tag:blogger.com,1999:blog-60780907068976229702024-03-05T00:11:02.529-05:00என் கனவில் தென்பட்டதுதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு
தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி
விண்ணை முட்டும் மட்டும் உயரும்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger233125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-9188142684424060652013-02-10T16:05:00.000-05:002013-02-10T16:06:30.504-05:00பக்கத்து உறவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு
சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை
பார்த்தேன். காஞ்சி கருவாடான காவிரி ஆறு போல வெட்ட வெளிச்சமா இருந்தது.<br />
<br />
என்னோட
சோகத்துக்கு என்னால தான் அழமுடியலை. வானத்தை பார்த்தால் ’ஓடியே போய்டு,
ஒன்னை கொன்னே புடுவேன்னு’ சொல்லுறமாதிரி இருந்தது. அக்கம் பக்கம் சுத்திப்
பார்த்தேன். எல்லாரும் என்னைவிட வெட்டியா இருந்தாலும் கோழி பிரியாணி
சாப்பிட்ட மாதிரி தெள்ள தெளிவா சிரிக்குறாங்க.. என் சோகத்துக்கு அழ யாருமே
இல்லையான்னு சோகம் ரத்த குழாயை பிச்சிகிட்டு வருது. எதிர்த்த வீட்டை ஆர்வமா
பார்த்தேன். பிறந்து ரெண்டு நாளான குழந்தையாவது அழுமான்னு.. சத்தமே இல்லை.
என்னோட அலைபேசி மட்டும் சத்தம் போட்டது குறுஞ்செய்தியோட, செய்திய திறந்து
பார்த்தேன்<br />
<br />
"சோளிங்கநல்லூர் ஆலோப்ட்க்கு வரவும். அன்புடன் சோழன் "<br />
.<br />
தண்ணி
வாங்கி குடிக்க வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி குடிக்கிற இடமாச்சேன்னு
வந்த செய்திய உறுதிப்படுத்த அழைத்துவிட்டு, அடுத்த அரை மணி நேரத்திலே
குடிமகன்களின் உறைவிடத்திலே சோழனை தேடினேன். ஆறு கோழி தொடை சந்துகளை கையிலே
வைத்துகொண்டு ஆறுகால் அலங்காரம் செய்து கொண்டு இருந்த்தவரின் கையிலே
இருந்து ஒரு காலையும் மிச்சம் வைத்து இருந்த சரக்கையும் கண நேரத்திலே
குடித்து விட்டு அமர்ந்தேன்.<br />
<br />
எச்சிக்கையிலே காக்கா விரட்டுனா அதிலே இருக்கிற இருக்கிற ஒட்டி இருக்கிற இறைச்சி வீணா போய்டும்னு நக்கி சாப்பிடுற நீர் இங்க எப்படி<br />
<br />
<br />
"நான் அமெரிக்கா போறேன் நசர்"<br />
<br />
"சொல்லவே இல்லை"<br />
<br />
"நீதான்
சென்னையில் ஈசியா பிக்கப் பண்ணி ஈ சி ஆர் ரோடு போக முடியலை, பெங்களூர்ல
பார்க்ல புல் மேய போற ஆடு, மாடு எல்லாம் உசார் பண்ணன்னு ஓடிபோய் ஒரு
வருசமாச்சே "<br />
<br />
"போனதுக்கு நல்லா படிச்சிக்கிட்டேன்"<br />
<br />
"கன்னடாவா"<br />
<br />
"இல்ல..உள்ளுர்ல விலை போகாத துண்டு எங்கேயும் போகாதுன்னு"<br />
<br />
<br />
உண்மையா இருந்தாலும் அடுத்த நாலு ரவுண்ட்க்கு அப்புறமாத்தான் ஒத்துகிட்டேன்.<br />
<br />
<br />
வீட்டுக்கு வரும்போது கடைசியா சோழன் சொன்னது மட்டும் ஞாபகம் இருந்து<br />
<br />
’உன்
கூட இருந்த வரைக்கும் டீக்கடைக்கும் ஆபீசுக்கும் நடந்து நடந்தே கால்
தேஞ்சி போச்சி, இப்ப அந்த தேஞ்ச காலை கோழி கால் போட்டு முட்டு கொடுக்க
எனக்கு ஒரு ஆள் இருக்குன்னு’ சொன்னபோது என் துண்டு போனதும் இருந்த கவலையை
விட அவருக்கு துண்டு கிடைச்ச கவலை நூறு மடங்கு அதிகமானது. ரெண்டுபேருமே
எலிக்கு சிக்ஸ் பாக் வச்சது மாதிரி இருப்போம்.அழகிலிலே! அழகனுக்கும்,
பேரழகனுக்கும் உள்ள வித்தியாசம் தான்.<br />
<br />
வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன்.<br />
<br />
<br />
சுமி வந்து கதவை திறந்தாள். என் கேள்வியை அறிந்தது போல எனது பதிலுக்கு எதிர் பார்க்காமல்<br />
<br />
"மழை வருகிறமாதிரி இருந்ததுன்னு அத்தை தங்கிட்டு போக சொல்லிட்டாங்க" ன்னு சொல்லிட்டு போய்ட்டா.<br />
<br />
என்னசொல்லுறதுன்னு
யோசிச்சி பேசுற அளவுக்கு நிதானம் இல்லை. மாடி ஏறின ஞாபகம் மட்டும்தான்
இருக்கு. மட்டையான ஞாபகம் இல்லை. எவ்வளவு மட்டையானும் மனசிலே நிம்மதி
இல்லைனா தூக்கம், தொலைந்து போன புளியங்குடி ஆறு மாதிரி தொலைந்து விடும்
என்று பேரிலக்கவாதி நசர் பிசிர் சொன்னதைப் போல காலை ஐந்து மணிக்கெல்லாம்
என்ன செய்வதுன்னு தெரியாமல் கொசுவத்தி சுத்த போறேன்.<br />
<br />
நான்
சென்னையிலே வேலைக்கு போய் ரெண்டு வருஷம் கழித்து வேலை தேடி ஊரிலே இருக்கு
பக்கத்து உறவு பெண் சுமி எங்க வீட்டு வந்தாள். முறைக்கு முறைப்பெண்ணாக
இருந்தாலும்,, நான் ஒரு நவநாகரிக இளைஞன், கைலி கட்டிக்கொண்டு வெளியே
சென்றால் எந்த கட்டிட வேலைக்கு போற தம்பி? டவுசர் போட்டு போனால் குப்பை
வண்டி இன்னும் எங்க தெருவுக்கு இன்னும் வரைலைன்னு சொல்லுற அளவுக்கு,
அளவுக்கு அதிகமான அழகு இருந்ததினாலே தானே வடக்கூர் காரியை கல்யாணம்
முடிச்சி இந்த சமுதாய ஓட்டைய அடைக்கனும்னு கொலைவெறியிலே துண்டை வைத்து
சுத்திகிட்டு அலைஞ்சேன்!<br />
<br />
வீட்டிலே சுமி ரெம்ப நாள் இருந்தா எங்க
ரெண்டு பேருக்கும் முடிச்சி போட்டுருவாங்கன்னு, அவளை சீக்கிரம் வேலைக்கு
அனுப்பணுமுன்னு சுமிக்கு படிக்க நிறைய உதவி செய்வேன். நேர்முகத் தேர்வுக்கு
பயிற்சி கொடுப்பேன். , நான் சொல்லுகிற விசயங்களை சொல்லி ஆச்சயரியபடுற
அவளைப் பார்த்து<br />
<br />
’ஏன் உன் முகத்தை கண்ணாடியிலே பார்த்த மாதிரி
அதிர்ச்சியா பார்க்குறன்னு’ கேட்பேன். அப்ப அவ சிரிக்கும் போது கொஞ்சம்
சப்பையா இருக்கும். இப்ப எனக்கு அவ சிரிக்கும் போது என் முகத்தை நான்
கண்ணாடியிலே பார்த்த மாதிரி வலிக்கிறது. இந்த ஒரு வருட இடைவெளியிலே அவள்
அழகு ஆலிவுட் நடிகை அளவுக்கு உயருமுன்னு எதிர்பார்க்கலை. பக்கத்திலே
பக்கோடா இருக்கும்போது பல்லை கடிச்சிட்டு எலக்கியவாதியா இருந்திட்டேன்.
எவனோ ஒருத்தன் பக்கோடாவை ஆட்டையப் போட்டுவிட்டான். இப்ப பல் காட்டியும்
பக்கடா கொடுக்க ஆள் இல்லை.<br />
<br />
<br />
காலையிலே அம்மாவின் வற்புறுத்தலின்
பேரிலே சுமியை பேருந்து நிறுத்தத்துக்கு கூட்டி சென்றேன். ரெண்டு பேரும்
பேசலை. கொஞ்ச நேரம் கழித்து அவள்<br />
<br />
"என் மேல கோபம் இல்லையே "<br />
<br />
"இருக்குன்னு சொன்னா, ரோஜா பூவையும், மஞ்ச கயிறையும் வாங்கி இப்பவே தாலி கட்டுங்கன்னு சொல்லுவியோ"<br />
<br />
"சொல்லுவேன், ஆனா உங்க கிட்ட இல்ல"<br />
<br />
"ம்ம்ம்.. புரியுது"<br />
<br />
"உங்க அம்மாகிட்ட சொல்லுங்க ஓவரா கனவு கானுறாங்க"<br />
<br />
எனக்கும்
சேர்த்துச் சொன்னமாதிரியே இருந்தது.சுமியை பேருந்திலே அனுப்பி விட்டு
சோழனுக்கு செய்தி அனுப்பினேன். பாரிமுனையிலே கருவாட்டு கடையிலே மீன்
பிரியாணி சாப்பிட போக இருப்பதாக இருந்த திட்டத்தை மாற்றி வளசரவாகத்திலே
நண்டு பிரியாணி நல்லா இருக்கும் என்று சொன்னேன். அடுத்த ஐந்து நிமிடத்திலே
வீட்டுக்கு வந்து விட்டார்.<br />
<br />
நண்டு பிரியாணின்னு சொல்லி
ஏமாத்தினாலும், நாலுகாடை பிரை நாலு குவாட்டரும் வாங்கி கொடுத்து பசியை
அடக்கினேன். இருவரும் கடையிலே போட்ட அலப்பறையிலே கடைக்காரர் எங்க
புகைப்படத்தை எடுத்து வைத்து கொண்டு, இனிமேல இவனுக ரெண்டு பேரும் வந்தா
உள்ளே விடவே கூடாதுன்னு சொல்லிடாரு. அடுத்த ரெண்டு வாரத்திலே சோழன்
அமெரிக்கா சென்று விட்டார். விமான நிலையத்திலே எனக்கு அவரோட நண்பியை
அறிமுகம் செய்துவைத்தார். பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு பெருசு
மாதிரி வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன். அடுத்த ரெண்டுமாததிலே அம்மா சுமியை
திட்டி கொண்டுருந்தாள்.விசாரித்த போது அவளுக்கு என்னை கல்யாணம் பண்ண
பிடிக்கலைன்னு சொல்லிவிட்டாள் என தெரிந்து கொண்டேன். துண்டை என் சங்கில்
போட்டு இறக்கிய வலி.<br />
<br />
<br />
நிராகரிப்பின் வலிக்கு<br />
நிரந்தர நித்திரை<br />
மருந்து அல்ல<br />
<br />
என்று
ஒரு வரிகவிஞர் சொன்னது ஞாபகம் வந்தது. அடுத்த ஆறுமாதத்திலே சுமி அவன்
காதலனை திருட்டுத் திருமணம் செய்து கொண்டாள். தற்போது கணவருடன்
அமெரிக்காவிலே வசித்து வருகிறாள். எப்பவாவது மின்னஞ்சல் வரும் சுமியிடம்
இருந்து, அவள் முடிக்கும் முன் உங்க முகத்தை கண்ணாடியிலே பார்த்த மாதிரி
அதிர்ச்சி அடையாதீங்க என்று சொல்லுவா... மன்னிக்கணும் சொல்லுவாங்க.<br />
<br />
சோழன்
இப்ப குடுகுடுப்பையாகி இருக்காரு, வெள்ளையம்மாவிடம் ஓசி முத்தம் பெறுவது
எப்படின்னு கிளப்ல சேர்ந்து அவரு காதலை அவரு அமெரிக்கா போன ஒரு வருசத்திலே
கள்ளு பானைய போல உடைத்துவிட்டார். எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது.
இன்னும் இருக்கிறது. சாதி, மதங்களை விட்டு கட்டுடைக்க நாங்க தயாரா
இருந்தாலும் எங்களுக்கு கால் கட்டு போட இன்னும் யாருமே தயாரா இல்லை.<br />
<br />
அளவுக்கு
அதிகமா அழகா இருந்தா இப்படியும் பிரச்சனைகள் வரலாம் என்பதற்கு நாங்கள் ஒரு
உதாரணம் என்று சொல்லி கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகூறி விடை
பெறுகிறேன். நன்றி! வணக்கம்.</div>
நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-18660172635315970622011-10-24T14:02:00.001-04:002011-10-24T14:11:39.393-04:00குடுகுடுப்பை என்ற சத்குரு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;">ஒரத்தநாட்டு வாய்க்காலில் துண்டை போட்டு மீன் பிடித்து சுட்டு தின்னுபுட்டு, உத்திராபதியோடு எருவமாடு மேய்ச்சிகிட்டு,கணினியிலே எருவமாடு படம் வரைய படித்ததாக ஒரு சர்டிஃபிகேட்டும் வச்சிருப்பாரு.பெயிண்டும், பைப்பும் விற்கும் ஹார்ட்வேர் கடைக்கு சிவி அனுப்பி நோகாம நொங்கு திங்க வேலையா குடுங்கன்னு சாஃப்ட்வேர் வேலை தேடிய மகான். பறப்பன ஊர்வன நடப்பன எல்லாம் இந்திரா அம்மையார் இளைய மருமக மேனகா காந்திக்கு மொட்டை கடிதாசி எழுதி இந்தாளு இங்க இருந்தா எங்க இனத்துக்கு பாதுகாப்பு இல்லைன்னு ஒப்பாரி வச்சதாலே அமெரிக்காவிலே தெலுங்கு படிக்க நாடு கடத்தப்பட்டவர்.<br />
<br />
ஊரில் ஒரு எருவமாட்டுக் கன்னுக்குட்டியை ஆட்டையப் போட்டு வரும்போது எதிரில் ஆட்டயப்போட்ட மாட்டுக்கு சொந்தக்காரன் வந்ததால் போர்த்துக் கொண்டிருந்த போர்வையை அதன் மேல் போர்த்தி குடுகுடுப்பைக்காரன் போல் நடித்து எஸ்ஸானதை மறைத்து எங்கேயோ இவர் போட்ட பின்னூட்டத்தை குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் உள்ளது என்று நெஞ்சை நக்கியதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டதாக புருடா விடுபவர்.<br />
<br />
பாயசத்தில் ஏலக்காய் போடுவது பார்ப்பனீயம், அதனால் சேமியா பாயசத்தில் சென்னாக்குன்னி பவுடர் போட வேண்டும் என்று அடம் பிடித்து தங்கமணி கடுப்பாகி சட்டுவத்தால் போடு போடு என்று போட்ட பிறகு அடங்கினதை இவர் மறைத்தாலும் அமெரிக்க உளவுத் துறையில் பதிவாகி இருக்கிறது. ரண்டு டாலர் விலை குறைவு என்பதற்காக சிக்கன் புளி சோறு வாங்கி பிரியாணி என்று ஃப்ரீசரில் வைத்துத் தின்றதை மறந்து தாய்த் தமிழ்நாட்டின் பிரியாணியை மஞ்சா சோறு என்று நக்கலடித்தவர்.<br />
<br />
நடிகைக்கு நாய் பேர ஊழலில் ஆட்டை போட்டதை தேம்ஸ் நரி அதுசரி கண்டு பிடித்து விட்டதால் சட்டத்துறைத்தலைவர் என்ற டம்மி போஸ்ட் கொடுத்து சரிக்கட்டப் பார்த்து முடியாமல் கூட்டாக பங்கு போட்டுக் கொண்டவர். அந்தப் பணத்தை இருவரும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வதும் வெள்ளிக் கிழமையானால் ஜட்டியோடு நிக்கேன் என்று இவரும், நான் கோவணமும் போய் கையால் பொத்திக் கொண்டு நிக்கேன் என்று அவரும் பஸ் விட்டாலும், திங்கள் கிழமை இருக்கும் காசை திரும்பவும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வார்கள். திங்கள் ஜட்டி, செவ்வாய் பனியன், புதன் கால் சட்டை, வியாழன் மேல் சட்டை, வெள்ளி டை என்று முழு உடை அணிவதும் மாலையில் சுவர்வீதிக்காரன் உருவிக் கொண்டு அனுப்புவதும் வாரா வாரம் நடக்கும் காமெடி.<br />
<br />
சொந்தமாக தோசை சுடத் தெரியாமல் பெண் கவிஞர்கள் யாராவது ஒரு தோசை சுட்டால் அசந்த சமயம் ஆட்டையப் போட்டு ஒரு தோசை சுட்டு திருப்பிப் போட்டு எதிர்த்தோசை என்று விளம்பரம் போடுவார். கல்லூரி ஆஸ்டலிலும், மேன்சனிலும் தாழ்ப்பாள் இல்லாத கழிப்பறையில் பாதுகாப்புக்காக விசிலடித்துப் பழகியதை கவினை மிரட்ட பயன்படுத்தி என்னமோ கதிரி கோபால் நாத்திடம் பயிற்சி பெற்ற வித்துவான்போல் பீலா விட்டு வீடியோ எடுத்து பஸ்ஸில் மிரட்டுகிறார்.<br />
<br />
ரௌத்திரம் பழகும் கலகலப்ரியாவே இந்த வீடியோவைப் பார்த்து பாதி நாட்கள் தூக்கத்தில் அலறி பாரதி படத்தை தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்குவதாக ஸ்விஸ் உளவுத்துறை கண்டனம் தெரிவித்திருக்கிறது.<br />
<br />
எங்காவது மதச் சண்டை நடந்தால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கையரிப்பு தாளாமல் ஒரு கமெண்ட் போட்டு விட்டு இரவெல்லாம் தூங்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பல்லு கூட விளக்காமல் வேலைக்குப் போய் ட்ராஃபிக்கில் தூங்கி ஆக்ஸிடண்ட் ஆக்கி பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்று பதிவு போடுவார்.<br />
<br />
சமீபகாலமாக திமுக தீவிரவாதி அபிஅப்பா, அதிமுக அராஜகவாதி உ.த. அண்ணன், நாம் எந்த கட்சிக்கு ஆதரவு என்று அவ்வப்போது தங்கபாலுவுக்கு ஃபோன் போட்டு உசாராக அதன் படி சப்போர்ட் செய்யும் சஞ்சய்காந்தி, மரம்வெட்டி, தண்ணிதொட்டி, சிவப்புகட்டி கட்சி எல்லாம் குரவளையைக் கடித்துக் கொண்டு குத்துயிரும் குலை உயிருமாய் அடித்துக் கொண்டிருக்கும்போது நம்ம தலைவர் அங்கே வடிவேலு மாதிரி போவார். ‘எச்சூஸ் மீ! வைகோ ரெம்ப நல்லவர். நீங்களெல்லாம் ஆதரவு கொடுத்தால் அவர்தான் அடுத்த பிரதமர்’ என்று ஒரு பிட்டு போடுவார். ஸ்டன் பாமில் அடிபட்டவர்கள் போல் சித்தம் தடுமாறி அபிஅப்பா ரத்தத்தின் ரத்தமே என்றும் உ.த. அண்ணன் உடன் பிறப்பே என்றும் சஞ்சய் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் இளங்கோவனுக்கு நம்பர் மாத்தி அடிப்பதும் என்று தெறித்து ஓடும்போது கிக்கிக்கீ என்று சிரிப்பார்.<br />
<br />
மனவாடு மொழி கற்றுக் கொள்கிறேன் என்று அவர்கள் மொழியைக் கொல்லுவதும், தெலுங்குப்படம் பார்ப்பதும் என்று இவர் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் தெலுங்கானாவுக்கு கடத்திவிடுவோம் என்று மிரட்டியதின் பேரில் இப்போது அய்யா அடங்கி இருப்பதை சி.ஐ.ஏ. கண்டு பிடித்துள்ளது.மீள் பதிவு, மீள் மீள் பதிவு, மீள் மீள் மீள் பதிவுன்னு மீள் பதிவு மட்டுமே 200+ போட்டு அசத்திய ஒரே ஆள் குடுகுடுப்பை தான், குறிப்பா டியூஷன் டீச்சர் விமர்சனத்தை 49 தடவை மீள்பதிவிட்டவர்<br />
<br />
வீட்டிலே சட்டியிலே சோறு இல்லை என்பதற்காக சட்டிகுரு எழுத்துப்பிழையாக சத்குருவாக மாறிவிட்டது.என்ன இருந்தாலும் பதிவுலகில் என் மூத்தவர். இவரைப் பார்த்துதான் நான் பிழையோடு எழுதக் கற்றுக் கொண்டேன் என்று நன்றியுடன் பெருமை கூர்ந்து வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.</span><br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 28px;"><b>வசனம் உதவி :பாலா அண்ணன் </b></span></span></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-88326721512799799492011-08-14T15:02:00.001-04:002011-08-14T22:43:16.117-04:00சுதந்திர தின சிறப்பு செய்தி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
நண்பர்களே இந்த இனிய இரவிலே பொதுஜன்மான நான் பொதுவான அறிக்கைய ஓசியிலே கூகிள் ஆண்டவர் வழியாக நள்ளிரவிலே சொல்லகடமைப் பட்டுள்ளேன். இரவு செய்திக்கு பின்னால் இந்தியா இரவிலே சுதந்திரம் அடைந்தது என்பதை தவிர வேறு ஏதும் இல்லை. சுதந்திரம் என்பது சுசியம் போல சாப்பிட சாப்பிட இனிப்பாக இருக்கும் என்று சுசியம் பெருமாள் கூறியுள்ளார். இந்த பொன்னான நாளிலே தலைவர்கள் மட்டுமே யாரோ எழுதிகொடுத்ததை மனப்பாடம் பண்ணாமல் வரி வரியாக படித்து அறிக்கை விட முடியும் என்ற ௬ற்றை பொய்யாக்கவே இந்த சொந்த சரக்கு அறிக்கை.<br />
<br />
இலக்கியம் கெட்ட கேட்டுக்கு படிப்பா, இந்தியா கெட்ட கேட்டுக்கு சுதந்திரமா என்று பக்கத்து தெரு பாயா விற்கும் ஆயா கேட்டுகொண்டிருந்தாள். தொலைகாட்சிகளிலே சினிமா நடிகைகளின் கன்னிபேட்டிக்கும், கவர்ச்சி உடைக்கும் இடையிலே உலவி வருகிறது இந்த சுதந்திரம்.நானும் இத்தகைய பேட்டிகளை கண்ணை மூடாமல் பார்த்து இருக்கேன்.இப்ப ஆலமரத்துக்கு கீழே சொம்பை வச்சி நாட்டாமை பண்ணுவதாலே இந்த விளிம்பு நிலை எதிப்பை கடைநிலையிலே இருந்து காட்டவில்லை என்பதை சொல்லிகொள்கிறேன். வில்லங்கம் வரும்போது வில்லனாக இருக்க வேண்டும், சத்தம் இல்லாதபோது சூப் சாப்பிட வேண்டும் என்ற ரஷ்ய பழமொழிக்கு ஏற்ப நாமும் நடந்தால் நாடும் வீடும் எருக்கம் செடிபோல தண்ணி ஊத்தாமலே செழித்து வளரும்.<br />
<br />
அறிக்கை விடும் ௬ட்டமும்,அதைப் படிக்கும் ௬ட்டமும் அதிகம் இருப்பதினாலே வெத்திலை போடும் வாயும் அறிக்கைவிடுகிறது இந்தியாவுக்கு வாஸ்து சரீல்லை என்று, வீட்டுக்கு வாஸ்து சரீல்லை என்றால் இடித்துகட்டலாம்,நாட்டுக்கே வாஸ்து சரில்லை என்றால் இடித்தா கட்டமுடியும் என்று பகுத்தறிவு பகலவன் பல்குடிக்கி கேட்கிறார்.சுதந்திரம் என்பது சுதந்திரமாக போகவும் வரவும் வேண்டும். சுதந்திர தினம் என்று குண்டு துளைக்காத மேடையைப் போட்டு கம்பிகளுக்கு நடுவிலே இருந்து அச்சா அச்ச்சாசோ என்று பேசுவது சிறை அதிகாரி கைதிகளிடம் பேசுவது போல் இல்லை, ஒரு கைதியின் பேச்சை கேட்க நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது போல இருக்கிறது.<br />
<br />
எவ்வளவு நாளைக்குதான் இந்த புளிப்பு மிட்டாயை வாங்கி சாப்பிட சீருடையில் செல்லவேண்டுமென மாணவரணி கேட்கிறது, மாணவரணியாக இருந்தாலும் மகளிர் அணியாக இருந்தாலும் பதில் ரெண்டுதான்தான் பல் இருக்கவன் பக்கடா திங்கான் மற்றும் நோகாம நொங்கு திங்க முடியாது.<br />
<br />
குத்தூசி முதல் கோணிப்பை வரை ஊழல்களை வைத்துகொண்டு சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடையிலே இருந்து கொண்டு பாரத் மாதாவுக்கு ஜெ என்று லா லா பாடிக்கொண்டு இருந்தால் லாலி பாப் ௬ட கிடைக்காது.சுதந்திர தேவி சிலையை தற்காலிகமாக மூடிவிட்டதைப் போல சுதந்திரத்தையும் தற்காலிகமாக மூடிவிட்டு இன்றைய தினத்திலே ஆகும் செலவை ஊழலிலே முதலீடு செய்தால் நாடு இன்னும் பத்துவருசத்திலே வல்லரசாகும் என்பதை தெரிவித்து கொண்டு வாய்பளித்த அனைவருக்கும் நன்றி ௬றி விடைபெறுகிறேன்.<br />
<br />
இந்த கட்டுரையைப் படித்துவிட்டு தேசியார்வம் பொங்கிவழிந்தால் அருகிலே உள்ள கொடி ஏற்றும் மேடையை அணுகவும். </div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-24100100399110444312011-07-22T08:49:00.001-04:002011-07-22T09:00:42.095-04:00வாசகர் கடிதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;">அன்புள்ள மூத்த பதிவர் நசரேயன் அவர்களுக்கு,<br />
<br />
வணக்கம். வெகுநாட்களாக உங்களுக்கு மடல் வரைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், மூத்த பதிவராகிய தங்களைப் பாராட்டும் தகுதியோ வயதோ எனக்கில்லை என்பதால் தயக்கமாகவே இருந்தது. பல நாட்கள் மனப் போராட்டத்துக்குப் பின், தங்களின் கொலவெறி இடுகையைப் படித்தவுடன் இனிமேலும் பாராட்டாமல் இருந்தால் இந்த மெய்நிகர் உலகம் என்னை மன்னிக்காது என்பதால் துணிந்து எழுதுகிறேன்.<br />
<br />
நான் வலையுலகத்துக்கு அடி எடுத்து வைத்தவுடன் என் கண்ணில் தென்பட்டது உங்கள் வலைத்தளம் ‘என் கனவில் தென்பட்டது’. அந்தச் சிலிர்ப்பிலே படிக்கத்துவங்கியவுடன் கண்ணில் பட்டது, ’தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்’ என்ற உங்கள் பொன்மொழி. இது கல்வெட்டிலே செதுக்கி புளியங்குடி வரவேற்கிறது என்ற போர்டுக்கு அருகிலே வைக்க வேண்டியது எனக் கருதுகிறேன். உங்கள் இடுகைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகே, படிக்கும்போது பிழையாக எழுதுவதால், உனக்கு கணக்கன் உத்தியோகம் கூட கிடைக்காது, எருவமாடு மேய்க்கப்போ என்று என் தன்னம்பிக்கையை குலைப்பதை வகுப்புதோறும் நிறைவேற்றிய ஆசிரியர்களின் கடமையால் தாழ்வு மனப்பான்மையோடு இருந்துவந்தேன். எங்கே கையெழுத்துப் போட்டால் பிழை வந்துவிடுமோ என்று, கைநாட்டு வைத்துவந்தேன். உங்கள் இடுகைகள் தந்த ஊக்கத்தால் இன்று பிழையின்றி வானம்பாடிகள் என்று கையெழுத்துப் போட முடிகிறது. இதற்கான பெருமை முழுதும் உங்களையே சாரும். இதற்காக நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.<br />
<br />
நானும் பல வலைத்தளங்களைப் படித்து வருகிறேன். ஆனாலும், இந்தச் சமூகத்தில் காதல் தோல்வியால் இளைஞர்கள் தாடிவைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டு நாசமாய்ப் போவதை சகிக்காமல், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, காதல் நிலையானதல்ல, துண்டே நிலையானது என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்து இன்று பல இளைஞர்களை துண்டும் கையுமாக அலையவிட்டிருப்பதிலே உங்களின் சமூக அக்கரையும், இளைஞர்கள்பால் உங்கள் நம்பிக்கையையும் எந்த ஒரு அரசியல் கட்சிக் கூட செய்ததில்லை.<br />
<br />
