கும் என்னைத்தை கொடுக்கணும் ஒன்னும் புரியலை .

அடுத்த நாள் வகுப்பு முடிஞ்சு சாப்பிட போகும் போது சென்னை நண்பனிடம்

"அவன் என்ன பெரிய ஆளா மாப்ள, நம்ம வகுப்புக்கே வர மாட்டானா?"

"இருக்கவங்க இம்சையே தாங்க முடியலை, நீ யாரடா சொல்லுற"

"கம்ப்யூட்டர் வாத்தியாரம்மா அது கேட்கும் இது கேட்கும்ன்னு சொல்லுறாங்க, அவரை சொல்லுறேன்"
என்னைய தங்கமணி பார்க்கிறமாதிரி கேவலமா ஒரு பார்வை பார்த்தான்.
"அட கரிபால்டி(அப்படி தான் மரியாதையா ௬ப்பிடுவாங்க), இது தெரியாம தான் சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கியா, இங்க வா சொல்லுறேன்"
என்னை கணணி ஆய்வு ௬டத்திற்கு ௬ட்டிட்டு போனான், அங்கே டி.வி பெட்டி மாதிரி ஒன்னை காமித்து இதுதான் கம்ப்யூட்டர் இதிலே தான் நீ ப்ரோக்ராம் பண்ணனும், அதிலே இன்புட் கொடுக்கணும் ன்னு சொன்னான்.
எனக்கு பெரிய சந்தேகம் தீர்ந்தது, ஆனா பாட சந்தேகம் தீரவே இல்லை, அதனாலே என்னவோ அந்த பாடம் தேர்ச்சி பெற மூனு வருஷம் ஆச்சு, நான் எடுத்த மதிப்பெண்கள்
5/100,15/100,33/100,45/100 (ஜஸ்ட் பாஸ்)
கல்லூரியின் இறுதியாண்டில் நான் முதல் வகுப்பிலே தேர்வு அடைந்து விட்டேன், எனக்கு கம்ப்யூட்டர் காட்டி கொடுத்த சென்னை நண்பனுக்கு 30 அரியர் இருந்தது.
முக்கிய குறிப்பு :பம்பாய் படத்தின் தாக்கத்தால் எழுதிய காதல் கடிதமும் அதன் விளைவும் அடுத்த பாகத்தில்.


Tuesday, December 9, 2008

திருட்டுப் பூனைகள்

காட்சி: 1 (மாலா வீடு)

வெயில் தன் உச்சத்தை துவங்கும் முன் நாம் மாலாவின் சமையல் அறையில் புகுந்தோம்.அவள் அங்கு கனத்த இதயத்துடன் பாலை கலக்கி கொண்டு இருந்தாள். அந்த பால் சுழலுவதை போல தன் மனமும் சுழலுவதை உணர்ந்தாள். காரணம் தன் கணவன் அமுதன் ௬றிய வார்த்தைகள் நினைத்து நினைத்து மனம் வெந்தாள். அதிலும் அவன் கூறிய கடைசி வார்த்தை

'நீ உயிரோடு இருந்தாலும் எனக்கு பிணம் தன்'.

அதுவே அவளிடம் பேசியதாக கடைசி வார்த்தையாக இருக்கவேண்டுமென என எண்ணி, அவள் செய்துகொண்ட இருந்த செயலுக்கு இடையுராக தொலைபேசி மணி ஒலித்தது,அதற்க்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லாததால்,அது தன் பணியை செய்து விட்டு அமைதியானது. அவள் பாலை குடிக்க முற்பட்டாள், மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது இம்முறை இவளுடைய கைபேசி , ஏதோ நினைவு வந்தது போல அதை கையில் எடுத்தாள்.

மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல், அவள் கூறிய பதட்டமான வார்த்தைகளை கேட்டு, அவள் கூறிய விலாசத்தை குறித்து வைத்து கொண்டு, தான் செய்து கொண்டிருந்த வேலையை மறந்தாள், ஏன் தன்னையும் மறந்தாள், தொலைபேசியில் கேட்ட கடைசி வரிகள் மட்டும் காதில் ஒலித்தது. தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியில் கிளம்பினாள்.


காட்சி:2 ( கைபேசி உரையாடல்)

அமுதன் கைபேசி ஒலித்தது, எதிர்முனையில் பேசியது மாலாவிடம் பேசிய அதே குரல்.

அமுதன் 'நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு'.

பதில் 'எல்லாம் நல்ல படியாக நடக்கிறது, நீ எப்ப கிளம்புற'

அதற்கு பதிலாக அமுதன்

'அலுவலகத்தில விடுப்பு சொல்லிவிட்டேன், இன்னும் 5 நிமிசத்துல கிளம்புவேன், நீ கிளம்பிவிட்டாயா?'

அதற்கு அவள் 'இதோ கிளம்பியாச்சு

காட்சி : 3 (மருத்துவ மனை )

மாலா அவசர அவசரமாக ஆட்டோவில் இருந்து இறங்கி மருத்துவமனையின் வரவேற்பு அறைக்கு ஓடினாள். அங்கு கண்டகட்சி அவளின் கோபம் சூரியனையே சுட்டு எரிப்பது போல ஆனது. காரணம் கண்ணன், அங்குள்ள நர்ஸ் அவனிடம் எதோ பேசிக்கொண்டு இருந்தாள்.அவனை நோக்கி வேகமாக சென்று அவனை திட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காக திட்ட வாய் எடுத்த அவள், நர்ஸ் கூறியதை கேட்டு நிறுத்தினாள்

"சார் இங்க மாலான்னு யாரும் இங்க இல்லை, நான் நல்ல பாத்துட்டுதான் சொல்லுறேன், நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில் தான். "

"கண்ணன் "


என அழைத்த மாலாவை திரும்ப பார்த்தவுடன்

"மாலா நீ இங்க உயிருக்கு போராடிகிட்டு இருக்கிறதா எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது."

அதற்கு அவள் " இதே அழைப்பு எனக்கும் வந்தது "

"உண்மையாகவா? "

மாலாவின் கைபேசி மணி அடித்தது, எடுத்து பேசியவுடேனே, அவள் பதில் ஏதும் சொல்லாமல் மருத்துவ மனையின் வாசலுக்கு வந்தாள், அவள் பின்னால் கண்ணனும் வந்தான்.

"மாலா என்ன ஆச்சு? "

பதிலே சொல்லாமல் அங்கு நின்று கொண்டு இருந்த ஆட்டோ வில் ஏறி சென்றாள்.

மனதை தைரிய படுத்திகொண்டு அவளை வேறு ஒரு ஆட்டோவில் பின் தொடர்ந்தான்


காட்சி 4: (மாலாவின் வீடு)

வாசலிலே நின்ற கூட்டம் இவளுக்கு தானாய் வழி விட்டது.

உள்ளே சென்ற மாலா அமுதன் அகால மரணத்தை கண்டு தன்னை அறியாமல் அழுகை பீறிட்டது. அதகுள் அங்கு வந்து சேர்ந்த கண்ணன் நடப்பதை அறிந்தாலும் நடந்ததை யூகிக்க முடியாமல் அமுதன் அருகில் கிடந்த பொண்ணை பார்த்து அவனும் அழ ஆரமித்தான், அது வேறுயாருமல்ல அவனது மனைவி. அழுகையை அடக்கி கொண்டு சமையல் அறைக்கு சென்ற மாலா தான் விஷம் கலக்கி வைத்திருந்த பால் பாத்திரம் காலியாக இருப்பதை பார்த்தாள்.

ஆறு மாதங்களுக்கு பிறகு...

காட்சி:5 (கண்ணன் வீடு)

"என்னங்க அலுவலகத்துல இருந்து சீக்கிரமா வந்துடீங்க, உடம்பு ஏதும் சரி இல்லையா?"

என்று மாலா வாசலில் வரும் கண்ணனை பார்த்து கேட்டுக்கொண்டே அவனை நோக்கி செல்கிறாள்.

கண்ணன் பதில் ஏதும் கூறாமல் அவளிடம் ஒரு கடிதத்தை நீட்டுகிறான். அதை படித்த மாலா உள்ளம் உடைத்து கிழே விழுந்தாள்.

அந்த கடிதத்தின் சாரம்சங்களாவது

இனிய புதுமண தம்பதிகளுக்கு வணக்கம்,

காதலித்தீர்கள் காதல் கை கூடாமல் கலைந்து ஆளுக்கொரு வாழ்கையை அமைத்துக்கொன்டீர்கள். கால ஓட்டத்தில் விபத்தாய் மீண்டும் நடந்த சந்திப்பு உங்கள் காதலின் இரண்டாம் அத்தியாத்திற்கு அடித்தளமானது.

திசை மாறிய பறவைகள் உல்லாச பறவைகள்யானிர்கள். உங்கள் ஓட்டத்தை தடுக்க முயற்சி செய்தவர்கள், நீ உனக்காக வெட்டிய குழியில் விழுந்து மாண்டு விட்டார்கள். உங்கள் களங்கத்தை நீக்க அவர்கள் இன்னுயிரை தியாகம் செய்து விட்டார்கள்.

உண்மையை ஒழிந்தது பொய்யை வெளிச்சமிட்டு காட்டிய உங்கள் முகமுடியை விரைவில் தோலுரித்து காட்டுவேன்.அப்போது உண்மையின் சக்தியை உணர்ந்து கொள்வீர்கள்.

அன்புடன்,

விபரம் அடுத்த மடலில்

பொறுப்பு அறிவித்தல் : இது ஒரு மீள் பதிவு


Thursday, December 4, 2008

ராம்கோபால்வர்மாவின் அடுத்த கதை

பொறுப்பு அறிவித்தல் : மும்பை தீவிரவாத தாக்குதலில் இறந்த மக்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்

படத்தோட எழுத்து போடும் போது கூகிள் எர்த், ஏ.கே 47 துப்பாக்களை, சாட்டிலைட் போன் பயன்படுத்தும் முறைகளை காட்டிவிட்டு விட்டு, தீவிர வாதிகள் படகை கடத்தும் முறை எல்லாத்தையும் விளக்கமாக சொல்லப்படுகிறது.

புனேயிலே சோனு மும்பைக்கு ரயில் ஏற தயாரா இருக்காங்க, அவங்க யாரையோ தீவிரமா தேடிக்கிட்டு அவங்க கைபேசியிலே இருந்து எதோ ஒரு எண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறாள்.ரயில் கிளம்பினதும் வெறுப்பாக அவள் இடத்திற்கு வரும் போது, அவள் யாரை தேடிக்கொண்டு வந்தாளோ அவன் அவள் இடத்தில் இருப்பதை பார்த்து, அவனிடம் சண்டை போடுகிறாள், அவன் வேறு யாரமல்ல அவளின் காதலன் சுனில்.அவனிடம் இருந்து பிரியா விடை பெற்று மும்பை கிளம்புகிறாள் சோனு.

கள்ள தோணியிலே வந்த தீவிரவாதிகள் மும்பையில் வந்து இறங்குகிறார்கள், அவர்கள் முன்று குழுக்களாக பிரிந்து மும்பை ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.அங்கே இறந்தவர்களை எல்லாம் சகட்டு மேனிக்கு சுட்டு(பழமைபேசி விளக்கம் தருவாரு) தள்ளுகிறார்கள், அந்த கலவரத்தில் ரயில் நிலையம் வந்தடையும் சோனுவையும் தீவிரவாதிகள் பிணைய கைதியாக பிடித்துச் செல்கிறார்கள்.இதற்குள் விபரம் தெரிய வரும் மும்பை தீவிரவாத தடுப்பு படை ரயில் நிலையத்திற்கு வருகின்றனர்,அவர்களில் பலரை சுட்டு தள்ளி விட்டு தீவிரவாதிகள் குழுக்களாக பிரிந்தது மும்பை நரிமன் ஹவுஸ், டிரைடென்ட் ஹோட்டல், தாஜ் ஹோட்டல் பிரிந்து சொல்கிறார்கள், சோனுவையும் இழுத்து செல்கிறார்கள்.

