Monday, March 30, 2009

ஐ.டி யின் அவலம் - அழிச்சாட்டியம்

முதல் பாகம் வேணுமுனா இங்கே

நீ கிழிக்க கிழிப்புக்கு இதுவே போதும்னா அப்பிடியே கீழே
************************************************************
ரெண்டு நாள் கழித்து மின் அஞ்சல் வந்தது, தொலைபேசியிலே தொலை நேர்முகத்தேர்வுக்கு நாள் கேட்டு பதில் வந்தது,


மச்சான் பதில் போட்டாங்கடா!!!

நான் தான் சொன்னேன் இல்லை, அவங்களும் வேலை செய்யுற மாதிரி நடிக்கவேண்டாமா, அதுதான் கொஞ்சம் தாமதமா அனுப்பி இருப்பாங்க.

நாளை மறுநாள் ஆறு மணிக்கு மேல ௬ப்பிடுங்கன்னு பதில் போடு

அப்படியே செய்து விட்டு, "மச்சான் இன்டெர்விவுக்கு எப்படி தயார் பண்ணுவது"

"அதோ அந்த புத்தகத்தை எடுத்து படி உனக்கு தெரியும்"

"இவ்வளவு பெரிய புத்தகமா, இதை படிச்சி முடிக்க பத்து வருஷம் ஆகுமடா அதும்இல்லாம இப்ப ஒரு வாரமாத்தான் கம்ப்யூட்டர் பொட்டிய பாத்து இருக்கேன், நான்இப்பத்தாம் அதை எப்படி ஆன் பண்ணுறதுன்னு கத்து இருக்கேன்.எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"

௬ச்சப்படமா சொல்லு

எப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு

என்னது..ஆள் மாறாட்டமா?!!!!.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது

இது வரைக்கும் சொன்ன பொய்க்கு
மாட்டுனா 10 வருஷம் உள்ளதான், முழுக்கநினைச்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு

சரி, எதோ நீ சொல்லுறன்னு பண்ணுறன், உனக்காக என் அமெரிக்கன் நடைபேச்சை கொஞ்சம் மாத்தி பேசுறேன்

இன்டெர்விவு அன்னைக்கு ஒரு இருபது பேப்பர் கொண்டு வந்தான், என்னை அந்தபேப்பர்
எல்லாம் எடுத்து தயாரா வைக்க சொன்னான், அவங்க சொன்னநேரத்துக்கு போன் வந்தது அவங்க கிட்ட என் முழு விபரமும் சொல்லி,கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கு ஒரு நம்பர் சொல்லுவான், நான்அந்த பக்கத்தை எடுத்து காட்டுவேன், அதை அப்படியே படிச்சி பதிலாசொல்லுவான். அப்படியே அவங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில்சொல்லிட்டான்.அவங்களும் முடிச்ச உடனே வழக்கம் போல "எங்க ஹெச்.ஆர்சீக்கிரம் ௬ப்பிடுவாங்கனு சொல்லிட்டு வச்சி புட்டாரு

எல்லாம் முடிந்த உடனே நான் மச்சான் நீ பிட்டு அடிக்கிற பழக்கத்தை விடவேஇல்லையா!

"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "

அடுத்த நாளில் மெயிலில் வேலைக்கு சேர வேண்டிய உறுதி சான்றிதல் அனுப்பிஇன்னும் ஒரு வாரத்திலே வந்து சேரும் படியும், நான் முன்பு சம்பாத்திததை விட
500 மடங்கு அதிகம் சம்பளம் கிடைத்தது


வேலைக்கு சேரும் நாளில் மெயில்லில் வந்த
உறுதி சான்றிதழைஎடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றேன், அதிலே தொடர்பு கொள்ளவேண்டிய பெண்ணை வரவேற்ப்பு அறையிலே சொன்னதும் என்னைஅமரச்சொன்னர்கள். கொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். அவள்என் பெயர் சொல்லி அழைத்தாள், நான் இன்னும் அவள் அழகை ரசித்து முடிக்காதநிலையிலே அவள் பேசிய ஏதும் என் காதிலே விழவில்லை.

மீண்டும் மிஸ்டர் நாசாரேயா..நாசாரேயா

வடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள், அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்,அதற்குள் நண்பன்சொல்லிய குல தெய்வம் ஞாபகம் வரவும் ரசிப்பை நிறுத்தினேன், அவளிடம்என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவள் என்னை அழைத்தாலே அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன். இவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.அடிக்கடி குலதெய்வம் கண்ணுக்கு வரவே என் மனசுலேஉள் ஒதுக்கீடுக்கு வழி இருந்தும்
வெளி நடப்பு செய்தேன்.