அதே போல், அமெரிக்காவில் தாங்கள் பணிபுரிந்த காலத்தில், நொங்கு தின்னும் கலாச்சாரத்துக்கு எதிராக பொங்கி, நகைச்சுவையோடு அதனை விமரிசததை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு கொள்ளாமல் விட்டதை நினைக்கும்போது மனம் கனத்துப் போகிறது. கருவண்டு, எருவமாடு போன்ற சொற்களை சொல்லுக்கடங்கா மன உறுதியுடன் எதிர்கொண்டு, துரைசானிகளுக்கு துண்டு வீசி சமத்துவத்தை நிலை நாட்டி, ‘சமச்சீர் துண்டு’ப் புரட்சி செய்ததை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.<br />
<br />
படிப்படியாக பதிவுலகம் என்பது மொய் சார்ந்த மெய்யுலகம் என்பதையும் உங்கள் மூலம்தான் கற்றுக் கொண்டேன். ஒரு நாளில் எத்தனை இடுகைகளைப் படித்துப் பின்னூட்டமிடுகிறார் என்ற வியப்பு, உ.த அண்ணனின் ஒன்னரை குயர் இடுகைக்கு பதிவிட்ட ஒரு நிமிடத்தில் ‘ம்ம்’ என்ற உங்கள் மறு மொழி பார்த்ததும்தான் பதிவுலகில் யார் பதிவெழுதினாலும், எந்திரன் ரோபோ போல் ஒரே பார்வையில் ஸ்கேன் செய்யும் திறனிருப்பதை அறிய முடிந்தது. தங்களைப் பின்பற்றி நானும் பல இடங்களில் மொய் விருந்து வைக்கக் கற்றுக் கொண்டேன்.<br />
<br />
இப்படி இருக்கும்போதே கூகிள் பஸ்ஸில் தங்களின் ஒன்னு கீழ ஒன்னு போட்டிருக்கேன், என்னான்னு சொல்ல வேண்டியதில்லை என்ற தன்னடக்க அறிவிப்புடன் வந்தவைகளைப் படித்து கிலியாகி, கவுஜ என்ற ஒன்று தமிழ் இலக்கியத்தில் இருப்பதை அறிந்தேன். அந்த மகிழ்ச்சியில் என் பள்ளி ஆசிரியர்களிடம் கவுஜ என்று ஒன்று இருப்பதைச் சொல்லிக் கொடுக்காமல் விட்டதற்காக சண்டை போடப் போய், அவர்கள் கீழ்ப்பாக்கத்துக்கு பிடித்துக் கொடுத்த போது, அந்த மருத்துவரிடம் உங்கள் கவுஜ ஒன்றைச் சொன்ன உடன் அவரே போய் ஒரு செல்லில் அடைந்து கொண்டு நான் இருக்கும் வரை வெளியே வரமாட்டேன் என்று ஒளிந்து கொண்டதையும், பிறகு மருத்துவத்துறை செயலாளர், அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கி, வெளிநடப்புச் செய்தேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.<br />
<br />
உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நேற்று, தற்கொலையைத் தடுக்க ஒரு சேவை மன்றம் அவசியம் என்ற உங்கள் இடுகையை வாசித்தவுடன் புல்லரித்துப் போயிற்று. அதிலும் கடைசியாக நீங்கள் சொன்ன புதிர் இராத்தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது. நமது மாண்புமிகு முதல்வர் உடனடியாக இந்தத் திட்டம் செயலாக்கப்பட வேண்டும் என்றும் உலக அளவில் இது குறித்தான ஆலோசனை மையம் அமைத்து ஆலோசனை அளிப்பதற்கு வழி செய்யவேண்டுமென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிந்தேன். இந்தத் துறைக்கு உங்களைத் தலைவராக அழைப்பார்கள் என்று நம்புகிறேன்.<br />
<br />
உங்களின் சேவையைப் பாராட்டி, ஜனாதிபதி அவர்களும், ஒபாமா அவர்களும் ‘நசுங்குன சொம்பு நசரேயன்’ என்ற விருது அளிக்கப் போவதாகவும், அந்த விழாவுக்கான பாடலை, கவிஞர். பா.ரா. எழுதி, ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவரப்போவதை தாங்கள் ஏன் சொல்லவில்லை? எப்படியோ, தாங்கள் குற்றாலம் போகவிருப்பதாக அறிகிறேன். ஒரு பதிவர் கூட்டம் ஏற்பாடு செய்து, உங்கள் தோட்டத்திலிருந்து எலுமிச்சம்பழம் இலவசமாகக் கொடுத்து குளிக்கவைத்தால், உங்கள் பதிவின் பாதிப்பு சற்று மட்டுப்படலாம் என்ற அவாவோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.<br />
<br />
அன்புள்ள<br />
வானம்பாடிகள்</span><br />
<span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"><br />
</span><br />
<br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: normal;"><i><br />
</i></span></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: normal;"><i>பொறுப்பு அறிவித்தல்:</i></span></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: normal;"><i><br />
</i></span></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: normal;"><i>இதெல்லாம் ஒரு பொழப்பு போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டறுக்கப்பட்டது</i></span></div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-14360332743984979222011-07-21T12:37:00.000-04:002011-07-21T12:37:04.916-04:00தற்கொலை தடுப்பு சேவை மையம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">தற்கொலை தடுப்பு வாசகர் சேவைக்கு அழைத்து இருக்கும் வாடிக்கையாளரே நீங்க ஏற்கனவே டிக் 20, இல்ல மூட்டை பூச்சி மருந்து குடித்து இருந்தால் உடனே சவ ஊர்தி வண்டிக்கும், மருத்துவ மனை ஆம்புலன்ஸ் க்கும் அழையுங்க,நீங்க மண்டையப் போடாம இருந்தா திரும்பி வந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் எண் ரெண்டை அழுத்துங்க.</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">ரெண்டை அழுத்துனத்துக்கு நன்றி, உங்களுக்கும், தற்கொலை தடுப்பு சேவை அதிகாரிக்கும் இடையே உரையாடல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படும்,காரணம் எங்க ௬ட பேசிய பிறகு நீங்க எங்கையாவது போய் மண்டையபோட்டா, உங்களுக்கு சங்கு ஊத நாங்கள் காரணம் இல்லை என்று எங்களை தற்பாதுகாத்துகொள்ள இந்த உரையாடலை சேமித்து வைக்கிறோம் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன், உங்கள் பெயரை உச்சரித்து எங்களின் விரிவான சேவை பிரிவுகளுக்கு செல்லலாம். தயவு செய்து உங்கள் பெயரி உச்சரிக்கவும்</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"என் பெயர் ......."</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">மன்னிக்கணும் உங்கள் பெயர் புரியவில்லை, மீண்டும் ஒரு முறை ௬றவும், "என் பெயர் ..." , மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம், உங்க பேரு புரியலை, மறுபடி ஒரு தடவை சொல்லுங்க.. என் பெயர் ... இல்ல புரியலை.. என் பேரு .. புரியவே இல்ல, அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு பொறுமை இழந்த வாசகர் </div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span class="Apple-style-span">உங்க </span><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">பெயர் </span>இன்னும் புரியலை என்று தானியங்கி <span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">குரல் </span><span class="Apple-style-span">கேட்ட கேள்விக்கு</span></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"அட எளவெடுத்த சனியனே"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நன்றி "அட எளவெடுத்த சனியனே" உங்கள் பெயர் நல்ல பெயர், தயவு செய்து எங்களின் விரிவான சேவைகளை ௬ர்ந்து கேளுங்கள், உங்களுக்கு வேலை வெட்டியே இல்ல, எப்போதுமே சும்மாதான் இருப்பீங்கன்னா எண் ஒன்றை அழுத்துங்கள், வேலைப்பணி அதிகமா இருக்கு, அதனாலே மன அழுத்தம் அதிகமா இருந்தா ரெண்டை அழுத்துங்கள். யோசிக்க எதுவும் இல்ல, அதனாலே உங்களுக்கு தற்கொலை பண்ணுகிற யோசனை இருந்தா எண் மூன்றை அழுத்துங்கள். காதல் தோல்வி இல்ல காதல்கள் தோல்வி இருந்தா எண் ஐந்தை அழுத்துங்கள், கணவன் மனைவி பிரச்சனை, கள்ளக்காதல் பிரச்சனயா இருந்தா எண் எழு, இப்ப சொன்ன எல்லா பிரச்சனையும் இருந்தா </div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">பூஜ்ஜியம், பிரச்னை எதுவுமே இல்லைனா, தொலைபேசிய கீழே வச்சிட்டு நாங்க அணிப்பி வைக்கிற சேவை கட்டண பணத்தை பார்த்து மாரடைப்பு வராமல் இருந்தா நலம்.</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"> </div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"> உங்களுக்கு எல்லா பிரச்சனையும் இருக்கிறதா சொல்லி இருக்குகீங்க அட எளவெடுத்த சனியனே, உங்க பிரச்சனையின் வீரியம் அறிந்து உங்களுக்கு சேவை செய்ய ஒரு குழு இருக்கிறது உங்களுடன் உரையாட, அதனாலே நீங்க மனம் விட்டு தாராளமா பேசுங்க. சொல்லுங்க திரு அட எளவெடுத்த சனியன்.</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"எப்படி சொல்லன்னு தெரியாம துக்கம் தொண்டைய கவ்வி பிடிக்குது"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"ஐயா கவ்வின கழுதையை எறக்கி வைக்கத்தானே நாங்க இருக்கோம்,நீங்க கவலைய மறந்து அள்ளிப்போடுங்க"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"வாழ்க்கையிலே மண் விழுந்துபோச்சி"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"சோத்திலே விழுந்த மண்ணுக்கும், மனசிலே இருக்கிற புண்ணுக்கும் ஒரே வழிதான், ரெண்டையும் எடுத்து வெளியே போட்டுட்டு பொழைப்பை பார்க்கணும்"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"குத்துவசனம் கேட்க நல்லா இருக்கு,ஆனா நடைமுறைபடுத்த முடியலை"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"வசனத்தையே வாழ்க்கையா பாருங்க, வழி தான்னாலே பிறக்கும்."</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"நீங்க எப்போதுமே இப்படி வெட்டியாத்தான் பேசுவீங்களா?"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"ஐயா நீங்க இப்பவரைக்கும் உங்க பிரச்சனை என்னன்னு சொல்லவே இல்ல"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"சொல்லுறேன்.. இவ்வளவு நாளா என் உள்ளத்திலே சுவிஸ் வங்கியிலே ஒளித்து வைத்து இருந்த கருப்பு கள்ளப்பணம் மாதிரி மறைத்து வைத்த எல்லாத்தையும் சொல்லுறேன்"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">அரைமணி நேர கொசுவத்திக்கு அப்புறமா மிஸ்டர் அட எளவெடுத்த சனியன் உங்க பிரச்சனைய எப்படி தீர்க்கிறதுன்னு யோசிக்கிறோம். உங்க கோரிக்கைய எப்படி நிறைவேத்துவதுன்னு,ஆனா நீங்க எதிர்பார்க்கிற விஷயம் நடக்குமான்னு தெரியலையே</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">"வாசகர் சேவை,எல்லாத்தையும் காப்பாத்துவோமுன்னு சொன்னீங்க,என்னைய காப்பாத்துங்க"</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span class="Apple-style-span">சரி </span><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">எங்க </span><span class="Apple-style-span">மின் அஞ்சல் முகவரிக்கு உங்க புகைப்படம் அணிப்பு வையுங்க, தசவல் சொல்லுறோம்.அடுத்த நாள் காலையிலே தற்கொலை வாசகர் சேவையிலே இருந்த மணமாகாத பெண்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர்.</span></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">பின் குறிப்பு :</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span class="Apple-style-span">கொசுவத்தியிலே நடந்த சம்பவம் என்னன்னு சொல்ல நான் கடைமைபடலை இருந்தாலும் சொல்லவேண்டியது என்னோட கடமை,அதாகபட்டதவது தற்கொலை வாசகர் சேவையை அழைத்த அந்த மாமனிதன், தங்களின் சேவையிலே உள்ள அனைத்து பிரச்சனைகளும் எதிர் காலத்திலேயே எனக்கு வர வாய்ப்பு இருப்பதாலே,அடிக்கடி உங்கள் சேவைக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, உங்கள் தற்கொலை தடுப்பு சேவையிலே வேலை செய்யுற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்னோட வாழ்கையிலே வெளிச்சம் கிடைக்கும்,அதனாலே உங்கள் சேவையிலே இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டார்.சேவை அதிகாரிகளும் அந்த மாமனிதனின் புகைப்படத்தை அனுப்ப சொல்ல, அதை பார்த்த அனைத்து பெண்களும், இப்படி ஒரு அழகான வாலிபருக்கு எதிர் காலத்திலேயே பிரச்சனையா என்று ஏங்கி தற்கொலை செய்துகொண்டனர்.அந்த மாமனிதர் யாரென்றும்,அவர் புகைப்படம் எப்படி இருக்கும் என்று நான் சொல்லி </span><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">தெரியவேண்டியதில்லை </span><span class="Apple-style-span"> </span></div><br />
</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-48247048630519461042011-07-18T13:19:00.000-04:002011-07-18T13:19:09.308-04:00ரயில் பயணம்<div><div><span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px;"><div>சென்னை மத்திய ரயில் நிலையத்திலே இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் விரைவு வண்டியைப் பிடிக்க வேண்டிய நான், காலையிலே இருந்து பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தேன், ரெண்டு நாளுக்கு தேவையான துணிகளை பையிலே அள்ளி வைத்து விட்டு ரயில் பயணச்சீட்டையும் கவனமாக அணிந்து இருந்த சட்டையிலே வைத்து விட்டு எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைச் சரிபார்த்தேன்.</div><div><br />
</div><div>காலைச் சாப்பாடு மறந்து போனது. மதியம் வந்த போது பசி தெரிந்தாலும் கிளம்பும் அவரசத்திலே சாப்பாடு தவறி விட்டது. தாம்பரத்திலே இருந்து சரியாக ரெண்டு மணிக்கு புறநகர் ரயிலைப் பிடித்தேன். </div><div><br />
</div><div>பூங்கா ரயில் நிலையத்திலே இறங்கி வேகமாக நடந்து சென்னை மத்திய ரயில் நிலையம் வந்தடைய மூன்று பத்து, நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் பத்தாவது நடை மேடையிலே ரயில் நிற்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். ரயிலை அடைந்து என்னுடைய இருக்கை இருக்கும் பெட்டியத் தேடினேன் ஐந்து நிமிட தேடலுக்குப் பின் இடத்தை கண்டு பிடித்தேன். இருக்கையிலே ஏறி அமர்ந்துவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தேன். </div><div><br />
</div><div><div>இதை தொடர்கதையா எழுதி இருந்தா ரெண்டு முட்டை கண் ஆம்லேட் போடமா வெறிக்க வெறிக்க பார்த்தது, இல்ல வெளிய நான் கண்ட காட்சி நடு மண்டையிலே இல்லாதா மூளை அதிரும் படியாக என்னை உலுக்கியதுன்னு சொல்லிட்டு தொடரும் போடுவாங்க. நானும் தொடருமுன்னு போட்டு உங்களோட கொலைவெறி பொறுமையா சோதிக்கிற அளவுக்கு </div><div>கொடுமைக்காரன் இல்ல. </div></div><div><br />
</div><div>வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்த நான் சாப்பிட எதாவது வாங்க கிளம்பலாம் என்று எண்ணினாலும் வண்டி புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது என்னால் போகமுடியலை, அதானலே வெளியே வேடிக்கை பார்தேன். வண்டி புறப்படும் நேரம் வந்தது, ஆனால் ரயில் கிளம்பலை, ஐந்து, பத்து நிமிடம் ஆச்சி., கடைசியா அரை மணி நேரம் கழித்து கிளம்பியது. நான் இந்திய ரயிலில் பயணம் செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்த இடைப்பட்ட அரைமணி நேரத்திலும் என்னாலே சாப்பாடு வாங்க முடியலை,வண்டி எந்நேரம் வேண்டுமானாலும் கிளம்பலாம் என்று வாங்க முடியாமல் போனது. </div><div><br />
</div><div>வண்டி கிளம்பிய பத்து நிமிசத்துக்குள் நடைபாதை டீ,காபியிலே இருந்து டாஸ்மாக் கடையிலே கிடைக்கும் சரக்கை தவிர அனைத்து சரக்குகளை விற்பவர்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. விற்பவர்களில் சிலர் சீருடை அணித்து இருந்தார்கள். அவர்கள் ஒப்பந்த உழியர்கள் என்று அவர்கள் அடையாள அட்டையை வைத்து தெரிந்துகொண்டேன், இவர்கள் நடைபாதையிலே செல்லும் வேகம் ரயிலின் வேகத்துக்கு கொஞ்சமே குறைவாக இருக்கும். அசதியாக இருக்கிறது என்று சிறிதுநேரம் எழுந்து நடைபாதையிலே நின்றால் ௬ட "சார் சைடு" என்று நொடிக்கொரு முறை உங்களை கடந்து செல்வார்கள் இந்த ஊழியர்கள். </div><div><br />
</div><div>சாதாரண நேரமாக இருந்தால் இவற்றை எல்லாம் கவனித்து இருக்க மாட்டேன், நான் ஒரு எழுத்தாளர் என்று போனவாரம் தெரிந்ததாலே கண்ணில் தென்படுபவை எல்லாம் கனவிலே தென்பட்டு எழுத்துக்களாகிறது(எங்க போய் முடியுமோ)</div><div><br />
</div><div>இப்படி ரயில் நடப்புகளை கவனித்து கொண்டு இருக்கும் போது பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார், எனது மின்னணுச் சீட்டைக் காட்டினேன். வாங்கிப்பார்த்துவிட்டு என்னிடம் ஏதோ கேட்டாரு, எனக்கு அவரு பேசுனது புரியவே இல்ல. அவரிடம் </div><div><br />
</div><div>தமிழ் ஆர் இங்கிலீஷ் ன்னு சொன்னேன், அதற்குள் பக்கத்திலே இருந்தவர் "உன்னோட அடையாள அட்டை கேட்கறாரு என்று சொன்னார், உடனே தேடிப்பார்க்க ஆரம்பித்தேன், தேடாத எல்லாம் கிடைத்தது அடையாள அட்டையைத் தவிர, நான் தேடி முடிக்கும் முன்னே என்னைய பார்த்தது ஹிந்தியிலே சொல்லிட்டு பக்கத்து இடத்துக்கு போனார், அங்கே இருந்த குடும்பம் ஒன்றும் என்னை மாதிரி மின்னணு சீட்டு வாங்கி இருந்தவர்களிடம் அடையாள அட்டை நகலை கொடுத்ததற்காக வாக்குவாதம் பண்ணிவிட்டு கடந்து போனார்.</div><div><br />
</div><div> அவர் போனதும் கொஞ்ச நேரத்திலே டீ,காபி விற்பவர்களை எல்லாம் தவிர்த்து இன்னும் சில வீட்டு அத்தியாவசிய பொருட்கள், மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்துகொண்டு வியாபாரம் செய்ய வியாபாரிகள் வந்தார்கள், அந்த வியாபாரிகள் அனைவரும் கிட்டத்தட்ட மாற்று திறனாளிகள், ஒருவருக்கு கண் இருப்பதை கண்டுபிடிப்பதே கஷ்டம், இன்னொருவருக்கு கை மெலிந்து தட்டையாக இருந்தது, இன்னும் சில வித்தியாசமான முக அமைப்பு கொண்ட மனிதர்கள்,இவர்களின் உழைப்பு திறனை பாராட்டுவதா இல்லை இவர்களைப் பார்த்தது பரிதாப்படுவதா என்று யோசித்துக்கொண்டே நான் எந்த பொருளும் வாங்கவில்லை. என்னைமாதிரி மற்ற பயணிகளும் நினைத்தார்களோ என்னவோ,அவர்களும் எந்த பொருளும் வாங்கவில்லை. </div><div><br />
</div><div>வண்டி சோலார்பேட்டை தாண்டியதும்,சிறிது நேரத்திலே நான் இருந்த ரயில் பெட்டி முன்பதிவு செய்யாத பெட்டியைப்போல ௬ட்டம் நிறைந்து வழிந்தது. எனது அருகில் இருந்த காலி இடத்தை துண்டு போட்டு பிடிக்க இருவர், இருவரில் ஒருவர் வென்றுவிட, என் அருகிலே இருந்தவரிடம் கேட்டேன். நீங்க முன்பதிவு செய்தீங்களா என்று, அவரு அதற்கு இல்லைன்னு பதில் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.</div><div><br />
</div><div>பசிமயக்கம் கண்களை பிறட்டிகொண்டு வந்தாலும், ஏனோ ரயிலில் விற்பனை செய்யப்பட்ட தின்பண்டங்களை வாங்கி சாப்பிட பிடிக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு இருந்த சிறிது நேரத்திலே பசி மயக்கத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. எனது சட்டைய பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, எழுந்தால் எனக்கு எதிரே பயண சீட்டு பரிசோதகர் நின்றுகொண்டு எனது அடையாள அட்டையை கேட்டுக்கொண்டு இருந்தார்,நான் எனது பக்கத்திலே இருந்தவரைப் பார்த்தேன். அவர் இல்லாமல் வேறொருவர் அமர்ந்து இருந்தார்.</div><div><br />
</div><div>பசிமயக்கம், தூக்க கிறக்கம் ரெண்டிலும் வந்த ஆத்திரத்திலே எதிரே நின்ற </div><div>இவ்வளவு நேரமும் மாட்டு சந்தை மாதிரி பயணச்சீட்டு எடுத்தும், எடுக்காமலும் ரயில் பெட்டி முழுவதும் மக்கள் வெள்ளமா இருந்தது,அவங்களை எல்லாம் பார்த்து ஒரு வார்த்தை பேசாத நீ உண்மையிலே முன்பதிவு செய்து சீட்டு வாங்கிய என்னையப் பார்த்து அடையாள அட்டை கேட்கிற உனக்கு மனசாட்சி இல்ல என்று சொன்னேன், கொஞ்ச நேரத்திற்கு எதிரில் நின்றவர் மட்டுமல்ல, அந்தப் பெட்டியிலே இருந்த அனைவரும் அமைதியானார்கள், பரிசோதகர் என்னிடம் </div><div><br />
</div><div>தம்பி இது உங்க பையிலே இருந்து விழுந்த கடவுசீட்டாய் இருக்கும், உனது புகைப்படத்தை பார்த்து நான் உன்னிடம் திரும்பி கொடுக்க வந்துள்ளேன் என்று சொன்னவரிடம் வேறவொன்றும் பேசாமல் கடவுச்சீட்டை வாங்கிவிட்டு அமைதியாக அமர்ந்தேன்.அதுவரை பக்கத்திலே இருந்தவர்களிடம் இந்தியன் ரயில்வே யை குறைசொல்லிகொண்டு வந்த நான் எதுவுமே பேசவில்லை, கொஞ்ச நேரத்திலே என் ரயில் பயணம் முடிந்துவிட்டது,ஆனால் இன்னும் வாழ்கைப்பயணம் முடியவில்லை. </div><div> </div><div> </div></span></div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11551572148104775572011-05-15T18:07:00.001-04:002011-05-15T18:07:35.194-04:00உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கடிதம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><br />
<div style="text-align: left;">சட்ட மன்ற தேர்தலில் தோல்வி, ஆட்சியில் தோல்வி, வளர்ச்சியில் தோல்வி, வாழ்கையில் தோல்வி என எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என துரத்தப்படும் உடன்பிறப்பே! இது தோல்வியல்ல, கடும் பணிசுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வு.</div><br />
மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டனர்.சிறிது இளைப்பாறி மீண்டும் மக்கள் பணியை தொடர்வோம்.ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை.ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது.வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும்.<br />
<br />
விடையில்லா கேள்விகளுக்கும் பதில் "மூன்று" எழுத்து, பதிலை பகுக்கும் "அறிவு" மூன்று எழுத்து, அறிவுக்கு உரமிடும் "ஆசான்" மூன்று எழுத்து,அனைத்திற்கும் வித்திட்ட "அன்னை" மூன்று எழுத்து, அவள் ஊட்டிய ”தமிழ்” மூன்று எழுத்து, தமிழோடு மக்களுக்கு செய்யும் ”தொண்டு” மூன்று எழுத்து,அதனை சார்ந்து செய்யும் கழகத்தின் பெயர் மூன்று எழுத்து.இதை கண்டு எடுத்த ”அண்ணா” மூன்று எழுத்து.இவைகள் இணையும் சக்தியிலே ௬டும் வெற்றியும் மூன்று எழுத்து, அந்தகனியை கனியை நாம் மட்டும் சுவைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழி பொய்த்து விடும்.மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள் கொடுத்துள்ளோம்.<br />