ஊடகங்கள் வாயிலாக தன் காதலி கடத்தப்பட்டதை தெரிந்து கொண்டு அவளை தேடி மும்பைக்கு வருகிறான் சுனில். உள்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு என்.எஸ்.சி யும் ராணுவமும் வரவழிக்க படுகிறது, தீவிரவாதிகள் மூன்று இடங்களுக்கு பிணைக் கைதிகளோடு பிரிந்து சென்று விட்டதாக தகவலும் கிடைக்கிறது.

சுனில் தன் காதலியை தேடி முதலில் டிரைடென்ட் ஹோட்டலுக்கு செல்கிறான்,யாருக்கும் தெரியாமல் ஹோட்டலுக்குள் நுழையும் சுனில் தீவிரவாதிகள் நடத்தும் அட்டூளியத்தை நேரில் பார்க்கிறான், ஹோட்டல் முழுவதும் தேடி அவன் காதலி கிடைக்க வில்லை, இதற்குள் அங்கு இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினால் கொல்லப்படுகிறார்கள், அடுத்ததாக சுனில் நரிமன் ஹவுஸ்க்கு செல்கிறான். அங்கும் அவனால் சோனுவை கண்டு பிடிக்க முடிய வில்லை,ஆனால் அவனுடைய உதவியால் ஒரு தீவிரவாதியை இராணுவம் உயிருடன் பிடிக்கிறது.

மூன்றாவதாக தாஜ் ஹோட்டலுக்கு செல்கிறான் சுனில், அங்கு தன் காதலியின் தன் காதலியை கண்டு பிடிக்கிறான், அவளை காப்பாற்றி தன்னுடன் வருமாறு சொல்லுகிறான். தீவிரவாதிகள் நடத்திய அட்டூளியத்தை நேரில் பார்த்த சோனு,தன்னை போல அப்பாவி மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை விட்டு விட்டு தான் மட்டும் வர முடியாது என்றும் அவர்களோடு தான் நானும் வெளியே போவேன் இல்லையேல் சாவேன் வீர வசனம் பேசுகிறாள், இதை இடைவேளை வசனமா வைக்க முடியுமான்னு தெரியலை.

ஏற்கனவே கொலை வெறி கோபத்திலே(இந்த பதிவை படிச்சவங்க மாதிரி) இருக்கிற சுனில், இதை எல்லாம் கேட்டு கொதித்து எழுந்து அவனே ஒரு தீவிரவாதியாக மாறி,உண்மை தீவிரவாதிகளை கொன்று, இருந்த பிணைக் கைதிகளை விடுவித்து தன் காதலியை யும் விடுவித்து ஹோட்டல் மேலே இருந்து வெற்றியின் அடையாளத்தை காட்டும் போது, அவனும், அவன் காதலியும் பாதுகாப்பு படைகளினால் சுட்டு கொல்லப் படுகிறார்கள்.

தீவிரவாதிகளுக்கு பலியாகும் மக்களும் போர் வீரர்களே என்பதை உணர்த்தும் கதை,ராணுவத்தை குறை ௬றும் படமுன்னு யாரும் நினைக்க ௬டாது,மேலும் செய்தி தாள் நிறுவங்களின் ௬த்துக்களும், அரசியல் வாதிகளின் கயவாளிதனங்களையும் படமா வெளியே வந்தா பார்க்கலாம். படத்திலே பாட்டே கிடையாது என்பதை சோகத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

பின் அறிவிப்பு : படம்(ராமநாராயணன் பாம்பு இல்ல) எடுக்கணுமுன்னு யாரும் குடுகுடுப்பை மாதிரி போட்டி நிறைய டாலர் வச்சுக்கிட்டு என்ன பண்ணன்னு தெரியாம இருந்த, அவிங்க கோவணம் இந்த படத்திருக்கு தாயாரிப்பாளர் ஆனா பிறகு கிழியும்,இவ்வளவு தூரம் வந்த நீங்க கொஞ்சம் கதை பத்தி கதைச்சுட்டு போங்கோ


Tuesday, December 2, 2008

வட அமெரிக்கா பதிவர்கள் சந்திப்பின் ரத்தின சுருக்கம்

முக்கிய அறிவிப்பு :இரண்டு மணி நேர பதிவர் சந்திப்புக்கு நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்த ச்சின்னப்பையன், சத்தியராஜ்,[இளா,மருத நாயகம்](ஜெர்சி சிட்டி --> பென்சில்வேனியா -->ஜெர்சி சிட்டி --> எடிசன்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

சந்திப்பு குறித்த நேரத்திலே ஆரமித்தாலும் தாமதமா தான் நான்/நாங்க போனோம். மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், இலங்கை இனப்படுகொலைக்கு இறந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தி விட்டு, நேராக பதிவர் அறிமுக விழாவிற்கு சென்றோம்.

கே.ஆர்.எஸ் ஆன்மிகம் பத்தியே எழுதுறதை எல்லாம் பாத்து, அவர் எல்லாம் தாடி வச்சு முனிவர் மாதிரி இருப்பாருன்னு நினைச்சேன், ஆனா அங்கே ரெம்ப இளமைய வந்தார்.

இலவசகொத்தனார் பெயரை வச்சு எங்க ஊரு கொத்தானார் மாதிரி இருப்பாரோன்னு நினைச்சேன், ஆனா அவரு பதிவை இலவசமா கட்டுர கொத்தனார்ன்னு அப்புரம்மா தான் தெரிஞ்சது, விளக்கம் கிழே
http://elavasam.blogspot.com/2006/01/1.html

இளா பத்தி சொல்லனுனா இன்னொரு பெரிய பதிவே போடலாம், சுருக்கமா சொன்ன அவரு சிக்ஸ் பாக் இல்லாத பாலிவுட் நடிகர் மாதிரி இருந்தார்.

மருதநாயகம் கமல் மாதிரி முக அலங்காரம் பண்ணி வயசை குறைக்க வில்லை,ஆனா அவர் அளவுக்கு சுத்த தமிழ்ல பேசல நாலும், நல்லாவே தமிழ் பேசுனாரு

மோகன்கந்தசாமி வாலிப புள்ள ஆனா என்னை மாதிரி வாயசான ஆள் மாதிரி வந்தார்

ச்சின்னப்பையன் பேசினா ப்பெரியபையன் மாதிரி இருந்தது, அப்படி ஒரு அமைதியா இருந்தாரு, வீட்டிலே ஏதும் கடின பயிற்சி கொடுத்தாங்களான்னு தெரியலை !!

சத்தியராஜ் நிறை குடம் என்பது தெள்ள தெளிவா தெரிஞ்சது

சுதன் நான் பேசினா கை தட்டனுமுன்னு சொல்லி ௬ட்டிடுபோனேன், என்னை தவிர எல்லோருடைய பேச்சுக்கும் கை தட்டினாரு

ரோஹன் இவரை பத்தி நிச்சயம் சொல்லி ஆகணும்,சென்னை எல்லை கோட்டை தாண்டிய வுடனே எலிசபெத் ராணி பேரன்/பேத்தி மாதிரி பேசும் தமிழ் மக்கள் மத்தியிலே,தமிழ் நாட்டு வாடை கொஞ்சம் ௬ட இல்லனாலும், தமிழ் படிக்கணும்,தமிழ் பேசனுமுன்னு அவர் சொல்லும் போது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது, அவர் தமிழிலும் பேசிக்காட்டினார், நமிதாவை விட நல்லா தமிழ் பேசுகிறார், அவருக்கு தமிழ் நாட்டுல பெரிய எதிர்காலம் இருக்குன்னு சொல்ல மறந்து விட்டேன்.

மொக்கைச்சாமி பெயரு தான் மொக்கை, உருப்படியானதை தவிர வேறு ஏதும் பேச வில்லை

தமிழோவியம் கணேஷ் மற்றும் ஜெய் அந்த காலத்திலே இருந்து பதிவுகளை வாசித்து கொண்டு வெளியே இருந்து ஆதரவு தெரிவிக்கும் நல்ல உள்ளங்கள், அவங்களோட சூடான இடுக்கைக்கு ஒரு பதிவு போகணுமுன்னா அதுக்கு ஒரு வரை முறை இருக்கு, அது இந்த பதிவுக்கு மட்டுமல்ல எனது எந்த பதிவுக்கும் பொருந்தாது, விவரம் வேண்டும் என்றால் அடுத்த பதிவர் சந்திப்புக்கு வரவும்.

இப்படியாக அறிமுகத்தை முடித்து விட்டு ட்விட்டர் பத்தி தகவல் களை தெரிந்து கொண்டோம் பழுத்த பதிவர்களிடம் இருந்து, அப்புறமா மொக்கை பதிவு எப்படி கண்டு பிடிப்பது என்பதை பற்றிய கேள்வி கொஞ்ச நேரம், அதற்க்கு கொத்தனார் ஒரு விளக்கம் கொடுத்தாரு, அதை சொன்ன வுடனே என் மனசிலே நினைச்சது நல்ல வேளை அவர் என் பதிவை எல்லாம் படிக்க வில்லைன்னு மனசுக்குள்ளே நினைத்து கொண்டேன்(இந்த பதிவு உட்பட), அந்த விளக்கம் என்ன வென்றால்............. ..................... ............ இது தான்.

எல்லோரும் ஏன் அமெரிக்கா வரைபடத்தை தலையில் வச்சு தூங்குறாங்க என்பதை பத்தி விவாதம் ஆரமிச்சதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை.முழு நேர வலை பதிவர்கள் பற்றி கொஞ்சம் பேச்சு அடிபட்டது.அப்புறமா சாப்பாடு அதை யாரும் நல்ல வேளை புகை படம் எடுக்க வில்லை,முடித்து விட்டு வெளியே வந்து சிறிது நேரம் மொக்கை போட்டு விட்டு கடை யை காலி செய்தோம்.

பதிவர்களின் சந்திப்பின் புகை படங்கள்

http://mohankandasami.blogspot.com/2008/11/blog-post_30.html

http://www.boochandi.com/2008/12/2-of-2.html

http://www.boochandi.com/2008/12/1-of-2.html

(தலைப்பில் உள்ள ரத்தின சுருக்கம் பழமைபேசி விளக்கம் தருவாரு)


Tuesday, November 25, 2008

ஏன் என்று தெரியவில்லை!!!

நான்
உன்னை மட்டும் தானே
தேடி வந்தேன்
ஏன்
என்னை மட்டும் ஊரே தேடுது
-------------------------------------------------------------
அடி சறுக்கி
விழுந்து விட்டாயாயென
உன்னை தடுக்க வந்த
என்னை ஏன்
அடி அடியை அடித்தார்கள்
--------------------------------------------------------------
மொத்தமா கொடு
என்று நீ சொன்னதிற்கு
முத்ததையா என கேட்ட
என்னை ஏன்
மொத்து
மொத்தினார்கள்
-----------------------------------------------------------------
நீ
வைத்திருக்கும் நாயை
நாய் என்றதற்கு
ஏன் என்னை
நாயாய் அடித்தார்கள்
---------------------------------------------------------------
[மேல இருக்கதுக்கு காரணம் தெரிஞ்சா சொல்லிபுட்டு போங்கோ, இப்படி எல்லாம் கவுஜ எழுதி "அஞ்ச நெஞ்சன்" பழமைபேசியை தொட முடியாதுன்னு எனக்கும் தெரியும்]


Thursday, November 20, 2008

பாரதி ராஜாவிடம் கதை சொன்னேன்!!

ஒரு பெரிய இயக்குநரிடம் கதை சொல்ல போறோம் என்கிற பயமும் மரியாதையும் எனக்கு இருந்தது, பாரதி ராஜாவின் அலுவலக வரவேற்பு அறையில் இருக்கும் போது,

ஒவ்வொரு நொடியும் நூறு யோசனைகளை செய்து கொண்டு
இருந்தது.யோசித்துக்கொண்டு இருக்கும் போது அவரோட உதவியாளர் வந்து,

"சார் உங்களை ௬ப்பிடுராங்க நீங்க போங்கோ"

எனக்கு உடம்பு எல்லாம் வேர்த்து விட்டது, கதவை திறந்தால் என்னோட கை ரேகை வியர்வை கதவில் பதிந்தது.

