Sunday, August 14, 2011

சுதந்திர தின சிறப்பு செய்தி


நண்பர்களே இந்த இனிய இரவிலே பொதுஜன்மான நான் பொதுவான அறிக்கைய ஓசியிலே கூகிள் ஆண்டவர் வழியாக நள்ளிரவிலே சொல்லகடமைப் பட்டுள்ளேன். இரவு செய்திக்கு பின்னால் இந்தியா இரவிலே சுதந்திரம் அடைந்தது என்பதை தவிர வேறு ஏதும் இல்லை. சுதந்திரம் என்பது சுசியம் போல சாப்பிட சாப்பிட இனிப்பாக இருக்கும் என்று சுசியம் பெருமாள் கூறியுள்ளார். இந்த பொன்னான நாளிலே தலைவர்கள் மட்டுமே யாரோ எழுதிகொடுத்ததை மனப்பாடம் பண்ணாமல் வரி வரியாக படித்து அறிக்கை விட முடியும் என்ற ௬ற்றை பொய்யாக்கவே இந்த சொந்த சரக்கு அறிக்கை.

இலக்கியம் கெட்ட கேட்டுக்கு படிப்பா, இந்தியா கெட்ட கேட்டுக்கு சுதந்திரமா என்று பக்கத்து தெரு பாயா விற்கும் ஆயா கேட்டுகொண்டிருந்தாள். தொலைகாட்சிகளிலே சினிமா நடிகைகளின் கன்னிபேட்டிக்கும், கவர்ச்சி உடைக்கும் இடையிலே உலவி வருகிறது இந்த சுதந்திரம்.நானும் இத்தகைய பேட்டிகளை கண்ணை மூடாமல் பார்த்து இருக்கேன்.இப்ப ஆலமரத்துக்கு கீழே சொம்பை வச்சி நாட்டாமை பண்ணுவதாலே இந்த விளிம்பு நிலை எதிப்பை கடைநிலையிலே இருந்து காட்டவில்லை என்பதை சொல்லிகொள்கிறேன். வில்லங்கம் வரும்போது வில்லனாக இருக்க வேண்டும், சத்தம் இல்லாதபோது சூப் சாப்பிட வேண்டும் என்ற ரஷ்ய பழமொழிக்கு ஏற்ப நாமும் நடந்தால் நாடும் வீடும் எருக்கம் செடிபோல தண்ணி ஊத்தாமலே செழித்து வளரும்.

அறிக்கை விடும் ௬ட்டமும்,அதைப் படிக்கும் ௬ட்டமும் அதிகம் இருப்பதினாலே வெத்திலை போடும் வாயும் அறிக்கைவிடுகிறது இந்தியாவுக்கு வாஸ்து சரீல்லை என்று, வீட்டுக்கு வாஸ்து சரீல்லை என்றால் இடித்துகட்டலாம்,நாட்டுக்கே வாஸ்து சரில்லை என்றால் இடித்தா கட்டமுடியும் என்று பகுத்தறிவு பகலவன் பல்குடிக்கி கேட்கிறார்.சுதந்திரம் என்பது சுதந்திரமாக போகவும் வரவும் வேண்டும். சுதந்திர தினம் என்று குண்டு துளைக்காத மேடையைப் போட்டு கம்பிகளுக்கு நடுவிலே இருந்து அச்சா அச்ச்சாசோ என்று பேசுவது சிறை அதிகாரி கைதிகளிடம் பேசுவது போல் இல்லை, ஒரு கைதியின் பேச்சை கேட்க நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது போல இருக்கிறது.

எவ்வளவு நாளைக்குதான் இந்த புளிப்பு மிட்டாயை வாங்கி சாப்பிட சீருடையில் செல்லவேண்டுமென மாணவரணி கேட்கிறது, மாணவரணியாக இருந்தாலும் மகளிர் அணியாக இருந்தாலும் பதில் ரெண்டுதான்தான் பல் இருக்கவன் பக்கடா திங்கான் மற்றும் நோகாம நொங்கு திங்க முடியாது.

குத்தூசி முதல் கோணிப்பை வரை ஊழல்களை வைத்துகொண்டு சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடையிலே இருந்து கொண்டு பாரத் மாதாவுக்கு ஜெ  என்று லா லா பாடிக்கொண்டு இருந்தால் லாலி பாப் ௬ட கிடைக்காது.சுதந்திர தேவி சிலையை தற்காலிகமாக மூடிவிட்டதைப் போல சுதந்திரத்தையும் தற்காலிகமாக மூடிவிட்டு இன்றைய தினத்திலே ஆகும் செலவை ஊழலிலே முதலீடு செய்தால் நாடு இன்னும் பத்துவருசத்திலே வல்லரசாகும் என்பதை தெரிவித்து கொண்டு வாய்பளித்த அனைவருக்கும் நன்றி ௬றி விடைபெறுகிறேன்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு தேசியார்வம் பொங்கிவழிந்தால் அருகிலே உள்ள கொடி ஏற்றும் மேடையை அணுகவும்.