<br />
தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம். கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப்போவதில்லை, ஒப்பாரி வைத்து, ஓலமிடும் அளவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல. முயன்றோம்-நின்றோம்-தோற்றோம்!முயல்வோம்-நிற்போம் -வெல்வோம்!கழகம் அழிந்துவிட்டது, கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் அன்பர்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்க நினைவுபடுத்துகிறேன். தடம் புரண்ட வரலாறுகளை உலுக்கி,குலுக்கி திருத்தி இருக்கிறோம், இன்று தடம் புரண்டதையும் திருப்பி எடுத்து, திருத்தி எழுதுவோம்.<br />
<br />
விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்திலே சூரியன் அழிந்து விட்டது என்பது சொல்வது,கண்ணை மூடிக்கொண்டு கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம். இந்த தோல்வி வெற்றிக்கான அழிவில்லா விதைகளை விதைத்துள்ளது.விதைக்கப்பட்ட விதைகள் உயிர் பெற்று மரமாகி விண்ணை முட்டும் அளவு வளரும் தூரம், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போல நெடியதல்ல, இரவுக்கும், பகலுக்கும் இருக்கும் நேர இடைவெளியைப் போல மிகவும் குறுகியது.<br />
<br />
கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும்.பொறுத்திரு உடன்பிறப்பே! காதுகளை ௬ர்மையாக்கி, புத்தியை தீட்டி வைத்து கொண்டு மக்கள் பணி செய்ய காத்திரு! அண்டத்தின் சுழற்சியிலே ராத்தூங்கும் நம்மோடு சூரியன் தூங்குவதில்லை. இன்னுமொரு உதயத்திற்கு காத்திரு, புது உலகம் நமக்காக காத்து இருக்கிறது சரித்திரமும், சாதனையும் படைக்க!<br />
<div><br />
</div></div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-38731074600117534422011-05-07T06:46:00.002-04:002011-05-07T06:52:46.254-04:00கனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;">2G வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்,மூத்த வக்கீல் ஜெத்மலானியின் வாதம் வீ ணாகப்போனது,இதை எதிர்பார்க்காத தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர், இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். திமுகவின் அறிக்கையில் ஒரு திராவிட தாய்க்கு,ஆரிய தாய் சதி செய்த்துவிட்டாள். வடக்கு வளர்வது நின்று தெற்கு வளர்வது பொறுக்காமல், தெற்கின் வளர்ச்சியை தடுக்க இந்த கைது நடவடிக்கை என்பதை கழகம் உறுதியாக நம்புகிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;">பாஜக தலைவரின் அறிக்கையில் கைது நடவடிக்கை வரவேற்கதக்கது, ஆனால் மிகவும் தாமதமான நடவடிக்கை, இந்த வழக்கிலே சம்மந்தப்பட்ட பிரதமர், மற்றும் பிற தலைவர்கள் இன்னும் கம்பி எண்ணாமல் வெளியே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு பதில் அளித்த பிரதமர், ௬ட்டணி கட்சிகளின் நடவடிக்கையை நான் கட்டுபடுத்த முடியாது , அது பொது குழுவிலே முடிவு செய்யப்படும். நான் எனது துறையைத் தவிர மற்ற துறைகளிலே மூக்கை நுழைப்பதில்லை என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 1c,2c என்ற பழக்கப்பட்ட எனக்கு 1g,2g என்றெல்லாம் ஒன்று இருப்பது இன்று செய்திதாள்களின் மூலமே அறிந்து கொண்டேன். இதற்கு மேல் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை கட்சி தலைமை முடிவு செய்யும்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;">காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கைது நடவடிக்கை ௬ட்டணியை பாதிக்காது, கைதுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த வெற்றி ௬ட்டணி 3G,4G என்று 100000G வரைக்கும் வழக்குகள் வந்தாலும் தொடரும். வட மாநிலங்களிலே கைது நடவடிக்கைய எதிர்த்து இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் மக்கள் அமைதியாக இருக்கின்றனர்,ஆனால் தமிழகம் தத்தளிக்கும் கத்தரி வெயிலிலும், மின் வெட்டுகளிலும் மக்கள் மனதிலே இருக்கின்ற சூட்டை விட, கைது நடவடிக்கை மக்களிடையிலே பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அனைவரும் மெரினா கடற்கரையிலே ௬டி கடலும் பொங்குமா இந்த திராவிடத்தாய் கைது நடவடிக்கைக்கு ஆதரவாய் என்று எதிர்பார்க்கின்றனர்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;">கழக பொதுக்குழு அவசமாக ௬ட்டப்படுகிறது என்ற தகவல் தெரிந்த உடனே, தமிழக பிற கட்சி தலைவர்கள் கலைஞரை சந்திக்கப்படை எடுத்துள்ளனர், தலைவர் விட்ட அறிக்கையிலே கழகம் தான் எனக்கு முதல் பிள்ளை, உறுப்பினர் அனைவருமே என் உடன்பிறப்புக்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொலைகாட்சிக்கு பணம் வந்த விசயத்திலே புலனாய்வு துறை அறிக்கை, தேர்தல் அறிக்கை போல இருக்கிறது, தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன் எங்களை எதிரியாக பாவித்தது போல,புலனாய்வு துறையும் பாவிக்கிறது.நான் ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன் குடும்பத்துக்காக கட்சியை அடகு வைக்கமாட்டேன். சட்டப்படி எந்த வழக்கையும் சந்திப்போம். நானே கலைஞர் தொலைகாட்சியிலே குறள் சொல்லி சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண குடிமகன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;">கைது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவி, நீதி இன்னும் தலை தூக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது,இந்த வழக்கிலே மட்டுமல்ல எந்த ஊழல் வழக்கிலேயும் சம்பந்தபட்ட அனைவரையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்யவேண்டும்.ஆளுநர் விட்ட சிறப்பு அறிக்கையிலே தமிழகம் அமைதி பூங்காவாய் திகழ்கிறது,பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன் மாதிரியாக இருக்கிறது என்பதிலே எந்தவிதமான சந்தேகமே இல்லை. </span></span><br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;">தமிழக மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் பயத்துடன் பஸ்சிலே பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். விடுமுறையை ஒட்டி, ரயில் நிலையங்களிலே மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அறிக்கைய நாளேடுகளிலே படித்தவர்கள் இன்னும் அதிர்ச்சி கலையாமல் அப்படியே இருக்கின்றனர், அதிர்ச்சியிலே ஏற்படும் இதய பிரச்சனைகளுக்கு காப்பிட்டு திட்டம் கை கொடுக்கும் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பிலே செய்தி வெளியிட்டுள்ளது.தீக்குளிக்கும் தொண்டர்களுக்கு கழக கண்மணி வேந்தர் பட்டம் கொடுக்கப்படும். </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="border-collapse: collapse; line-height: 28px;"><i>பொறுப்பு அறிவித்தல் : இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்திலே,நீங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நலம்.</i></span></span></div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-20122815046892904532011-05-01T18:40:00.001-04:002011-05-01T18:41:14.504-04:00என்னை கல்யாணம் பண்ணுவியா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div style="text-align: left;">என்னை கல்யாணம் பண்ணுவியா என்கிற வசனத்தை முதல்ல துரைமார்கள் படத்திலே தான் பார்த்தேன், வைர மோதிரத்தை கையிலே எடுத்துகொண்டு வெள்ளையம்மா முன்னாடி மண்டியிட்டு கேட்பார், அதை கேட்டுட்டு மின்சாரத்தை தொட்டதுபோல கைய கால உதறி ஒரு நட்டுவக்காலி குதி குதிச்சி வராத கண்ணீரை வரவச்சி ஆமான்னு சொல்லுவதை கேட்ட வெள்ளையப்பன் செத்துப்போன குழியிலே இருந்து உயிரோடு வந்ததுபோல ஒரு சந்தோசப் பார்வைப் பார்த்து வெள்ளயம்ம்மா வாயிலே வாயை வைத்து பழசாறு குடிக்கிறதோட படத்தை முடிப்பாங்க.</div></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இப்படிப்பட்ட கலைநயம் மிக்க படங்களைப் பார்த்து நானும் இந்த வசனத்தை யாரிடமாவது சொல்லணும் என்று நினைச்சிகிட்டே ஐந்து வருடம் ஓடிபோச்சி, ஆறாவது வருசத்திலே நான் அமெரிக்கா வந்துவிட்டேன். இங்க எனது பொழுதுபோக்குகள் என்னண்ணன்னு பேச நேரமில்லை, அதைப்பத்தி பின்னாளிலே பார்க்கலாம்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><div style="text-align: left;">ஒரு நாள் அழகிய மாலை நேரத்திலே நான், வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவர்(teller) முன்னே நிற்கிறேன்,தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம் வேலை செய்யாததாலே, மாலையிலே மருந்து குடிச்சி மட்டையாக பணம் எடுக்க வரிசையிலே காத்துகொண்டு இருந்தேன். எனது முறை வந்தபோது என்னை அழைத்தாள் ஒரு கருப்பழகி, அதாவது கருப்பம்மா, இவ்வளவு நாளும் வெள்ளையம்மாளுக்கு துண்டு சேவை செய்த நான் இன்று கருப்பமாவுக்கு சொம்பு அடிக்கப்போறேன். துண்டு விசயத்திலே நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபிக்கவே இந்த முயற்சி.</div></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">எனக்கு வணக்கம் வைத்துவிட்டு,வந்த விஷயம் கேட்டவளிடம் பணத்தேவையை சொன்னேன், அதற்கான வழிமுறைகளை முடித்துவிட்டு பணம் கொடுக்கும் முன் </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உங்க கடன் அட்டைக்கு வெகுமதியா நீங்க செலவழிக்கும் ஒவ்வொரு நூறு டாலருக்கும் பத்து டாலர் திரும்பி வரும், உங்களுக்கு இந்த முறையை தேர்ந்து எடுக்க விருப்பமா ?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இந்த சேவைக்கு வருடாந்திர கட்டணம் ஏதும் இருக்கா?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இல்லை.. இலவசம்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இப்ப இலவசமுன்னு சொல்லிட்டு அப்புறமா காசை ஆட்டையப்போட்ட என்ன செய்ய, உங்களிடம் வந்து காசு கேட்கவா?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அவங்களுக்கு ஒரே சிரிப்பு பதில் சொல்லமுடியாம, கருப்பம்மா சிரிக்கிற அளவுக்கு நகைச்சுவை சொல்லி இருக்கேன்னு நினைப்புக்கு போகும் முன்னேதான் அவள் அழகைப் பார்த்தேன், கருப்பா இருந்தாலும் அடுத்தவர்களை கவரும் முகம், அவளின் சிரிப்பு அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது. வர்ணிப்பு அம்புட்டுத்தான். சாணிய கரைச்சி ஊத்துற அகாடெமி விருது பெறனும்முன்னு வர்ணிப்புகளை ரெம்ப குறைத்துவிட்டேன்(இதெல்லாம் ஒரு பொழப்பா).</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><div style="text-align: left;">அதன்பின் அவளோட சிரிப்பை பார்க்க தினமும் ஒரு முறையாவது அவளை வங்கியின் கண்ணாடி வழியாக இருந்து பார்ப்பேன்,வாரத்திலே மூன்று முறையாவது பணம் எடுக்கும் சாக்கிலே அவளை சந்திப்பேன், ஒரு நாள் என்னிடம் </div></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"வெளியே தானியங்கி பணம் எடுக்கிற இயந்திரம் இருக்கும் போது நீங்க இங்க வர சிறப்பு காரணம்?" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உங்களைப்பார்க்க, உங்க சிரிப்பை பணத்தோட பையிலே அள்ளிப்போட்டு போகத்தான்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">கேட்டுட்டு சிரித்துவிட்டு</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"வேற ஏதும் இருக்கா?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இன்னும் நிறைய இருக்கு, ஆனா அதை இங்க சொல்லமுடியாது"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நான் கேட்டது வங்கி விசயமா?" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நான் கேட்டது வாழ்க்கை விசயமா?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நல்லாவே பேசுறீங்க"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உங்க அழகைப் பார்த்தா பேச்சு நயாகரா அருவி மாதிரி வருது"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ம்ம் பார்க்கலாம்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உங்க வேலை எப்ப முடியும்?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">முடியுறப்ப சொல்லுறேன், இப்ப நீங்க போகலாம். அடுத்த வாடிக்கையாளர் காத்துகொண்டு இருக்கிறார்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><i><b>எளவெடுத்த </b></i></div><div style="text-align: left;"><i><b>சனியன் </b></i></div><div style="text-align: left;"><i><b>நிம்மதியா </b></i></div><div style="text-align: left;"><i><b>இருக்க </b></i></div><div style="text-align: left;"><i><b>விட மா</b></i><i><b>ட்டானே</b></i></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">என்ற ஒரு இலக்கிய கவிதை(வரி வரியா இருக்குல்ல, வேற என்ன வேணும் கவிதைக்கு) மனதிற்குள்ளே நிழலாடி விட்டு சென்றது.அன்று மாலையே அவளை சந்தித்தேன்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"குட்டிபோட்ட பன்னி மாதிரி எங்க அலுவலகத்தை சுத்தி வந்து என்னை சந்தித்துவிட்டீர்கள்?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நூறு சதவீத அர்ப்பணிப்பான உழைப்பு எனது வெற்றியின் ரகசியம்" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இன்று எனக்கு நிறைய நேரம் இல்ல, நாம ரெண்டு பேரும் காபி குடித்து விட்டு செல்லலாம்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சரி என்று தலையாட்டிவிட்டு, காபியுடன் கடலையை முடித்தேன், அன்று முடிந்த சந்திப்பு மீண்டும் தொடர்ந்தது, காபியோட நில்லாம சாப்பாடு வரை சென்றது. சந்திப்புகள் வளர்ந்துகொண்டு இருந்தாலும், இன்னும் என் மனசிலே உள்ள எண்ணத்தை சொல்லலை,அவளிடம் பேசும் போது, அவளுடைய தரத்திற்கு ஏற்றவாறு எனது பேச்சுக்கள் அமையும், கொஞ்சம் ௬டஅவளை சோர்வு அடைய செய்யாதவாறு பார்த்துகொள்வேன்.<br />
<br />
ஒரு நாள் நாங்கள் இருவரும் வார இறுதி நாட்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது நான் அவளிடம்<br />
<br />
"நடன விடுதிக்கு செல்வோமா, நாம ரெண்டு பேரும்"</div><div style="text-align: left;"><br />
"ம்ம் போகலாம் .. ஆனா இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் செல்வோம்" என்று சாதரணமாக பதில் சொன்னாள்.என் மனசிலே அசாதாரண மாற்றம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் நடன விடுதிக்கு செல்ல குறித்து வைத்து இருந்த நாளும் வந்தது, அவளை நடன விடுதி முன் சந்தித்தேன்.என்னைபார்த்து புன்னகை புரிந்தாள்.<br />
<br />
"ஆட்ட விடுதிக்கு உள்ளே போகலா"<br />
<br />
"ஒரு ரெண்டு நிமிஷம்"<br />
<br />
ரெண்டு நிமிஷம் பத்து நிமிசமாச்சி, பதினைந்தாவது நிமிசத்திலே எங்களுக்கு பின்னால் இருந்து ஒரு குரல்<br />
<br />
"யே பேபி..என்னைய நினைச்சி ஏங்குறியா " என்று கேட்டவனிடம்<br />
<br />
"அடி செருப்பால...நீ எல்லாம் ஒரு மனுசானா?"<br />
<br />
"எம்மேல கோபமா?"<br />
<br />
"இவனை பாத்து நல்லா கத்துக்கோ?" என்னை கை காட்ட<br />
<br />
"ஒ.. இவ்வளவு நாளும் என்னிடம் சரியாப் பேசாததுக்கு இவன் தான் காரணமா?"<br />
<br />
"ஒரு பெண்ணை எப்படி சந்தோசமா வச்சி இருக்கனுமுன்னு வெளிநாட்டு பன்னிக்கு தெரியுது, உள்ளூர் ஓணான் உனக்கு தெரியலையே"<br />
<br />
பன்னின்னு சொன்னதுக்கு நானே கவலைபடலை, ஆனா ஒணான் பெயரைகேட்டு அண்ணாச்சி கடும்கோபத்திலே இங்கலிபிசிலே ஐஞ்சி நிமிசத்துக்கு விடாம ஒரே திட்டு, திட்டு முடிச்ச உடனே ரெண்டு பேரும் என்னையப் பார்த்தாங்க, நான் அமைதியாவே இருந்தேன், உடனே கருப்பமா<br />
<br />
"இந்த திட்டை எல்லாம் கேட்டுகிட்டு என்னால சும்மா இருக்க முடியலையே" என்று புலம்ப, உடனே நான் கருப்பண்ணாச்சியிடம்<br />
<br />
"நான் வெளிய பல்ல காட்டிட்டு மொக்கை அடிக்கிற ஆளா இருந்தாலும், உள்ளுக்குள்ளே பல்லகடிச்சிகிட்டு எழுதுற இலக்கியவாதி துங்கிகிட்டு இருந்தான், நீ இவளை திட்டி அவனை எழுப்பி விட்டுட்ட, இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ, இனிமேல இவளை திட்டின உன் மண்டையிலே கொட்டுவேன்" <br />
<br />
மறுபடியும் ரெண்டு பேரும் என்னையப்பார்த்தாங்க, உடனே கருப்பம்மா<br />
<br />
"பக்கி .. பக்கி இவன் விடாம உன்னையதானே இவ்வளவு நேரமும் திட்டினான், நீ என்னைய திட்டாதேன்னு சொல்லுறே?"<br />
<br />
சாதாரணமாவே அண்ணாச்சிமார் பேசுறது புரியாது, இந்த லட்சணத்திலே என்னை திட்டினா எப்படி புரியும், இருந்தாலும் சமாளிச்சேன்.<br />
<br />
"உனக்காக எதையும் தாங்குவேன்"<br />
<br />
"இவனுக்கு என் மேல இருக்கிற அன்பில கால் வாசி உன்னிடம் இருக்கா, இவன் காலை நல்ல கழுவி குடி, அப்பத்தான் உனக்கு புத்தி வரும்" <br />
<br />
நான் உடனே "இப்ப தண்ணிக்கு எங்க போக, அதுமட்டுமில்லாம இந்த குளிரிலே சூவை எல்லாம் கழட்டனும்"<br />
<br />
நான் சொன்னதை எல்லாம் பொருள் படுத்தாமல் அண்ணாச்சி கருப்பம்மா முன்னாடி மண்டியிட்டு பையிலே இருந்த மோதிரத்தை எடுத்து<br />
<br />
"வில் யு மார்ரி மீ?" கேட்டுட்டு அப்படியே கருப்பம்மா கண்களைப் பார்த்து ஏக்கத்துடன் காத்துகொண்டு இருந்தார்.இதை சற்றுமே எதிர் பாராத கருப்பம்மா<br />
<br />
"ஏய்ய்ய்ய்ய்... நீ என்ன பண்ணுற.. நீ என்ன பண்ணுற .. நீ என்ன" என்று சொல்லிவிட்டு அவனைமட்டுமே பார்த்தாள். அவன் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்து இருக்கவேண்டும்.கொஞ்ச நேரத்திலே ஆர்ப்பாட்டம் ஆரவாரம் இல்லாமல் அவன் கைகளை பற்றி கொண்டு ஆமா என்ற ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள்,நான் அந்த இடத்தை விட்டும்,அவள் என் மனதைவிட்டும் வெளியேற அந்த ஒரு வார்த்தை மட்டுமே போதுமானதாக இருந்தது. <br />
<br />
</div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-61774284549844177332011-04-18T21:50:00.000-04:002011-04-18T21:50:22.703-04:00முத்தமிட்ட மெக்ஸிகோ அழகி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"></span></div><div><div style="text-align: left;"><br />
<div style="text-align: left;">அமெரிக்காவிலே காலடி எடுத்து வைத்த உடனே நிலவுக்கு சென்று கொடியை நாட்டின ஆம்ஸ்ட்ராங், ஏற்கனவே அங்கே டீ கடை வைத்து இருந்த நாயரிடம் ஓசி டீ வாங்கி குடித்துக்கொண்டு, இவன் எப்படி இங்க வந்தான் என்று நினைத்ததைப் போல, நானும் வந்திறங்கிய உடனே இவ்வளவு இந்திய வம்சாவளியினர் எப்படி வந்தாங்கன்னு கொண்டு வந்த பீடியைப் பத்த வைத்து கொண்டு பீடிகையாய் யோசித்துக்கொண்டு இருந்தேன்.</div><br />
மச்சான் அமெரிக்காவிலே சிரிச்சாலே ஒண்ணு கண்ணத்திலே கொடுப்பாங்களாம்னு நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது, இங்க இருக்கிற நம்ம ஊரு மக்கள் நம்ம பண்பாடு, நாகரிகம்,கலாச்சாரம் எல்லாம் இவங்ககிட்ட சொல்லிக் கொடுத்து இவங்களை கெடுத்து வச்சி இருப்பாங்களோ என்று அடிமனதிலே எண்ணம் வரும் போது அடிவயறு கலங்கி போச்சி. பொட்டிய கட்டும் போதே ரெண்டு மூணு ஓசிமுத்தம் வெள்ளையம்மாவிடம் வாங்க வேண்டும் என்ற கனவிலே வந்தேன்.என் கனவு கானல் நீர் ஆகும் என்ற நினைப்பு வரும் போது நினைவிலே டக்கிலாவும்,ஷிவாஸ் ரீகலும் வந்து போயின,இப்படியே யோசனை செய்து கொண்டே இங்கு வந்த முதல் வாரம் ஓடியது. அதன் பின் வந்த வேலைகளைகவனிக்க அலுவலகம் சென்றேன்,நான் மூணு மாதம் மட்டுமே வந்ததினாலே அலுவலகம் சென்ற நாள் முதலாகவே வேலைப்பளு அதிகமாகவே இருந்தது.<br />
<br />
காலையிலே முதல் ஆளா வந்து, கடைசி ஆளா வீட்டுக்கு போவேன்.ஒரு நாள் மாலை பரப்பரப்பான வேலைகளுக்கிடையே கொஞ்சம் "காலை எடுக்கமுடியுமா?" என்ற குரலை கேட்டு<br />
<br />
"நாற்காலியிலே இருக்கிற நான் யாரு மேல கால் போட்டு இருக்க முடியும்" என்ற யோசனை யிலே திரும்பிப் பார்த்தேன்.<br />
<br />
"குப்பை தொட்டியிலே இருந்து காலை எடுக்க முடியுமா?.. நான் குப்பைகளை அப்புற படுத்தவேண்டும் "<br />
<br />
அப்போதுதான் கவனித்தேன், நான் எனது இடத்திலே வைத்து இருந்த சின்ன குப்பை தொட்டி மேல் எனது கால்களை வைத்து இருந்தேன்.குப்பை தொட்டியை அவளிடம் எடுத்துகொடுத்து விட்டு, குப்பை போடுகிறவளே எம்புட்டு அழகா இருக்கா என்று மனதிலே நினைத்துகொண்டேன். ஹோலிவூட்ல கதாநாயகியா நடிக்க வேண்டிய அழகு குப்பை அள்ளுதேன்னு நிக்கும் போதே என் மனசு குப்பையாகிபோச்சி.<br />
<br />
குப்பை தொட்டியை வாங்கி விட்டு<br />
<br />
"நீ ஆப்பிரிகாவா?" என்று கேட்டாள். ஓர் சிகப்பு அழகு கிளியப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாளே என்று நினைக்கும் போதே கண்ணாடியிலே என் முகத்தை கண்டு பிடிக்க முடியாமல் போன ஞாபகங்கள் வந்து போயின இந்த இடப்பட்ட நேரத்திலே . மறுபடியும் "நீ ஆப்பிரிக்காவா"<br />
<br />
"இல்ல இந்தியா"<br />
<br />
'இந்தியாவிலேயும் இங்க மாதிரி நிறைய கருவண்டுகள் இருக்கோ?"<br />
<br />
நான் பதில் சொல்லாம, பல்ல காட்டிட்டு, அவகிட்ட "இங்கே நிறைய கருவண்டு இருக்கும் போது என்னையப் பார்த்து நீ ஆப்ப்ரிக்கவான்னு ஏன் கேட்டீங்க"<br />