பாரதி ராஜா யாரிடமோ தொலை பேசியில் பேசிக்கொண்டு இருந்தார், என்னை பார்த்தும் உட்கார் என்று செய்கை செய்தார், என்னால் அமர முடிய வில்லை.
உரையாடலை முடித்து விட்டு என்னிடம் நேராக வந்து

"நீங்க தானே நசரேயன், வாங்க தம்பி உக்காருங்க"
என என் தோள் மீது கை போட்டு என்னை இருக்கையில் அமர வைத்தார்.

மனசிலே ஓரளவு தைரியம் வந்தது,குடிக்க ஜூஸ் வரவழைக்கப்பட்டது, குடித்து விட்டு கிட்டத்தட்ட சாதாரண நிலைக்கு வந்து விட்டேன்.கதைச்சுருக்கம் எழுதி வைத்த நோட்டை அவரிடம் நீட்டினேன்.

"இருக்கட்டும் நீயே கதையை சொல்லு"

தொண்டையை கனைத்து விட்டு கதையை சொல்ல ஆரமித்தேன்.

கதையோட ஆரம்பம் 1975 வது வருசத்துல, சங்கரன்கோவில் ஆடிதவசு திருவிழாவுக்கு ஏற்பாடுகள் சிறப்பா நடந்து கிட்டு இருக்கு, வழக்கம் போல சாதி வாரியா திருவிழாவுக்கான தேதிகளை பிரிச்சு விடுறாங்க, தேர் இழுக்கவும் யார் எங்க நிக்கனுமுனுன்னு பேச்சு வார்த்தைகள் நடக்கு.

எப்பவும் இல்லாத புது முறையா தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்களும் தேர் இழுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள், அது பொறுக்க முடியாமல் அனைத்து மேல் சாதி மக்களும் ஒன்னு சேர்ந்து, ஊரிலே இருந்த எல்லா கீழ் சாதி மக்களையும் ஊரை விட்டு அடிச்சு விரட்டி விடுறாங்க.அந்த அத்தியாயத்தை அங்கே முடித்து விட்டு, நிகழ் காலத்திற்கு கதையை சென்னைக்கு கொண்டு வருகிறோம், பொறியியல் கல்லூரியில் 3 ம் ஆண்டு படிக்கும் மாணவன் கதிர், அவன் கல்லூரிக்கு புதுசா வந்து சேருகிற ஷீலாவை
கண்டவுடன் காதல் கொள்கிறான்.

ஷீலா ஒரு கிறிஸ்தவள், இவன் ஒரு இந்து, ஷீலா எப்படியாவது தன்னை காதலிக்க வைக்க வேண்டுமென படாத பாடு படுகிறான் கதிர், முடிவில் வெற்றியும் பெறுகிறான், ஷீலா ஒரு நிபந்தனை விதிக்கிறாள், முதலில் தன் தந்தை சம்மதிக்க வேண்டும்.

ஷீலாவின் தந்தையை பார்க்க அவளது வீட்டுக்கு செல்கிறான், அங்கு செல்லும் கதிர், ஷீலாவின் தந்தையின் பூர்விகம் தெரிய வருகிறது. கதையை மறுபடியும் பின்னால இழுத்திட்டு போறோம், சங்கரன்கோவிலில் 1975 வருஷம் நடந்த கலவரத்திலே தாழ்த்தப்பட்ட சாதி தலைவர் தான் ஷீலாவின் தந்தை, அந்த கலவரதிலே வீடு வாசல் கலை இழந்து ஊரை விட்டு ஓடும் போது, ஒரு கன்னியாஸ்தரி இவர்களை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார், ஷீலாவின் தந்தைக்கு கோவிலில் மணி அடிக்கும் வேலையும் கொடுக்கிறார், இப்படியாக அவர் கிறிஸ்தவ மதத்திற்கு வருகிறார்.

1975 கலவரத்தை முன் நின்று நடத்திய ஊர் பெரியவரின் மகன் தான் கதிர் என்பது ஷீலாவின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. ஷீலாவின் அப்பாவும் ஒரு நிபந்தனை விதிக்கிறார், தன் மகளோட திருமணம் ஊர் அறிய நடக்கணும், எல்லா பெரியவங்க வாழ்த்துதளோடு நடக்கணும். இதோட இடைவேளை விடுறோம்

(டீ,காபி,சிகரட் குடிகவங்க, குடிச்சுபுட்டு வாங்க)

சங்கரன்கோவிலுக்கு திரும்பி வருகிறார்கள் கதிரும், ஷீலாவும், ஷீலா தன் ஒன்னு விட்ட சித்தப்பா வீட்டிலேயும், கதிர் தன்னோட வீட்டுக்கும் செல்கிறார்கள்.ஷீலா புளியங்குடி பொறியியல் கல்லூரிக்கு மாற்று வாங்கி மீண்டும் தனது படிப்பை தொடர்கிறாள் . தனது வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கதிர் முதலில் தன் அம்மா, பின் படிப்படியாக தனது காதலில் அடுத்த அடி எடுத்து வைக்கிறான். கதிரின் தந்தைக்கு தெரியாமல் இவ்வளவும் நடக்கிறது.

கதிரின் தந்தை ஊரில் உள்ள தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இதனை தடுக்க முடியாத நிலையில் தன் காதலை அவன் தந்தையிடம் சொல்ல்கிறான். தனது எதிர்ப்பை வெளிக்காட்டாவிட்டாலும், அவரால் சாதி கலவரத்தை மீண்டும் தூண்ட முடியாத நிலையில் மதக்கலவரத்தை தூண்டி விடுகிறார்.அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.

அதோடு கதையை முடிக்கிறோம் எல்லாத்தையும் கேட்டுட்டு ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுட்டு, பாரதி ராஜா என்னை பார்த்து தம்பி கதையோட முடிவுல காதலன் காதலி சேருகிற மாதிரி இருந்தா தான் ஒரு புரட்சிகரமா இருக்கும்.
எதிர் பாக்காத இந்த கேள்விக்கு பதில் சொல்ல கொஞ்சம் தயங்கி அப்புறமா

"நாம புரட்சி பண்ணினா மட்டும் போதுமா?

படம் பார்கிறவங்க அதை நடை முறை படுத்தலைன்னா?

திரை படங்களை பார்த்து யாரும் திருந்தினதா வரலாறு இல்ல சார்,அதனாலே உண்மையை உள்ளபடியே சொல்லிவிடுவோம். "

"நீ சொல்லுவதும் உண்மைதான், படத்திலே புரட்சி பண்ணி அரசாங்க
நடைமுறைகளை மாத்த முடியுமா?முடிவை மாத்த வேண்டாம்.கதைக்கு திரைக்கதை எல்லாம் தயாரா இருக்கா?"

"எல்லாம் இருக்கு"

பதில் சொல்லி விட்டு என் திரைக்கதை புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
வாங்கி கொண்டு

"தம்பி,தமிழ் ஈழ பிரச்சினையிலே தலையிட்டு இருக்கிறதாலே, இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் ஓயட்டும், ரெண்டு மாசம் கழிச்சு என்னை வந்து பாரு, நாம மத்த விசயங்களை பத்தி பேசலாம்"

நெடு நாள் கனவு நனவு ஆனதிலே ஆட்டம் போட்டேன் ரெண்டு நாளைக்கு, அப்புறமா வழக்கம் போல வேலையை ஆரமித்து விட்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் செய்தி தாள்களில் பாரதி ராஜாவின் புதிய பட அறிவிப்பு வெளியானது.

எனக்கு ஒரே குழப்பம்,சரியா தூங்க முடியலை, அதை பத்தி யோசிச்சே அலுவலகத்துல வேலையும் ஓடலை, பாரதி ராஜாவை நேரிலே பார்க்க முடிவு பண்ணி அலுவலகத்துக்கு போனா, அவரை பத்தி யாரும் சரியா தகவல் சொல்ல வில்லை. குறைந்த பட்சம் ஒரு மாதமாவது அவரை தேடி அலைந்து இருப்பேன்.

நண்பர்களிடம் இந்த விவரங்களை சொன்னேன், என்னை நல்ல திட்டி புட்டு நீதி மன்றத்துக்கு போகலாம்னு சொன்னாங்க.எனக்கு என்னவோ அதிலே உடன்பாடு இல்லாவிட்டலும், நானும் அதை பத்தி தீவிரமா யோசித்தேன்.

"வழக்கு போடலாமா?.. வேண்டாமா?.."

"வழக்கு போடலாமா?.. வேண்டாமா?.."

"போட்டாச்சு.. போட்டாச்சு.."

"போட்டாச்சு.. போட்டாச்சு.."

"என்ன வழக்கு போட்டாச்சா?.."

"டீ போட்டாச்சு.. டீ போட்டாச்சு எந்திரி..குடிச்சு புட்டு ஆபீஸ் க்கு போற வழிய
பாரு."

எங்க வீட்டுல என்னை இவ்வளவு மரியாதையா யாரு ௬ப்பிடுவாங்கன்னு எனக்கு தெரியும்.


Wednesday, November 19, 2008

தமிழ் மண "ம" திரட்டியை உங்கள் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

யோசனை ரெம்ப கேவலமா இருந்ததுன்னா மன்னிச்சுகோங்க, கால் டாக்ஸி எடுத்துகிட்டு வீட்டுக்கு வரவேண்டாம், நல்ல இருந்ததுன்னா டாக்டர் பட்டமும் வேண்டாம்.



ரெம்ப காலமா எனக்கு கஷ்டம்மா இருந்ததுன்னு நான் சொல்ல முடியாது, ஏன்னா இது காத்து வாங்குற கடை. சொல்ல வந்ததை சொல்லுடுறேன்.


தமிழ் மண சாம்பவாங்க மறுமொழி "மா" திரட்டிக்கு போய் ஒவ்வொருதடவையும் அவிங்களோட இணைய தள முகவரிய கொடுத்து மறுமொழி திரட்ட வேண்டிய இருக்கு, இதுக்காக அவங்க செலவழிக்கிற நேரத்துல்ல ரெண்டு பதிவு போட்டுடுவாங்க. அவிங்க கஷ்டத்தை போக்க கண்டுபிச்ச குறுக்கு வழி தான் இது.


1.உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)

2.Click on layout









3)Click on Add a Gadget



4)Click on HTML/JavaScript



5) In the "Configure HTML/JavaScript", Place the below script "Content" text
<a href="http://www.tamilmanam.net/ping_feedback.php?url=http://yesuvadian.blogspot.com" target="_blank">தமிழ் மண "ம" திரட்டி</a>

from the above instead of "http://yesuvadian.blogspot.com", place your blog name for example, if kudukudppai is going to add, he should have the script like below.

<a href="http://www.tamilmanam.net/ping_feedback.php?url=http://kudukuduppai.blogspot.com" target="_blank">தமிழ் மண "ம" திரட்டி</a>




















6) Your Gadget will appear in your blog main page, just click the newly added to link to refresh your comments



லாபம்:

தமிழ்மணம் இணையத்தளத்துக்கு வந்து உங்கள் பதிவின் மறுமொழி திரட்ட வேண்டிய அவசியம் இல்ல

நஷ்டம் :

தமிழ்மணம் மறுமொழி திரட்டும் முறையை மாத்தினால் இதை குப்பையிலே போட வேண்டியவரும்

ping_feedback.php பக்கத்தின் பெயரையோ மாத்தினால் நாமும் மாத்த பக்கத்தின் பெயரை மாத்த வேண்டிய வரும்

இவ்வளவுதான் நான் சொல்லவந்தது, இனிமேல நீங்க தான் சொல்லணும் (ஆங்கிலம் அதிகம் கலந்ததுக்காக வருத்தம் தெரிவிச்சுகிறேன்)


Saturday, November 15, 2008

சிறகு விரித்தால்-கல்லூரியில் முதல் பரிசு பெற்ற கவுஜ


கதிரவன் சிறகு விரித்தால்

தாமரை மலரும்

சந்திரன் சிறகு விரித்தால்

அல்லி மலரும்

மொட்டுக்கள் சிறகு விரித்தால்

மலர்கள் மலரும்

மலர்கள் சிறகு விரித்தால்

மணம் மலரும்

கன்னியின் கடைக்கண் பார்வை சிறகு விரித்தால்

காதல் மலரும்

இதயம் சிறகு விரித்தால்

மனித நேயம் மலரும்

மனித நேயம் சிறகு விரித்தால்

ஒற்றுமை மலரும்

முக்கிய அறிவிப்பு : இது ஒரு மீள்பதிவு


தீவிரவாதியா? பைத்தியாமா?