அலுவலக விதி முறைகள் அடங்கிய நிரல் ஒன்றை குடுத்து படிச்சிட்டுகையெழுத்து போடுங்க என்று சொன்னாள். அதிலே இருந்த இங்கிலிபிசு ஏதும்புரியாம ஆர்வமா எழுத்து ௬ட்டி படிச்சேன், ஒரு வரி படிச்சி முடிக்கும் முன்னாடிஅஞ்சு நிமிஷம் ஆகிப்போச்சு.இதுக்கு மேலும் தாமதிச்சா உண்மை தெரிஞ்சுபோகுமுன்னு கைஎழுத்து போட்டு கொடுத்தேன், அவள் என்னை நேராகப்ராஜெக்ட் டமாஜரிடம் அறிமுகபடுத்து விட்டு சென்றாள். அவள் போனாலும்அவள் மனுசுல ஏற்படுத்திய அலை ஓய அரை மணி நேரம் ஆச்சி .பல் இருக்கவன்பக்கடா தின்பான்னு நான் என்னை சாந்தப்படுத்தி அமைதியானேன்

அடுத்த அரை மணி நேரத்திலே டமஜெர் அழைத்தார், உங்களுக்கு html தெரியுமா?

எனக்கு டமில் மட்டும்தான் தெரியுமுனா சொல்ல முடியும், என்ன கேட்டாலும்தெரியுமுன்னு சொல்லுன்னு நண்பன் சொன்னதாலே ஆமா என தலைஆட்டினேன்


ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பொட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு. என் அலைபேசி ஒலித்தது

எதிர் முனையில் நண்பன் எடுத்ததும் "மச்சான் முதல் நாள் வேலை எப்படி?"

"ஹும்..எதோ போகுது, நான் அட்டை பெட்டியை எடுத்துகிட்டு தையல் கடைக்குபட்டன் வாங்க போறேன்"

"என்னடா சொல்லுறா?"

"ஆமா மச்சான் கேமேல் தெரியுமான்னு கேட்டாரு டமஜெரு, ஆமான்னுசொன்னவுடனே டேபிள் போட்டு ரெண்டு பெட்டி வச்சி பட்டன் போடசொல்லிட்டாரு, ஒட்டகம் தெரிஞ்சா டேபிள் லும்,பெட்டியும் பட்டனும்போடனுமா? , இங்க ஒட்டகப்பால் காச்சுவாங்கனு சொல்லவே இல்லை

"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொன்னது html , நான் உன் மெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு"

போட்டியை கீழே போட்டுவிட்டு அலுவலகம் சென்று நண்பன் அனுப்பியதுஅவரிடம் காட்டினேன்.

அவரு "ரெம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்" வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.ஒரு வழியாக அன்றை பொழுது கழிந்தது, அடித்து பிடித்துவீட்டுக்கு ஓடினேன்.என் நண்பன் ஏற்கனவே வீட்டிருக்கு பாட்டிலோடு வந்துஇருந்தான்,நான் கையில் வைத்து இருந்த சாப்பாடு முடிச்சை பார்த்து

"என்ன மச்சான் சாப்பாடு கட்டி கொண்டு வந்து இருக்கே"

கொஞ்சம் பசியா இருந்தது,அதான் வாங்கிட்டு வந்தேன்.

என்னது

இட்லி

நீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் .டி நாகரிகம்


நாம்ம அரசாங்க ஆஸ்பத்திரியிலே வாங்கி குப்பையிலே போடுதை பொட்டியிலே வச்சி கொடுகிறதையும், இந்த பூச்சி கொல்லி மருந்தையும் குடிகிறதுதான் நாகரிகமா?

ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு

இவ்வளவு இருக்கா, இதையே ஒரு பாடமா வச்சா ௬ட தேவலாமுனு தோனுது.

தண்ணியை போட்டுட்டு தூங்கினாலும் நாளைக்கு நடக்க போறதைநினைத்து வயத்தை கலக்கி கொண்டு இருந்தது, நான் எதிரி பார்த்த மாதிரியே
மறுநாளும்

(நாளையும் வரும்)


69 கருத்துக்கள்:

நட்புடன் ஜமால் said...

\\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "\


தத்துவும்

2 இலச்சத்தி 30 ஆயிரத்தி ...