<br />
"இங்க இருக்கிற கருவண்டு இம்புட்டு கஷ்டப்பட்டு எல்லாம் வேலை பார்க்கமாட்டாங்க"<br />
<br />
அவங்க சொன்ன விளக்கம் அப்ப புரியலை , ஆனா புரிஞ்சிகிட்டேன், அடுத்த நாட்களிலே<br />
<br />
பொது இடத்திலே சிகரட் பத்த வச்சா..குறைந்தது நாலு அண்ணாச்சிமார் வந்து எனக்கு ஒண்ணுன்னு கேட்டு வாங்கிப்பாங்க, முதல்ல துரைமார்களுக்கே பிச்சை போடுறோம்முன்னு பெருமையா நினைச்சாலும், இவங்களுக்கு பிச்சை போட்டு நான் பிச்சை காரன் ஆகிவிடுவேன் என்ற நினைப்பு வந்துவிட்டது, அதனாலே பொது இடத்திலே தம் அடிக்கிறதில்லை. சிகரட் தப்பிச்சாலும் நடத்துவரும்போதே கேட்பாங்க<br />
<br />
"ஒரு டாலர் கொடுக்க முடியுமான்னு", வேற வழி இல்லாம கொடுக்க வேண்டிய இருக்கும், எப்படின்னாலும் ஆட்டையப் போட்டுடுறாங்களே, சில அண்ணாச்சிமார்கள் வேலைக்கே போக மாட்டாங்கபோல என்பதையும் தெரிந்துகொண்டேன்.<br />
<br />
நான் தினமும் அலுவலகத்திலே இருந்து தாமதமா வருவதினாலே, எப்படியும் அந்த குப்பை அழகியை சந்தித்துவிடுவேன், அவளிடம் பேசியதிலே இருந்து அவள் மெக்ஸிகோ வம்சாவழியை சேர்ந்தவள் என்று தெரிந்துகொண்டேன்.எங்களோட மொக்கைகள் தினமும் தொடர்ந்தது, ஆனா சுவாரஸ்யமாப் போச்சி, சில நாட்களிலே அவளை எனக்கு ரெம்ப பிடிச்சிபோச்சி, அவளைப் பார்த்து ரெண்டு வார்த்தைபேசலைனா சோறு தண்ணி இறங்காத அளவுக்கு, இருந்தாலும் நான் ரெம்ப நாகரிகமானவன்(?) என்பதாலே நல்லவன் மாதிரி எதையும் வெளிகாட்டவில்லை.<br />
<br />
சிலநாட்களுக்கு பின் ஒரு நாள் மாலையிலே என்னிடம் ஒரு தண்ணிப் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தாள்.வாங்கிவிட்டு அவளைப் பார்த்தேன். நீ தினமும் புதிதாக பாட்டில் வாங்கி,குடித்தது போக மிச்சம் விட்டுச்செல்லும் தண்ணியோட சேர்த்து பாட்டிலை குப்பை தொட்டியிலே போடுகிறேன்.நீயும் உங்க ஊரு ஆளுங்களைப்போல விரல்ல வெண்ணை எடுக்கிறவனா இருப்பியோ என்று நான் உனக்கு வாங்கிவந்தேன், இனிமேல நீ இருக்கும் இடத்திலே இருந்து இந்த பாட்டிலை எடுக்கமாட்டேன்.<br />
<br />
என்னோட ஞாபகமா தண்ணிபாட்டிலை ஆட்டையபோட்டு வைத்து இருக்கிறாள் என்ற நினைப்பிலே இருந்த என் கனவிலே மண் விழுந்தாலும், ஓசியா கிடைத்த தண்ணி பாட்டிலைகண்டு, அடிக்காமலே காதல் போதை ஏறி மனம் தள்ளாடியது. வேலைப்பளுவிலே பல்லு விளக்காம அலுவலகம் சென்றாலும், அவளிடம் பல்லைகாட்டாமல் பொழுது முடிவதில்லை.எல்லா கதைகளுக்கு ஒரு முடிவு இருப்பதைப்போல எனது கதைக்கும் முடிவு நெருங்கிவிட்டது, நான் வந்த வேலை முடிந்து திரும்பும் நாள் வந்தது,<br />
<br />
நான் சொல்லி வைத்து இருந்தேன், மாலை ஆறு மணிக்குள் நான் கிளம்பிவிடுவேன் என்று, அதனாலே நான் திரும்பி ஊருக்கு செல்லும் நாளிலே அவள் சீக்கிரமே வந்துவிட்டாள்.வெளியே காபி சாப்பிட போனோம், காபி மண்டுற சத்தத்தை தவிர வேற எதுவுமே பேச முடியலை, கிளம்பும் நேரம் வந்தது அவளிடம் கையை கொடுத்து விட்டு கிளம்பு முற்ப்பட்டேன். உடனே என்னை பிடித்து முத்தம் கொடுத்தாள், பல நாள் கனவு பலித்துவிட்டது என்ற சந்தோசத்திலே நான் அவளிடம் "ஐ லவ் யு" என்றேன். அவளும் என்னிடம் "ஐ லவ் யு அஸ் எ பிரதர்" என்று சொல்லிவிட்டு அவள் கண்களிலே கண்ணீர் வந்துவிட்டது. எனது கண்களிலே இருந்த காதல் அவள் கண்ணீரிலே கரைந்துவிட்டது.<br />
<br />
விமான நிலையம் வந்து பெட்டிகளை கொடுத்து உள்ளே சென்று விமானம் ஏறி சொல்ல வரிசையிலே நிறுக்கும் போதே நினைத்தேன், ஊருக்கு போன உடனே நண்பனிடம் "அமெரிக்காவிலே அன்பு, பாசம் எல்லாம் தேவைக்கு அதிகமாகவே இருக்கு, ஆனால் வெளி உலகத்துக்கு அது தெரிவதே இல்ல" என்ற உண்மையச் சொல்ல வேண்டும். <br />
<br />
</div></div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-24037837365257573882011-02-27T22:36:00.001-05:002011-02-27T22:37:15.660-05:00மனநோயாளியின் வாக்குமூலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><div style="text-align: left;">"அப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, இப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, ஆனா ஏழு கழுதை வயசாகி இருக்கும்னு நினைக்கிறேன்,என்னோட அஞ்சு வயசிலே அஞ்சுவைப் பார்த்தேன், அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே முடியலை"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ஏன் நீங்க முயற்சி செய்யலை, அவங்களை கண்டு பிடிக்க ஏன் முயற்சி செய்யலை, சொல்லுங்க .. சொல்லுங்க."</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"யோவ், அவங்க அப்பனுக்கு வேலை மாற்றுதலாகி ஊருக்கு போய்ட்டான், அவரு அரசாங்க வேலை பார்த்தவர், எங்க அப்பா அரசாங்கம் உருவாக வேலை பார்த்தவர்(குடி மகன்), அதுவும் டவுசர் ௬ட போட தெரியாத வயசிலே யாரைத்தேடி எங்க எப்படி அலைய முடியும்?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உன்னோட நிலையிலே இருக்கிறவங்க, ஐஞ்சு வயசிலே அம்பது வயசு ஆள் மாதிரி இன்னொரு ஆள் உள்ளே இருந்து உள்குத்து வேலை செய்வாரு"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"வேலைக்கு அரை கிழவன்களை எல்லாம் எதுக்கு வைக்கிறேன், ஒரு நல்ல பெண்ணை பார்த்து வைத்து இருப்பேனே?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உங்க உள்ளேண்ணத்திலே கலந்த உப்பு கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது, சொல்லுங்க நீங்க யாரு?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அடி செருப்பால, எத்தனை வாட்டி இந்த கேள்விய கேப்ப?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நீங்க சொல்லுற வாட்டி வடக்கூர்ல நிறைய பயன்படுத்துவாங்க, உங்க கிட்ட ஒளிந்து இருக்கிற ஐ.ஐ.டி யிலே படிக்க போய், அறிவு அதிகமாகி கஞ்சா அடிச்ச அந்த ஆசாமிய வெளியே கொண்டு வாங்க, அவனை இன்னைன்னு நான் பார்க்கணும்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ஏன் நீ அவன்கிட்ட கடன் வாங்கி கஞ்சா குடிக்கப் போறியா, அறிவு அதிகமா இருக்கிறவங்க எல்லாம் கஞ்சா குடிப்பாங்கன்னா,மருத்துவப் படிப்புக்கு தான் அதிக மதிப்பெண்ணும் அறிவும் தேவைப்படுது(?), அப்ப நீங்க எல்லாம் கஞ்சா குடிக்கிறவங்களா?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உங்களுக்கு எப்பவாது உங்களுக்குள்ளே, வேற யாரும் இருக்கிற மாதிரி உணர்ந்து இருக்கீங்களா?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"வேற யாரு மாதிரினா, பேய் பிடிச்ச மாதிரியா"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அப்படியும் சொல்லலாம்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"எனக்கு தெரிஞ்சு அப்படீல்லாம் தோணலை, எங்க தத்தா சாமியாடி, அவரு அடிக்கடி சொல்லுவாரு, பேய் எல்லாம் உன்னையப்பார்த்து பத்து மீட்டர் விலகியே நிக்குன்னு ,ஆனா நான் தண்ணியப் போட்டா பல பேர் சாமியாடுவாங்க என் மேல"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அப்ப உங்க கிட்ட எதோ ஒரு சக்தி இருக்கு" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இந்த சக்திய வச்சி ஊரிலே பேய் ஓட்டுற கடை போட்டா யாவாரம் நல்லா நடக்குமா? எங்க தாத்தா சொன்னது நானே பேய் நிறத்திலே இருக்கேன், அதனாலே என்னைய பேய் பார்த்தா, அவங்க ஆள்கன்னு ஒதுங்கிபோகுமாம்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அடுத்த நிமிடத்திலே பன்னி சில்லிப்பதுபோல சிலித்து, வயத்தை பிடித்துகொண்டு, பல தும்மல்களைபோட்டு, தலையிலே வைத்து இருந்த செயற்கை முடி விழுந்து, வழுக்கையுடன் இருந்தவரைப் பார்த்த மனநல மருத்துவர், </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"வி காட் ஹிம், ஹி இஸ் ஹியர்.. ஆபீசர்ஸ் யு மைட் வான்ட் டு செக் திஸ்" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">எல்லா அதிகாரிகளும், மருத்துவரை சுத்தி நிற்கிறார்கள்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"பன்னி மாதிரி சிலிப்பை எதிர்பார்த்து காத்து இருந்தேன், அப்படி வந்தாதான் தான் பிள மனிதனின் வரவு,இப்ப உள்ள இருக்கிறது யாருன்னு நீங்களே </div><div style="text-align: left;">கேளுங்க"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">௬டி இருந்த அதிகாரிகளில் ஒருவர், "நீங்க யாரு?" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"யோவ் எத்தனை தடவை இந்த கேள்விய கேட்பீங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இனிமேல இப்படி கேள்வி கேட்டா, நான் எழுந்து போய்டுவேன், விசாரணை ன்னு சொல்லி சோறு தண்ணி கொடுக்கலை, அதான் வயத்த வலி வந்து விட்டது"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அந்த தும்மலுக்கும், பன்னி சிலிப்புக்கும் என்ன அர்த்தம்?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ஜலதோஷம் பிடிச்சி இருக்கு, அதான் அப்படி"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"மருத்துவரே என்ன நடக்கு இங்க, அவரு சொல்லுறதை பார்த்தா இவனுக்குள்ளே யாரும் உள்ள இருக்கிற மாதிரி தெரியலையே, உண்மையிலே இவருக்கு மனநிலை பாதிப்பு, பிள மனித தாக்கம் இருக்கா?" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நீங்க எல்லோரும் கொஞ்சம் வெளியே போங்க, நான் அந்த ஆளை வெளியே கொண்டு வாரேன், இன்னொரு சிகிச்சை இருக்கு"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"என்னவேனாலும் சிகிச்சை கொடுங்க, அதுக்கு முன்னாடி திங்க ஏதாவது கொடுங்க" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அனைவரும் வெளியே சென்றதும்</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"விசாரணை முடிஞ்சதும் கோழி பிரியாணி வாங்கி தாரேன், மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது,அது காலை ஒடிக்கனும்,நானே மனநல மருத்துவர் என் மண்டையையே குடையுற நீ, என்னோட விசாரணையோட உண்மையான முகம் உனக்கு தெரியலை, இப்ப நீ உண்மைய சொல்லலை, உன்னையப் போட்டு தள்ளிட்டு,உனக்கு உள்ளே இருக்கிற பிள ஆட்கள் சண்டை போட்டு உன்னையே கொன்று விட்டதுன்னு உன் கதைய முடிச்சுருவேன், என்னை யாருன்னு நினைச்சே, ஒரு காலத்திலேயே போளி வித்த போலி, உன் பருப்பை என்கிட்டே வித்த, உன்னைய போளிக்கு தொலி ஆகிடுவேன்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இப்ப உங்க உள்ள இருக்கிறது யாரு?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ம்ம்.. அமெரிக்க ஜனாதிபதி முனியம்மா"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"முனியம்மாவா?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"போளி விக்கிறவன் மனநல மருத்துவர் ஆகும் போது முனியம்மா அமெரிக்க ஜனாதிபதியாக முடியாதா"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அப்படினா நானும் ஒரு உண்மைய சொல்லுறேன், நான் மன நோயாளி இல்லை, உன்கிட்ட இருக்கிற போளி வித்த போலிய வெளியே கொண்டு வர கடமைப்பட்ட இந்திய உளவுத்துறை அதிகாரி, நாங்க உங்களை கைது செய்யுறோம்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"என்னடா சொல்லுற"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">மற்ற அதிகாரிகள் வர</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அவரு உண்மையத்தான் சொல்லுறாரு, நீங்க ஒரு போலின்னு உங்க வாயாலே சொல்ல நாங்க போட்ட நாடகம், எல்லோரும் நடிச்சோம், ஆனா நீங்க நடிக்கவே இல்ல, வாங்க சிறையிலே போளி சாப்பிடலாம்" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே ஏன்?" </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நோகாம நொங்கு திங்கத்தான், இப்ப நீங்க குற்றவாளி, அதனாலே சிறைக்கு ஒரு வாளிய எடுத்துகிட்டு போங்க"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அடுத்த நாள் செய்தி தாள்களிலே "பிரபல மனநல மருத்துவர் ஒரு போளி வியாபாரி" என்ற தலைப்பிலே சுவாரஸ்ய தகவல்களுடன் ....</div></div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-57180034082842868002011-02-26T00:21:00.001-05:002011-02-26T00:21:43.749-05:00துரைமார்களும், தொப்பியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><br />
<br />
தமிழிலே அலை கடலாக ஓயாமல் ஆராய்ச்சி மணி அடிச்சி தவிச்சி போன கை இப்ப சொம்பு மணி அடிக்கிறது இங்கலிபிசுக்கு, அதாகப்பட்டதாவது துரைமார்களிடம் இருந்து கத்துகொண்ட கொண்ட பாடத்தை அப்படியே மனப்பாடம் பண்ணி, நாம பேசுறப்ப கொஞ்சம் முளகாய், காரம் தூவி அப்படியே பேசுவதிலே நம்மவர்களுக்கு இணை நம்மவர்களே என்பதற்கு எனக்கு தெரிந்த இந்த இரண்டு வார்த்தைகள் ஒரு உதாரணம், அதாவது ஹட்ஸ் ஆப், பைட் தி புல்லெட். நான் ஆரம்ப காலத்திலேயே இந்த வார்த்தைகளை கேட்டதும் அரண்டு போய் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிட்டேன்.<br />
<br />
முதல்ல ஹட்ஸ் ஆப்னு கேட்டவுடனே, இவரு எதுக்கு சம்பந்தம் இல்லாம தொப்பிய கழட்ட சொல்லுறான்னு யோசித்தேன், ஆனா வார்த்தையிலே இருக்கிற உள்குத்து பெரிய குத்தா இருக்குன்னு கண்டுபிடிச்சி முடிக்கும் முன்னே எனக்கு சொன்னவரு காணாம போயிட்டாரு,தொப்பி விவரம் எப்படினா(?) இவன் எல்லாம் விளங்கமாட்டான்னு என்னையப் பார்த்து சொன்னவங்க எல்லாம் இன்னைக்கு மூக்கு மேல விரலை வச்சி பார்க்கிற மாதிரி சாதனை செய்தால், அவங்களைப் பார்த்து ஹட்ஸ் ஆப் டு யூன்னு புண் பட்ட மனசுக்கு ரெண்டு கட்டு பீடியும், ஒரு பீரும் வாங்கி கொடுத்து மனசை தேத்த சொல்லுவாங்க(?).<br />
<br />
சாதனை செய்பவர்களை மீண்டும் சாதனை செய்ய தூண்டுவது,உடலையும்,மனசையும் முதலீடு பண்ணி நொங்கு எப்படி திங்கனுமுன்னு சொல்லி கொடுத்தவரை, நோகாம நொங்கு தின்னுகிட்டு பாராட்டுவது இந்த ஹட்ஸ் ஆப் டு யூ,இந்த சொல் எப்படி வந்து இருக்கும் என்று கால சக்கரத்திலே ஏறாம கொசுவத்திய சுத்தி பார்த்தோமானால், துரைமார்கள் அந்தகாலத்திலே முடி கொட்டினது, முடி கொட்டிகிட்டு இருக்கது, முடி முளைக்காத எல்லோரும் தொப்பிய வச்சி இருந்து இருப்பார்கள், அந்த காலத்திலேயே சாதனையாளர் வரும் போது, தொப்பிய கழட்டி காட்டி அவருக்கு மரியாதை செய்து இருக்கலாம்(?). அதன் பின் நாகரிகம் மாறி தலைக்கு விக் வச்சாலும்,ஆனா ஹட்ஸ் ஆப் டு யூ மாறலை, காலம் மாறினாலும் கருத்து மாறலை என்பதை நிலைநாட்ட சொற்கள் அப்படியே இருக்குன்னு சொல்ல முடியாது, ஏன்னா துரைமார்கள் இன்னும் புதுச்சொல் கண்டு பிடிக்கலை, கண்டு பிடித்து இருந்தால் ஹேர் ஆப் டு யூ ன்னு சொல்லி ரெண்டு தலை முடியை பிடிங்கி வச்சி இருப்போம்<br />
<br />
இணையத்திலே இந்த தூய தமிழ் சொல்லாடல் அடிக்கடி பயன்படுத்துவதை நாம் பார்த்து இருப்போம்,அதாவது ஹட்ஸ் ஆப் டு யூ பார் யுவர் கும்மி, ரெண்டு பேருக்கிடையே அறச்சீற்றம்(வசனம் உதவி பாலா அண்ணன்) வரும் போது, நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்லிக்கிட்டு ஒத்தை காலிலே நிக்கும் போது, அதுக்கும் ஒரு ஹட்ஸ் ஆப் டு ஆல். கோவமா பேசினாலும் தொப்பிய கழட்டு, மொக்கயா பேசினாலும் தொப்பிய கழட்டு. ஆணியே பிடுங்காம ஆணி அடிச்ச மாதிரி ஆணித்தரமா கருத்து சொன்னா தொப்பிய கழட்டனும், ஆனா எதுவுமே பேசாம இருந்தா முக்காடு போடணுமா, இதையெல்லாம் கேட்காம விட்டா காலைக்கடன் முடிக்கதுக்கு ௬ட ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்ல வேண்டிய நிலை வரலாம்(?).<br />
<br />
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்னு சொல்லுறதை விட்டுவிட்டு தொப்பியப்போடு, தொப்பிய கழட்டுன்னு பீட்டர் விட்டு பசும்பால் குடிக்கிற காலத்திலேயே பயமுறுத்து வச்சி இருந்தாங்க.பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழுக்கு மட்டும் தானா, இங்கிலிபிசுக்கு கிடையாதா, ஆயிரத்திலே பேசினதை, ஆயிரத்து தொள்ளாயிரத்திலும், இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சும் ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்லிக்கிட்டு இருக்கனுமா? <br />
<br />
தொப்பி விசத்திலே கொலை வெறி எதிர்ப்பு தெரிவிக்க இன்னொரு சிறப்பு காரணம் இருக்கு, தொப்பி பொரும்பாலும் ஆண்கள் வைக்கிறது, ஆனா பெண்களும் சேர்ந்து இப்ப தொப்பிய கழட்டுறேன்னு சொல்லுறது ஆணாதிக்கத்தை சமுகத்தை பெண்களும் ஆதரிக்கிறார்கள் என்ற நுண் கருத்தை தொலை நோக்கு பார்வையிலே அணுக வேண்டிய இருக்கு, பெண்ணியக்க போராளின்னு பட்டம் வாங்க என்ன பாடு படவேண்டிய இருக்கு, இந்த பொழப்புக்கு நாலு டெக்ஸ்சாஸ் பசு மாடு வாங்கி மேய்க்கலாம்.தாய்குலங்களுக்கு நன்மை(?) செய்யும் பொருட்டாக, இனிமேல ஒரு பூவையோ, ரோசாவை தவித்து, அந்த பூவை காதலர்கள் ஒட்டுமொத்தமா கட்டுக்குத்தகை எடுத்து இருக்காங்களாம். இல்ல தங்க மோதிரமோ கொடுத்து, தொப்பி விசயத்தையே கழட்டி விட்டா மிகவும் நல்லதா இருக்கும், திறைமைக்கு பாராட்டுக்கு பதிலா மொய் வச்சி பரிசு கொடுத்தா சந்தோசம் தானே, அதனாலே இனிமேல பழைய சொற்களை கழித்து விட்டு, புதிய சொற்களைப் பயன்படுத்துவோம் என்று சொல்லி வாய்ப்பளித்த<br />
அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.<br />
<br />
<i>பொறுப்பு அறிவித்தல்: துப்பாக்கி குண்டை கடி என்ற சொல்ல பிறகு ஒரு நாளிலே பார்க்கலாம். </i><br />
<div><br />
</div><br />
</div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-71409650499451964772011-02-15T21:35:00.001-05:002011-02-15T21:36:08.557-05:00துரைமார்கள் பெயர்களும், தன் மானத்தமிழனும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அதாகப்பட்டதாவது போன வரம் <a href="http://blog.pithatralkal.com/2011/02/blog-post.html" target="_blank">தீன்/டீன்</a> ஒரு இடுகையைப் போட்டு, அயல் நாடுகளிலே வாழும் தமிழர்கள் தங்கள் பெயரை வெள்ளைக்கார துரைமார்கள் உச்சரிக்க முடியாம, ராப்பகலா தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டு, துக்கம் தொண்டைய அடைச்சதாலே, போராட்டம்,கலவரம் மற்றும் உண்ணாவிரதம் எதுவுமே இல்லாம தானாகவே முன் வந்து அவர்களின் கவலையைப் போக்க தங்களோட பெயர்களை அவங்க வாயிலே நுழையுற மாதிரி குப்புசாமி-குப்ஸ், சந்தியா-சாண்டி, ஜெயராமன்-ஜே இப்படி சுருக்கி துரைமார்கள் வாயிலே நெல்லை இருட்டுக்கடை அல்வா போல நுழையும் படியா மாத்தி வச்சிக்குறாங்க(?), ஆனா இந்தமாதிரி தன்மானத்தமிழர்கள் மட்டுமே பெயரை மாற்றி கொள்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.<br />
<br />
மனவாடும், வடக்கூர்காரங்களும் தங்கள் பெயர்களை இதே காரணத்துக்காக மாற்றி வைத்து கொள்கிறார்கள்,கிரிக்கெட் தவிர இந்த விசயத்திலும் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதிலே எனக்கு ஐயம் இருப்பதாக தெரியவில்லை .என் ௬ட வேலை பார்த்த அனப்பத்துல்லா என்ற மனவாடு அனப்ஸ் பேரை மாத்தி வச்சிகிட்டாரு, நான் அனபத்துல்லான்னு சொன்னாலே அவருக்கு கொலைவெறி கோபம்<br />
வரும். யோவ் துரை மார்களுத்தான் உன் பேரை சொல்லமுடியாது, எனக்குமா முடியாது? ன்னு சொன்னவரிடம், பெயர் மரியாதை தெரியாத பக்கியா இருக்கியேன்னு தத்துவமா பேசிட்டு போனாரு,ஒரு நாள் அவருக்கிட்ட சிக்காகோ போறேன்னு சொன்னேன், அவரு<br />
அதுக்கு சிக்காகோ இல்ல சிகாகோனு சொன்னாரு, இவருக்கு துரைமாரே தேவலாம் போலன்னு நினைத்துகொண்டு பயணத்தை ரத்து பண்ணிட்டு தண்ணியப் போட்டு அவருக்கு நல்லா தண்ணி காட்டினேன், மனுஷன் அதுக்கு அப்புறமா, நான் என்ன சொன்னாலும் மறுத்தே பேச மாட்டாரு.<br />
<br />
நம்ம பெயர்களைத்தான் துரைமார்களாலே உச்சரிக்க முடியாம ரெம்ப கஷ்டப் படுறாங்க, ஆனா யாரவது ஒருத்தர் துரைமார்கள் பேரை சரியா உச்சரிக்க முடியலைன்னு புகாரோ இல்ல அனுபவ குறிப்போ எழுதி இருக்கிற மாதிரி தெரியலை,படி அளக்கிற பகவான் கோவிச்சிக்குவாருன்னு வெளியே சொல்லாம இருக்கமா இல்ல, அயல் நாடு வந்து ஆணி பிடிங்கிட்டு இங்கிலிபிசு தெரியலைன்னு அடுத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு தன்மானத்தை காக்க, வெள்ளையம்மா, வெள்ளையப்பன் பெயர்களை எல்லாம் கரைத்து குடித்தது போல நடிக்க வேண்டிய இருக்கு(?).<br />
<br />
நானும் ஊரை விட்டு விமானம் ஏறும் முன்னே, அலுவலகத்திலே பல நூறு தடவை<br />
சொல்லி அனுப்பினார்கள். நீ வேலைய ஒழுங்கா செய்யுறியோ இல்லையோ, ஆனா துரைமார்களுக்கு எந்த விதமான கண்ணிய குறைச்சல் வரும் படியா நடக்கக்௬டாது.<br />
நானும் நல்லா கோயில் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு வந்தேன், வந்த முதல் நாளே அறிமுகப் படலம் எல்லாம் முடிந்து, செய்ய வேண்டிய வேலையைப் பத்தி சொல்லி கிட்டு இருந்தாரு, ஒண்ணுமே புரியலைனாலும், புரிஞ்ச மாதிரியே நடிச்சேன். ரெம்ப அறிவாளியா இருக்கான்னு நினைச்சிகிட்டு, முடிஞ்ச உடனே எனக்கு மின் அஞ்சல் அனுப்புறேன்னு சொல்லிட்டு போனாரு, அவரு மின் அஞ்சல் அனுப்பியதிலே ஒண்ணுமே இல்லை, கேட்டு தெரிஞ்சிக்கலாமுன்னு அவரு அறைக்கு போயிட்டு ஜுஅன் (Juan), ஒரு சந்தேகம்னு கேட்டேன்.<br />
<br />
"அவரு யாரு ஜுஅன்?"<br />
<br />
"நீங்கதான்?"<br />
<br />
"என் பேரு யுவன்.. என்னய்யா பேரை ௬ட சரியா சொல்ல தெரியலையே"<br />
<br />