முன் குறிப்பு:
தயவு செய்து இலக்கிய மனசுக்காரங்க கிழே போங்கோ, இளகிய மனசுக்காரங்க மேல போகலாம்.

குண்டு வைக்கவில்லை
வெடி குண்டு
குண்டு வைக்கவில்லை
பொட்டியை தூக்கவில்லை
ஒட்டு
பொட்டியை தூக்கவில்லை
பிரிக்க சண்டை போடலை
நாட்டை
பிரிக்க சண்டை போடலை

பேசச்சொன்னேன்
தமிழ்
பேசச்சொன்னேன்

தீவிரவாதின்னு சொன்னார்கள்
என்னை
தீவிரவாதின்னு சொன்னார்கள்

பைத்தியமுன்னு சொன்னார்கள்
என்னை
பைத்தியமுன்னு சொன்னார்கள்
பின் குறிப்பு: என்னை கவுஜ எழுத சொன்ன குடுகுடுப்பையை யாரும் தொட்டா அமெரிக்காவே அதிரும்


Tuesday, November 11, 2008

சூழ்நிலை கைதி

திவால் ஆகி போனே லேஹ்மான் பிரதர்ஸ் ல கண்ணன் வேலை செய்து கொண்டிருந்த காலம், மதியம் மணி 1.30 பசி இல்லையானாலும் சாப்பிட போக வேண்டிய கட்டயாம்.

அலைபேசியில் மணி ஒலித்தது, எடுத்து விட்டு யாருக்கும் கேட்காத படி தமிழில் இதோ கிளம்பி விட்டேன் இன்னும் 5 நிமிசத்துல இருப்பேன், "ஐயம் ஸ்டார்டிங் நவ்" என சத்தமா சொல்லிட்டு கிளம்பினான், அவன் அலுவலகத்திற்கு பின்னால் இருக்கும் உத்சவ் உணவு விடுதியை அடைந்தான், சுற்றும் முற்றும் தேடினான், தான் சந்திக்க வேண்டிய பெண்ணை கண்டதும், அவளை பார்த்து கை அசைத்தான், அவளும் பதிலுக்கு கை அசைத்து விட்டு இவனை நோக்கி வந்தாள். புகை படத்திலே பார்த்ததை விட மிக அழகாக தோன்றினாள்

இருவரும் அறிமுகம் செய்து கொண்டும், சாப்பாட்டு தட்டுகளை எடுத்து விட்டு தேவையான உணவு வகைகளை எடுத்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்தார்கள்.அங்கே நிலவிய சிறு மவுனத்தை உடைத்த கவிதா
"இந்த ரெஸ்டாரன்ட்ல சாப்பாடு நல்லாவே இல்லை"
"ம்ம்.. என்ன சொன்னீங்க"
"ஒரு அழகான பெண் உங்க முன்னாடி இருக்கும் போதே உங்கள் கவனம் இங்கே இல்லையே?உங்க உள்ளத்தை கொள்ளை கொண்டு போன அந்த கள்ளி யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா ?"

"நீங்க புகை படத்தை விட நேரில் அழகாக இருக்குறீர்கள், அதை சொல்லத்தான் யோசித்து கொண்டிருந்தேன்.நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை,உங்களை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு, உங்களை கல்யாணம் பண்ணுறதுல எனக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை,இனி முடிவு உங்கள் கையில்"
"ம்ம்..நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஆளாக தான் இருக்கிறீர்கள், நீங்க சொன்னது எல்லாம் உண்மையா? கற்பனை கலந்த உண்மையா?"
"நான் சொன்னது எல்லாம் அக்மார்க் உண்மை, உண்மை தவிர வேறோன்றும் இல்லை"
"நான் என் முடிவை நேத்தே எடுத்தாச்சு,நான் கல்யாணத்திற்கு பார்க்கிற கடைசி மாப்பிள்ளை நீங்கதான்"
எப்படி சொல்லுறீங்க ?
"என்னைய கட்டிக்கிட்டு கஷ்டப்படப் போறது நீங்கதான்."
கண்ணன் வயறும் மனசும் நிறஞ்சது அந்த கடைசி வார்த்தையிலே
"இருந்தாலும் நீங்க அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு வரவேண்டும், எங்க அப்பா,அம்மா எல்லோரும் உங்களை சந்திக்கணுமுன்னு விரும்புவாங்க"
"கண்டிப்பாக"
"உங்களுக்கு போன் பண்ணி சொல்லுகிறேன் அப்புறமா.."
சாப்பாட்டுக்கான பில்லை கண்ணன் கட்டியவுடன் இருவரும் கிளம்பினர், கண்ணன் அலுவலகத்திற்கு வந்து வேண்டா வெறுப்பாக வேலை யை தொடர்ந்தான்.
கவிதாவின் அலை பேசி ஒலித்தது, எடுத்து
"ஹலோ சொல்லுங்க அப்பா"
மறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு ம்ம்... ஆமா.. இவைகளை தவிர ஏதும் மறுமொழி தெரிவிக்க வில்லை. கடைசியாய் பொறுமை இழந்தவளாய் "எத்தனை தடவை சொல்வது ஒரே விசயத்தை" அவள் முடிக்கு முன் மறுமுனை இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது
அடுத்த இரண்டு நாள்களுக்கு அலுவலக நிலைமை பற்றி யோசிப்பதிலே நேரம் செலவானது, மூன்றாம் நாள் கவிதாவிடம் இருந்து போன் வந்தது, வரும் ஞாயிற்று கிழமை அவளது வீட்டுக்கு வரச்சொன்னாள்.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனை வாசலில் நின்று கொண்டிருந்த நளினியின் அலைபேசி அலறியது, எடுத்தவள் "சொல்லுடி" என்றவள் சொல்லாமலே அழுதாள்,
மறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில்களை சொன்னாள்."திங்கள் கிழமை ஆபரேஷன்" அடுத்தது
"இன்னும் ரெண்டு லச்சம் வேணும்" அடுத்தது
"எப்படி ஏற்பாடு பண்ணுவாய்" அடுத்தது
"என்னது நீ ஞாயிற்று கிழமை இங்க வாரியா?"
அதோடு மறு முனை தொடர்பு துண்டிக்க பட்டது .
ஞாயிறு கலையிலே சுறுசுறுப்பாக இருந்தான் கண்ணன்,அவன் கவிதாவை சந்திக்க அவள் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தான்.
அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அவளிடம் தகவல் சொல்லாமலே போய்கொண்டுருந்தான், ரயில் நிலையத்தை வெளியே வந்த உடனே கவிதாவின் விலாசத்தை கை எடுத்துக்கொண்டு பார்த்தபோது அந்த வீடு எதிரிலே இருப்பதாய் அறிந்து கொண்டு அங்கெ போய் அழைப்பு மணியை அழுத்தினான்.
ஒரு ஸ்பானிஷ் தம்பதிகள் வெளியே சண்டை போட்டு கொண்டே வந்தார்கள். அவர்களை பார்த்து "நான் கவிதாவை பார்க்கணும்" என்று ஆங்கிலத்திலே கேட்டான். அவர்களுக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலே "இங்கு அப்படி யாரும் இல்லை" என்றார்கள்.
மீண்டும் ஒரு முறை விலாசத்தை காட்டியும் பலன் இல்லை, எங்கள் வீட்டிலே யாரும் வாடகைக்கும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, வெளியே வந்து கவிதாவின் அலைபேசியை தொடர்பு கொண்டான், அந்த எண் வாய்ஸ் மெயில் க்கு சென்றது. அதற்க்கு பிறகு ஒரு இருவது முறையாவது முயற்சி செய்திருப்பான். வெறுத்துபோய் வீட்டிற்க்கு திரும்பி வந்தான்
சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் நளினியும்,கவிதாவும்,அவளின் தந்தையும் பேசி கொண்டு இருந்தனர், கவிதா அப்பா
"நளினி ஆபரேஷன்னுக்கு வேண்டிய எல்லா பணத்தையும் கட்டியாச்சி, நாளைக்கு காலையிலே ஆபரேஷன், எல்லாம் நல்ல படியா நடக்கும், நீ ஒன்னும் கவலைப்படாதே "
"கவி நீ மட்டும் இல்லேன்னா" அதற்கு மேல பேச முடியலை நளினிக்கு.
"அமைதியா இரு எல்லாம் நல்ல படியா நடக்கும்".
நேற்றைய ஏமாற்றத்தை மறக்க முடியாமல், அலுவலகம் வந்து சேர்ந்தான் கண்ணன். வந்தவுடன் தான் தெரிந்து அலுவலகம் திவால் ஆகிவிட்டது என்பதையும் அவன் வேலை செய்யும் ப்ராஜெக்ட் ல இருந்து அனைவரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க, அவனுக்கு கொடுத்த அரை மணி நேரத்திலே அவனுக்கு வேண்டியதை எடுத்து விட்டு மறுபடியும் வீட்டு க்கு கிளம்பினான்.
போகும் வழியில் அலைபேசி அழைப்பு வந்தது, அதை எடுத்தவுடனே "கவிதா எங்க போனீங்க, நீ ஏன் போன் எடுக்கவே இல்லை ஞாயிற்று கிழமை."
மறுமுனையில் பேசியவர் தான் கண்ணன் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே இருந்து பேசுவதாகவும், அவன் வங்கி கிரெடிட் கார்டு லே இருந்து சமார் 10000 ஆயிரம் டாலர் எடுத்து இருப்பதாகவும், பணம் அளவு ஓவர் ட்ரபிட் ஆனதினாலே அதை தெரிவிக்க போன் செய்ததாகவும் சொன்னார்
அதே நேரம் அப்பல்லோ மருத்துவ மனை சென்னை யிலே, நளினி கவிதாவிடம்
"ஆபரேஷன் நல்ல படிய முடிஞ்சது, இனிமேல் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு மருத்துவர் சொல்லி விட்டார், போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருக்கு"
"நளினி நீ உங்க அப்பாகிட்ட இரு நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன்" கிளம்பி கான்டீன் சென்றாள், அங்கு கவி அப்பா நின்று கொண்டு இருந்தார்.
"அப்பா இனி நளினிக்கு நல்ல காலம் தான்"
"உனக்கு எந்த காலம்", "நீ பண்ணின காரியத்திலே எனக்கு உடன் பாடே இல்லை"
"அப்பா,இது நானா எடுத்த முடிவு இல்ல சூழ்நிலை எடுத்தமுடிவுக்கு நான் கட்டு படவேண்டிய காட்டயாம். நளினி மாதிரி எவ்வளவோ பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை களை நம்பி திருமணம் நிச்சயிக்க பட்டு ஏமாற்ற படுகிறார்கள். சட்டம் எல்லைகளை கடந்து சொல்ல முடியாமல் தவிக்கிறது. சட்டம் செய்ய முடியாதை மனு தர்மம் செய்ய வேண்டிய கட்டாயம். "
"நளினியோட அப்பா இந்த நிலைக்கு காரணமானவனை தண்டிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது, அதனாலே அவனை பின் தொடர்ந்து கல்யாண வலைக்கு வரவழைத்து அவனுடைய கிரெடிட் கார்டு நம்பர் யை என மொபைல் லில் படம் பிடித்தேன் ஹோட்டல் லிலே, அதை வைத்து அவன் பணத்தை திருடினேன்"
என்னதான் சட்டம் பேசினாலும் தன் மகளை நினைத்து பெருமை பட்டார்.
"அப்பா எனக்கு ரெம்ப பசிக்குது நான் ஏதாவது சாப்பிட வங்க போறேன்".அவள் போகிறதை எதோ புதிதாய் அவள் நடை பயில்வதை போல சந்தோசமாக பார்த்து கொண்டு இருந்தார்.