நட்புடன் ஜமால் said...

\\அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன்\\

கிளப்பள்ஸ் ...

நட்புடன் ஜமால் said...

\\ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு\\

ஹா ஹா ஹா

இப்படி ஒரு html கொடுத்து இருந்தீங்கன்னா நீங்க டேமேஜர் ஆயிருக்களாம்

ஆமா! அவரு புட்டுக்கிட்டு இருப்பாரே

நட்புடன் ஜமால் said...

\\நீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்
\\

யப்பா!

ஏன்ப்பா!

இப்படி டேமேஜ் பன்னுதிய!

ஆனாலும் இதெல்லாம் உண்மையாவும் இருக்களாம்

ஹூம் என்ன செய்ய இந்த பொட்டி தட்ற மக்கள் பன்ற அழுச்சாட்டியம் இருக்கே ...

பழமைபேசி said...

:-0)

யாத்ரீகன் said...

:-)))))))))))

குடுகுடுப்பை said...

superb man. you are doing a good job

Prabhu said...

\\அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன்\\
அழகு

\\ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு\\
உங்கள மாதிரி ஆளுங்கள தான் அமெரிக்காவ அழிக்கும் ஆயுதமா பயன்படுத்த தேடிட்டிருக்காங்க!

அத்திரி said...

//ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//


அண்ணாச்சி ஊர்ல எப்படி இருந்தீங்க?/

புதியவன் said...

//என்னது..ஆள் மாறாட்டமா?!!!!.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது//

இது கலக்கல் காமெடி...

Anonymous said...

nalla irukku...oru comedy yana mudivu irundha...romba nalla irukkum....

ஆதவா said...

ஹாஹா.... வந்தாச்சா.....

அடுத்து என்ன,,, அடுத்து என்ன....... எதிர்பார்க்க வைக்கிற பதிவு!!!

இப்படி திடிர் திடீர்னு தொடரும் போட்டா நல்லாவா இருக்கு!!!!! முழுசா போடுங்கப்பூ!!

சந்தனமுல்லை said...

:-))
தொடர் ஜாலியா காமெடியா போகுது!
இன்னும் எத்தனை பாகம் இருக்கு??

Unknown said...

:)))))))Mmmm apparam?? ;))

ஜியா said...

:))

அனுபவம்னு தப்பா டேக் இருக்கே?? ;))

ஜியா said...

ஐ.பி.எம் ல இருந்த ஒருத்தர் இப்படித்தான் எதையோ ஏடா கூடமா எழுதி அவர கம்பெனிய விட்டு தூக்கிட்டாங்களாம்... ஆமா... நீங்க எந்த கம்பெனி?? ;))

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க நடத்துங்க நண்பா.. நக்கல் நையாண்டின்னு பிரிச்சு மேயுறீங்க.. வாழ்த்துக்கள்..

Poornima Saravana kumar said...

நான் தமிழிஷ்ல ஓட்டெல்லாம் சரியா போட்டுட்டேனே!!

Poornima Saravana kumar said...

\\அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன்\

ஹி ஹி

Anonymous said...

அத்திரி said...
//ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//


அண்ணாச்சி ஊர்ல எப்படி இருந்தீங்க?/
//
அத்திரி நண்பா நீங்க எப்படி இருந்தீங்களோ அப்படி? ஹி...ஹி....ஹி. அய்யோ...அய்யோ.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

வேத்தியன் said...

சூப்பர்ங்க..
எப்பிடி இப்பிடில்லாம் ???
நல்லா இருக்கு...

அப்துல்மாலிக் said...

தல எப்போதும்போல கலக்கல் நையாண்டி, குசும்பு, ஆள்மாறாட்டம் எல்லாம் கலந்து தந்திருக்கீங்க‌

அப்துல்மாலிக் said...

//இவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.//

1000 மடங்கு சேலரி வாங்குறதா கேள்வி

புல்லட் said...

என்ன கொடுமை இது? ஏங்க உண்மையா நடந்தத சொல்லுறீங்களா? இல்லா ட்டி காதில பூ வைக்கிறிங்களா? காமெடியா இருந்தாலும் கொஞ்சங் கூட நம்பும் படியா இல்ல?

Anonymous said...

Exactly, same story as mine.
Hahahaha. :-)
Excellent.

Suresh said...

ha ha
//"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொன்னது html , நான் ஒருமெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு//

super appu nangalum appdi than

Suresh said...

\\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "\

kalakuringa ponga

அ.மு.செய்யது said...