உங்க ஊரிலே ஜெ வை அமுக்கி வாசிக்கனுமுன்னே எனக்கு சொல்லி தரலைன்னு மனசிலே நினைச்சாலும், மன்னிச்சுருங்கன்னு முப்பது தடவை சொல்லிட்டேன். அவரு பேரை நூறு தடவை சொல்லி ஏத்தி வச்சிகிட்டேன்.கொஞ்ச நாள்ல வேலையிலே உலக திறமைய காட்டி (நம்புங்க) கொடி பிடிச்சிகிட்டு இருந்தேன்.எனது திட்ட அணியிலே இருந்தது எல்லாம் உடைஞ்சி போன ரஷ்யாவிலே இருந்து,என்னைய மாதிரி பஞ்சம் பிழைக்க வந்த பெருசுகள்.இவங்ககிட்ட வேலை பார்ப்பதிலே ரெம்ப வசதியான விஷயம், இவங்க பேசுற ஆங்கிலத்தை விட நான் நூறு மடங்கு நல்லாப் பேசுவேன்.அதனாலே நான் இவங்ககிட்ட எப்படி தப்பா பேசினாலும், சரியாப் புரிஞ்சுக்குவாங்க.<br />
<br />
ஒரு நாள் அணியிலே வேலை செய்த ஒருத்தர் பெயரை டோமொர்ட்ரின்னு சொல்லி ௬ப்பிட்டேன்,கேட்டவங்க எல்லாம் என்னைய எப்படியே பார்த்தாங்க, நானும் ரெம்ப அழகா பேரை உச்சரிக்கிறேன்னு நினைச்சி கொஞ்சம் சத்தமாவே ௬ப்பிட்டேன், நான் ௬ப்பிட்டவர்<br />
<br />
"எங்க ஐயா எனக்கு ஆசையா வச்ச பேரை இப்படி கொலை பண்ணுறியே?"<br />
<br />
வழக்கம் போல தப்பத்தான் சொல்லிட்டேன்னா, அவர்ட்டயும் ஒரு மன்னிப்பு கேட்டு வச்சேன்.அவரு டிமிட்ரியாம், அப்புறமா அதையும் ஏத்தி வச்சேன், ரஷ்ய துரைமார்கள் பெயரின் கடைசி பேரை எல்லாம் படிக்கவே மாட்டேன், அதுக்கு பதிலா நான் நாலு அடி ௬ட வாங்கிக்குவேன். சீனா சப்ப மூக்கன் பெயர்களும் அப்படித்தான், வாயிலே<br />
நுழையாது.சி சான், சூன் சூன்னு பேரு இருக்கும்.<br />
<br />
துரைமார்களுக்கு ஏகப்பட்ட சுருக்கப்பெயர்கள் இருக்கும், ராபர்ட்னு இருக்கிறதை பாப் மாத்தி வச்சுக்குவாங்க, இவங்க பெயரை மட்டுமில்லாம, தாத்தா, பாட்டி, வளர்ப்பு தாய், வளர்ப்பு தந்தை வைத்த சொல்லப்பெயரை எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய இருக்கு, காரணம் துரைமார்கள் எல்லாம் ஓடுற குதிரையா இருக்காங்க,நாமும் வளைந்து நெளிந்து அவங்க போக்குக்கு தண்ணி காட்ட வேண்டிய இருக்கு. இப்ப எல்லாம் ஒருத்தர் பெயரை பார்த்தாலே அவரு செல்லப்பெயர் என்னவா இருக்கும், அவரை நண்பர்கள் எப்படி ௬ப்பிடுவாங்க,முன்னாள் காதலி எப்படி ௬ப்பிட்டு இருப்பாங்க, இந்நாள் காதலி எப்படி ௬ப்பிடுவாங்க என்ற வரலாற்று புள்ளி விவரங்களும் கணனியே இல்லாம மண்டைக்குள்ளே எறிடுது.</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-42169134347818021112011-01-31T20:49:00.001-05:002011-01-31T20:49:42.913-05:00எனது ஓட்டு கலைஞருக்கே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><i>பொறுப்பு அறிவித்தல்:</i><br />
<i>ISO தர சான்றிதழ் பெற்ற அரசியல் இடுகை </i><br />
<br />
இணைய உலகத்திலே தற்போதைய சூழ்நிலையிலே கலைஞரை பத்தி குறை சொல்லி ரெண்டு திட்டு திட்டாம போய்விட்டால் தமிழினத்துரோகி என்ற அவப்பேருக்கு<br />
ஆளாகக்௬டும் என்று நினைத்து இந்த இடுகையை எழுத வேண்டிய கட்டாயம். ஆப்பிரிக்காவிலே கொசு கடித்தாலும் காரணம் கலைஞர் என்று ஒரு மாயை உருவாகி இருப்பது உண்மை. இணையத்தின் எதிர்ப்பு புரட்சி தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா இல்ல தமிழக மக்களின் மனநிலைய இணையம் பிரதிபலிக்கிறதா என்று தெரியவில்லை.<br />
<br />
அடிப்படைய கலைஞரை திட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் அவரு பதிவுலகிலே இல்லை என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை, பதிவுலகிலே இருக்கும் ஒருவரை இப்படி எல்லாம் திட்ட முடியுமான்னு தெரியலை. பச்சைத்துரோகி, கிழபாடு என்பதெல்லாம் சாதாரணமா அவருக்கு கிடைக்கிற மரியாதைகள், கலைஞரை ஓட்டுப் போடக்௬டாது என்றால் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.தமிழ் நாட்டிலே இருக்கிறதே ரெண்டு பெரிய கட்சி, இதை விட்டா வேற யார் ஆட்சிக்கு வருவார்கள்.<br />
<br />
பதிவுலக ஆதரவு வரலாறு சற்று திரும்பி பார்த்தோமானால், இலங்கையிலே போர் உச்ச கட்டத்திலே இருக்கும் போது, திருமாவளவனுக்கு ஒரு மிகப்பெரிய ஆதரவு படை கிளம்பியது, காங்கிரஸ் தமிழகத்திலே ஒழிய வேண்டும் என்று வீர சபதம் எடுத்து வெறி கொண்ட சிறுத்தையை வலம் வந்தவர். அவரது தலைமையிலே மாற்று அணி அமைய வேண்டும் என்று மனுப்போட்டு நின்ற நேரம் அவன் இந்திய ரயிலை விட மிக வேகமாக தடம் புரண்டு மறுபடியும் ஒட்டிகொண்டார். இப்படிப்பட்ட தன்மானம் மிக்க தலைவர்கள் எல்லாம் இப்ப இன்னும் அதே நிலையிலே தான் இருக்காங்க, ஆனா இன்னும் இவர்களை நம்புறோம்(?).<br />
<br />
கலைஞருக்கு மாற்று சக்தியாக இருக்கும் புரட்சி தலைவின் வராலாறுகளை புரட்டி பார்த்தோமானால், பொடாவை உருவாக்கிய மத்திய அரசை விட அதிக முறை பயன் படுத்தியவர் என்று விருது கொடுக்கும் அளவுக்கு உபயோகித்தவர்.தமிழர்க்காகவே வாழும் அண்ணன் தன்மானத்தமிழன் வைகோ இப்போது வெளியே இருந்து இருந்தா புத்தகம் எழுத நேரமில்லை என்று அம்மா உள்ளே தள்ளிவிட்டதாக நினைத்துகொண்டு வேற எங்கும் போக வழி இல்லாமல் இன்னும் இருந்த இடத்திலே இருக்கிறார், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று கலைஞர் சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.<br />
<br />
புரட்சி தலைவி ஆட்சியிலே இருந்து இருந்தா, ஒரு வேளை இலங்கைக்கு படை எடுத்துப் போய், அவர்களை தோற்கடித்து அங்கே ஆட்சியப் பிடித்து இலங்கையை இந்தியாவுடன் இணைத்து இன்னொரு மாநிலம் ஆக்கி இருப்பார் என்று சொல்லமுடியுமா?, யார் ஆட்சியிலே இருந்தாலும், இந்த கொடுமைகள் தொடரும் என்பது மட்டும் உறுதி, இப்போது ஆட்சியிலே கலைஞர் இருக்கிறார், அதனாலே அவரை திட்டுகிறோம், இதே நிலையிலே தலைவி இருந்து இருந்தாலும் இதையே தான் செய்து இருப்போம்.மேலும் தமிழரின் ஒற்றுமைக்கு பதிவுலகமே ஒரு சான்று, இங்கு ஒற்றுமை என்பது அடுத்தவர் என் சட்டையப் பிடிச்சி இழுத்துவிட்டார் என்று இன்னொருவர் குறை சொல்லும் வரை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.<br />
<br />
கலைஞரை திட்டுவதாலே நமக்கு மனநிம்மதி கிடைக்கும் என்பதை தவிர வேறு ஏதும் பலன் இருப்பதாக தெரியவில்லை, இதை எல்லாம் சொன்னேன்னேனு எனக்கும் வேணா ரெண்டு திட்டு கிடைக்கலாம், இப்படி மக்களின் மன அமைதிக்கு மருந்தாக இருக்கும் அன்பு தலைவர் கலைஞருக்கு எனது ஓட்டு என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறேன்.<br />
<br />
இப்படிக்கு,<br />
பஞ்சம் பிழைக்க அயல் நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழன்.</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-55979046158201164562011-01-30T23:00:00.001-05:002011-01-30T23:00:25.451-05:00விடுமுறை கால விருந்தும், மருந்தும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஒரு காலத்திலேயே மருந்தை தண்ணியா குடிச்சவன், கடந்த ஆறு வருசமா மருந்துன்னு தாளிலே எழுதி அதைதான் குடிச்சிக்கிட்டு இருக்கேன்,கடந்த வருட விடுமுறை கொண்டாட்டத்திலே (நடந்து ரெண்டு மாசம் எழுத நேரமும் இல்ல, நடந்ததும் ஞாபகம் இல்ல) எனக்கு படி அளக்கிற பகவான் விருந்தும்,மருந்தும் பரிமாறப்படும் என்று அறிவித்தார்கள், அறிவிப்பு கேட்ட நாளிலே இருந்து மருந்தின் மலரும் நினைவுகள் மனதை கவ்வி கவுத்துப் போட்டது, அவங்க சொன்ன நாளிலே இருந்து கனவிலே விதவிதமான மருந்துகள் தென்பட்டது.<br />
<br />
விருந்து கொடுக்கிற நாளன்று காலையிலே ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கெல்லாம் அலுவலகம் செல்ல தயாராகிட்டேன்.சும்மாவே பகல்ல என் முகம் தெரியாது, ஆனா அன்றைக்கு என் முகத்திலே அப்படி ஒரு பிரகாசம், காலையிலே எழு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று,சென்றதுமுதல் சாயங்காலம் விருந்து நடைபெறும் இடத்தை குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வந்தேன்.மதிய சாப்பாடும் இறங்கலை. மாலைக்கு சேமித்து வைக்க கொஞ்சம் இடம் வேணுமுன்னு மொத்தமா விட்டு வச்சேன்.<br />
<br />
மாலையிலே முத ஆளா அரங்கத்திற்குள் நுழைந்தேன், ரெண்டு ௬ப்பன் கொடுத்தாங்க மருந்து வாங்க, கொடுத்த அடுத்த நிமிசத்திலே ரெண்டு ௬ப்பனையும் கொடுத்து வயிறை நிறைத்தேன்.நம்ம ஊரா இருந்தா மருந்து கொடுக்கிறவருக்கு பத்து ரூபாயைக் கொடுத்து ௬ப்பன் இல்லாமலே ரெண்டை புட்டி ஆட்டயப்போடலாம், ஆனா இங்க துரைமார்கள் ரெம்ப கண்டிப்பானவங்க,விருந்து உபசரிப்பு விதிப்படி நடப்பவர்கள், என்ன செய்யலாமுன்னு யோசனையா இருந்தப்ப, நம்ம ஊரு தாய்குலங்கள் மூணு பேரைப் பார்த்தேன்.அவங்க எல்லாம் மருந்து குடிக்க மாட்டாங்க என்று நம்பிக்கையிலே நேர அவங்ககிட்ட போனேன்.<br />
<br />
"உங்களுக்கு எல்லாம் குடிக்கிற பழக்கம் இல்லன்னு தெரியும், அதனாலே உங்ககிட்ட இருக்கிற மருந்து ௬ப்பனை கொடுக்க முடியுமா?"<br />
<br />
"ஒ.. தாராளமா" என்று நாலு ௬ப்பைனை கொடுத்தார்கள், ஆறு இருக்கணுமே, நாலு தானே இருக்கு என்றேன், என்கிட்டே இருந்த ரெண்டை ஒரு மனவாடு அப்பவே ஆட்டையப் போட்டுவிட்டான் என்று ஒருத்தங்க சொன்னாங்க.அந்த மனவாடு என் ௬ட வேலைபார்க்கிற மனவாடா இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே வாங்கின நாலிலே ரெண்டை காலி செய்தேன். குடிப்பவர்கள் சிரமப்படுவார்களே என்று படி அளக்கிற பகவான் நிறைய நொறுக்கு தீனிகள் ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள், அதையும் நாம இருக்கும் இடம் தேடி வந்து, எங்க ஊரு திரை அரங்கிலே முறுக்கு விற்பதைப் போல கையிலே ஏந்திக் கொண்டு வந்தார்கள். நொறுக்கு தீனியிலே கவனம் செலுத்த எனக்கு நேரம் இல்லாத காரணத்தினாலே அடுத்த ௬ப்பைனை கொடுத்து ஒரு பாட்டிலை வாங்கி கையிலே வைத்து இருந்தேன்.பின்னாலே இருந்து ஒருவர் என்னை தட்டினார், அவரு என்னோட வேலைபார்க்கிற மனவாடு என்பதை தெரிந்து கொள்ள ஒரு நிமிஷம் ஆகிப்போச்சி. அவர் என்னிடம் <br />
<br />
"எத்தனை போய் இருக்கு?" <br />
<br />
"ஏழாவது, உனக்கு?"<br />
<br />
"எட்டு முடிந்துவிட்டது, இனிமேல ௬ப்பன் இல்ல, ஒரு நாய் நாலு ௬ப்பனை ஆட்டயப் போட்டுட்டான், உங்க சாம்பார் பெண் ஒருவரிடம் ரெண்டு ௬ப்பனை உசார் பண்ணிட்டு,உங்க தோழிகள் யாரவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்லி வைத்து இருந்தேன், நான் ஓசி ௬ப்பனை காலி பண்ணிட்டு போகுமுன்னே எவனோ ஆட்டயப்<br />
போட்டுட்டான்,அது நான்னு தெரியாமலே, அவன் ௬ட சேர்த்து எனக்கு நாலு திட்டு திட்டிவிட்டு ௬ப்பனுக்கு ஆட்களைத்தேடி இருவரும் போனோம், போகும் முன்னே மனவாடு, ரெண்டு பேரும் போய் நடனமேடைப் பக்கம் போகலாம் என்று சொன்னார்.<br />
<br />
நான் உடனே "நடனமேடைப் பக்கம் போனால், என்னால ஆடமா வரமுடியாது" என்றேன்<br />
<br />
"நீங்க ஒரு நடனகாரன்னு சொல்லவே இல்லை"<br />
<br />
"கல்லூரியிலே நான் போடாத ஆட்டமே இல்ல,நான்தான் எங்க கல்லூரி மைக்கல்<br />
ஜாக்சன்"<br />
<br />
"நீ கண்டிப்பா ஆடியே ஆகணும்,வா போகலாம்" <br />
<br />
ரெண்டு பேரும் நடனமேடைபக்கம் போனோம்.அங்க வெள்ளையம்மாக்களும், <br />
வெள்ளையப்பன்களும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். சாதாரண நேரமா இருந்தா துரைமார்களை பார்த்து சிரிக்கவே மாட்டேன், பதிலுக்கு இங்கலிபிசுல பேச ஆரம்பிச்சிட்டா பதில் சொல்ல முடியாதுன்னு ஒதுங்கியே போவேன், ஆனால்<br />
அன்றைக்கு ஆடுற எல்லோரிடமும் உலக பீட்டர் விட்டேன். அடுத்த அஞ்சு நிமிசத்திலே மனவாடு ஒரு சிலுசிலுப்பு சட்டைய கொண்டு வந்து என்னையப் போடச்சொன்னான், மாப்ள பாசமா சட்டையகொடுக்கான்னு நானும் போட்டுகிட்டேன். அடுத்த பாட்டு வரும் போது, இப்போது இந்திய மைக்கல் ஜாக்சன் நடனனமாடுகிறார் என்று அறிவிப்பு வந்தது.<br />
<br />
நானும் அந்த முகரையப் பார்க்கணுமுன்னு திரும்பினா எல்லோரும் என்னையப் பார்த்துகிட்டு இருந்தாங்க, அப்பத்தான் எனக்கு தெரியும் நான் தான் அதுன்னு, என்ன செய்யன்னு தெரியலையே, யோசிக்க நேரமில்லை, சுத்தி இருந்த ௬ட்டம் எல்லாம் கை தட்டி ஆரவாரம் பண்ணினாங்க,மனவாடு மண்ணை கவ்வ வச்சிட்டானேன்னு,எனக்கு தெரிஞ்ச ஆட்டத்தை போட்டேன், அதாவது கையையும் காலையும் உதைச்சி உடற்பயிற்சி செய்தேன்.என்னோட ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடமே ௬ட்டம் கலைய ஆரம்பித்து, அடுத்த நிமிசத்திலே ஒரு வெள்ளையம்மா வந்து என்னோட சிலுசிலுப்பு சட்டைய கழட்டிட்டு இனிமேல இந்த பக்கம் வந்த அடி பிச்சிருவேன்னு சொல்லிட்டாங்க, அதோட பாட்டையும் மாத்திட்டாங்க.<br />
<br />
பக்கத்திலே இருந்த மனவாடு "நீ என்னைக்காவது ஆட்டம்னு தாள்யாவது எழுதிபார்த்து இருக்கியா, உன்னைய மைக்கல் ஜாக்சன் சொன்னதுக்கு என்னையும் மேடை பக்கம் வராதேன்னு சொல்லிட்டாங்க. சும்மா இருந்தா உண்மையச்சொல்லி இருப்பேன், மருந்து உள்ள போனதாலே மலையே புரட்டுற பலம் இருப்பதாலே, அவன்கிட்ட மேடை சரியில்லைன்னு சொன்னேன். அவன் என்கிட்டே உன் மூஞ்சியிலே என் பீச்சாங்கைய<br />
வைக்கன்னு சென்னை பாசையிலே திட்டிட்டான்.<br />
<br />
நடனமேடைய விட்டு வெளியே வந்த நாங்க ரெண்டு பேரும், வடக்கூர்காரட்ட ஆட்டையப் போட்ட ௬ப்பனை வைத்து, மறுபடியும் ஒரு பாட்டிலை ஏத்திட்டு மீண்டும் நடனமேடைப் பக்கம் போனோம். அங்க நாங்க முதல்ல ௬ப்பன் வாங்கின பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள், அவங்க நடனத்தை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். என்னனு தெரியலை திடிர்ன்னு ஒரு ஞானோதயம், பெண்ணிய போராளிய மாறனுமுண்ணு மனசிலே எண்ணம் வந்து விட அவங்ககிட்ட போய் நீங்களும் நடனம் ஆடலாமேன்னு சொன்னேன். அவங்க எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க, அரைமணி நேரத்துக்கு பெண்ணுரிமை காவலர்கள் எழுதியதை சொன்னேன்,என்னோட தொல்லை தாங்க முடியாமல் அவங்களும் மேடை ஏறி ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினாங்க.<br />
<br />
பாட்டு முடிஞ்சதும் அவங்க கீழே இறங்க ஆரம்பிக்கும் போது, இன்னும் ஒரே ஒரு பாட்டுன்னு கெஞ்சி மறுபடியும் மேல போகவச்சேன்,இப்படியே சொல்லி சொல்லி, பத்து பாட்டு முடிஞ்சி போச்சி, களைப்பிலே மயங்கி விழுற மாதிரி ஆகிட்டாங்க, இருந்தாலும் நான் ஒரு பாட்டுன்னு சொன்னேன்.அவங்க பக்கத்திலே நின்ற மனவாடைப் பார்த்தது ஏதோ சைகையிலே சொன்னாங்க, அவன் என் கிட்ட மாப்ள என்கிட்டே இன்னும் ரெண்டு ஒசிக்௬ப்பன் இருக்குன்னு சொன்னதும், ஓடியே போயிட்டேன். அடுத்த ஒரு பாட்டிலையும் காலிபண்ணிட்டு வந்து பார்த்தால்,அந்த மூணு பெண்களை காணும், உடனே அறை முழுவதும் தேடிப்பார்த்தேன், கண்ணுக்கு தென்படலை. உடனே மனவாடுக்கிட்ட<br />
<br />
"அந்த பெண்களை எங்கன்னு கேட்டேன்"<br />
<br />
"டேய் நீ அவங்களுக்கு பண்ணின கொடுமைக்கு, உன்னையெல்லாம் நடுத்தெருவிலே நிக்க வச்சி சுடனும்"<br />
<br />
"மகளிர் உரிமை காவலனா மாற நினச்சது தப்பா?"<br />
<br />
"நம்ம ஊரா இருந்தா, உன்னைய மகளிர் காவல் நிலையத்துக்கு ௬ட்டிட்டு போய் இருப்பாங்க, எத்தனை பாட்டுக்கு தான் அவங்க ஆடுவாங்க,மேடைய விட்டு வெளிய போக இருந்தவங்களை கை எல்லாம் பிடிச்சி மேடையிலே மறுபடி ஏத்தி விட்ட,உன்னையெல்லாம் சங்கிலியிலே கட்டிபோட்டுதான் குடிக்க சொல்லணும்,இனிமேல பெண்களை முன்னேத்துறேன்னு நினைச்சி இந்த மாதிரி அழிச்சாட்டியம் பண்ணின, உன் தலையிலே கல்லைத்தூக்கி போட்டுருவேன்"<br />
<br />
"இவ்வளவு நடந்ததா எனக்கு தெரியவே இல்லையே!!!!"<br />
<br />
"நீ உன் நிலையிலே இருந்தாதானே தெரியும்"<br />
<br />
"நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் நாளைக்கு"<br />
<br />
"நீ உண்மையிலே நல்லது செய்யணுமுன்னு நினைச்சா, இந்த சம்பவம் நடந்ததா வெளிக்காட்டதே, குடி போதையிலே உங்க சாம்பார்வாடு என்ன செய்யுறேன்னு தெரியாம,உங்களை கொடுமைப்படுத்திட்டான்னு நான் அவங்க கிட்ட சொல்லி சமாளிக்கிறேன்"<br />
<br />
"இப்ப என்ன செய்ய?"<br />
<br />
"பெட்டிய கட்டிட்டு வீட்டுக்கு போகலாம் வா"<br />
<br />
வீட்டுக்கு வந்து சேர நடுநிசி ஆகிப்போச்சி, இவ்வளவு நேரமும் வீர வசனம் பேசிகிட்டு வந்த நான் வீட்டுக்கு வந்த உடனே வாயே திறக்கமுடியலை,பெண் உரிமை காவலனா, பெண்ணியக்க போராளியா மாற நினச்ச எனக்கு அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டிலே கஞ்சி இல்லாம போச்சி.இப்ப எல்லாம் மருந்து கனவிலே ௬ட வருவதில்லை. <br />
<br />
</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22109424729542474652011-01-26T18:44:00.004-05:002011-01-28T13:54:18.748-05:00கணித்துறையும்,கடவுச்சொல்லும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
கணித்துறையிலே வேலை பார்க்கிறவங்க கடவுச்சீட்டு ௬ட இல்லாம இருக்கலாம்,ஆனா கடவுச்சொல் இல்லாம இருக்க முடியாது, வெள்ளைக்கார துரைமார்கள் நமக்கு ஓசியிலே உலகவிசயம் முதல், உள்ளூர் பட்ட சரக்கு வரை பேசுவதுக்கு பல இலவச மென் பொருட்கள் கொடுத்து இருந்தாலும், அதை எல்லாம் பாவிக்க தனிப்பட்ட பெயரும்,கடவுச்சொல்லும் அவசியமாக இருக்கிறது. துரைமார்கள் தண்ணியப் போட்டுட்டு நடுத்தெருவிலே நட்டுவாக்காலி ஆட்டம் ஆடிகிட்டே இலவசமா முத்தபடம் காட்டினாலும், தனிமனித உரிமைய ரெம்ப மதிப்பவர்கள், அதாவது பல் இருக்கவன் பக்கடா திங்கான் என்ற பொன்னான பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள்,நோகாம நொங்கு திங்கவருகிட்ட போய், நீ ஏன் நொங்கு திங்கன்னு கேட்க௬டாது, அவரு கேட்டவரு நொங்கை கழட்டி விட்டுடுவாரு.<br />
<br />
இப்பேர்ப்பட்ட மகான்கள் தயாரித்த மென் பொருட்களை பாவிக்கிற எல்லோருக்கும் கடவுச்சொல் பத்தி நல்லா தெரிந்து இருக்கும், மின் அஞ்சல் முகவரி ஆகட்டும், மின் அரட்டை முகவரியாகட்டும் எல்லாமே கடவுச்சொல்லிலே இருக்கிறது நம்மோட ரகசியங்கள், உங்க கடவுச்சொல்லை ஆட்டையப் போட்டுவிட்டால், ரகசியங்கள் எல்லாம் வெளியே வந்து நாம ஒரு பொதுஜனம் ஆகிடுவோம். துரைமார்கள் ஒண்ணு ரெண்டு மென் பொருட்கள் கொடுத்து இருந்தா கடவுச்சொல் ஞாபகம் வைத்து இருப்பது சுலபம், ஓசியிலே கிடைக்கிறது என்பதற்காக கிடைக்கிற எல்லாம் இடத்திலேயும் துண்டு போட்டு வைக்கிற என்னைமாதிரி ஆட்கள் கடவுச்சொல் ஞாபகம் வைக்க சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய வரும்.<br />
<br />
இந்தமாதிரி மென் பொருட்களுக்கு எல்லாம் கடவுச்சொல் ஒரு தடவை கொடுத்தப் போதும், நாம மாத்தாத வரை ஒண்ணும் பிரச்சனை இல்லை, ஆனா அலுவலகங்களிலே வேலை செய்பவர்கள் கடவுச்சொல்லை நிரந்தரமா வைத்து இருக்க முடியாது, வேலை பார்க்கிற நிறுவன கொள்கைப்படி ஒவ்வொரு நாப்பதுநாளுக்கு ஒரு தடவையோ மாதம் ஒரு முறையோ கடவுச்சொல்லை மாத்தணும். அதாவது செய்யுற வேலையும், வாங்குற ௬லியும் நிரந்தரம் இல்லைன்னு மறைமுகமா சொல்லுறதுதான் இந்த கொள்கை. கடவுச்சொல் மாத்தும் போது, இப்ப பயன்படுத்திக் கிட்டு இருக்கிற முன்னாள் காதலன்/காதலி(?) பெயரையோ, இதுக்கு முன்னாடி பயன்படுத்திய காதலன்/காதலிகள்(?) பெயரையோ பயன் படுத்த முடியாது. ஆண் பெண் ரெண்டு பெயரையும் எழுதி நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபித்துள்ளேன்(பதிவுலகம் ஒரு மனுசனை என்ன பாடு படுத்துது பாருங்க).<br />
<br />
கடவுச்சொல் வைப்பதற்க்கெனவே பல சூத்திரங்கள கடைபிடிப்பார்கள், அடுத்தவங்களாலே கண்டு பிடிக்க முடியாத படி கடவுச்சொல் வைப்பதிலே அலாதி பிரியம். கடவுச்சொல் எப்படி இருக்கனுமுன்னு கணணி ஜோசியம் எல்லாம் பார்ப்பாங்க(?).என்னதான் திடமா கனமா கடவுச்சொல் வைத்தாலும்,கொடுத்த சரக்கை சரியா செய்யலைனா, அடுத்த நாளே அலுவலகம் போக முடியாது. நானும் வேலைக்கு சேர்த்த புதுசிலே இப்படித்தான் கடவுச்சொல்லை கண்டு கலங்கி, முதலிலே பிடிச்ச நடிகர்கள், நடிகைகள் பெயர்கள், கொஞ்ச நாள் கழித்து, நான் போட்ட துண்டுகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து, அவங்க பேரு, அப்புறமா பஸ்ல பேரு கேட்டவங்க ,ரயில்ல எக்ஸ்குஸ்மி சொன்னவங்க, ஆடோவிலே அல்லோ சொன்னவங்க இவங்க பேரு எல்லாம் வைத்து முடித்து விட்டேன், ஆனா கடவுச்சொல் முடியவில்லை.<br />
<br />
சூத்திரம் போட்டு கடவுச்சொல் போட்டுப்பார்த்தேன் தற்கொலைன்னு வந்தது.சூத்திரம் எழுதுவதும், தற்கொலையும் ஒண்ணுதான்னு அப்படியே திட்டத்தை கை விட்டேன். ஆனாலும் கடவுச்சொல் இம்சை தாங்க முடியலை. என்ன செய்யன்னு தெரியலை, சோறு தண்ணி இறங்கலை. சும்மாவே வேலை செய்ய மாட்டேன், அதுவும் கவலை வந்துவிட்டால் வேலையைப் பத்தி யோசிக்கவே மாட்டேன்.கடவுச்சொலை பற்றி யோசித்தேன், யோசித்தேன், விடையே கிடைக்கலை.<br />
<br />
ஆங்கிலத்திலே புளி வித்தாலும், நான் ஒரு டமில் புலி என்பது ஞாபகம் வந்தது, உடனே கடவுச் சொல் கவலை, பகலவனை கண்ட பனிபோல, தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டும் போது காவல் துறையைப் பார்த்ததும் ஓடிப்போகும் போதைபோல என்னைவிட்டு ஓடிப்போனது. என்னோட கட்டுக்கடங்கா தமிழார்வ போதை தனிய நான் முதல்ல வைத்த கடவுச்சொல் "கொய்யால", அந்த பேரு வச்ச அடுத்த நாளே மறந்து போச்சி, ஆலுவலக கணணியிலே நுழைய முடியலை,அருகிலே இருந்த நண்பர் பொறுமை இழந்து "கொய்யால நீ என்ன பேருதான் மாத்தின", நான் சொன்னேன் "கொய்யால", இந்த வரிசை ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரை கடவுச் சொல்லுக்குக்கு பஞ்சமே வந்ததில்லை, இந்த வகையிலே ஒரு சில உதாரணங்கள் "முட்டாள்", "மடையன்". இந்த மாதிரி மிகப்பெரிய பட்டியலே இருக்கு என்னிடம் வேண்டுமா உங்களுக்கு?<br />