மறுநாள் நியூ யார்க் மருத்துவமனை யிலே கண்ணன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான், மருத்துவர்கள் அவன் நண்பர்களிடன் மிகுந்த மன அழுத்தத்தால் அவன் தன்னினலை மறந்து விட்டான்.
(முற்றும்)


Friday, November 7, 2008

சிலையா? அது சேலையா?

இந்திய மக்கள் தொகைக்கு ஏறக்குறைய சமமா இருக்கிறது நம்ம ஊருல இருக்கிற அரசியல் வாதிகளின் சிலைகள். இந்த காலசாரத்தை நாமளா கண்டு பிடிச்சோமா இல்ல வழக்கம் போல வெளி நட்டுகாரன்கிட்ட கடன் வாங்கிட்டு வந்தோம்னு தெரியலை.ஒரு ஒய்வு பெற்ற நிதிபதி தலைமையிலே விசாரணை கமிசன் வச்சாலும் விடை கிடைப்பது ரெம்ப கஷ்டம்.

ஏற்கனேவே இருக்கிற சாமி சிலைகளை பறக்கும் படை, அதிரடி படை இப்படி பல படைகளை வைத்து காப்பாத்த கடுமையா கஷ்டப்பட்டு கிட்டு இருக்கோம்.அரசியல் தலைவர்களின் சிலையை வைத்து அவர்களுக்கு அரசியல் சாயமும் சாதி சாயமும் பூசி வைத்து விடுகிறோம்.ஆள் பற்ற குறையால, இருக்கிற சிலைகளை பாது காக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்து பன்னாட்டு படைகளை வரவச்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை


இந்திய மக்கள் மதம்,இனம்,மொழி இதெல்லாம் தவிர்த்து அதிகமாக குரல் கொடுக்கிற ஒரு விஷயம் சாதி.வீட்டிலே அடுத்த வேலை சாப்பாடுக்கு வழி இல்லை என்றாலும் சாதி என்று வந்துவிட்டால் மார்தட்டி கொண்டு சண்டைக்கு போகதும், சேறு தண்ணி இல்லாம சாதியை பற்றி பேசுவதும், தாய் தந்தை பாசத்தை விட சாதி பாசத்தையே பெரிதாக நினைகிரவங்க நிறைய பேர். இப்பேர்பட்ட ஆளுங்களின் தலைவர்களின் சிலைகளை அவமரியாதை செய்தால் விட்டுடுவாங்களா ?

கடை அடைப்பு, பஸ் கொளுத்துதல்,கல் எரி, மண்டை உடைப்பு இப்படி பல திரு விழாக்களை நடத்தி விடமாட்டோம்


வெளியூர் கார ஆளுங்களுக்கு அரசியல் சாயம் கலந்த சிலை, உள்ளூர் கார ஆளுங்களுக்கு அரசியலும், சாதியும் கலந்த சிலை.சிலைகளை வச்சதோட விடுறோமா, அதுக்கு மலை மரியாதையை, கெட வெட்டி பொங்கல்,படையல் எல்லாம் பண்ணுறோம்.


இது எல்லாம் பிடிக்காமால, இல்ல மாலை வாங்க காசு இல்லாம செருப்பு மலை போடுறாங்களா என்னன்னு தெரியலை. இங்க ஆரமிச்ச பிரச்சனை தமிழ் நாட்டுல மூலை முடுக்கெல்லாம் பரவி நாட்டுல எல்லா சிலையிலேயும் போகி பண்டிகை கொண்டாடுறோம்.


தமிழ் நாட்டு காவல் துறை பொது மக்களை பாது காக்கும் வேலைகளை விட்டு விட்டு சிலைகளை பாதுகாக்க கிளம்ப வேண்டிய இருக்கு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிற காவல் உயிர் அற்ற சிலைகளை காபாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால் உயிர்லுள்ள மக்களை எப்படி காப்பாத்து வாங்க?
நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சுன்னு எதை வச்சு கொடி பிடிக்கமுடியும்?

ஒரு மனிதன் இறந்த பின்பும் அவர்களை நிம்மதியாக தூங்க விடாமல் அவர்களை சிலையாய் எழுப்பி அவங்களை அவமானப்படுத்திற ஒரே ஊர் நம்ம ஊரா தான் இருக்கும் ன்னு நினைக்கிறேன்

தொண்டர்களாகிய நாம் தலைவர்களுக்கு மனதில் சிலை வைத்தால் நாட்டில் நடக்கும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும், மீதி பிரச்சனை அதுவாவே தீர்ந்திடும், காவிரி, ஒகேனகல்,தமிழ் ஈழம் தவிர

(மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.)


Thursday, November 6, 2008

பாட்டி சுட்ட வடையும், Dora வும்

பாட்டி வடை சுட்ட கதை நம்ம எல்லோருக்கும் தெரியும். அந்த கதையிலே வாற வடையும், காக்கவும்,நரியையும் வச்சு அமெரிக்கா காரன் மூளை எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க என்னை மாதிரி ஆளுங்களை போண்டி ஆக்கி,ஓட்ட ஆண்டியாகி மஞ்ச கடிதம் கொடுக்க அளவுக்கு போய் விட்டது.


சரி கதைக்கு வருவோம், பாட்டி வடை சுட்ட கதையிலே வார காக்காவை மண்டச்சி யாக்கி(டோரா) , அந்த வடை பிடுங்க அலையுற நரியை அப்படியே நரியாவே(ச்வைப்பர்) வச்சு,ஒரு வீணா போன கதைய பண்ணி, அதை பொடுசுகளை பாக்க வச்சி, என்னை மாதிரி ஆளுங்களை பைத்தியம் ஆக்கி விடுறாங்க.

நரி மண்டச்சி கிட்ட இருந்து பொருளை பிடிங்கி எங்கயாவது போட்டு விடும், அதை மண்டச்சி கண்டுபிடிக்க அவளோட நண்பர்கள் குட்டி குரங்கு (பூட்ஸ்) ரெண்டு பெரும் சேர்ந்து அதை தேட போவாங்க வழியிலே அவங்களுக்கு உதவி செய்ய உருப்படாத ஒரு பன்னி, அணில் இவங்க எல்லாம் வருவாங்க, கடைசியிலே நரி பிடிங்கி போட்ட பொருளை தேடி கண்டு பிடிப்பாங்க. இது தான் கதை.


அடப்பாவி மக்க இந்த இத்துப்போன கதைக்கு மாசத்துல நாலு டிவிடி வெளியிட்டு, அதை ஒன்னு விடாம வாங்க வச்சுருடாங்க. இந்த கர்மம் எல்லாம் எனக்கு எப்படி தெரியுமுன்னு நினைக்காதீங்க, எங்க வீட்டுல இருபத்தி நாலு மணிநேரமும் இதுதான் ஓடுது

கதையோட முடிவுல "we did it" ன்னு மண்டச்சி சொல்லி ஒரு குத்தட்டாம் வேற வரும், அதை பாத்துட்டு எங்க வீட்ல அத மாதிரி ஆட்டம் வேற, இதுல கொடுமை என்னன்னா நானும் சேர்ந்து அந்த குத்தட்டாம் ஆடனும், ஆடலைனா எனக்கு அடி வேற

இப்ப நான் எப்படி ஓட்டை ஆண்டி ஆகுறேன்னு சொல்லுறன், டிவிடி யோட தொல்லை விட்டதுன்னு சோகமா சந்தைக்கு அதாவது ஷாப்பிங் மாலுக்கு போன, அந்த கையில,காலுல, தலையிலே,உடம்புல,கண்ணுல போடுற எல்லாத்திலேயும் மண்டச்சி பல்ல காட்டி கிட்டு இருப்பா, சனியன் டிவிடி யோட நில்லம்மா பனியன் வரைக்கும் வருதேன்ன்னு நினச்சு முடிக்கு முன்னாடி, ஒரு ௬டைக்கு துணி மணியை அள்ளி போட்டு வந்து

"அப்பா நான் எல்லா டோராவையும் வாங்கிட்டேன்ப்பா, பில் போட்டு வாங்கிட்டு வந்து காசு கொடுப்பா" ன்னு ஒரு குரல் வரும்.

என்னால விக்கவும் முடியாம விழுங்கவும் முடியாம பாக்கா வேண்டியது வரும், அதெல்லாம் வாங்க முடியாதுன்னு சொன்ன, என் மகள் வைக்கிற ஒப்பாரியை அடக்க ரெண்டு நாளாவது ஆகும், நம்ம ஊருல சின்ன புள்ளைகளை எங்க வச்சி வேணாலும் நாலு சாத்து சாத்தலாம், ஆனா இங்க கைய வச்சா, நம்மளை கைமா பண்ணி, குறைஞ்சது ஒரு பத்து வருசமாவது உள்ளே தள்ளிடுவாங்க.


தலை விதியை நினைச்சுகிட்டு பில் போட போன, நீங்க 600 டாலர் க்கு வாங்கி இருகீங்க, உங்களுக்கு தள்ளுபடி போக 500 டாலர்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. நானும் பதில்லு வேண்டா வெருப்ப்பா பல்லை காட்டிகிட்டு வருவேன்.இது ஒரு தொடர்கதையா இன்னும் போய்கிட்டு இருக்கு

என் குடிய கெடுத்தவங்க படத்தையும் பாருங்க

மண்டச்சி




குட்டி குரங்கு




குள்ள நரி


Monday, November 3, 2008

வலை பதிவால் சந்தித்தவைகள்

பொழுது விடிஞ்சு பொழுது போன, இதே வேலைய போச்சு, வீட்டுல என்ன நடக்கு, ஏதாவது வேணுமா, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?



ஏன் எல்லாம் நல்லா தானே போகுது.



அலுவலகத்திலே இருந்து வந்த உடனே கணனி முன்னாடி உக்கார்ந்து கிட்டா வீட்டுல செய்ய வேண்டிய வேலை எல்லாம் யாரு செய்வார்?

இல்லை இதெல்லாம் படிச்சுட்டு கருத்து சொல்லலைனா யாரும் சம்பளம் கொடுக்கமாட்டாங்களா?



நாங்க இணைய தளம் வழியா தமிழ் வளர்க்கிறோம், ஏன் உனக்கு பிடிக்கலையா?ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் திருட்டு தனமா எல்லா படத்தையும் டவுன்லோட் பண்ணி பார்க்கிறேன். நீங்க ஒரு தனி உலகத்திலே இருகீங்க, எங்களை பத்தி கவலை படறதே இல்லைன்னு சொன்ன. அதனாலே உங்களை எல்லாம் தொந்தரவு பண்ண ௬டாதுனு பதிவு எழுத ஆரமிச்சேன்



அதுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை .
நான் தெரியாம தான் கேட்கிறேன், வீட்டு வந்தா மக்க மனுசன்கிட்ட ஒரு நாலு வார்த்தை பேசனும்ன்னு தோணலையா?
நீ என்ன வேலை செய்த?

வீட்டுல இருக்க சின்னது என்ன பண்ணுது?
இப்படி ஏதாவது கவலை இருக்கா?
நான் ஒருத்தி மாடு மாதிரி கத்திகிட்டு இருக்கிறது காதிலே விழுதா?


ஹும் .. என்ன சொன்ன?



ஹும்.. சோத்துக்கு உப்பு இல்லன்னு சொன்னேன்.இப்ப நீங்க எழுந்து வரலை, நான் கம்ப்யூட்டர் யை ஆப் பண்ணிடுவேன் .



சரி சொல்லு கேட்கிறேன், என்ன பிரச்சனை உனக்கு?



நீங்க குடும்பம் நடத்துற லட்சனம் இதுதானா?வீட்டுல காய்கறி இல்லை, அரிசி இல்லை, துணி துவைக்க வில்லை, பாத் ரூம் கழுவலை இதெல்லாம் யாரு செய்ய?