//"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "//

தாறுமாறு !!!!

அ.மு.செய்யது said...

//கொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். /

.................முடியல...

அ.மு.செய்யது said...

ஐடி ஊழியர்களின் அழிச்சாட்டியத்தை 'தெளிவா' சொல்லியிருக்கீங்க..

சூப்பர் நாசாரேயா !!!!!

Rajes kannan said...

//பல் இருக்கவன்பக்கடா தின்பான்//

சின்னப் பையன் said...

அட்டகாசம். பின்றீங்க தல.
:-)))))))))))))))

சம்பத் said...

///வேலைக்கு சேரும் நாளில் மெயில்லில் வந்த உறுதி சான்றிதழைஎடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றேன், அதிலே தொடர்பு கொள்ளவேண்டிய பெண்ணை வரவேற்ப்பு அறையிலே சொன்னதும் என்னைஅமரச்சொன்னர்கள். ///

ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்...
ஆமாம்....அந்த பெண்ணிடம் இன்னும் தொடர்பு {?} இருக்குங்களா? :-)

கிரி said...

நசரேயன் ஐ டிய பிரிச்சு மேஞ்சுட்டீங்க :-))))))

ராஜ நடராஜன் said...

ஓ!பாகம் இரண்டா?நான் தலைப்பை பார்த்துவிட்டு படிச்சிட்டோமேன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.

அழிச்சாட்டிய சுவராசியங்களுக்கு தாண்டுகிறேன் இனி...

ராஜ நடராஜன் said...

//எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"

௬ச்சப்படமா சொல்லு

எப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு//

இதுக்கு மேல தொடற முடியல சாமி:)

ராஜ நடராஜன் said...

கலக்கோ கலக்கல் எழுத்து.ரசித்தேன்:)

RAMYA said...

//
மச்சான் பதில் போட்டாங்கடா!!!
//

மச்சானை பின்னிட்டாங்களாம் அது தெரியாதா உங்களுக்கு :))

RAMYA said...

//
நான் தான் சொன்னேன் இல்லை, அவங்களும் வேலை செய்யுற மாதிரி நடிக்கவேண்டாமா, அதுதான் கொஞ்சம் தாமதமா அனுப்பி இருப்பாங்க
//

கண்டிப்பா கவனிக்கப்பட வேடியவர்தான் :))

RAMYA said...

//
"இவ்வளவு பெரிய புத்தகமா, இதை படிச்சி முடிக்க பத்து வருஷம் ஆகுமடா அதும்இல்லாம இப்ப ஒரு வாரமாத்தான் கம்ப்யூட்டர் பொட்டிய பாத்து இருக்கேன், நான்இப்பத்தாம் அதை எப்படி ஆன் பண்ணுறதுன்னு கத்து இருக்கேன்.எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"
//

என்ன தைரியம் இருந்தா வேலைக்கு வந்திருப்பாரு நசரேயன் :))

RAMYA said...

//
எப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு

என்னது..ஆள் மாறாட்டமா?!!!!.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது
//

எப்படி செய்ததுதான் டேலேபோனிக் interview பேசறீங்களா?

புத்தகம் பார்த்து பதில் சொல்லுவாங்கன்னு தெரியும்.

ஆனா ஆளையே மாத்துவாங்கன்னு தெரியாது சாமி :))

RAMYA said...

//
இது வரைக்கும் சொன்ன பொய்க்கு மாட்டுனா 10 வருஷம் உள்ளதான், முழுக்கநினைச்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு
//

அது முழுக்கநினைச்சதுக்கு இல்லே உங்க கனவு தப்பு

முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு :))

எங்கே சொல்லுங்க :)

RAMYA said...

//
இன்டெர்விவு அன்னைக்கு ஒரு இருபது பேப்பர் கொண்டு வந்தான், என்னை அந்தபேப்பர் எல்லாம் எடுத்து தயாரா வைக்க சொன்னான், அவங்க சொன்னநேரத்துக்கு போன் வந்தது அவங்க கிட்ட என் முழு விபரமும் சொல்லி,கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கு ஒரு நம்பர் சொல்லுவான், நான்அந்த பக்கத்தை எடுத்து காட்டுவேன், அதை அப்படியே படிச்சி பதிலாசொல்லுவான்.
//

இதைதான் நான் முன்னமே சொன்னேன் நீங்க யாரும் நம்பலை :))

இப்ப சரியா போச்சா ??

RAMYA said...