</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-81928217314551613622011-01-09T20:17:00.001-05:002011-01-09T20:17:21.455-05:00கிரிக்கெட்டும் சமுதாய சீர்கேடும்<i>பொறுப்பு அறிவித்தல் ஒன்று : தலைப்பிலே தான் காரம் அதிகமா இருக்கு, இடுகையிலே காரம் குறைவாத்தான் போட்டு இருக்கேன், படிச்சி முடிச்ச உடனே உப்பு சப்பு இல்லைன்னு தோணலாம்.</i><br />
<br />
<i>பொறுப்பு அறிவித்தல் ரெண்டு : நீங்க கொலைவெறி கிரிக்கெட் ரசிகரா இந்த இடுகைய தவிப்பது நலம்.</i><br />
<br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><i>பொறுப்பு அறிவித்தல் மூன்று: இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொறைஆண்மை அதுக்கு சட்னி சாம்பார் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டிலே தான் இருக்கிறது என்று</i><br />
<i>நினைப்பவர்களாக இருந்தாலும், இந்த இடுகையை தவிப்பது நலம்.</i><br />
<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">பொறுப்பை பொறுப்பா அறிவிப்போர் சங்கத்திலே உறுப்பினரா இருப்பதினாலே, இவ்வளவு பொறுப்பா பொறுப்பை அறிவித்திருக்கிறேன்.சமுக சீர்திருத்த கருத்துக்களை தெரிவித்து முற்ப்போக்கு, பிற்ப்போக்கு எழுத்தாளர் வரிசைப் பட்டியலிலே முதல் வரிசைக்கு வர முயற்சி எடுக்கலை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொண்டு இடுகைக்கு கடந்து செல்லலாம்.<br />
<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">அதகப்பட்டதாவது பல வருசங்களுக்கு முன்னாலே ஊரிலே ரப்பர் பந்தையும், களி மட்டையை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமா பீடி குடிக்க ஒதுங்கும் போது தான் கிரிக்கெட் எனக்கு பரிச்சயமானது.களி மட்டையிலே இருந்து கிரிக்கெட் மட்டை வாங்க போய் மட்டையாகிட்டு வந்த நாள்முதலிலே இருந்து இன்றைய வரைக்கும் கிரிக்கெட் ரத்தத்திலே கலந்து விட்டது.இந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியம் ஆகிபோவேன்னு நினைக்கவே இல்லை.<br />
<br />
ஆரம்பத்திலே நான் ஆடுற ஆட்டத்திலே கவனம் இருந்தாலும், தொலைகாட்சிகளின் அறிமுகத்துக்கு பின்னால் அடுத்தவங்க ஆடுற ஆட்டத்திலே கவனம் செலுத்த ஆரம்பித்தேன், கொஞ்ச நாளிலே கிரிக்கெட் ஆட்டம் தொலைகாட்சியிலே பார்க்கவில்லை என்றால் சீக்கு வந்த கோழி மாதிரி மனசு சுருண்டு படுத்துக்குவேன்.சோறு தண்ணி இல்லாம பத்து நாள் வேணா பட்டினி கிடப்பேன், ஆனா கிரிக்கெட் பார்க்கமா ஒரு நிமிஷம் ௬ட இருக்க முடியாது.<br />
<br />
கிரிக்கெட் ஆட்டம் பார்க்க ஆரம்பித்து விட்டால், உலகத்திலே உள்ள எல்லா மூட நம்பிக்கைகளையும் கடை பிடிப்பேன், அதாவது இந்தியாவுக்கு எதிரா ஆடும் அணிக்கு விக்கெட் விலலைனா ஒத்தை கண்ணிலே பார்க்கிறது, தொலைக்காட்சி பெட்டிக்கு பின்னாடி முதுகை வச்சி பார்க்கிறது. முத ஓவர் கன்னி ஓவர்(கிரிக்கெட் கண்டுபிடிச்சவன் ஆணாதிக்கவாதியோ?) ஆகிட்டா எதிரணிக்கு விக்கெட்டே விழாது, டவுசரை போட்டுக்கிட்டு ஒத்தை காலிலே நின்னு பீடி குடிக்கிறது, இப்படி பல வேலைகளை ரெட்டையா செய்யாமா ஒத்தையா செய்வேன். இப்படி 999 விதமான மூட நம்பிக்கை பட்டியல்களை வைத்து இருந்தேன்.ஆட்டம் நடக்கும் போது ஊரிலே தீ மிதிப்பு நடந்தா, அங்கேயும் போய் பூக்குழி இறங்கி இருப்பேன். நல்லவேளை இதுநாள் வரைக்கும் அப்படி நடக்கலை.<br />
<br />
உலகத்திலே உள்ள அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயரை மட்டுமல்லாம, அவங்களோட முத சம்சாரம், ரெண்டாவது சம்சாரம்,நடப்பிலே யாரை வச்சி இருக்கா போன்ற கிசு கிசு தகவல்களையும் சேகரித்து வைத்து இருந்தேன். இந்த அர்பணிப்பை படிப்பிலே காட்டி இருந்தால் இன்று நானும் ஒரு விஞ்ஞானியாகி இந்தியாவிலே சம்பளம் குறைவாக கிடைகிறது என்று நாசாவிலே சேர்ந்து தாய் நாட்டுக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்து இருப்பேன்.<br />
<br />
கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமால், ஆட்டம் முடிஞ்ச உடனே, அதைபத்தி சிலாகித்து போற வாரவங்களிடம் பேசிக்கொண்டு இருப்பேன், ஆக வாழ்கையிலே நான் என்னையப் பத்தி பேசினதை விட கிரிக்கெட் பத்திதான் நிறைய பேசி இருக்கேன். அந்த ஆட்டத்திலே அவர் அப்படி அடித்து இருக்கவேண்டும். இவருக்கு முன்னால் அவரை களத்திலே இறக்கி விட்டு இருக்க வேண்டும் என்று விமர்சனம் சொல்லுவேன். இந்தியாவிலே இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு கோச் வேலைக்கு ஆள் எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு 50 கோடி பேரு தயாரா இருப்பாங்க.<br />
<br />
ஆட்டம் நடக்கும் போது மின்சாரம் தடைபட்டுவிட்டால், திட்டு மழையாய்ப் பொழியும், இருந்தாலும் அடுத்த வினாடியே பல தொல்லை பேசிகளை அழைத்து நடப்பு ஓட்டம் விவரம் சேகரிப்பேன்.ஆட்டத்திலே இந்தியா ஜெயித்தா வாய் பூராம் பல்லா இருக்கும், தோத்திட்டா பாகிஸ்தான் ௬ட சண்டை போட்டு தோத்த மாதிரி பல் போன கிழவன் போல சோகம் ஆகிடுவேன். கிரிக்கெட் ஆட்டத்திலே இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்றால், அதற்கு அப்புறமா எந்த நிலையிலே இருந்து முந்திய ஆட்டம் பார்த்தேனோ, அந்த நிலைக்கு மறுபடி போகவே மாட்டேன், வெற்றி அடைந்தால் அதே நிலையிலே இருந்து பார்ப்பேன் அடுத்து இந்தியா தோல்வி அடையும் வரை.<br />
<br />
இப்படி கொலைவெறியா கிரிக்கெட் பார்த்து, நான் ஒரு பொறுப்பான இந்திய பிரஜை என்று நிருபித்து கொண்டு இருந்த காலத்திலே தான், நடக்கிற போட்டியின் முடிவை முன் ௬ட்டியே ஒரு கமிட்டி முடிவு செய்து, அந்த கமிட்டி செயல்பாட்டின் படி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் நிச்சக்கப்படுகிறது என்று செய்தி தாள்களிலே அடிப்பட்டது, பக்கத்திலே சமந்தப்பட்ட வீரர்கள் வடக்கூர்காரிகளிடம் பல்லை காட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படமும் பார்த்தேன், ஆக இவங்க நோகாம நொங்கு திங்கதுக்கு, நான் நொண்டி நொண்டி தொலைகாட்சி பார்த்தது எல்லாம் வீணாப் போச்சேன்னு நினைச்சேன்.<br />
<br />
விளையாட்டை விட்டு வெளியே வந்து யோசித்துப் பார்த்தால், இவங்க விளையாட்டுக்குள் நுழையுறதே வடக்கூர் நடிகைகளுக்கு துண்டு போடத்தானா என்ற எண்ணம் வந்தது.மேலும் அதுவும் ஒரு விளையாட்டு, அதை விளையாட்டாத்தான் பார்க்கணும் என்ற என்னோட அறிவுக்கண் திறந்தது. இந்தியாவிலே கிரிக்கெட் மட்டுமா இருக்கிறது, இன்னும் அநேக விளையாட்டுக்கள் இருக்கிறது, அவைகளை கிரிக்கெட் போதை மறைத்துவிட்டது, செய்தி தாள்களிலும் மற்ற விளையாட்டுக்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் போல சித்தரிக்கபடுகிறது.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதே பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை.<br />
<br />
இரத்தமும் சதையுமா இருந்த நானும் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தோம், கிரிக்கெட் பத்தி பேசலைனா வாழ்கையே சூனியமா போய்டுமே என்று நினைத்த காலம் மெல்ல மாற ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வந்து, முழுவதும் விலகிவிட்டேன்,நான் பார்ப்பதை நிறுத்திவிட்டாலும், கிரிக்கெட் இன்னும் அழிந்து விடவில்லை, பார்ப்பவர்களும் இன்னும் நின்று விடவில்லை.<br />
<br />
</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75934239172322819362011-01-07T20:03:00.000-05:002011-01-07T20:03:39.123-05:00மரபுச்சண்டைமருத்துவமனையின் வாசலிலே திருவோடு இல்லாமால் தெருவை நோக்கி இருந்த ஒரு பெண்ணின் மனதிலே ஏன் இந்த சோகம், உள்ளே சென்ற தனது காதலன் நிலைமை என்னாச்சின்னு நினைத்து எண்ணையிலே வேகாத வடை மாதிரி, மனதை வறுத்து எடுக்கிற அளவுக்கு சோகம் இருந்தாலும், எதையும் வெளிகாட்டி கொள்ளாமால் உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு இருந்தாள்.<br />
<br />
"கருப்பு நிற உதட்டு சாயம் போடும் சிகப்பழகியே, அப்படியே கொஞ்சம் பல்லுக்கும் போட்டா இன்னும் நல்லா இருக்கும்"<br />
<br />
"சகிக்கலை உன் வர்ணனை"<br />
<br />
"இதை வர்ணன்னைனு வெளியே சொல்லாதே கல்லை கொண்டு எறியப்போறாங்க"<br />
<br />
"அதெல்லாம் இருக்கட்டும், மருத்துவ அறிக்கை எங்கே?"<br />
<br />
"எல்லாமே நல்லாவே இருக்கு, எனக்கு எய்ட்ஸ்,புற்றுநோய் எல்லாம் இல்லை, இதயத்தை நீ ஆட்டையப் போட்டாலும்,கிட்னி நல்லமுறையிலே இயங்குகிறது, இதை நான் சொல்லலை, இந்த அறிக்கை சொல்லுது"<br />
<br />
"கொடு என்கிட்டே" என்று சொல்லிவிட்டு அவன் கையிலே இருந்து அறிக்கையைப் பிடிங்கி வேகமாக புரட்டிப் பார்த்தாள்.ஒரு தடவைக்கு மேல் பல தடவை பார்த்தாள்.<br />
<br />
"அறிக்கை படிக்கிற வேகத்தை படிக்கிறதிலே காட்டினால், நீயும் மருத்துவராகி இருக்கலாம்"<br />
<br />
"உன்னோட மரபணு அறிக்கை சரியா, வேற யாரோட பெயரும் தவறுதலா வந்து இருக்கா?"<br />
<br />
"சத்தியமா என்னுதுதான், சந்தேகம் இருந்தால் மருத்துவரை கேளு"<br />
<br />
"ஒன்னு குறையுதே"<br />
<br />
"அது உன்னோட அறிவு"<br />
<br />
"இல்ல உன்னோட மரபணு படம் சின்ன கோணலா இருக்கு"<br />
<br />
"வாய் கோணமா இருக்குல்ல, அப்புறம் என்ன ?"<br />
<br />
"பிரச்சனை அது இல்ல, அந்த ஒரு மரபணுவிலேதான் முக்கியமான தகவல் இருக்கு"<br />
<br />
"அப்படியா என்ன தகவல் இருக்கு?"<br />
<br />
"மக்களை ஆளுகை செய்யும் திறமை, எங்க மரபிலே இருந்து வந்தவங்க தான் உலகத்திலே எண்பது சதவீதக்கு மேல நாடுகளை ஆளுறாங்க"<br />
<br />
"மத்த இருபது சதவீதம் என்னாச்சி?"<br />
<br />
"அந்த நாடுகள் எல்லாம் இன்னும் வறுமை கோட்டை தாண்டலை, நம்ம நாடு வல்லரசாக காரணமே எங்க மரபு வழி வம்ச தலைவர்களாலே என்பது சமிபத்திய ஆய்வு சொல்லுது"<br />
<br />
"இப்ப ஏன் வரலாற்றை பத்தி பாடம் எடுத்து வாத்திச்சி மாதிரி பேசுறியே ?"<br />
<br />
"புரியாம பேசாதே, நாம ரெண்டு பெரும் கல்யாணம் செய்தால்,நமக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் இந்த மரபணு இல்லாம நாட்டை ஆள முடியாம போய்ட்டா, ஒரு சந்ததியே வீணாப்போகும், நம்ம நாடு மறுபடியும் ஏழை நாடு ஆகிடும், அப்படி ஒரு நிலைமைய நினைச்சே பார்க்க முடியலை,இந்த மருத்துவ அறிக்கை எனக்கு சாதகமா வரணுமுன்னு, தீச்சட்டி எடுத்தேன், தோப்பு கரணம் போட்டேன், கோயில் கோயிலா ஏறினேன்"<br />
<br />
"அடியே ஆடே அறுக்கலை, அதுக்குள்ளையும் தலைக்கு பறந்த கதையா இருக்கு நீ சொல்லுறது"<br />
<br />
"நம்ம நகர எங்க மரபணு சாதி சங்க வாலிபி தலைவி நான், ஒரு ஆளைப் பார்த்தா உடனே, அவங்க மரபணுவை படமா வரைவேன். என்னோட கணிப்புக்கு பரிசா மரபணு கண்ட மாதரசி பட்டம் கொடுத்து இருக்காங்க.என்னோட கணிப்பு உன்னோட விசயத்திலே எப்படி தப்பா போச்சினு தெரியலையே !!!"<br />
<br />
"என்னவோ நோபல் பரிசு கிடைச்ச மாதிரி சொல்லுற,ரெம்ப காலத்துக்கு முன்னாடி சாதி, மதமுன்னு சண்டை போட்டோம், அதெல்லாம் ஓய்ந்து முடிஞ்ச இப்ப எல்லோரும் மரபு பேரை சொல்லி சண்டை போடுறோம்.சண்டை போடுறதுக்குன்னே புதுசு புதுசா கண்டு பிடிப்பீங்களோ,வம்சம் விருத்தி ஆகின காலம் போய், இப்ப மரபு வம்சம் விருத்தி அடைய முயற்சிகள் நடக்கு"<br />
<br />
"உனக்கு வேணா இது சாதாரணமா இருக்கலாம், ஆனா என்னோட மரப விட்டு வெளியே வர முடியாது"<br />
<br />
"இப்ப ௬ப்பாடு போடுற நீ என்னை காதலிக்கும் முன்னே மூளைய முதுகிலேயா இருந்தியோ"<br />
<br />
"அதான் சொன்னேனே அப்பவே"<br />
<br />
"முடிவா நீ என்ன சொல்ல வார, நான் உங்க மரபு சாதி இல்லாததாலே நாம கல்யாணம் பண்ணமுடியாது, அதுக்கு தானே இந்த பாடு"<br />
<br />
"ம்ம்ம்"<br />
<br />
"எனக்கும் உன்னைய மாதிரி மரபு சாதிவெறி பிடிச்சவ வேண்டாம்"<br />
<br />
"வெட்டிக்கலாமா"<br />
<br />
"அதான் வெட்டி விட்டுட்டியே,போய் உங்க ஆள்கள்ள நல்ல ஆண்பிளையா பார்த்து வளைய விரி,உன்னை காதலிச்ச பாவத்தை நான் ௬வம் ஆத்திலே போய் குளிச்சி<br />
தீர்த்துக்கிறேன்"<br />
<br />
(அடுத்த அரை மணி நேரம் கழித்து குட்டி சுவரில்)<br />
<br />
"மாப்ள நீ கொடுத்த யோசனை நல்லாவே வேலை செய்தது"<br />
<br />
"நான் தான் அப்பவே சொன்னேன், அவ ஒரு மரபு சாதி வெறி பிடிச்சவ, அதை வச்சி அவளை கழட்டிவிடாலமுன்னு, மருத்துவ மனையிலே எப்படி மரபு சான்றிதழை மாத்தினே"<br />
<br />
"அங்க வேலை செய்யுற ஒருத்தரைப் பார்த்து அவரை வச்சி மாத்திட்டேன்,ஆனாலும் மரபணு விசயத்திலே அவ கணிப்பு சரிதான், இருந்தாலும் இப்ப கிடைச்சி இருக்கிற ஆளு, இவளைவிட கொஞ்சம் நிறமா அழகா இருக்கா, அதான் பழையன கழிதலும் புதியன<br />
புகுதலும்(தமிழ் எதுக்கெல்லாம் பயன்படுது பாருங்க) மாதிரி பழசு போய் புதுசு வந்து விட்டது..வந்துகிட்டே இருக்கு"<br />
<br />
"எங்கடா?"<br />
<br />
"போயிட்டு வந்து சொல்லுறேன்"நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-33710637988593112932010-12-27T20:52:00.000-05:002010-12-27T20:52:37.741-05:00எனது குப்பைகள் - நூல் வெளியீட்டு விழாஒரு அழகிய தருணத்தை எதிர்பார்த்து வழி மேல் கல்லை வைத்து காத்து இருக்கும் என்னுடைய பலகோடி(?) ரசிகப் பெருமக்களுக்கு விருந்தாக வருகிறது "எனது குப்பைகள்" நூல். குப்பை என்று பெயர் வைத்தால்,ஒருமையை கொடுத்து நான் ஒரு சுயநலவாதி என்ற பிம்பம் தந்து கம்பத்திலே கட்டி வைத்து அடிக்க வாய்ப்பு இருப்பதாலே, "குப்பைகள்" என்று பன்மை சேர்த்து நானும் ஒரு பொதுநலவாதி என்பதை அடிக்கோடிட்டு சுட்டி காட்டவே "கள்" சேர்த்து இருக்கிறேன்.<br />
<br />
கல்லூரி சாலையிலே "கள்" குடித்துவிட்டு கட்டை மாட்டு வண்டியிலே சென்றாலும், கார வீட்டு கார் பிடித்து அமெரிக்கா சென்று, என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் இருந்தாலும், தமிழுக்கு அறிய பல தொண்டுகள் செய்து "கொண்டியாரங்கள்ளி" என்ற வரலாற்று காவியம் படைத்த குடுகுடுப்பையார்,எனது குப்பைகள் நூலின் அறிமுக ஏற்புரை எடுப்பதாக கட்சி கொடியின் மேல் சபதம் செய்து இருக்கிறார்.அவரின் அறிமுக உரையின் முன்னோட்டம் இதோ<br />
<br />
"ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாது என்பதற்கான இலக்கணமே இந்த எனது<br />
குப்பைகள்,குப்பை என்பது களையப்பட வேண்டிய ஒன்று இந்த புத்தகத்தைப் போல".<br />
<br />
வாழ்க்கையிலே தான் சந்தித்த கதாபாத்திரங்களை வெளியிட்டு கலைத்தாயின் தீராப் பசியை மணிமேகலை வைத்து இருந்த அமுதசுரபியை கந்து வட்டிக்கு கடன் வாங்கி தீர்த்துக்கொண்டு இருக்கும் பதிவுலக மன்னன் எங்கள் அண்ணன், இல்லாத கட்சிக்கு பொல்லாத மாணவர் அணித்தலைவர், இருண்டு விடாதே என்று வானத்தைப் பார்த்து பாடிய கவுஜையாலே வானம் மயங்கி, வனம் போல மப்பும், மந்தாரமுமாக, கொப்பும் கிளையுமாக இருக்கிறது, பாலகன்(?) போல இருப்பதாலே அவரை பாலா அண்ணன் என்று அழைக்கிறோம்(?).இவ்வளவு புகழுக்கு சொந்தக்காராக இருந்தாலும், எனது குப்பைகளுக்கு ஏற்புரை வழங்குவதாக காசு வாங்காம வாக்கு கொடுத்து இருக்கிறார்.அவரின் ஏற்புரையின் முன்னோட்டம் இதோ உங்கள் பார்வைக்கு<br />
<br />
"தொல்காப்பியத்துக்கு பிறகு தமிழிலே சிறந்த இலக்கண நூல் வெளிவரவில்லை என்பது உலகறிந்த உண்மை, அப்பேற்பட்ட பெருமை கொண்ட தொல்காப்பியர் இந்த குப்பையைப் படித்தால் நிச்சயம் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும், ஆமா கொலை பண்ணினா ஆயுள் தண்டனை தானே கொடுப்பாங்க(?)".<br />
<br />
இவரை தெரியும் என்பதிலே எனக்கும், டமிழ் மம்மிக்கும் பெருமை, சொல்லின் செல்வர், தமிழை வில்லாக்கி, வார்த்தைகளை அம்பாக்கி, படிப்பவர்களை கவரும் தமிழ் அம்பு. வட்டார சொல், வழக்குச்சொல் மற்றும் வழக்கு ஒழிந்த சொல் ஒவ்வொன்றையும் நேர் வரிசையாகவும், குறுக்கு வரிசையாகவும் அடுக்கி கட்டம் கட்டி சொடக்கு போட்டு சொடுக்கு விளையாடுவார். ஊர்ப்பழமை பேசுவதிலே பெருசுகளுக்கு இணையானவர்.<br />
<br />
"ஒரு புத்தகம் எப்படி இருக்கோனுமுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா என்ற ஊர்ப்பழமையைப் படிங்(க), ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாதுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா இந்த குப்பைப் படிங்(க) ன்னு எங்க அப்பச்சி கனவிலே கவி காளமேகம் வந்து சொல்லி இருக்".<br />
<br />
ரஜினி படம் போல புத்தகம் வெளிவரும் முன்னே, உலகெங்கிலும் உள்ள ரசிகர் பெருமக்கள் புத்தகம் வாங்க அலை அலையாய் இணையத்திலேயும், வலையிலேயும் ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்து உள்ளது. இப்படி ஒரு புத்தக அலையைப் பார்த்ததில்லை என மன்னார் பதிப்பகம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக முகிலன் புத்தகத்தின் பிரதிகளை சாக்குமுட்டையிலே வைத்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.விளக்கம் கேட்டு மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.<br />
<br />
இந்தியாவிலே கலவரம் மிகுந்த பகுதியாகிய மைலாப்பூரிலே பொது மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற விதூஷ் பக்கோடாவை விட புத்தக எண்ணிக்கை அதிகமாக விற்கும் என தகவல் கிடைத்ததாலே,முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விதூஷ் ஐயாயிரம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து, தோட்டாக்கள் போன்ற பக்கோடாவை புத்தகத்தாள்களை கிழித்து சுத்தி கொடுக்க யோசனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.<br />
<br />
பப்புவிடம் வாங்கிய பல்புகள் பளிச்சென மின்னுவதாலே, அந்த ஒளியை குறைக்க ரெண்டாயிரம் பிரதிகளுக்கு சந்தனமுல்லை முன் பதிவு செய்து இருப்பதாக பப்பு ரசிகர்மன்ற அமெரிக்க கிளை தெரிவித்து உள்ளது .<br />
<br />
இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புத்தக அலை புயல் அலையாக இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது, குறிப்பாக அவுஸ்திரேலியாவிலே முன் அறிவிப்பு ஏதுமின்றி தமிழகத்தின் மின் அறிவிப்பு போல கடைய ஆட்டயப் போட்ட கூகிள் ஆண்டவரிடம் பல தெருமுனை போராட்டங்களை நடத்தி,கடை திரும்ப கிடைக்க போராடி வரும் தங்க மங்கை, வைர மங்கை இப்படி பல பட்டப்பெயர்கள் இருந்தும், தங்கமும், வைரமும் வெங்காய விலைபோல இருப்பதாலே, அதை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு அவுஸ்திரேலியா கும்மி கழக தலைவி என்ற ஒரு பட்டத்தை மட்டும் வைத்து இருந்த/இருக்கும் சின்ன அம்மிணி, ஒரு லட்சம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து இருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூறுகிறது.<br />
<br />
தில்லி தமிழ் சங்கத்தின் சார்பாக கோடை வெப்பம் தணிக்க புத்தகம் இலவசமாக வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மாபெரும் நூல் வெளியீட்டு திருவிழாவை நேரடி ஒலி,ஒளி(ழி) பரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டா போட்டி போடுகின்றனர். விழாவிலே ௬ட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலே தமிழக மற்றும் இந்திய காவல்துறைகளுக்கு கிரகம் சரியில்லாததாலே அனுமதி வழங்கவில்லை, அதனால் விழா செவ்வாய் கிரகத்திலே நிகழும் 23345 வருடம், தை 30 ம் தேதி நடைபெறுகிறது. அனைவரும் கல்லோடு வந்து விழா(லா) வை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.<br />
<div><br />
</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-17124085742312498892010-12-24T00:37:00.001-05:002010-12-29T14:19:11.839-05:00மன்மதன் அம்பு விமர்சனம்ரஜினி படமா இருந்து இருந்தா இவ்வளவு ஆடம்பர செலவு செய்றதுக்கு பதிலா ௬வத்தை நைல் நதி ஆக்கி இருக்கலாம் என்று படம் வெளிவரும் ஒரு மாதத்துக்கு முன்னே எதிர் வினைகள் குற்றால அருவி மாதிரி வந்து இருக்கும்,அந்த படம் ஓடப்போற திரை அரங்கம் பக்கமே தலை வைத்து படுக்கவே மாட்டேன் என்று சபதம் ஏற்று இடுகைகள் வந்து இருக்கும். படத்துக்கும் நல்ல விளம்பரம் கிடைத்து இருக்கும், விளம்பர இடுகைகள் குறைவா இருந்ததாலே எந்த விட எதிர்பார்ப்பும் இல்லாம படத்துக்கு போனேன்.<br />
<br />
எதிர்பார்ப்பு இல்லாம போனதாலே நான் ஏமாறலை கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம பொழுது போச்சி படம் முடியும் வரை, கமல் படங்களிலே வழக்கமா வரும் நடசத்திர பட்டாளங்களுடன் மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை, காதல் இல்லைனா தமிழ் படமே இல்லை என்ற தலையாய விதிக்கு உட்பட்டு மற்றுமொரு காதல் கதைக்களம்.பாகிஸ்தான் ஆளுங்களை அடித்து விரட்டி விட்டு கஷ்மீர்ல கொடியை நாட்டும் நம்மவர்கள், ஆலிவுட் படங்கள் மாதிரி வேற்று கிரக ஆள்களை அடிச்சி விரட்டி இந்திய கொடிய பறக்க விட இன்னும் பல காலம் இருக்கு. காதலுன்னு சொன்னதினாலே, காதலியை பறக்காவெட்டி மாதிரி ஒளிந்து ஒளிந்து பார்க்கிற காட்சிகள் நிறைய இருக்கு.<br />
<br />