ஏன் எல்லாம் காலி ஆகிடுச்சா?



நாம கடைக்கு போய் ரெண்டு மாசம் ஆச்சு, போனாதானே எல்லாம் வங்க முடியும். நீங்க கம்ப்யூட்டர் கழுத்தை கட்டி கொண்டு கிடந்தால், நான் என்ன செய்ய முடியும்?

உங்களுக்கு ஆபீஸ் ல சம்பளம் இதுக்கு தான் கொடுக்கிறார்களா?

இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும், யாரு இந்த வீட்டுல இருக்கனுமுன்னு, நானா இந்த கம்ப்யூட்டர் யா?



ஏன் இப்படி கொலை வெறி கோபத்திலே இருக்க இப்ப, நான் எதோ கொலை குத்தம் பண்ணின மாதிரி கேள்வி கேட்குற?



எனக்கு வார ஆத்திரத்திலே என்ன செய்யணுமுன்னு தெரியலை, உங்களை மாதிரி தமிழ்ல எழுதுற எல்லோருமே இப்படி குடும்பத்தை கவணிக்காம தான் இருக்காங்களா?



இந்த கேள்விக்கு மட்டும் என்கிட்டே பதில் இல்லை



என்னவோ நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒன்னு விடாம பதில் சொல்லி தவிச்சுட்டீங்க.



நீ ரெம்ப சூடா இருக்க, சுட சுட ஒரு காபி கொடு, குடிச்சுகிட்டே பேசுவோம்.



வீட்டுல பால், சர்க்கரை எல்லா தீர்ந்து ரெண்டு வாரம் ஆச்சு, உங்க பாணியிலே சொன்ன சரக்கு தீர்ந்து போச்சு .இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். யாரு முக்கியமுன்னு நானா? கம்ப்யூட்டர்யா ?

வர வர உனக்கு எது ௬ட போட்டி போடுறதுன்னு ஒரு வரம்பே இல்லாம போச்சு, அது ஒரு வாயில்லா பூச்சி.

கம்ப்யூட்டர் ரால நான் தான் வாயில்லா பூச்சி ஆகிவிட்டேன்.ஹலோ நான் இங்க பேசிகிட்டு இருக்கேன், மறுபடியும் அங்கே என்ன பாத்து கிட்டு இருகீங்க உங்களை... ( கன்னம் இரண்டியும் பிடித்து கிள்ளு, தலை முடியை இழுத்து ஆட்டு, இவ்வளவும் பண்ணி மடி கணினியை யும் ஆப் செய்து விட்டாச்சு)






Tuesday, October 21, 2008

தமிழ் ஈழம் - மத்திய அரசுக்கு கேள்வி

பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்த மத்திய அரசே?



தனி நாடு அந்தஸ்து வேண்டி போரடி கொண்டிருக்கும் திபெத் மக்களின் தலைவர் தாலாய்லாமாவிற்கு அடைகலம் கொடுத்து, அந்த போராளிகளை எல்லாம் தீவிர வாதிகள் என்று அங்கிகாரம் செய்ய பட்ட சீனா அரசை எதிர்த்து ஐ.நா சபையில் திபெத் தனி நாடாக அங்கிகரிக்க மண்டியிட்டு கெஞ்சுவதையே தொழிலாக கொண்டிருக்கும் மத்திய அரசே?

எங்கேயா இருக்கிற தீவில் குஜராத் இனத்தலைவனுக்கு ராணுவ ஆட்சியால் பிரச்சனை மரணவோலம் எழுப்பிய மத்திய அரசே?


தமிழ் ஈழ பிரச்சனையில் அது அவர்களின் உள்நாட்டு பிரச்சனை, அதில் தலை இட உரிமை இல்லை என்றால், மேற் கூறிய பிரச்சனைகள் எல்லாம் இந்திய உள்நாட்டு பிரச்சனைகளா?



அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்கள் அண்டை நாட்டு பாசம் தமிழ் ஈழ பிரச்சனையில் எங்கே போய் விட்டது?


இலங்கை ஒன்னும் செவ்வாய் கிரகத்தில் இல்லை.




அடுத்த இனத்திற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கரை களில் ஒரு விழுக்காடு வைத்தாலும் என்றோ என் சகோதர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து இருப்பார்கள் .




தமிழ் இனத்தை வேரோடு அழிப்பேன் என்று மார்தட்டி கொக்கரித்தது கொண்டிருக்கும் சிங்கள இனத்தீவிரவதகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?



இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தை நாட்டை விட்டு ஒதுக்கி வைத்து விட்டீர்களா?


அந்த இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதம மந்திரியக்கியால்லவா அழகு பார்க்கிறோம் .


அனைத்து விஷயங்களிலும் முன்னுக்கு பின் முரண்பாடுகளோடு இருக்கும் நீங்கள் தமிழர்களின் விசயத்தில் உங்கள் தார்மீக கொள்கைகளை முன் வைப்பது துளி அளவிலும் நியாயம் இல்லை




சீக்கியரை மன்னித்து மனிதமானத்தோடு பழகும் நீங்கள், தமிழ் ஈழ விசயத்தில் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?


நாட்டில் பஞ்சம்,பசி,பட்டினி, வேலை இல்லா திண்டாட்டாம் அறவே இல்லாமல் பாலும் தேனும் ஓடுவதாக நினைத்துக்கொண்டு தெற்கு ஆசிய பிரதியத்தில் ஒரு எகாதித்திய சக்தியாக விளங்க இலங்கைக்கு ஆய்தம் வழங்குகிறோம் என்று சொல்ல்வதிலே வெட்கமாக இல்லை


நீங்கள் செய்வதை எல்லாம் கண் மூடிதனமாக ஆதரிக்கும் தமிழ் இன காங்கிரஸ் தலைவர்களே, நீங்கள் விடுதலை புலிகளை வெறுக்கவில்லை, தமிழ் ஈழ இன மக்களையே வெறுக்கிறீர்கள், சிங்களன் தீவிரவாதி என்று அனைத்து தமிழ் இனத்தையல்லவா கொன்று குவிக்கிறான். நீங்கள் எல்லாம் குலத்தை அழிக்கும் கோடரி காம்புகள்



எட்டும் தூரத்தில் இருந்தாலும் எங்கள் கைகளை கட்டிவிட்ட இந்திய தாயே தமிழ் இனம் காக்க வழிகொடு இல்லையேல் விடை கொடு எங்களுக்கு நாங்கள் தருகிறோம் என் இன மக்களுக்கு அமைதி காற்றை.


தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.


Monday, October 20, 2008

வட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு - இரண்டாம் கட்டம்

அனைவருக்கும் வணக்கம்,


வலை பதிவு சந்திப்பின் முன்னோட்டத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பேராதரவும் அன்பும் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இதுவே கிட்டத்தட்ட வெற்றி அடைந்த மனநிறைவு. "அஞ்சா நெஞ்சன்" பழமைபேசி யின் கருத்துக்களை வழி மொழிந்து கூகிள் குழு ஒன்றை உருவாக்கி விட்டேன், எனக்கு தெரிந்த வரையில் கருத்து தெரிவித்த நண்பர்களை குடிஇருப்பு பகுதிகளின் விபரமும் குழுவின் விலாசமும் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. நான் சேகரித்த மினஞ்சல்களுக்கு அழைப்பிதல் அனுப்பப்பட்டுள்ளது, விருப்பமுள்ள மற்றவர்கள் குழுவின் விலாசம் சென்று தங்களை இணைத்து கொள்ளல்லாம். அங்கு நமது கருத்துக்களை பரிமாறி வலைப்பதிவு சந்திபிற்க்கான தேதியை முடிவு செய்யலாம். அந்த முடிவை நண்பர் "புரட்சி புலி" குடுகுடுப்பையார் முரசு கொட்டி அறிவிப்பார்.




கூகிள் குழுவின் விலாசம்



NJ/NY/VA/MA/CT/NC
ச்சின்னப் பையன்
இனியா
வெட்டிப்பயல்
மயிலாடுதுறை சிவா...
மோகன் கந்தசாமி
நசரேயன்
பழமைபேசி
குடுகுடுப்பை



CA
Madhusudhanan Ramanujam
Dr. சாரதி

கயல்விழி


UnKnown AREA
ILA
panaiyeri




Friday, October 17, 2008

வட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு

வாழ்த்து தெரிவிக்கணும் யாரவது வந்தா மன்னிக்கணும்.

ஒரு கல்லை எரியலாமுன்னு கனவுல தோனுச்சு.

பல இடங்களில் தமிழ் வலை பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

வட அமெரிக்காவிலயும் நிறைய வலை பதிவர்கள் இருப்பாங்கனு நம்புகிறேன்.

குறைந்த பட்சம் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் இருப்பவர்கள் சந்தித்தால்/சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்தால்?

என்னை மாதிரியே யாரவது கனவு கண்டால் உங்கள் கருத்துகளை சொல்லலாம்

வெட்டிபய வேலை வெட்டி இல்லாம கிருக்குரானு நினச்சாலும் உங்கள் கருத்துகளை சொல்லலாம்

முடிஞ்சா முயற்சி செய்யலாம்.

இல்லாட்டி வழக்கம் போல என் பொழப்பை பாத்துகிட்டு போறேன்


தணிக்கை குழுவும்.தயாரிப்பாளரும்

தணிக்கை குழு : படம் நல்லா வந்திருக்கு, ஆனா ஒரு மூன்னு இடத்தை தவிர
தயாரிப்பாளர் : கோடி கோடிய கொட்டி படம் எடுக்கிற எங்களுக்கு தெரியாமா உங்களுக்கு தெரிஞ்ச அந்த மூன்னு இடம் எதுங்க?


தணிக்கை குழு : ஒரு இடத்துல கதாநாயகி கொசுவை அடிக்க மாதிரி இருக்கே, அது விலங்குகள் வன்முறை சட்டப்படி குற்றம்

தயாரிப்பாளர் : கொசுவை அடிக்காம கோவில் கட்டியா கும்பிடனும்

தணிக்கை குழு : அந்த கொசுவுக்கு மருத்துவ சான்றிதழ் வாங்கினீங்களா?

தயாரிப்பாளர் : ஐயா அந்த கொசு கடிச்சு, மலேரியா, சிக்கன் குனியா வந்து மண்டைய போடுற மனுசங்களுக்கு தான் இறப்பு சான்றிதழ் வாங்கணும்

தணிக்கை குழு : ச்சுச்சு.. குறுக்க பேசசக்கூடாது. எல்லாம் விதி, நாங்க விதி படிதான் நடப்போம்

தயாரிப்பாளர் : எல்லாம் எங்க தலை விதி, சரி அடுத்த குற்றம் என்னனு சொல்லுங்க

தணிக்கை குழு : கதா நாயகன் ஒரு காட்சியிலே தொடை தெரிய வேட்டிய மடிச்சு கெட்டிகொண்டு வாராரு அது ஆபாசமா இருக்கு

தயாரிப்பாளர் : நீங்க சொல்லுறதுதான் ரெம்ப ஆபாசமா இருக்கு, சண்டை காட்சியிலே வேட்டியை மடிச்சு கட்டாம எப்படி முடியும்?
கதாநாயகி நீச்சல் உடையிலே கன்னா பின்னா ன்னு வாறதை எல்லாம் கலாசார குத்து விளக்கா?

தணிக்கை குழு : ரெம்ப பேசுனீங்க.. படமே வெளியிலே வராத படி பண்ணிடுவேன்

தயாரிப்பாளர் : நீங்க செஞ்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல, நான் இனிமேல் வாய் திறக்கலை, நீங்க மேல சொல்லுங்க சாமீ

தணிக்கை குழு :அடுத்ததா கதாநாயகனும் கதா நாயகியும் முத்தம் கொடுக்கிற காட்சி ரெம்ப அவமானமா இருக்கு.அவன் கொடுக்கிற வேகத்தை பார்த்தால் கதாநாயகி குடல் அள்ளி வெளியே போட்டுருவான் போல இருக்கு

தயாரிப்பாளர் : வாயில நல்லா வந்துட்டு வடக்காம போகுது.. அவன் காதலிக்கு அவன் முத்தம் கொடுக்கான், நீங்க ஏன் வயத்து எரிச்சல் படுறீங்க?