//
எல்லாம் முடிந்த உடனே நான் மச்சான் நீ பிட்டு அடிக்கிற பழக்கத்தை விடவேஇல்லையா!

"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "
//

Super, தத்துவமும் :))

RAMYA said...

//
அடுத்த நாளில் மெயிலில் வேலைக்கு சேர வேண்டிய உறுதி சான்றிதல் அனுப்பிஇன்னும் ஒரு வாரத்திலே வந்து சேரும் படியும், நான் முன்பு சம்பாத்திததை விட 500 மடங்கு அதிகம் சம்பளம் கிடைத்தது
//

சரி எப்போ treat?

RAMYA said...

//
கொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். அவள்என் பெயர் சொல்லி அழைத்தாள், நான் இன்னும் அவள் அழகை ரசித்து முடிக்காதநிலையிலே அவள் பேசிய ஏதும் என் காதிலே விழவில்லை.
//

அது சரி, ரசனை அருமையா இருக்கு போங்க.

முடியலை காது வலிக்குது, கண்ணு தெரியலை :))

RAMYA said...

//
மீண்டும் மிஸ்டர் நாசாரேயா..நாசாரேயா
//

ஏன்னா பெரிது நாசரோயா ???

பேரு மாத்திடீங்களா? சொல்லவே இல்லை :))

RAMYA said...

//
வடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள், அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்,
//

அது சரி, அப்போ வேலை காலியா :))

RAMYA said...

//
அதற்குள் நண்பன்சொல்லிய குல தெய்வம் ஞாபகம் வரவும் ரசிப்பை நிறுத்தினேன்,
//

ஆமா நிறுத்துங்க இல்லேன்னா பொலி போட்டுருவாங்க :)

RAMYA said...

//
அவளிடம்என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவள் என்னை அழைத்தாலே அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன்.
//

இதுதான் பின் தொடருதலா??
அது சரி, ரொம்ப நல்ல இருந்திருக்கும்
நேரிலே பார்த்திருந்தால்??

நாங்க இந்த ஜொள்ளை மிஸ் பண்ணிட்டோமே.

சொக்கா நீ இதெல்லாம் சொல்ல மாட்டியா??

RAMYA said...

//
இவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.அடிக்கடி குலதெய்வம் கண்ணுக்கு வரவே என் மனசுலேஉள் ஒதுக்கீடுக்கு வழி இருந்தும் வெளி நடப்பு செய்தேன்.
//

கொஞ்சம் ஓவரா தெரியுதே :))

RAMYA said...

//
அடுத்த அரை மணி நேரத்திலே டமஜெர் அழைத்தார், உங்களுக்கு html தெரியுமா?

எனக்கு டமில் மட்டும்தான் தெரியுமுனா சொல்ல முடியும், என்ன கேட்டாலும்தெரியுமுன்னு சொல்லுன்னு நண்பன் சொன்னதாலே ஆமா என தலைஆட்டினேன்
//

அட பாவிங்களா, இப்படி எவ்வளவு பேரு :))

RAMYA said...

//
ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பொட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு. என் அலைபேசி ஒலித்தது
//

ஐயோ இதென்னா

இது இவ்வளவு வெவரமா ??

பில்கேட்சுக்கு தெரிஞ்சா :))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA said...

//
"ஹும்..எதோ போகுது, நான் அட்டை பெட்டியை எடுத்துகிட்டு தையல் கடைக்குபட்டன் வாங்க போறேன்
//

மொதல்லே அந்த நண்பனை....

RAMYA said...

//
"ஆமா மச்சான் கேமேல் தெரியுமான்னு கேட்டாரு டமஜெரு, ஆமான்னுசொன்னவுடனே டேபிள் போட்டு ரெண்டு பெட்டி வச்சி பட்டன் போடசொல்லிட்டாரு, ஒட்டகம் தெரிஞ்சா டேபிள் லும்,பெட்டியும் பட்டனும்போடனுமா? , இங்க ஒட்டகப்பால் காச்சுவாங்கனு சொல்லவே இல்லை
//

ஐயோ!! அப்புறம் எப்படி வேலை கிடைச்சுது??

ஆஹா ஆஹா ரெண்டு பேரும் போதும் சாமி :))

RAMYA said...

//
"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொன்னது html , நான் உன் மெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு"
//

நல்ல நண்பன் கிடைச்சு இருக்காரு
Superu .........

malar said...

முன்னால மல்லாக்க படுத்த I.T எல்லாம் இப்பால குப்பற படுதிரிச்சு தெரியும்லா .

காமெடி நல்லா இருந்தது .அடுத்த பதிவு போட்டாச்சா ?

RAMYA said...

//
அவரு "ரெம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்" வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.ஒரு வழியாக அன்றை பொழுது கழிந்தது, அடித்து பிடித்துவீட்டுக்கு ஓடினேன்.என் நண்பன் ஏற்கனவே வீட்டிருக்கு பாட்டிலோடு வந்துஇருந்தான்,நான் கையில் வைத்து இருந்த சாப்பாடு முடிச்சை பார்த்து
//

பாட்டில் பாத்த உடனே சந்தோசம் பீறிட்டு வந்திருக்குமே :)

RAMYA said...

//
நீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்
//

பாவம் நசரேயன் ரொம்ப அப்பாவியா இருந்திருக்காரு :)

RAMYA said...

//
நாம்ம அரசாங்க ஆஸ்பத்திரியிலே வாங்கி குப்பையிலே போடுதை பொட்டியிலே வச்சி கொடுகிறதையும், இந்த பூச்சி கொல்லி மருந்தையும் குடிகிறதுதான் நாகரிகமா?
//

கேள்வி எல்லாம் நல்லாத்தான் இருக்கு.

இது தான் இந்த கனவில் கிடைத்த மெசேஜ் இல்லே ??

ஆ ஆ நான் கண்டுபிடித்து விட்டேன் !

RAMYA said...

//
ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு

இவ்வளவு இருக்கா, இதையே ஒரு பாடமா வச்சா ௬ட தேவலாமுனு தோனுது.

தண்ணியை போட்டுட்டு தூங்கினாலும் நாளைக்கு நடக்க போறதைநினைத்து வயத்தை கலக்கி கொண்டு இருந்தது, நான் எதிரி பார்த்த மாதிரியே மறுநாளும்
//

ரொம்ப அருமையா இருந்திச்சி
சிரிச்சி சிரிச்சி ஒரே அமர்க்களம் நசரேயன் :))

நாளைக்கு எப்போ வரும் உங்க பதிவுன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு.

சரி நாளைக்கு வாரேன் !!

வில்லன் said...

//இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//

எதெல்லாம் நம்மள இளமைய காட்ட..... வேற ஒன்னும் இல்ல.

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

அத்திரி said...
//ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//


அண்ணாச்சி ஊர்ல எப்படி இருந்தீங்க?/


உருல எல்லாம் கோவணம் தான்.........

வில்லன் விமர்சன குழு

malar said...

இதை போல் சம்பவம் உண்மையில் நடந்ததாக என்னிடம் ஒருத்தங்க சொன்னாக

excel லில் ஒரு format போட்டு கொண்டு வா என்று சொன்னதில் காளத்தை கையால் வரைந்து கொண்டு வந்ததாக சொன்னார் .அதே சூப்பர் I.T தான் .

Suresh said...

//"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "//

:-)

//அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்//

இருக்காதா பிண்ண ஹ ஹ :-)

//அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன்.//

வார்த்தை இதுல மட்டும் விளையாடுமே

//ஏதும்புரியாம ஆர்வமா எழுத்து ௬ட்டி படிச்சேன்,//
படிச்சு புரிஞ்சு தான் கைஎழுத்து போடுவிங்களோ

//இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .//
:-) ஹா

//சரியான மாங்க மடையன்//
கூட இருந்த ஃபிர்ண்டுக்கு தெரியாதா

//வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.//
இப்படி தானே பொழ்ப்பே ஓடுது
குகிளும் காப்பி பேஸ்ட்டும் இல்லை என்றால் எல்லரும் வீட்டில் தான்

Suresh said...

//பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்//

நிங்க தான் இப்படி எல்லாம் கிளப்பிவிடுறதா...

Suresh said...

@ நசரேயன்

//வாழ்த்துக்கள்//

நன்றி நாசாரேயா ஹா ஹா :-) உங்களுக்கு இப்படி பொண்ணுங்க குப்பிட்டா மட்டும் தான் புடிக்குமா ?

Unknown said...

" ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!!!


நெம்போ டச் பண்ணிபோட்டீங்கோ தம்பி......!!!! "


கட் ...., டேக் ஓவர் ......!!


ஸ்ஸ்.... அப்பப்பப்பா.... என்ன வேக்காடு .....!!!


யாருப்பா அங்க ..... ஒரு ஆப்பில் ஜூஸ் கொண்டுவா........!!!!!