வயசான ஆளு வாலிப புள்ள மாதிரி பண்ணக்௬டாதுக்கு என்பதற்காக நாப்பது வயசிலே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாயாக கமல் நடித்து இருக்கிறார், நடிகையாகவே திரிசா நடித்து இருக்கிறார், இம்புட்டு அழகா தமிழ் பேச தெரிஞ்சிகிட்டு, குரலை கடன் வாங்கி பேசுறது நல்லவா இருக்கு திரிசா அக்கா(சத்தியமா எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று உறுதியானதும் தான் இந்த அக்கா புராணம்).<br />
<br />
மாதவன் கிடைத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார், காதலியை சந்தேகப்படுவதிலும், சரக்கு அடிப்பதிலும், சரக்கு அடித்த பின் பேசுவதிலும் கொடுத்த காசுக்கு மேல ௬வினதா சந்தேகம் வராது, படம் பார்க்க நீங்க சரக்கு அடித்துவிட்டு போய்<br />
இருந்தால், அதற்கு நிர்வாகம் பொறுப்பு இல்லை என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.<br />
<br />
சங்கீத சங்கீதமான நடிப்பு, திரிசாவுக்கு தோழியாக வரும் கதாபாத்திரத்தை கன நிறைவாக செய்து இருக்கிறார், நாயகிக்கு இணையாக கதை முழுவதும் வந்து வெற்றி கொடி நாட்டுகிறார். மேலும் கதையில் வரும் மலையாள தயாரிப்பாளர் தம்பதிகள் , குழந்தை நட்சத்திரம், மற்றும் ஊர்வசி, ரமேஷ் அரவிந்த் உட்பட அனைவரும் ஒளிவு மறைவு இல்லாத நிறைவு.<br />
<br />
மேல சொன்னவர்களை விட படம் முழுவதும் கமல் தான் ஆக்கிரமித்து இருக்கிறார், பிரெஞ்சுகாரிக்கு கணவன், ராணுவ அதிகாரி,உளவாளி மற்றும் காதல் மன்னன் இப்படி பல பாத்திரங்களை ஏற்று நடந்தாலும், ரசிகர்கள் பயப்படும் படியாக, முகத்தை அறுவை சிகிச்சை செய்து மாற்றலை, காலை ஓடிச்சி கட்டையா நடந்து எல்லாம் கலவரப் படுத்தலை என்பதுவே மிகப்பெரிய நல்ல விஷயம். கமல் வராத காட்சிகளை விரல் விடாம எண்ணிடலாம்.<br />
<br />
முதல் பாதியிலே மெதுவா சென்றாலும் அலுப்பு மருந்து போடுகிற அளவுக்கு சலிப்பு<br />
தட்டலை, இடையிடையிலே நிறைய இங்கிலிபிசு வசனங்கள் வந்தாலும், பக்கத்திலே நல்ல ஆங்கிலம் தெரிஞ்சவங்க கிட்டு கேட்டு தெரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு, கடைசி இருபது நிமிஷம் கலவர ஓட்டம்.வாய்விட்டு சிரிக்க கூடிய வாய்ப்புகள் படத்திலே நிறைய இருக்கும்,நீங்க இலக்கியவாதியா இருந்தா நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.ஆள் மாறாட்ட யோசனையை சினிமா உலகத்துக்கு அறிமுகப் படித்தினவரை விட அதிகமாவே கமல் ஆள் மாறாட்ட படங்களை எடுத்துவிட்டார், ஆனா மன்மதன் அம்புல அதைபத்தி பேசிட்டு விட்டுறாரு.<br />
<br />
ஒளிப்பதிவு படத்துக்கு நல்ல பலம் என்று எனக்கு தோணுது,படம் முடிந்து வெளியே வரும்போது ௬ட ஒரு பாட்டும் புலப்படலை,இன்னும் படத்திலே பாடல் இருந்ததா என்று யோசித்து கொண்டு இருக்கேன், இவ்வளவு நேரமும் பேசிட்டு கதைய சொல்லவே இல்லையேன்னு நீங்க யோசிக்குறீங்களா, வெள்ளி திரையிலே போய் பார்த்தா உங்களுக்கே நல்லா தெரியும்.கமல் படிச்ச கவுஜையை எல்லாம் வெட்டாம போட்டுட்டாங்களே, நம்ம ஊரு பெருசுங்க இம்புட்டு தூரம் வரமாட்டாங்கன்னு நினைச்சிட்டாங்களோ?<br />
<br />
முடிவா ஒரு குத்து வசனத்தோட முடிக்கிறேன்.மன்மதன் அம்பு, பூக்களை வைத்தே எய்கிறார், படம் பார்க்கப் போறவங்களை காயப் படுத்தாது என்னோட தாழ்மையான<br />
எண்ணம்.அதனாலே எதிர்பார்ப்பு இல்லாம போங்க, ஏமாற்றம் இல்லாம திரும்பி வாங்க.<br />
<br />
திரை அரங்கிலே போட்ட பின்னூட்டம் "திரிசாவுக்கும், சங்கீதாவுக்கும் கொஞ்சம் பவுடர் பூசி விடுங்கப்பு"நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-79274106519491357002010-12-21T19:51:00.002-05:002010-12-23T12:32:59.597-05:00உங்க பையன் உருப்படமாட்டான்"என்னடா சேட்டை பண்ணினா, பள்ளிக்௬டம் சேர்ந்து ஒரு வாரத்திலே வாத்தியாரு வந்து பார்க்க சொல்லி இருக்காரு"<br />
<br />
"அப்பா, நீ சொல்லித்தான் எனக்கே தெரியும், நான் சேட்டை பண்ணி இருக்கேன்னு" என்று சொன்னவனுக்கு பதில் சொல்லும் முன்,பள்ளி முதல்வர் அறையிலே இருந்து அவரது உதவியாளர் என்னை உள்ளே வரச்சொன்னார்.<br />
<br />
முதல்வர் அறையிலே<br />
<br />
"எங்களோட பள்ளி வரலாற்றிலே சேர்ந்த ஒரு வாரத்திலே இவ்வளவு புகார் யாருக்குமே கிடைத்ததில்லை, உங்க பையனோட நடவடிக்கை சரி இல்லை"<br />
<br />
"நானும் அதைதான் கேட்கிறேன் என்னன்னு சொல்லவே இல்லை, நீங்களாவது சொல்லுங்களேன்"<br />
<br />
"வகுப்பிலே பாடம் சொல்லி கொடுக்கும் போது கவனிக்கவே இல்லையாம், மணி அடிச்ச உடனே எல்லோரையும் தள்ளி விட்டுட்டு ஓடிப்போய்டுறான். வகுப்பிலே நோ தமிழ்னு சொன்னாலும், கேட்காம தமிழிலே பேசுறான், இவனோட சேர்ந்து எல்லா புள்ளைகளும் தமிழ்ல பேசுறாங்க, எங்க பள்ளிக் ௬டம் பாழா போகுது,எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கிறதில்லை"<br />
<br />
"ஏன்டா இப்படி, அம்மா மாதிரியே இருக்க"<br />
<br />
"அப்பா, ௬ட படிக்கிற பசங்க எல்லாம் மாதவரம், பெரம்பூர்ல இருந்து வாராங்க, அவங்க கிட்ட எல்லாம் தமிழ்ல பேசாம, இங்கிலாந்திலே இருந்து வந்தவங்க மாதிரி இங்கிலிபிசு பேசணுமா?"<br />
<br />
"நியாயமாத்தானே ஐயா இருக்கு,தமிழரிடம் தமிழ் பேசுவதிலே என்ன தப்பு?"<br />
<br />
"நீங்க ஒரு பொறுப்பான அப்பான்னு நினைச்சேன், நீங்களும் உங்க புள்ளைக்கு சொம்பு அடிக்குறீங்களே"<br />
<br />
"இது வெண்கல சொம்பு இன்னும் நசுங்கலை,நீங்க மேல சொல்லுங்க"<br />
<br />
"வகுப்பிலே பேச ஆரமிச்சா நிறுத்தவே முடியலை, ஓட்டை வண்டி மாதிரி ஒரே சத்தம், இவன் வாய்க்கு எல்லாம் சோர்வே வராதா?"<br />
<br />
"அப்படியா!!!!!!!"<br />
<br />
"ஆமா வகுப்பிலே பாடம் சொல்லி கொடுக்கிற டீச்சரை விட அதிகமா பேசுறான் உங்க பையன்"<br />
<br />
"கேட்கவே ரெம்ப சந்தோசமா இருக்கு, கல்யாணத்துக்கு முன்னாடி, நானும் இப்படித்தான் பேசிக்கிட்டு இருந்தேன், கல்யாணம் முடிஞ்சதோட வாய மூடி விட்டு காதை திறந்தவன்தான், இன்னும் அப்படியே தான் இருக்கேன், எங்க என் புள்ளையும் ஊமை பூச்சியா போயிடுமோன்னு பயந்தேன், நல்ல வார்த்தை சொல்லி நீங்க என் மனசிலே பால் சொம்பு அடிச்சிட்டீங்க"<br />
<br />
"நீங்க குறைய கேட்க வந்தீங்களா?, பாராட்ட வந்தீங்களா?"<br />
<br />
"உங்களுக்கு குறையா தெரியுறது, எனக்கு பெருமையா இருக்கு"<br />
<br />
"அப்படியே உங்க புள்ளைக்கு மத்திய சிறையிலே ஒரு இடம் வாங்கி வையுங்க, எதிர் காலத்திலே அங்கதான் போவான்"<br />
<br />
"இவன் சிறை அதிகாரியானா எனக்கு பெருமைதான்,நீங்க மேல சொல்லுங்க எஜமான்"<br />
<br />
"பாடம் சொல்லி கொடுக்கிற டீச்சர் சடை முடியப் பிடிச்சி இழுத்து இருக்கான்"<br />
<br />
"அப்பா அது சவரி முடி, இழுத்த உடனே கையிலே வந்துருச்சு"<br />
<br />
"வீட்டிலேயும் இப்படித்தான், இவங்க அம்மா சடை முடிய பிடிச்சி இழுப்பான், வீட்டிலே தான் இவ்வளவு தைரியசாலின்னு நினைச்சேன், என் மானத்தை காப்பாத்திட்டான்"<br />
<br />
"என்ன சார் நீங்க, உங்க புள்ள மேல அடுக்கடுக்கா புகார்களை அள்ளி வீசிக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் ௬ட சுரணையே இல்லாம இருக்கீங்க"<br />
<br />
"சொல்லுற உங்களுக்கே இல்லாத சுரணை எனக்கு எப்படி வரும்?"<br />
<br />
"உங்க பையனாலே வகுப்பிலே இருக்கிற மற்ற பசங்களும் கெட்டுப்போக நிறைய வாய்ப்புகள் இருக்கு,எங்க பள்ளியிலே படிச்ச பசங்கள்ள பெரும்பாலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆவுஸ்திரலியா போய் இருக்காங்க"<br />
<br />
"அமெரிக்காவிலே ஆணி பிடிங்குனாத்தான் அறிவாளிங்க, உள்ளுரிலே இருக்கிறவங்க<br />
எல்லாம் உதாவாக்கறையா?, இந்திய மதரை ஒரு தமிழ் தாடி அவமானப்படுத்திட்டீங்க"<br />
<br />
"எங்கள் பள்ளி உலகத்தரத்துக்கு நிகரானது, இங்க உங்க பையன் படிக்கனுமுன்னா விதி முறைகளை கடை பிடிக்கணும், பையனை விட அவங்க அப்பாவுக்கும் நிறைய விதி<br />
முறைகள் இருக்கு அதையும் கடை பிடிக்கணும், நீங்களும் உங்க பையனும் அடிக்கிற கும்மிக்கு இங்க இடம் கிடையாது"<br />
<br />
"ஐயா என் பையனுக்கு கல்வி கிடையாதா?"<br />
<br />
"கிடைக்கிற இடத்திலே போய் வாங்கிக்கோங்க, போகும்முன்னே இந்த மாத குறை கட்டணத்தையும் கட்டிட்டுப் போங்க"<br />
<br />
வேற வழி இல்லாமல் தனது மூன்று வயது மகனை தோளில் போட்டுகொண்டு, பாலர் பள்ளியின் வாயிலை அடைந்தார். வாயிலிலே பள்ளியின் விளம்பர பலகை "உங்கள் மழலையின் எதிர் காலத்தின் நுழைவு வாயில்" என்று எழுதி இருந்தது வெயில் பட்டு மின்னியதை பார்த்து வெளியே சென்று கொண்டு இருந்தார்.<br />
<div><br />
</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-57727039982099661652010-12-16T23:28:00.001-05:002010-12-17T09:51:41.032-05:00மனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">துவைக்கிறக்கு சோப்பு வச்சி தேய்த்து, கை வலியை தாங்காம துணியை அடிக்கிற அடியிலே துணி கிழிஞ்சி அதைப் போட்டு போகும் போது ரெண்டு பாரு பாத்து அவங்களும் துணிய கிழிக்க, அதுவே நவ நாகரிகம் ஆகிப் போச்சின்னு கேள்விப்பட்டு இருக்கேன்.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">சோப்பு வச்சி துணி துவைக்கிற காலம் எல்லாம் மலையேறிப் போன அமெரிக்க மண்ணிலே, துணியை அள்ளிப் பையிலே போட்டு, சோப்பை உருக்கி புட்டியிலே அடைச்சி வச்சதை எடுத்துகிட்டு இயந்திரங்களை வைத்து துணி துவைக்கும் கடைக்கு போனேன். துணிகளை அள்ளிப் இயந்திரத்திலே போடும் போது, எதிர் வரிசையிலே இருந்த அழகி சோப்பை உருக்கி வச்ச புட்டியிலே இருந்து இயந்திரத்திற்குள் சோப்பு தண்ணியியை ஊத்தும் அழகைப் பார்க்கும் போது நான் அந்த இயந்திரமா இருந்து என் வாயிலே சோப்பு தண்ணியை ஊத்தினா எப்படி இருக்குமுன்னு யோசித்தாலும், சின்ன வயசிலே இனிமா கொடுத்தது ஞாபகம் வரவே, அப்படியே நினைவுக்கு வந்தேன். எவ்வளவோ இடங்களில் எப்படி எல்லாம் துண்டை போட்டு உசார் பண்ணி இருந்தாலும், துவைக்கிற இடத்திலே உசார் பண்ணலை,அதனாலையே உலகமஹா உசார் நாயகன் விருது கிடைக்காமல் போனது என்ற வடு இன்னும் மனதை விட்டு அகலவில்லை,எப்படியும் இந்த முறை உசார் பட்டம் கிடைக்க வைக்க வேண்டும் என மனதிலே நினைத்து கொண்டேன். </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">துணி துவைத்து முடிந்தது, துவைத்து முடிந்த உடனே, நம்ம ஊரு மாதிரி வீட்டுக்கு வெளியே துணியை காயப் போட்டா,துணி எல்லாம் பனிகட்டியா மாறிடும். அங்கேயே துணியை காய வைக்கிற இயந்திரமும் இருக்கும், துவைச்சி முடிச்ச உடனே, அதிலே அள்ளிப் போடணும், துணியை வேகமா அள்ளிப் போட்டேன், துவைக்க எடுத்திட்டு வந்ததே ரெண்டு சட்டை, ரெண்டு பேன்ட், இதிலே இருந்து தெரிஞ்சிக்கணும் நான் எதுக்கு இந்த கடைப் பக்கம் வந்தேன்னு. அள்ளிப் போட்டுட்டு பக்கத்திலே பார்த்தேன், மெக்ஸிகோ அழகி அவளோட துணிகளை காய வைக்கும் யந்திரத்திலே போட்டு விட்டு கதவை மூட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள். </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">அடுத்த வினாடியே அவள் பக்கம் சென்று "நான் உதவி செய்யலாமா உங்களுக்கு" கேள்விய கேட்டு, அவள் பதில் சொல்லும் முன்னே கதவை மூடி விட்டேன். ஒரு கதவை முடினா, மற்றொரு கதவு திறக்கும் என்ற "நியு" உசார் டன் விதிப்படி, என்னோட மனதின் கதவை திறந்து இதயத்தையும், கிட்னியையும் கொடுக்கத்தான் ஆசை, வாங்கிட்டு இதய பொரியலும், கிட்னி குழம்பும் வைத்து சாப்பிட்டு விட்டா என்ன பண்ணன்னு விட்டுட்டேன். இயந்திரம் துணிய காய வைக்கிற நேரத்திலே கொஞ்சம் கடலையை காய வைக்கலாம் என்ற நினைப்போடு அவளிடம் சென்றேன்.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"கதவு ௬ட சண்டை போட்டதிலே அடி ஏதும் இல்ல"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"யாருக்கு?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"உங்க கைக்குனு நீங்க நினைச்சா கைக்கு, கதவுக்கு நினைச்சா கதவுக்கு"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"ரெண்டுக்குமே இல்லைனா?" </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நீங்களே சொல்லுங்க?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"சொல்ல ஏதும் இல்லையே?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"துணி காய்ந்து முடிக்கிற வரைக்கும் ஊமையாவா இருப்பீங்க?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நான் எப்படி இருந்தா உனக்கென்ன?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நீங்க எப்படி இருந்தாலும் என்ன மாதிரி அழகா இருந்தா சரிதான்" இதை சொன்னதும் அப்படி ஒரு சிரிப்பு.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நீங்க சிரிக்கிறதைப் பார்த்தா, நான் பேரழகன்னு நினைக்கிற மாதிரி இருக்கு"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நானே கடும் வேலைப்பளுகளுக்கிடையே துவைக்க வந்து இருக்கேன், நீங்க என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுறீங்களா?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நானும் வேலைபளுவிலே தான் இருக்கேன், கொஞ்சம் வெளியே வந்து பேசி வேலையை மறக்கலாமுன்னு நினைச்சேன், ம்ம்.. என்ன செய்ய நான் பேசுறது உங்களுக்கு பிடிக்கலை, சரி நீங்க தனியா இருங்க" </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நான் அப்படி சொல்லலை, வாரம் ஆறு நாளும் வேலை,சமைக்க, சாப்பிட நேரம் இல்லை"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"அதான் உங்க பலத்தை நேரிலே பார்த்தேனே, எனக்கு தெரிஞ்ச நிறைய நல்ல சாப்பாடு கடை இருக்கு, நீங்களும்,நானும் ஒரு நாள் போகலாமே"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"ஒ.. போகலாமே தனியா.. நீங்க மட்டும்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நான் தினமும் தனியாத்தான் போறேன், துணைக்கு ஆள் இல்லாம, நான் உங்களை ௬ப்பிடுறேன்" </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"உங்க தொல்லை தாங்கமுடியலை" </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"இந்த தொல்லையோட ஒரு காப்பியுமா குடிக்க முடியாது, நாம இப்ப பேசின இவ்வளவு நேரம் தான் செலவாகும்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"துணி காய்ந்த உடனே நான் வீட்டுக்கு போய்டுவேன்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"உங்க அலைபேசியையும் உங்க ௬ட வீட்டுக்கு எடுத்திட்டு தானே போவீங்க, உங்க வீட்டு எண் தெரிய வேண்டிய அவசியம் இல்லை" </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நீங்க நினைக்கிறது கண்டிப்பா கிடைக்காது"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நடக்கும் .. நடக்கும்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"வாய்ப்பே இல்லை, என்னோட துணி காய்ந்து முடிஞ்சி போச்சி, நான் எடுத்திட்டு வீட்டுக்கு கிளம்புறேன்" அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளும் போய் விட்டாள், என்னோட துணியை மெதுவா எடுத்து வைத்து மடித்திக் கொண்டு இருந்தேன். பின்னால் இருந்து ஒரு குரல் "உங்க அலைபேசி எண்ணை<br />
கொடுக்க முடியுமா?" அது யாருன்னு சொல்லி தெரியவேண்டியதில்லை.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">கண்டிப்பாக என்று சொல்லி எண்ணை கொடுத்தேன், கொடுத்து விட்டு அவளிடம் ஒரு குறிஞ்செய்தி அனுப்ப சொன்னேன்.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"கவலை வேண்டாம் நானே தொடர்பு கொள்கிறேன்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"உங்களுக்கு வேலைப்பளு அதிகமா இருக்கும், மறந்தாலும் மறந்து போவீங்க, அதனாலே ஒரு சோதனை செய்தி அனுப்புங்க". </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">அவளுடைய அலைபேசி எடுத்து பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை, நானே அவள் அலைபேசியை வாங்கினேன், இங்க ஒரு கவுஜ வருது </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">உன் கை விரல்களை </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">மீட்ட விடாத உன்னை </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">தீண்டாமை ஒழிப்பு சட்டத்திலே </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">கைது செய்ய ஆசை </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">ஆனால் உன் விரல்கள் பட்ட </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">அலைபேசியால் அந்த </div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">வாழ்க்கை வாபஸ் வாங்குகிறேன்.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">எனது எண்ணுக்கு செய்தி அணிப்பி விட்டு திருப்பிக்கொடுத்தேன்,திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள். செய்கையிலே அழைப்பாயா என்றேன், இன்றைக்கு அல்ல என்று கண் காட்டிவிட்டு போனாள். எனது அலைபேசியை எடுத்து அவள் எண்ணை சேமிக்கும் முன்னே, அவள் பெயரை கேட்க மறந்து விட்டேன் என்பதை நினைத்தேன், அவளின் பெயரை மெக்ஸிகோ அழகி என்று குறித்து வைத்தேன்.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span style="font-size: small;"></span></span></span>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-39275560267045562072010-12-05T23:03:00.000-05:002010-12-05T23:03:43.295-05:00சுய மதிப்பீட்டு திட்டம்<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">வாழ்கையிலே தோல்வி அடைந்து விட்டால் கவலை அதிகமா இருக்கும்,கவலைப் பட்டா மட்டும் வெற்றி காலை சுத்தி கபடியா விளையாடும், எனக்கும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை,என்னோட கவலை எல்லாம் இப்படி கற்பனை குதிரை ஆகுமுன்னு தெரிஞ்சா, நீங்க ஏன் கடைப்பக்கம் கால் வைக்குறீங்க, கொஞ்சம் நஞ்சம் இருந்த நகத்திலே இருந்த மிச்சம் மீதத்தையும் கடிச்சி துப்பிட்டு பெருசுகளின் அழைப்புக்கு பல்லை எலும்பு துண்டாய் கடிச்சிக்கிட்டு காத்து இருந்தேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">அறையின் கதவை திறந்து மனித வளம் எட்டிப் பார்த்து, என்னோட பேரை சொல்லி உள்ளே அழைத்தது. உள்ளே அழைத்த மனித வள மகராசியுடன், இன்னும் மூன்று பெருசுகள் அவர்களிடமும் என்னோட பெயரை சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன்.மரியாதையா என்னை நாற்காலியிலே உட்காரச் சொன்னார்கள்.நானும் அதிதீவிரமாக சிந்திப்பது போல சிந்தித்துக்கொண்டு இருந்தாலும், கடை காத்தாடுது,வியாபாரம் ரெம்ப குறைவாப் போச்சே, சரியா மொய் வைக்க முடியவில்லையே என்று சிந்தித்து கொண்டு இருந்தேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"நாம எல்லாம் எதுக்கு ௬டி இருக்கோம்னு தெரியும், நம்ம அலுவலகத்திலே தயாராகும் சரக்கு, திட்டப்பணி ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆகியும் இன்னும் வெளிநாடு போய் சேரலை, சரக்குக்கு தேவையான எல்லா மூலப் பொருட்கள் இருந்தும், சரக்குக்கு நிர்ணயம் செய்த ஆட்கள் இருந்தும் இன்னும் பட்டுவாடா செய்யப்படலை,இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை பத்தி விசாரிக்க நாம எல்லோரும் ௬டி இருக்கிறோம்" என்று மனித வள மகராசி சொன்னாங்க,மனித வளத்தோட சேர்ந்து ௬ட இருந்த பெருசுகளும் அவர்கள் பங்குக்கும் கேள்விகளை அள்ளிப் போட்டனர். கேள்விகளின் வரிசை பின் வருவன </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"சரக்கு இன்னும் தயார் ஆகலை, ஆனா சரக்கு தயாரிக்க வேலை செய்த எல்லோரும், அருமையாக வேலை செய்தது இருக்கிறார்கள் என்று நீங்கள் சான்றிதழ் கொடுத்து இருக்கீங்க?" இதை கேட்டது பெருசு மணி </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"உங்களுக்கு கீழே வேலைபார்த்த எல்லோருக்கும், சுய மதிப்பீட்டு அளவு மிகவும் அதிகம் என்று ஆமோத்தித்து இருக்குறீர்கள்?" இதை கேட்டது பெருசு பால்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"சக தொழிலாளிகள் அனைவரும் திறமைசாலிகள் என்று சொல்லி இருக்குறீர்கள்,எல்லோரும் ஒரே மாதிரியா வேலை செய்யுறாங்கன்னு நீங்க சொல்லுறது ஐந்து விரலும் ஒண்ணா இருக்கிறது என்று சொல்வதைப் போல இருக்கு" இதை கேட்டது </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">மாஸ்கோ.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">வயசாகி போனதாலே ஞாபக மறதி வியாதி கேள்விகளை மறக்கடிக்க ௬டும் என்று கேள்விகளை குறித்து வைத்து கொண்டேன்.நான் மகளிருக்கு முன்னுரிமை என்ற தார்மீக கொள்கையிலே இருப்பதாலே, மகராசி கேள்வியை சட்டை செய்யாமல், பெருசுகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.இந்த கதையை ஒரு வருசத்துக்கு முன்னாடி கொண்டு போக வேண்டிய இருக்கு, கொஞ்சம் பொறுத்துக்கோங்க.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"அன்புக்குரிய சக தோழர்களே,தோழிகளே நாம இந்த சரக்கை தயாரிக்க ஆரம்பிக்குமுன்னே,மிக முக்கிய வேலையாக ஓன்று செய்ய விரும்புகிறேன்,ஒரு தாளை யும்,பேனாவையும் எடுத்து கவுஜ எழுதுங்க, அப்படின்னு சொல்லலை. உங்களோட மனசாட்சிப் படி உங்களோட பலம்,பலகீனம் ரெண்டையும் எழுதுங்க" </span></span><br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">செய்யப்போற வேலைக்கும், இந்த கேள்விக்கும் என்ன சம்பதம் என்று இடை மரித்தார் </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">மாஸ்கோ.</span></span><br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">ஐயா நான் இன்னும் எடுத்துக்காட்டு சொல்லி முடிக்கலை, கொஞ்சம் அமைதியா இருங்க என்று சொல்லிவிட்டு கதைக்கு போனேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">அடுத்த அரைமணி நேரத்திலே அனைவரும் எழுதிய தாள்களை வாங்கிகொண்டேன். அடுத்த ஒரு மாதத்திற்கு அவர்களின் வேலையை கண்காணித்து மீண்டும் சுய மதிப்பீட்டு திட்ட சந்திப்பு நடத்தினேன். அப்போது அவர்கள் முன்னே எழுதிகொடுத்த பலம், பலகீனம் ,மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை நான் ஆராய்ந்து உருவாக்கிய திட்ட உறுபினர்களின் பலம், பலகீனம் ரெண்டையும் வைத்து புள்ளி விவரங்களை ஒப்புமை செய்ததேன்.இந்த இரண்டையும் இணைத்து மறுபடி ஒரு மாதிரியை உருவாக்கினேன். ஒவ்வொரு உறுப்பினரின் பலம், பலகீனம் ரெண்டையும் வைத்து அவர்களிடம் பேசினேன்.அவர்களின் பலகீனத்தை மாற்ற அவர்களையே ஒரு திட்டம் தயாரிக்க சொன்னேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"நீங்க இன்னும் சரக்கை பத்தி பேசவே இல்லை என்று இடைமறித்தார்" பால்.அதற்கு பதில் சொல்லுற மனநிலையிலே நான் இல்லாததாலே, மறுபடியும் எடுத்துக்காட்டுக்கு போயிட்டேன்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"அடுத்த ஆறுமாதத்துக்கு அவர்களின் சுய சீர்த்திருத்த திட்டத்தை பயன்படுத்தி, அவர்களின் வலுகுறைந்த இடைவெளிகளை நிரப்பி அதைப் பூர்த்தி செய்தேன்.எட்டாவது மாதத்திலே இருந்து அனைவரும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாக மாறிவிட்டது என்று சொல்லி, "மணி,பால், மாஸ்கோ உங்களோட கேள்விகளுக்கு நான் சொன்னதிலே இருந்து விடை கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன், மாஸ்கோ ஐந்து விரல் ஒண்ணா இல்லைனாலும், ஒவ்வொரு விரலுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு"</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"௬ட வேலை செய்யுற தொழிலாளர்களை காப்பற்றுகிறேன்னு சொல்லி உங்களுக்கு குழியை நீங்களே தோண்டுறீங்க,எல்லோரையும் சமமான தட்டிலே வைப்பது எவ்வளவு ஆபத்து என்று உங்களுக்கு தெரியலை,ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட குறைகளை சொல்லி கொஞ்சம் மட்டம் தட்டினாத்தான், அவங்களின் திறமைகள் வெளிப்பட்டுகிட்டே இருக்கும்,அவங்களோட பலகீனம்,நம்ம பலன் என்ற அடிப்படை விதி தெரியாம இருக்குகீங்க" என்று மறுபடியும் மாஸ்கோ கேள்வி கேட்டது. </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"ஐயா குறைகள் இல்லாத திட்டம் எதுமே இல்லை இந்த உலகத்திலே இருந்து இருந்தா நமக்கு இங்க வேலையே இருக்காது, நான் செயல் படுத்திய திட்டம் என்னோட சுய சிந்தனைகள், சரக்கு தயார் ஆகலைன்னு கவலைப் படுற நீங்க, இதுவரைக்கும் வந்த சரக்கின் வடிவம் எந்த சேதமும்,சேதாரமும் இல்லாம இருக்கு என்பதும் உங்களுக்கு </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">தெரியும்,எவ்வளவு நாளைக்கு தட்டி தட்டி வேலை வாங்குவீங்க, கொஞ்சம் தட்டிக்கொடுத்து வேலை வாங்க பழகுங்க,நீ ஒழுங்கா வேலை செய்யலைன்னு வருட கடைசியிலே சொல்லும் முன்னே, முதல்ல இருந்து, அவனை வைத்தே அவன் குறைகளை சரி செய்ய வைக்கலாம்"</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">உடனே மணி "எல்லோருக்கும் ஒரே மதிப்பீடு இருந்தா, அலுவலக்கத்திலே வேலைய வச்சி எப்படி மேல் சாதி, கீழ் சாதின்னு பிரிக்க முடியும்?"</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"நீங்க வேலைக்கு ஆள் எடுக்கும் போதே கடைபிடிக்கணும்,திறமை இல்லாத ஆள்களை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்று,அப்படி வேலை செய்யத்தெரியாதவனை எடுத்த நண்பரையே கேட்ட்கனும் இந்த கேள்வியை?, இந்த சுய மதிப்பீட்டு திட்டம் மேலுக்கும்,கீழுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் "</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"இம்புட்டு கும்மி அடிக்கிற நீங்க ஏன் இன்னும் சரக்கு தயார் இல்லைன்னு காரணம் சொல்லவே இல்ல?" மகராசி கொக்கியப் போட்டது.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"வியாபார போட்டியிலே சரக்கை நாளைக்கு தருவோம் என்று வாடிக்கையாளர்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து வாங்கி விடுகிறோம். வாங்கிட்டு அதை கடைநிலை </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">ஊழியர்களிடம் கொடுத்து நாளைக்கு சரக்கை தயாரா இருக்கணும் சொல்லிடுறீங்க, மயிலிறகு மென்மையா இருக்குன்னு அளவுக்கு அதிகமா வண்டியிலே ஏத்துனதுதான் சரக்கு தாமதத்துக்கு காரணம் என்று வழக்கம் போல வாய்பளித்த அனைவருக்கும் நன்றி" ன்னு சொல்லிட்டேன்.இதோட பஞ்சாயத்து முடிய, இது ஆராய்ச்சி இடுகை இல்லை. </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">வாடிக்கையாளரிடம் சொல்லுங்க இன்னும் மூணு மாசத்திலே சரக்கு தயாரா இருக்கும்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"மூணு மாசமா" என்று பெருசுகள் அனைவரும் கேள்வியை கேட்க.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"பொய்ய சொல்லி வாங்கும் போது இதை யோசித்து இருக்கணும், நாளைக்கே தாரேன்னு சொல்லிட்டு கொடுக்காம இருக்கிறதுக்கும், நாலு நாளிலே தாரேன்னு சொல்லி ரெண்டு நாள் கழித்து கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு"</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">பெருசுகள் யோசனையிலே ஆழ்ந்து விட்டனர்,எனக்கு கேட்காத மாதிரி என்னவோ பேசினாங்க, பேசி முடிச்சிட்டு என்னைய கொஞ்சம் வெளியே இருக்க சொல்லிட்டாங்க.அரைமணி நேரம் கழித்து மீண்டும் மனிதவள மகராசி என்னை அழைத்தது. உள்ளே போனேன்.மாஸ்கோ மட்டுமே பேசினார்.</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">"நாங்க உங்களுக்கு மூணு மாசம் அவகாசம் தருகிறோம்,ஆனா இந்த மூணு மாசத்துக்குள்ளே சரக்கு தயாரா இருக்கணும், அப்படி இல்லேன்னா என்ன நடக்குமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த மறுவாய்ப்பை தவற விட்டுடாதீங்க." </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">பதில் சொல்லாம வெளியே வந்தேன் </span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 28px;">மூணு மாதத்துக்கு பிறகு என்ன நடந்ததுன்னு,சுய மதிப்பீட்டு திட்டம் என்ன ஆச்சின்னு மூணு மாசம் கழித்து சொல்கிறேன்.</span></span><br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 28px;"><br />
</div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-73975371409134101402010-11-25T19:59:00.000-05:002010-11-25T19:59:32.146-05:00தற்குறிப்பேற்ற அணியும், சகுனமும்<div><i><div><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="line-height: 28px;">பொறுப்பு அறிவித்தல் :</span></span></div><div><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="line-height: 28px;">நல்ல நேரம்,கெட்ட நேரம் மற்றும் சகுனம் இவைகளிலே நம்பிக்கையுள்ளவர்கள் இந்த இடுகையை தவிர்ப்பது நலம்.</span></span></div></i></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><br />
கொஞ்ச நாளைக்கு முன்னாடி <a href="http://yesuvadian.blogspot.com/2010/08/blog-post.html">சொல் அணிக்கு</a> சொம்பு அடிச்சேன், மறுபடியும் ஒரு அணியோட அணியில்லாம வந்து இருக்கேன்.சும்மா அணியோட வந்தா நல்லா இருக்காதேன்னு கூடவே சகுனத்தையும் ௬ட்டிட்டு வந்து இருக்குறேன், அதுமட்டுமில்லாம கடையிலே ஆராய்ச்சி மணி அடிச்சி ரெம்ப நாள் ஆகிவிட்டது என்று யாருமே கேட்காததாலே சகுனத்தையும், தற்குறிப்பேற்ற அணியையும் வைத்து ஒரு சின்ன ஆராய்ட்சி.சரி இப்ப தற்குறிக்கு வருவோம். நான் வல்லவன், நல்லவன், இலக்கியவாதி, எழுத்தாளர் இப்படின்னு சுயமா சொம்பு அடிச்சா, அதுக்கு பேரு தற்பெருமை. என்னையப் பத்தி தெரியாதவங்க கிட்ட இப்படி சொம்பு அடிக்கலாம், என்னைய நல்லா தெரிஞ்சவங்க கிட்ட இப்படி சொம்பு அடிச்சா, அடிக்கிற சொம்பை பிடிங்கி மண்டையிலே ரெண்டு போடுவாங்க.<br />
<br />
தற்குறிப்பேற்ற அணியும் கிட்டத்தட்ட இதே வகைதான்(?), சாதாரணமா நடக்கிற விஷயத்தை மசாலா தடவி, ரெண்டு குத்து பாட்டு போட்டு எழுதிட்டா அதுவே தற்குறிப்பேற்ற(?) அணியாகி விடுகிறது, அந்த வகையிலே பார்த்தா எழுத்தார்களின் எழுத்துகள் எல்லாமே தற்குறிப்பேற்ற அணி தான், சாயங்காலம் ஆறு மணி ஆச்சின்னா யாரு எந்த வழி போனாலும் சூரியன் மறைந்து விடும். மாசத்திலே வளர் பிறையும், தேய் பிறையும் வருவது வழக்கம்.<br />
<br />
இந்த சாதாரண நிகழ்வை கவிஜர் என்ன சொல்லுவாருன்னா உன்னைய காணாம நான் மட்டுமல்ல நிலவும் தேயுதுன்னு வீட்டிலே இறைச்சி பிரியாணியும், மீன் வருவலும் சாப்பிட்டிட்டு சொல்லுவாரு,அவுக ஆள் வெளியே வரலைன்னா உலகமே இருட்டு ஆகிடும்,எனக்காக இல்ல, இந்த உலகத்துக்காகவாது நீ குளிக்காம வெளியே வா, இப்படி பல பொய் பாட்டுகளைப் பாடி, போட்ட துண்டை உறுதியாக்கி கொள்வாரு. இதையே சாதாரண வாழ்க்கையிலே ஒப்பிட்டு பார்த்தோமானால் நல்ல நேரம் காலை ஒன்பதிலே இருந்து பத்து மணி வரைக்கும் நாள் காட்டியிலே எழுதியதை பார்த்துவிட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் சகுனம் சரி இல்லை". என்று சொல்லி வீட்டுக்குள்ளே சென்று நல்ல நேரம் முடியும் வரை வீட்டுக்குள்ளே இருக்கிறோம்(?) .<br />
<br />
இலக்கியத்திலே இருந்தும் ஒரு உதாரணம் சொல்லாம விட்டுட்டா நாளைக்கு இலக்கியவாதி பட்டம் கிடைக்காம போய்டும் என்று கொலை வெறியிலே சொல்லிக்கிறேன்.சிலப்பதிகாரத்திலே மாதவியோட குத்தாட்டம் போடப் போய், மஞ்ச துண்டு போட்டு மறுபடி கண்ணகிட்ட சரண் அடைந்து , உள்ளுரிலே பொழைக்க வழி இல்லாம கண்ணகியோட மதுரைக்கு புறப்பட்டு போறார். அவங்க மதுரை மாநகரம் நுழையும் முன்னே காற்றிலே மேலும்,கீழும் ஆடிய கொடி,இவர்களை வர வேண்டாம் என்று சொல்வதைபோல இருந்ததாக இளங்கோவடிகள் சொல்லுகிறார்.இப்ப இதையும் சகுனத்தையும் ஒன்று படுத்திப் பாருங்க, ரெண்டுமே சாதாரண நிகழ்வுதான். .<br />
<br />
ஒரு நாளைக்கு 24 மணி நேரமா இருந்தாலும், இவங்க நல்ல நேரம் ஆரம்பிக்கிறது காலையிலே ஆறு மணியிலே இருந்து, அரை மணி நேரத்துக்கு ஒண்ணுன்னு பிரிச்சி, நாள் காட்டியிலே குறிச்சி வச்சிடுறாங்க.சாதரணமாக இருக்கிற நேரங்களை எல்லாம் நல்ல நேரம், கெட்ட நேரம், கிழக்க சூலம், மேற்கே சூலம்னு சொல்லி வச்சி இருக்காங்க.இதை எல்லாம் படிக்கிறவங்களும் உண்மைன்னு நம்பி,சென்னையிலே இருக்கிறவங்க கிழக்காம போன சகுனம் நல்லா இருக்கும்னுன்னு கள்ளத்தோணி ஏறி இலங்கை வரைக்கு போற அளவுக்கு இருக்கு.இதை எல்லாம் படிச்சி பின்பற்றுகிறவங்க பலன் பெறுறாங்களோ இல்லையோ,நல்ல நேரம்,கெட்ட நேரமுன்னு குறிச்சி, அதை நாள்காட்டியிலே போட்டு விற்கிறவங்க நல்லாவே கல்லா கட்டுறாங்க.<br />
<br />
நல்ல நேரம், கெட்ட நேரம் இல்லன்னா பூமியே சுத்தாது என்ற அளவுக்கு ஆகி இருக்கு, இதையே நம்பி நம்ம ஆளுங்க பிறக்கும் குழந்தை சி செக்சன்னு(அதான் வயத்தை அறுத்து வெளியே எடுக்கிறது) தெரிஞ்ச உடனே, நல்ல நேரம் குறித்து கொடுக்கிற சாமியிடம் ஒரு நேரத்தை குறித்து கொடுக்க சொல்லி, இந்த நேரம், இந்த நிமிசத்திலே கத்திய வையுங்கன்னு மருத்துவரிடம் சொல்லிடுறாங்க, இப்படி நல்ல நேரத்திலே பிறந்தவங்க எல்லாம் ஒரு சி(கோடி), ரெண்டு சி ன்னு சம்பளம் வாங்குவாங்க, மத்தவங்க எல்லாம் ஒரு சென்ட் ரெண்டு சென்ட்கு சிங்கி அடிச்சிகிட்டு தெருவிலே இருப்பார்களாம்(?).இந்த நல்ல நேர ஆர்வத்திலே செத்தாலும் நல்ல நேரத்திலே சாவனும்னு நினைக்கிற அளவுக்கு ஆகிபோச்சி.<br />
<br />
தற்குறிப்பேற்ற அணியிலே பார்த்த எல்லா உதாரணங்களும் சகுனத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது(?),ஆகவே சகுனம்,நல்ல நேரம்,கெட்ட நேரம் என்று சொல்வதெல்லாம் தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லி வாய்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com45tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-83345505712474172972010-11-21T23:03:00.000-05:002010-11-21T23:03:49.586-05:00புதுமைப்பெண்<div style="text-align: center;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><i></i></span></div><div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><i>பொறுப்பு அறிவித்தல்:</i></span></div><div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><i>இடுகையிலே உள்ள சம்பவங்களும், நிகழ்வுகளும் உலகமஹா மொக்கை கற்பனையே என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன், பூலோகம், சந்திர மண்டலம், மற்றும் செவ்வாய் கிரகத்திலே உள்ள யாரையும் குறிப்பிடுவன இல்லை</i></span></div><br />
<div style="text-align: center;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><i><br />
</i></span></div><div style="text-align: center;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><i><b>அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு </b></i></span></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div style="text-align: center;"><i><b>என்று கேட்டதால் </b></i></div></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div style="text-align: center;"><i><b>முதுநிலை பட்டம் படித்து </b></i></div></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div style="text-align: center;"><i><b>வாயு அடுப்பிலே சமைத்து </b></i></div></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div style="text-align: center;"><i><b>கட்டு கட்டாக அடுக்கி </b></i></div></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div style="text-align: center;"><i><b>இணையத்திலே இணைத்து </b></i></div></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div style="text-align: center;"><i><b>பொங்கி பலரும் பயன் பெற</b></i></div></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div style="text-align: center;"><i><b>பெருமை சேர்க்கிறேன் பெண்மைக்கு </b></i></div></div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div>இப்படி ஒரு கவுஜையை நான் எழுதி இருந்தா எனக்கு இன்னையிலே இருந்து வீட்டு சாப்பாடு கிடைக்காது, இந்த கவுஜையை எழுதிய புண்ணியாவான் யாரோன்னு நினைச்சி இந்த கதையின் நாயகி கொலைவெறி கோபத்திலே இருந்தபோது, அவளுடைய உரையாடியிலே இருந்து அழைப்பு வருகிறது.</div><div><div><br />
</div><div>"ஹலோ எப்படி இருக்கீங்க" சத்தத்தை கேட்டவுடனே பதிலுக்கு "இருக்கேன்"</div><div><br />
</div><div>"என்ன ஆங்கிரியா, நீங்க செஞ்ச ஜாங்கிரி சாப்பிட்டீங்களா ?"</div></div></div><div><br />
<br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"நீ வேறப்பா ஒருத்தன் எழுதின கவுஜையப் பார்த்து கொலைவெறியிலே இருக்கேன், நீ வேற ஜாங்கிரி பண்ணச்சொல்லுற?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"ஜாங்கிரின்னதும் எனக்கு ஞாபகம் வந்திரிச்சி, நீங்க போன வாரம் போட்ட சமையல் குறிப்பு படம் சரியா இல்லையே,செய்ய ட்ரை பண்ணி சோ சோகமாகிட்டேன்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
"என்ன அப்படியா, இப்ப நீ ஏதும் வேலையிலே பிஸியா?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"எப்போதுமே வெட்டிதான்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"அப்படியே வெப் காம் ஆன் பண்ணு, நான் உனக்கு லைவ் டெமோ காட்டுறேன்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"ஒ.. ரியலியாவா , நீங்க சோ ஸ்வீட்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"கொஞ்சம் இரு உயர்லெஸ் கன்னேட் பண்ணுறேன், என்கிட்டே ஐ பைவ் பிராசசர் வச்சி இருக்கேன், ஹை ஸ்பீட் நெட் இருக்கு"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"இருக்கட்டும், அடுப்ப ஆன் பண்ணுங்க"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"இதோ ஒரு நொடியிலே பண்ணுறேன்"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><br />
</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">"சமையல் குறிப்பு ஐட்டம்ஸ் ரெடியா?"</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><div><br />
</div><div>"இருக்கு, நீங்க டெமோக்கு ரெடியா?"</div><div><br />
</div><div>"ஹே முக்கியாமா கருவேப்பிலை, நல்லா பச்சையா இருக்கணும்" </div><div><br />
</div><div>"வேப்பிலை மாதிரி நல்லாவே பச்சையா இருக்கு?"</div><div><br />
</div><div>"சரி, ஒரு நிமிஷம் வெயிட், நானும் எல்லாத்தையும் வெட்டிக்கிறேன், நீயும் வெட்டு"</div><div><br />
</div><div>சரி (அடுத்த ஐந்து நிமிடத்திலே)<br />
<div><br />
</div><div>"வெப்காம்ல கிட்சன் சட்டி தெரியுதா?"</div><div><br />
</div><div>"சரியா தெரியலையே"</div><div><br />
</div><div>"என்ன செய்ய என் வீட்டிலே டூ மெகா பிக்சல்ஸ் தான் இருக்கு, அதான் கொஞ்சம் மங்கலாவே தெரியும், எதுக்கும் நீ உன்னோட பவர் கிளாஸ் போடு, நல்லா தெரியும்"</div></div><div><br />
</div><div>"ஓகே.. ஓகே.. இப்ப கொஞ்சம் நல்லா தெரியுது"<br />
<div><br />
</div><div>"இரு அடுப்புக்கு உள்ளே கணனியை எடுத்திட்டு போறேன்" </div><div><br />
</div><div>"இது ஒன்னும் லப்டாப் பொறியல் இல்லையே ?"</div><div><br />
</div><div>"இல்லப்பா, இன் பில்ட் வெப் காம், அதான் உள்ளே எடுத்திட்டு போறேன்"</div><div><br />
</div><div>"எண்ணெய் கொதிக்கிறது தெரியுதா?"</div><div><br />
</div><div>"ஒ.. நல்லா தெரியுது"</div><div><br />
</div><div>"இப்ப வெட்டி வச்ச வெங்காயம் போடு"</div><div><br />
</div><div>"போட்டுட்டேன்" </div><div><br />
</div><div>"கொஞ்சம் நேரம் நல்லா கிளறி விடு"</div></div><div><br />
</div><div><div>"உங்க சேவையோ சேவை..வாழ்க சமையல் கலை, வளர்க உங்க குறிப்புகள்" </div><div><br />
</div><div>"கூல் .. கூல் .. அடுப்பு சூடா இருக்கு, வெங்காயம் அங்க எப்படி இருக்கு?"</div><div><br />
</div><div>"தக தகன்னு இருக்கு"</div><div><br />
</div><div>"உங்க அடுப்பு ரெம்ப ஸ்பீட் போல இருக்கே"</div><div><br />
</div><div>"ஆமா நாலு அடுப்பு ஒரே செட்டுல, முன்னால உள்ள ரெண்டு அடுப்பு முன்ணூறு டிகிரி, பின்னாடி உள்ளது ஐணூறு டிகிரி"</div><div><br />
</div><div>"தட் இஸ் ஆவ்சம், சரி இப்ப கருவேப்பிலைய போடு"</div><div><br />
</div><div>"போட்டுட்டேன், கமகம ஸ்மெல்.. டூ குட்"</div><div><br />
</div><div>"எல்லாம் என்னோட கை குறிப்பு பக்குவம் தான்"</div><div><br />
</div><div>"நல்ல பாரு என் எண்ணெய் சட்டியை,இதே நிறத்திலே அங்க இருக்கா?"</div><div><br />
</div><div>"அல்மோஸ்ட் இருக்கு"</div><div><br />
</div><div>"சரி அடுப்பை அமைத்து அம்புட்டுதான்"</div><div><br />
</div><div>"சோ நைஸ், இதுக்கு என்ன தலைப்புப்பா கொடுத்தீங்க?"</div><div><br />
</div><div>"தாளிப்பது எப்படி"</div><div><br />
</div><div>"அருமையான தலைப்பு" </div><div><br />
</div><div>"இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன், நீங்க போன போன வாரம் போட்ட, ரொட்டிக்கு சீனி தக்காளி தொக்கு தடவுவது எப்படி ரெம்ப நல்லா இருந்தது, தலைப்புக்கு ஹட்ஸ் ஆப், தமிழ்ல வொன்டர் புல்லா பேரு வைக்கீங்க"</div><div><br />
</div><div>"அது ப்ளட்ல இருக்கு" </div><div><br />
</div><div>"இன்னொரு வாசகர் விண்ணப்பம்"</div><div><br />
</div><div>"நோ பீல், நோ ஷை, சொல்லுப்பா?"</div><div><br />
</div><div>"அவிச்ச முட்டைக்கு தோல் எடுப்பது எப்படின்னு விரைவிலே குறிப்பு எழுதனும்முன்னு கேட்டுகிறேன்"</div><div><br />
</div><div>"அதை எழுதனுமுன்னு நினைச்சி இருந்தப்ப ஒரு கவுஜ கண்ணிலே பட்டு மூடு போச்சி"</div><div><br />
</div><div>"அப்படி என்ன தான் எழுதி இருக்கான்"</div><div><br />
</div><div>"நாம எல்லாம் பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு இன்னும் சமையல் கலையத்தான் பிரபலப் படுத்துறோம்னு சொல்லி இருக்கான்" </div><div><br />
</div><div>"என்ன சொன்னீங்க?"</div><div><br />
</div><div>"நாம இன்னும் சமயகட்டை விட்டு வெளியே வரலையாம்"</div><div><br />
</div><div>"அவனை எல்லாம் பூரி கட்டையால ரெண்டு தட்டு தட்டனும்"</div><div><br />
</div></div><div><div>"நானும் யாரு என்னன்னு விசாரிச்சிகிட்டு இருக்கேன், தகவல் கிடைச்சா சொல்லி அனுப்புறேன்"</div><div><br />
</div><div>நீங்களும் தகவல் கிடைச்சா கொஞ்சம் சொல்லுவீங்களா?</div></div></div></div>நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com30