தணிக்கை குழு : எல்லா விதி படிதான் நடக்கு,எப்படி எப்படி எல்லாம் முத்தம் கொடுக்கலாமுன்னு விதி முறைகள் இருக்கு.

தயாரிப்பாளர் : என்னவோ நியூட்டன் முன்றாம் விதி மாதிரி பேசுறீங்க

தணிக்கை குழு : காட்சிகளை மாத்த முடியுமா முடியாதா? முடியலனா நாங்க வெட்ட வேண்டியது வரும்

தயாரிப்பாளர் : என்னவோ கடை திறப்பு விழாவுக்கு ரிப்பன் வெட்டுற மாதிரி சொல்லுறீங்க, வடக்க போய் பாருங்க, ஆடை இல்லாம படம் எடுத்து இந்திய கலாசாரத்தை குப்பையிலே போடுறாங்க, உங்க விதி அங்க தூங்குதா? அதை எல்லாம் ஓகோ.. ஆகா.. புகழ்ந்து தள்ளுவீங்க. நம்ம ஊருக்கு வந்தா கண்ணகி அவங்க ஊருக்கு போன கோவலனா?

தணிக்கை குழு : ஹலோ ..

தயாரிப்பாளர் : இருவே பேசிகிட்டு இருக்கமுல்ல, தினமும் ஒரு லட்சம் மாடு,ஆடு, கோழி எல்லாம் வெட்டுராங்க காணாக் குறைக்கு மனுஷனையும் வெட்டுறாங்க. அவங்க எல்லாம் எந்த மருத்துவரிடம் சான்று வாங்குதாங்க,
பேசவந்துடீங்க.. மருத்துவ சான்று மண்ணாங்கட்டி சான்றுன்னு.
கொசுவை அடுச்சுட்டானு குய்யோ முய்யோனு கத்துற நீங்க, மாட்டை அடிக்கிற மாதிரி சண்டை காட்சியிலே மனுசங்களை புரட்டி எடுக்குறான் அதுஎல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

தணிக்கை குழு : உங்க வாயோட சேத்து முழு படத்தையும் வெட்டுறதா முடிவு பண்ணிட்டோம்


தயாரிப்பாளர் : ஐயா மானத்தை காக்க நிக்கும் மகராசன்களா , நான் இன்னும் முடிக்கலை, வேட்டியை கணுக்கால் வரை தான் மடிச்சு கட்டனுமுணா அவன் சேலை தான் உடுத்தனும்.கதாநாயகி கூட மழையில நினைஞ்சு அடி பாடுறான், அவ தொப்புள்ள மைதானத்துல விளையாடுற மாதிரி பம்பரம்,கோலி குண்டு விளைஆடுராங்க. தொப்புள்ள விளையாடலாம் வாயில விளையாடக் கூடதா?
தணிக்கை குழு : உங்க படத்தை எல்லாத்தையும் வெட்டப்போறோம், நீங்க வீட்டுக்கு போகலாம்.

தயாரிப்பாளர் : அப்படியே படம் வெளியில வந்தா, படம் எடுத்து நொந்து போன தயாரிப்பாளர்ல இருந்து விளக்கு பிடிகிறவர் வரைக்கும் வழக்கு போடுறாங்க.இதுக்கு அனுமதி கொடுத்த உங்க மேல யாரும் வழக்கு போடுகிறார்களா?

தணிக்கை குழு : நாங்க வெட்டனுமுனு முடிவு பண்ணியாச்சு . நீங்க போகலாம்.

தயாரிப்பாளர் : நீங்க வெட்டுறதுக்கு முன்னாடி, நான் வெட்ட வேண்டியதை வெட்டியாச்சு. கைபேசியில வார அழைப்புக்கு முதல்ல பதில் சொல்லுங்க, நான் சொல்ல வந்து புரியும் .

தணிக்கை குழு : (பேசி முடிந்ததும்...) இதெல்லாம் நீங்க ஏன் முதல்லே சொல்ல வில்லை, நாம இவ்வளவு நேரம் பேச வேண்டிய அவசியமே இருக்காது, உங்க படத்துக்கு "U" சான்றிதழ் கொடுத்து விடுகிறேன்.
(சான்றிதல் வாங்கி விடை பெரும் முன் )

தயாரிப்பாளர் : கைபேசியில பேசுனது உங்க வீட்டு சின்ன வீட்டு தங்கமணி இல்லை, நான் ஏற்பாடு பண்ணின பின்னணி நடிகை. எந்த மாட்டுக்கு எங்க புடிச்சா வலிக்கும்னு எனக்கும் தெரியும்.இனிமேல நான் இங்க வர முடியாது இப்பவே அரை ஆண்டி ஆகிட்டேன், படம் வந்த உடனே ஓட்டை ஆண்டி ஆகிடுவேன்.


Wednesday, October 15, 2008

காதல் பச்சோந்தி - இறுதி பகுதி

முதல் பாகம்

மாலினியை எதிர் பார்க்காதவனாய் " ஏய் நீ எப்ப வந்த?" பதில் சொல்லுமுன் களைப்பினால் அவளை கடந்து உள்ளே சென்றான்

கிரணை கண்ட மகிழ்சியில் சோக அலை கரையை கடந்து சந்தோஷ அலை தாண்டவமாடியது.காலையில் இருந்து நடந்தவற்றை விரிவாக ரகுராம் சொல்ல, அவனுக்கு மாலினி மீது கோபம் கத்தரி வெயில் போல ஏறியது.

"மாலினி என்ன இதெல்லாம் உளறல், நான் எதோ உன்னை காதலிப்பதாக போன மாதம் மின் அஞ்சல் அனுப்பியதாகவும்,அதற்க்கு நீ நேற்று சம்மதம் தெரிவிச்சு பதில் அனுப்பியதாகவும் உன்
பதில் தெரியாம விபரித்த முடிவு எடுத்து விட்டதாகவும் நீயே ஒரு கற்பனை பண்ணி, உன்னோட அதிக பிரசங்கி தனத்தால என் மானமே போச்சு .நம்மோட நட்பை பிரிக்கணும்னு யாரோ நான்
அனுப்புவது போல அனுப்பி இருக்கலாம், நான் உன்னை காதலித்தால் உன்னிடம் நேரிலே சொல்லி இருப்பேன். "

அவன் கேள்விகளை விட கேட்ட விதம் மாலினியை பதில் பேச விடாமல் மவுனப்படுதியது, அவளுகுள்ளகவே ஒரு குற்ற உணர்வு தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு விட்டதாக. நடந்த தவறுக்கு முழு பொறுப்பு ஏற்றும், இந்த சூழ்நிலையில் நடந்தவற்றை பேசி மீண்டும் அவமானப்பட விருப்பு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.


அன்றாட வாழ்வில் நடக்கும் விசயங்களை செய்தி தாள்களின் வழியாக படிக்கிறோம், தொலைக்காட்சி வழியாக பார்க்கிறோம், காதலுக்காக தற்கொலைகள் எவ்வளவு நடகின்றன, நிலைமை இப்படி இருக்கும் போது மாலினி செய்ததை முற்றிலும் தவறு என்று சொல்லமுடியாது.


இந்த நிலையிலே கிரணுடன் பேசாமல் இருப்பதே நல்லது என் கருதி எல்லோரும் படுக்கைக்கு தயார் ஆகினார்கள். கிரண் அவனுடைய அறைக்கு சென்றான். சென்றவன் தூக்கம் வாராமல் நினைவுகளை அசை போட ஆரமித்தான்.


மாலினியுடன் நட்புரிமை பாராட்டினாலும் கடந்த ஒரு வருடமாக அவளை ஒரு தலையாக காதலித்து வந்தான், நட்பு அதற்க்கு மிக பெரிய தடையாக இருந்தது. மாலியின் நினைவுகள் அவன் தூக்கத்தை கொள்ளை கொண்டு போனது. நட்பிற்கு மூடு விழா நடத்தி காதலுக்கு அஸ்திவாரமிட மின் அஞ்சல் தட்டினான்.

எப்படியும் பதில் கிடைக்கும் என்ற எதிபார்ப்பு இருந்தது. அனுப்பிய முதல் வாரத்தில் பதிலும் அழைப்பும் வராததால், தவறு செய்து விட்டதக்க நினைத்தான்.அடுத்த வாரத்தில் அவன் எதிர்ப்பார்ப்பு அவள் மீது எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.நெடுநாள் பழகிய விஷயம் அரவோடு நின்று விட்டதால் மனம் வெற்றிடம் ஆனது, இந்த நேரத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் உமா தன்னை ஒரு வருடமாக காதலிப்பதாக தன் காதலை சொன்னாள். அவன் மனதின் வெற்றிடத்தை அடைக்க அவளை ஏற்றுகொண்டான்.


புது காதல் ஆரமித்த ஐந்தாம் நாளில் மாலினியிடம் இருந்து பதில் மின் அஞ்சல் வந்தது.கடிதம் வரும் வரை காதல் வாகனம் தடை இல்லாமல் இருந்தது.கடிதம் வந்ததும் இருவரையும் ஒப்பிட்டு பார்த்து முடிவில் மாலினியே உயர்ந்தவள் என்று முடிவுக்கு வந்தவனாய், உமாவை இன்று சந்தித்து தனது வீட்டில் வேறு இடத்தில் பெண் பார்த்து ட்டதாகவும்,இனிமேல் நாம் பேசவோ பழகுவதோ நல்லதல்ல அவளை காலையில் இருந்து சமாதான படுத்தி விட்டு வருவதற்குள் இவ்வளவும் நடந்து விட்டது.

நாளையில் இருந்து மாலினி தான் உலகம் என்று நினைத்து வந்தவன் அவளின் செய்கைகளினால் வெறுப்பின் எல்லைக்கே சென்றான் .அவள் மீது இருந்த காதல் அளவை விட வெறுப்பின் அளவு அதிகமானது . அப்போது அவன் நினைத்தது அவரப்பட்டு விட்டு உமாவிடம் பொய் சொல்லி விட்டோமே.மீண்டும் நாளை காலையில் அவளை சந்தித்து உண்மையை சொல்லவேண்டும்.


தற்போது இருவரையும் ஒப்பிடும் பொது உமாவே உயர்வாக தோன்றியது. விருப்பமானதில் சிறந்ததை தேர்ந்து எடுக்கும் விதி ஆடைகளுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும் போல, யோசித்த படியே தூங்கிபோனான்.


மனிதன் மனது குரங்கு என்று இதை வைத்து சொன்னார்களோ என்னவோ. மேற்கண்ட காரணங்களினால் அவளிடம் கோபத்தில் வாய்க்கு வந்த பொய்யை சொல்லி இருப்பான் என்பது புரிந்தது.
கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்ணை திறக்க முடியாமல் இருந்தாலும், இடை விடாது தட்டும் ஓசையினால் கண் முழித்து கதவை திறந்தான்.

வெளியில் ரகுராம் அவர் பின்னால் காவல் துறை அதிகாரிகள்.


"அப்பா நான் தான் வீட்டுக்கு திரும்பிட்டேனு அவங்களுக்கு தகவல் கொடுக்கலையா?" கொட்டாவி விட்டு கொண்டே கேட்டான்.


காவல் துறை அதிகாரிகள் ஒருவர் "நாங்க உங்களை கைது செய்ய வந்து இருக்கிறோம்"


"கைது பண்ணுற அளவுக்கு நான்.." முடிக்கு முன்.


ஒரு பெண்ணோட தற்கொலைக்கு நீங்க காரணம், நீங்க அவள் காதலை ஏற்க மறுத்ததனால் அவள் தன்னை தானே மாய்த்துகொண்டாள்.

அப்பா என்ன சொல்லுறாங்க?

இங்கே என்ன நடக்குது ?

எனக்கே புரியலைடா?

ஐயா அந்த பொண்ணு பேரு என்னங்க?

ஏட்டையா செத்து போன பொண்ணு பேரு என்ன? உமாவோ மகேஸ்வரியோ, தம்பி நீ கிளம்பு, நீங்க காலையிலே காவல் நிலையத்தில் வங்க. கிரண்அழைத்து செல்லப்பட்டான்.


இவனை போன்ற பச்சோந்தி காதலர்களை நீதி தேவதை நிச்சயம் தண்டிப்பாள் என்ற நம்பிக்கையில் நாமும் விடை பெறுவோம்.


காதல் பச்சோந்தி

நீ உன் சம்மதத்தை அவன்கிட்ட சொல்லிடியா?

ரெண்டு நாளைக்கு முன்னாடி மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன் என்னோட சம்மதமும் தெரிவிச்சு, ஊருக்கு அவனை பார்க்க டெல்லி யில இருந்து வாரதாகவும் சொன்னேன்.

"இப்பதானே எனக்கு எல்லாம் புரியுது,கடந்த ஒரு மாசமா கிரண் ஒழுங்கா சாப்பிடுறது இல்ல, எப்போதும் அவன் ரூம்ல லைட் எரிஞ்சு கிட்டே இருக்கும்,நீ தான் காரணமா?"

அவருக்கு பதிலாக ஒரு வெட்கம் கலந்த புன்னகை.

"அங்கிள் கிரண் எங்கே? நான் டெல்லி யில இருந்து தொடர்பு கொண்டேன் இங்க வந்தும் ௬ட, அவன் கைபேசி எண் தொடர்பில் இல்லன்னு சொல்லுது ."


"காலையிலே அவசரமா கிளம்பி போனான், இப்ப வந்திடுவான், நீ அவன் ரூம் மேல இருக்கு, அங்க பொய் ஓய்வு எடு,நானும் உங்க அப்பாவும் வெளியில போய்ட்டு வாரோம்."

அவருக்கு தலை ஆட்டிவிட்டு மாலினி கிரண் அறைக்கு போகிறாள், அவனது கணினி முன் உட்கார்ந்து யாஹூ இணைய தளத்திருக்கு செல்கிறாள்.



கிரனோட பெயரும், கடவுசொல்லும் அதிலே சேமித்து இருந்ததினாலே, அது அவனது இன்பாக்ஸ் தானாக சென்றது. தற்செயலாக அவன் இன்பாக்ஸ் நோட்டம் விட்ட மாலினி, அவள் கிரணுக்கு எழுதிய அனுப்பிய மின் அஞ்சல் இன்னும் வாசிக்க படவில்லை என்பதை காட்டியது.

கண்ணோட்ட பார்வையில் தட்டுப்பட்ட காகிதத்தை எடுத்து படித்தால் "இன்று கடைசி" .அவள் கைபேசியில் இருந்து கிரணை தொடர்பு கொண்டாள் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்தில் இல்லை".



காடுதீயை போல பதட்டம் அவளை பற்றி கொண்டது, மாடியை விட்டு வேகமாக கிழே இறங்கி

"அங்கிள்!!! ... அங்கிள்!!!.." சற்று தயக்கத்துடன்


"நான் என்னோட சம்மதம் தெரிவிச்சு அனுபிய மின் அஞ்சல் இன்னும் கிரண் பார்க்கவில்லை, இந்த கடிதம் அவன் டேபிள் ல இருந்தது, எனக்கு எதோ தப்பு நடக்கபோறது மாதிரி தெரியுது. கிரண் எங்கே போயிருக்கிறான், போகும் போது ஏதாவது சொல்லிவிட்டு போனானா? "


"மாலினி தேவை இல்லாமல் நீ பதட்டபடுற, அமைதியா இரு, கிரண் இப்ப வந்திடுவான்."


"அப்பா நடக்கிறதை பார்த்தல் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு, நீங்களும் மாமாவும் கிரண் கைபேசியில் அழையுங்கள் "

இருவருக்கும் மாலினிக்கு கிடைத்த பதில் தான் .ரகுராம் லேசான பதற்டத்துடன் யோசிக்க ஆரமித்தார்

அவரின் அமைதியை பாத்து மாலினி, யோசிக்க நேரம் இல்லை,உடனே காவல் துறைக்கு போகலாம்.

காவல் துறையா!!!

"எனக்கு உள்மனசு சொல்லுது எதோ தப்பு நடக்க போகுதுன்னு, அதனாலே பின் விளைவுகளை பத்தி யோசிக்காம காவல் துறைக்கு தகவல் கொடுங்க."


முதலில் மறுத்தாலும் ஒருவழியாக மாலினியின் யோசனையை ஏற்று காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு,அவர்களும் வந்து விசாரணை முடிக்கி விடப்பட்டது.



காவல் துறை கைபேசி கம்பெனியை தொடர்பு கொண்ட பொது கடைசியாக அவன் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்னில் இருந்தது தெரிய வந்தது.


தாம்பரம் பகுதிகளில் எந்த சம்பவமும் நடக்க வில்லை மேலும் இன்று ஒரு புகாரும் வரவில்லை.

சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிரணின் புகைப்படம் அனுப்பப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.அவனை யாரும் கடத்தி இருக்கலாமோ என்று கோணத்திலும் அவன் வேலை பார்க்கும் அலுவலக நண்பர்கள், தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்தது. யாரும் அவனை இன்று காலையில் இருந்து பார்க்க வில்லை என்பதையே சொன்னார்கள் .

கிரணுக்கு நடந்தது என்னவென்று தெரியாமல் வீட்டில் அனைவரும் கலக்கத்தில் எதோ விபரிதம் நடத்து விட்டதாகவே எண்ணினார்கள்.அக்கம் பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரித்துவிட்டு சென்ற வண்ணம் இருந்தனர்.இரவு 10 மணி ஆகியும் ஒரு தகவலும் இல்லை. வந்தவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.முதல் கட்ட விசாரணையை முடித்து கொண்டு காவல் துறையினரும் கிளம்பினர்


கடிகாரம் 11 மணி அடிக்கும் போது ரகுராம் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.யாரோ கதவை தட்டுகிற சத்தம் கேட்டு ரகுராம், கிரணை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லி அலுத்துப்போனவர் மாலினியை கதவை திறக்க சொன்னார்.

தற்கொலை செய்து இறந்திருக்க கூடும் என அனைவரின் யூகம் பொய் ஆகும் படி கிரண் வாசலின் நின்று கொண்டிருந்தான்.
கதவை திறந்ததும் அவள் கண்ட காட்சியை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யாரை தேடி அலைந்து திரிந்தார்களோ அவன் செத்து பிழைத்தவன் போல முன்னால் நின்று கொண்டிருந்தான்.

தொடரும் ..


Thursday, October 9, 2008

சரக்கு தீர்ந்து போச்சு -பாகம் 3(வாரிசு அரசியல்)

தமிழகத்திலே இப்ப கொஞ்ச நாளா அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை முன்னணி பத்தி அரசியல் நடத்துவதிலே ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள்.

வாரிசு புயல் தமிழகம், இந்தியா, உலக அரசியலில் எல்லாம் புகுந்து ஆட்டி படைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வாத்தியார் புள்ளை வாத்தியார், மருத்துவர் புள்ளை மருத்துவர், சினிமா காரன் புள்ளை சினிமாகாரன் இதை எல்லாம் நாம ரெம்ப சந்தோசமாக ஏற்றுகொள்கிறோம். ஆனா அரசியல் வாதி புள்ளை அரசியல் வாதின்னு சொன்ன ஏற்க்க மனம் மறுக்கிறது.



அரசியல் வாதியும் ஒருமனிதனே அவர் ஒன்னும் நாட்டுக்கு நேந்து விடப்பட்ட கோவில் காளை இல்லை. அவருக்கு அவருக்கும் மனைவிகள் குழந்தை குட்டிகள் இருக்கிறது, அவர்களுக்கு ஒரு பொறுப்பான அப்பனாக இருக்க வேண்டியது அவர்களது கடமை.ராஜ்ஜியம் ஆளுகிரவர்க்கு மனைவி மக்களை ஒழுங்காக ஆட்சி செய்யலைனா பொது வாழ்கையிலே நுறு மதிப்பெண் சொந்த வாழ்கையிலே பூஜ்ஜியம் வாங்கி இருக்காருன்னு கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவிச்சி அவங்க மனம் நொந்து போகிற மாதிரி செய்வோம்.



பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இவங்க எல்லாருக்கும் நேரடி வாரிசுகள் கிடையாது. அதனாலே தான் நாம்ம ஊருல அவர்களுடைய வாரிசுகளா தங்களை காட்டி கொள்வதற்கு மல் உத்தமே நடந்து கிட்டு இருக்கு. உண்மையிலே வாரிசு இருக்க தலைவர்களுக்கு வாரிசு உரிமை கொண்டாடினால் கையையும் காலையும் கட்டி நாடு கடல்ல போட்டு இலங்கை கடற்படை யை வச்சு போட்டு தள்ளிருவாங்க.



நேரு மண்டைய போட்ட உடனே இந்திராவாலதான் நாட்டை காப்பத்த முடியும்னு அவங்க கையிலே நாட்டை கொடுத்தாரு காமராஜர்.அப்புறமா அவங்க புள்ள ராஜிவ் காந்தி. இவங்க ரெண்டும் அல்ப ஆயிசுல மண்டைய போட்ட உடனே, குடும்ப அரசியல் ஒழிஞ்சதா நினனச்சு சந்தோசபட்ட நேரத்துல, பார்க் பீச்ன்னு பெண் நண்பி கூட சுத்திகிட்டு இருதந்தவரை நாற்காலியில உக்கார வச்சாச்சு. இப்படி நாட்டுக்காக ஒரு குடும்பமே வாழையை வாழையா வரிஞ்சு கட்டிக்கிட்டு வேலை செய்யுது. ராகுல் அகில இந்தியா காங்கிரஸ் பொது செயலாளரா நியமிச்சப்ப எந்தனை பேரு தந்தி அனுப்பி எதிர்ப்பு தெரிவிசோம்.தீபாவளி மாதிரி வெடி போட்டு கொண்டாடினோம்.தேசிய அரசியலில் வாரிசு களம் இறங்கினா குத்து பாட்டு போட்டு கொண்டாடுற நாம மாநில அரசியலிலே வாரிசு வந்தா குத்தி குத்தி பேசுறோம்.

அவங்க எல்லாம் நாட்டுக்கு என்ன நல்லது செய்தாங்கனு நம்ம ஊரு காங்கிரஸ் காரர்களிடம் கேட்டால் பதில் சொல்லி முடிக்க குறைஞ்சது ரெண்டு வருஷம் ஆகும். ஏன்னா அவ்வளவு கோஸ்டிகள் இருக்கு தமிழ் நட்டு காங்கிரஸ்ல.



மன்னர் ஆட்சி இல்லை மக்கள் ஆட்சி யாரு வேண்டுமானாலும் மந்திரியாகலாம், மந்திர வாதியாகலாம், முதல் மந்திரி ஆகலாம்.அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் அடிப்படை குடிமகன்களில் ஒருவர், நமக்கு இருக்கிற எல்லா உரிமையும் அவர்களுக்கும் இருக்கிறது. வாரிசுகளை களம் இறக்கும் போது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நாம அவங்க படத்தை காருல ஒட்டி கட்ட பஞ்சாயத்து பண்ண கிளம்பி விடுகிறோம்.தொண்டர்களாகிய நாம் வாரிசுகளை ஏற்று கொள்ளும் போது, அவர்களின் கட்சி ஆட்சிக்கு வரும்போது தமிழக மக்களும் அவர்களின் தலைமையை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் நன்றாக ஆட்சி புரிந்தால் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்படின்னு பெருமை அடிகத்தான் செய்வோம்.


அரசியல் என்பது பொதுநலம் என்றாலும் அதிலே பங்கேற்கும் நாம எல்லாரும் ஏதாவது ஒரு வழியிலே சுய நலக்காரர்களே.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலை இல்லை என்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.

வாரிசு ஆண்டாலும் அரசியல் வாரிசு ஆண்டாலும் மின்வெட்டு,கைவெட்டு,கால்வேட்டுனு இல்லாம நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான்