Wednesday, March 25, 2009

ஐ.டி யின் அவலம்

ஐ.டி கம்பெனி வளாகத்திலே புல் மேயுற ஆடு,மாடு எல்லாம் அமெரிக்கா போகுதுன்னு பி.ஈ முடிச்சுட்டு மொபைல் கம்பெனி டவர் ல தொங்கி கிட்டு இருந்த நான் வேலையை விட்டு புட்டு ஐ.டி யிலே வேலை தேட ஆரம்பித்தேன். என் கல்லூரியிலே படித்த நண்பன் ஐ.டி யிலே கொடி நட்டி கோட்டை கட்டிக்கொண்டு இருந்தவன் எனக்கு உதவி செய்வதாக உத்திரவாதம் கொடுத்தான்.அவனை பார்க்க அவன் தங்கி இருந்த இடத்திற்கு போனேன்.

வா மச்சான் இப்பத்தான் வாரியா?

ஆமா மச்சான், உன்னையை நம்பி இருந்த வேலையும் விட்டுபுட்டேன், வேலை கிடைக்குமா?

"வேலையே செய்யாம, வேலை கிடைக்கிற ஒரே இடம் ஐ.டி டா,நான் உன்னை தயார் படுத்திற அழகிலே ஹெச்.ஆர் எல்லாம் உன்னை தேடி வருவாங்க "

ஹெச்.ஆர் யாருடா?

வடச்மென் கிட்ட ரெசியும் கொடுத்து வேலை வாங்கின உனக்கு ஹெச்.ஆர் பத்தி தெரியாது தான்.உள்நாக்கிலே ஆங்கிலமும் கொஞ்சம் சரக்கும் இருந்தா நீ டெவ்லப்பர், சரக்கே இல்லாம நுனி நாக்கிலே ஆங்கிலம் மட்டுமே இருந்தா அவங்க ஹெச்.ஆர், ஆனா அவங்கதான் கம்பெனி க்கு குல தெய்வம்,அவங்க இல்லன அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடும்"

"சரக்குன்னு சொன்னதும் எனக்கு சரக்கு ஞாபகம் வந்து விட்டது"

"மச்சான் இனிமேல நீ டாஸ்மாக் ல எல்லாம் சரக்கு அடிக்க ௬டாது, இரவு நடன விடுதியிலே தான் குடிக்கணும், அப்பத்தான் விரலுக்கு ஒரு பெண்ணை தேத்த முடியும்."

"எனக்கு இருபது வேண்டாம், ரெண்டு போதும் மச்சான்"

"டேய் நான் கை விரலை சொன்னேன்"

"நான் விஜய் மாதிரி நடனம் ஆடுவேன், அதனாலே காலையும் சேத்துகிட்டேன்"

"அப்ப நான் வார்த்தைய வாபஸ் வாங்கிக்கிறேன்"

"இல்ல மச்சான் நான் அஜித் மாதிரி ஆடிக்கிறேன்"

"மச்சான் ரெசுயும் எப்படி தயார் பண்ணனும்"

"ரெம்ப சுலபமான வேலை அதும், என் ரெசுயும் ல என் பேரை அடிச்சிட்டு உன் பேரை போட வேண்டியத்துதான்"

"முன் அனுபவ சான்றிதழுக்கு என்ன செய்ய?"

"அதிலேயும் என் பேருக்கு பதிலா உன் பேரை போடலாம்.டேமஜர் போன் நம்பர் மட்டும் நாம் டீ கடை நாயர் நம்பர் கொடுப்போம், அவன்கிட்ட சொல்லிவிடுவோம், யாரு இங்கிலீஷ் ல பேசினாலும் பிஸி மட்டும் சொல்லுஅவனே பிஸி யா இருக்கும் பொது, நீ உலக பிஸி யா இருந்து இருப்பாய் ன்னு நினைச்சு குவாங்க"

"மச்சான் நீ தான்டா என் குல தெய்வம், உனக்கு நயன்தாராவுக்கு பக்கத்திலே சிலை வைக்கிறேன் வேலை கிடைச்சா"

"இன்னொரு முக்கியமான விஷயம், நீ இனிமேல தமிழ் நாட்டுலே பிறந்த திரிசா எப்படி மருந்த்துக்கு ௬ட தமிழ் தெரியாத மாதிரி நடிக்கிராங்களோ,அதே மாதிரி நடிக்கணும், ஹாலிவுட் படம் தான் பார்க்கணும், அந்த நடிகையோட முன்னுராவது கல்யாணம், யாரோட எப்ப நடந்தது, இந்த புள்ளி ராஜா விவரம் எல்லாம் தெரியனும்"


"கட்ட வண்டிய கட்டிக்கிட்டு கார கொட்டைக்கைக்கு படம் பார்க்க போன நான் கண்டம் விட்டு கண்டம் பாயனும்னு சொல்லுற"

"ஆமா..ஆமா..வா ரெசுயும் தயார் செய்து அனுப்பலாம்" அடுத்த அரை மணி நேரத்திலே எல்லோருக்கும் அனுப்பி விட்டேன். அடுத்த நாளில் இன்டெர்விவுக்கு வர நாள் கொடுக்கும் படி பதில்கள் வந்து இருந்தது.

"மச்சான் நாலு இடத்திலே இருந்து தேதி கேட்டு பதில் அனுப்பி இருக்காங்க, என்னடா செய்ய?,அடுத்த திங்கள் வாரேன்னு சொல்லவா?"

"மாப்ள நீ என்னைக்கும் இன்டெர்விவுக்கு நேரிலே போக ௬டாது, ப்ராஜெக்ட் ரீலீஸ் இருக்கு, நான் நேரிலே எல்லாம் வரமுடியாதுன்னு சொல்லு, அப்பத்தான் நீ கம்பெனி க்கு மாடு மாதிரி வேலை பார்க்கிறாய், நீ வேலை கொடுத்தா பின்னி படல் எடுப்பன்னு நினைப்பாங்க,பதிலிலே உன் போன் நம்பர் கொடுத்து கால் பண்ண முடியுமான்னு கேளு"

"வேலை வெட்டி இல்லாத எனக்கு இவ்வளவு அலும்பு தேவையா?"

"அலும்பு பண்ணலை உனக்கு உண்மையிலே வேலை தெரியாதுன்னு நினைப்பாங்க, போகிற வழி முக்கியமல்ல, பொய் சேருற இடம் தான் முக்கியம், இதை பத்தி வள்ளுவர் என்ன சொல்லுராருனா?"

"பாவம்டா அவரு, அவரை விட்டுடு"

"சரி..சரி.. போன் நம்பர் கொடுத்து மெயில் அனுப்பு."

அவன் சொன்ன மாதிரி பதில் எழுதி அனுப்பிட்டு இலவு காத்த கிளி மாதிரி காத்து இருந்தேன்.மெயில் அனுப்பி ரெண்டு நாள் ஆச்சி பதில் வரவே இல்லை.

"என்னடா போன் பண்ண சொல்லி அனுப்பி ரெண்டு நாள் ஆச்சி, ஒரு பதிலும் வரலை?"

"எருமை மாதிரி பொறுமையா இருக்கணும் கண்டிப்பா வரும், நான் ஹாலிவூட் படம் பார்க்க போறேன், நீ வாறியா?"

"இல்ல மச்சான், நீ போ வேலை கிடைக்க வரைக்கும் நான் தமிழ் படமே பாத்துக்கிறேன்"
****************************************************************************
பாகம் 2, பாகம் 3

****************************************************************************
(அழிச்சாட்டியம் தொடருமுன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே)


86 கருத்துக்கள்:

Thamiz Priyan said...

kalakkal!

குடுகுடுப்பை said...

தொடரட்டும்

ஆளவந்தான் said...

வந்துட்டேன் :)

Mahesh said...

ம்ம்ம்ம்... நடத்துங்க... நடத்துங்க...

ஆளவந்தான் said...

//
வேலையே செய்யாம, வேலை கிடைக்கிற ஒரே இடம் ஐ.டி டா
//

ம்ம்.. இப்படி கும்மி அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி குடுக்கிற இடமும் தான் :)

Anonymous said...

I couldn't control my laugh. Excellent!!!!

Sakthi

ஆளவந்தான் said...

சுருக்கமா சொன்னா. நமக்கு காசு குடுக்கு ப்ரவுஸிங் செண்டர் :)

யாத்ரீகன் said...

soooooper :-))))))))))))))

சின்னப் பையன் said...

//உள்நாக்கிலே ஆங்கிலமும் கொஞ்சம் சரக்கும் இருந்தா நீ டெவ்லப்பர், சரக்கே இல்லாம நுனி நாக்கிலே ஆங்கிலம் மட்டுமே இருந்தா அவங்க ஹெச்.ஆர், //

இதுதான் அட்டகாசமான விளக்கம்!!!

பழமைபேசி said...

க...
ல...
க்...
க...
ல்!

Arasi Raj said...

ஹி ஹி...எங்கயோ குத்துதே

அது சரி(18185106603874041862) said...

நல்லா இருக்கு...கன்டினியூ பண்ணுங்க..

Anonymous said...

வேலை கிடைச்சுதா? :P

அ.மு.செய்யது said...

//உள்நாக்கிலே ஆங்கிலமும் கொஞ்சம் சரக்கும்//

சரக்கெல்லாம் தேவையில்லங்க..காப்பி பேஸ்ட் பண்ண தெரிஞ்சா போதும்.

அ.மு.செய்யது said...

//"ரெம்ப சுலபமான வேலை அதும், என் ரெசுயும் ல என் பேரை அடிச்சிட்டு உன் பேரை போட வேண்டியத்துதான்"//

டிபிக்கல் ஐ.டி ஊழியர்கள் பன்றது.கலக்கல்.

கிரி said...

//வேலையே செய்யாம, வேலை கிடைக்கிற ஒரே இடம் ஐ.டி டா//

ஹா ஹா ஹா

//சரக்கே இல்லாம நுனி நாக்கிலே ஆங்கிலம் மட்டுமே இருந்தா அவங்க ஹெச்.ஆர்//

:-)))))))

//நான் விஜய் மாதிரி நடனம் ஆடுவேன், அதனாலே காலையும் சேத்துகிட்டேன்//

டாப்பு ஹா ஹா ஹா

நசரேயன் கலக்கிட்டீங்க..சூப்பரா இருந்தது

Tech Shankar said...

Dumm.. Dummm.. dummmmm.. Dum.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

Unknown said...

இப்படி பொது இடத்துல உண்மைய போட்டு இப்படி ஒடைக்கணுமா....

புதியவன் said...

//உள்நாக்கிலே ஆங்கிலமும் கொஞ்சம் சரக்கும் இருந்தா நீ டெவ்லப்பர், சரக்கே இல்லாம நுனி நாக்கிலே ஆங்கிலம் மட்டுமே இருந்தா அவங்க ஹெச்.ஆர் //

பஞ்ச் டயலாக் கலக்கல்...

புதியவன் said...

//சரக்குன்னு சொன்னதும் எனக்கு சரக்கு ஞாபகம் வந்து விட்டது//

ஹா..ஹா...ஹா...

புதியவன் said...

//"இன்னொரு முக்கியமான விஷயம், நீ இனிமேல தமிழ் நாட்டுலே பிறந்த திரிசா எப்படி மருந்த்துக்கு ௬ட தமிழ் தெரியாத மாதிரி நடிக்கிராங்களோ,அதே மாதிரி நடிக்கணும், ஹாலிவுட் படம் தான் பார்க்கணும், அந்த நடிகையோட முன்னுராவது கல்யாணம், யாரோட எப்ப நடந்தது, இந்த புள்ளி ராஜா விவரம் எல்லாம் தெரியனும்"//

அண்ணா சிரிக்க முடியலைங்கண்ணா...

புதியவன் said...

//(அழிச்சாட்டியம் தொடருமுன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே)//

ம்ஹூம்...

Unknown said...

Super... :)) Aanaalum konjam paduththal dhaan ;)))

Anonymous said...

பொது இடத்துல கட்டு சோத்த அவுக்காத

Anonymous said...

பொது இடத்துல கட்டு சோத்த அவுக்காத

ஸ்ரீதர்கண்ணன் said...

.உள்நாக்கிலே ஆங்கிலமும் கொஞ்சம் சரக்கும் இருந்தா நீ டெவ்லப்பர், சரக்கே இல்லாம நுனி நாக்கிலே ஆங்கிலம் மட்டுமே இருந்தா அவங்க ஹெச்.ஆர், ஆனா அவங்கதான் கம்பெனி க்கு குல தெய்வம்,அவங்க இல்லன அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடும்"

:))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

அசத்தல் நண்பா.. சக்க ஓட்டு ... நடத்துங்க..

butterfly Surya said...

கலக்கல்..

நல்ல பதிவு.

வாழ்த்துகள் நண்பா..

வேத்தியன் said...

சூப்பர் தல...
கலக்கலோ கலக்கல்...
:-)

முகவை மைந்தன் said...
This comment has been removed by the author.
முகவை மைந்தன் said...


   ல     ல்
         க      !
      க்

ராஜ நடராஜன் said...

//"எனக்கு இருபது வேண்டாம், ரெண்டு போதும் மச்சான்"//

இஃகி!இஃகி போட்டுக்கிறேன்

ராஜ நடராஜன் said...

//"கட்ட வண்டிய கட்டிக்கிட்டு கார கொட்டைக்கைக்கு படம் பார்க்க போன நான் கண்டம் விட்டு கண்டம் பாயனும்னு சொல்லுற"//

பஞ்ச் டயலாக்கு!

ராஜ நடராஜன் said...

//"அலும்பு பண்ணலை உனக்கு உண்மையிலே வேலை தெரியாதுன்னு நினைப்பாங்க, போகிற வழி முக்கியமல்ல, பொய் சேருற இடம் தான் முக்கியம், இதை பத்தி வள்ளுவர் என்ன சொல்லுராருனா?"//

லோகத்துல கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கும் போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//"இல்ல மச்சான், நீ போ வேலை கிடைக்க வரைக்கும் நான் தமிழ் படமே பாத்துக்கிறேன்"//

இப்படித்தான் டெல்லி போய் நண்பர்களுடன் தாஜ்மகால் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன்

Bhuvanesh said...

அட்டகாசம் அண்ணே..

//அழிச்சாட்டியம் தொடருமுன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே)//


இந்த மாதிரி பதிவு உக்கு கோவிக்க எல்லாம் மாடோம் .. (ஏன்னா எங்களுக்கு இதே மாதிரி Flash Back இருக்கும் இல்ல ? )

நட்புடன் ஜமால் said...

\\(அழிச்சாட்டியம் தொடருமுன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே)\\

ஹும் ஜீக்கிரம்

அழுதுடுவேன்

சீக்கிரம் வாங்க

பழூர் கார்த்தி said...

அட்டகாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க.. தொடர்ந்து கலாய்ங்க.. சூப்பர் :-))


இருந்தாலும் ஹெச் ஆரை இந்த வாரு வாரக்கூடாது :-))

ஹெச் ஆர் பிகர்களை பத்தி சொல்லுவீங்கள்ள??

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமை

அப்துல்மாலிக் said...

ஹா ஹா தல கலக்கல்

அப்துல்மாலிக் said...

//ஐ.டி யிலே கொடி நட்டி கோட்டை கட்டிக்கொண்டு இருந்தவன்//

இப்போ டவுசரு கிழிஞ்சிப்போச்சா

அப்துல்மாலிக் said...

//நான் உன்னை தயார் படுத்திற அழகிலே ஹெச்.ஆர் எல்லாம் உன்னை தேடி வருவாங்க "//

நல்லா மேக்கபோஒட்டு வெச்சாரா

அப்துல்மாலிக் said...

//இரவு நடன விடுதியிலே தான் குடிக்கணும், அப்பத்தான் விரலுக்கு ஒரு பெண்ணை தேத்த முடியும்."

"எனக்கு இருபது வேண்டாம், ரெண்டு போதும் மச்சான்"
//

குசும்புனா இதானா இகி இஃகி

Tech Shankar said...

ஆகா.. எனக்கு ஒரு வேலை வாங்கித் தர இயலுமா.. ரெசசன்ல சிக்கின ஆட்களில் நானும் ஒருத்தன்..

ஹ்ம்ம்ம்

அத்திரி said...

நக்கல் கலந்து கட்டி அடிக்குது

சந்தனமுல்லை said...

அட்டகாசம்! என்ன நக்கல்..நையாண்டி..!!
//சொல்லுஅவனே பிஸி யா இருக்கும் பொது, நீ உலக பிஸி யா இருந்து இருப்பாய் ன்னு நினைச்சு குவாங்க"// :-))

சந்தனமுல்லை said...

//இல்ல மச்சான், நீ போ வேலை கிடைக்க வரைக்கும் நான் தமிழ் படமே பாத்துக்கிறேன்"//

அடக்கம் அமரருள் உய்க்கும்?!

ஆதவா said...

அப்படியே படிச்சுட்டே வந்தேன்... தொடருமுனு போட்டு கொன்னுட்டீங்க் பாஸ்.

ஐடி அவலம்னு உண்மையான தகவலோன்னு வந்தேன்!!! எப்போ அடுத்தது?

RAMYA said...

//
ஐ.டி கம்பெனி வளாகத்திலே புல் மேயுற ஆடு,மாடு எல்லாம் அமெரிக்கா போகுதுன்னு பி.ஈ முடிச்சுட்டு மொபைல் கம்பெனி டவர் ல தொங்கி கிட்டு
//

தொங்கிகிட்டா ?? சும்மா கலக்கலான ஆரம்பம் :)

RAMYA said...

//
என் கல்லூரியிலே படித்த நண்பன் ஐ.டி யிலே கொடி நட்டி கோட்டை கட்டிக்கொண்டு இருந்தவன் எனக்கு உதவி செய்வதாக உத்திரவாதம் கொடுத்தான்.அவனை பார்க்க அவன் தங்கி இருந்த இடத்திற்கு போனேன்.
//

அது சரி அந்த நண்பன் பாவம், அப்புறம் அவரு வேலையும் போயிடுச்சாம்.

RAMYA said...

//
வா மச்சான் இப்பத்தான் வாரியா?
//

மொதல்லையே வந்திருப்பேன் நீ கொஞ்ச நாள் நிம்மதியா இருன்னு தான் தாமதமா வந்தேன் :))

RAMYA said...

//
ஆமா மச்சான், உன்னையை நம்பி இருந்த வேலையும் விட்டுபுட்டேன், வேலை கிடைக்குமா?
//

அவரு என்னா கிலோ கணக்கிலே வித்துகிட்டா இருக்காரு.

நீங்க வரீங்கன்னு தெரிஞ்சா ஓடிப் போய் இருப்பாரு :))

RAMYA said...

//
ஆமா மச்சான், உன்னையை நம்பி இருந்த வேலையும் விட்டுபுட்டேன், வேலை கிடைக்குமா?
//

அவரு என்னா கிலோ கணக்கிலே வித்துகிட்டா இருக்காரு.

நீங்க வரீங்கன்னு தெரிஞ்சா ஓடிப் போய் இருப்பாரு :))

RAMYA said...

//
"வேலையே செய்யாம, வேலை கிடைக்கிற ஒரே இடம் ஐ.டி டா,நான் உன்னை தயார் படுத்திற அழகிலே ஹெச்.ஆர் எல்லாம் உன்னை தேடி வருவாங்க "
//

இப்படி எல்லாம் வேறே நடக்குதா??

நாங்க எல்லாம் முதுகு வலி தாங்க முடியாமல் வேலை செய்யறோம் :))

RAMYA said...

//
ஹெச்.ஆர் யாருடா?
//

அது நசரேயனோட மாமா :)

RAMYA said...

//
வடச்மென் கிட்ட ரெசியும் கொடுத்து வேலை வாங்கின உனக்கு ஹெச்.ஆர் பத்தி தெரியாது தான்.உள்நாக்கிலே ஆங்கிலமும் கொஞ்சம் சரக்கும் இருந்தா நீ டெவ்லப்பர், சரக்கே இல்லாம நுனி நாக்கிலே ஆங்கிலம் மட்டுமே இருந்தா அவங்க ஹெச்.ஆர், ஆனா அவங்கதான் கம்பெனி க்கு குல தெய்வம்,அவங்க இல்லன அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடும்"
//

இது நல்ல லாஜிக், ரொம்ப ஆராய்ந்து சொல்லி இருக்கீங்க ரொம்ப கஷ்டமான ஆராய்ச்சி :))

RAMYA said...

//
"சரக்குன்னு சொன்னதும் எனக்கு சரக்கு ஞாபகம் வந்து விட்டது"
//

வரும் வரும் நாலு தட்டினா எல்லா நினைவும் காணாமல் போய்டும் :)

RAMYA said...

//
மச்சான் இனிமேல நீ டாஸ்மாக் ல எல்லாம் சரக்கு அடிக்க ௬டாது, இரவு நடன விடுதியிலே தான் குடிக்கணும், அப்பத்தான் விரலுக்கு ஒரு பெண்ணை தேத்த முடியும்."
//

அது சரி நல்ல நண்பன், நல்ல மச்சான் போங்க :))

RAMYA said...

//
"எனக்கு இருபது வேண்டாம், ரெண்டு போதும் மச்சான்"

"டேய் நான் கை விரலை சொன்னேன்"

"நான் விஜய் மாதிரி நடனம் ஆடுவேன், அதனாலே காலையும் சேத்துகிட்டேன்"

"அப்ப நான் வார்த்தைய வாபஸ் வாங்கிக்கிறேன்"
//

இது ரொம்ப போங்காட்டமா இருக்கு அது சரி :)

RAMYA said...

//
"இல்ல மச்சான் நான் அஜித் மாதிரி ஆடிக்கிறேன்"

"மச்சான் ரெசுயும் எப்படி தயார் பண்ணனும்"

"ரெம்ப சுலபமான வேலை அதும், என் ரெசுயும் ல என் பேரை அடிச்சிட்டு உன் பேரை போட வேண்டியத்துதான்"

"முன் அனுபவ சான்றிதழுக்கு என்ன செய்ய?"
//

அப்பா சாமிங்களா இனிமேல் யாராவது ரெசி எடுத்து வந்தா எல்லா ஆங்கிள்ளேயும் பாக்கணும் போல இருக்கு,

எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு :)

RAMYA said...

//

"அதிலேயும் என் பேருக்கு பதிலா உன் பேரை போடலாம்.டேமஜர் போன் நம்பர் மட்டும் நாம் டீ கடை நாயர் நம்பர் கொடுப்போம், அவன்கிட்ட சொல்லிவிடுவோம், யாரு இங்கிலீஷ் ல பேசினாலும் பிஸி மட்டும் சொல்லுஅவனே பிஸி யா இருக்கும் பொது, நீ உலக பிஸி யா இருந்து இருப்பாய் ன்னு நினைச்சு குவாங்க"
//

டி கடை காலி பண்ணி ரொம்ப நாளாச்சாம்
என்னான்னு பார்த்தா

சில கும்பல் க்டன்ல்லே டீ குடிச்சே
போண்டி ஆக்கிட்டாங்களாம் :)

RAMYA said...

//
"மச்சான் நீ தான்டா என் குல தெய்வம், உனக்கு நயன்தாராவுக்கு பக்கத்திலே சிலை வைக்கிறேன் வேலை கிடைச்சா"
//

ஓ இதெல்லாம் வேறேயா :) அப்போ குஷ்பு சிலை பக்கத்திலே வேண்டாமா??

RAMYA said...

//
"இன்னொரு முக்கியமான விஷயம், நீ இனிமேல தமிழ் நாட்டுலே பிறந்த திரிசா எப்படி மருந்த்துக்கு ௬ட தமிழ் தெரியாத மாதிரி நடிக்கிராங்களோ,அதே மாதிரி நடிக்கணும், ஹாலிவுட் படம் தான் பார்க்கணும், அந்த நடிகையோட முன்னுராவது கல்யாணம், யாரோட எப்ப நடந்தது, இந்த புள்ளி ராஜா விவரம் எல்லாம் தெரியனும்"
//

ஓ அந்த நண்பருக்கு நல்லா உலக ஞானம் இருக்கு.

நல்லா மோல்ட் பண்ணி இருக்காரு
உங்க குலதெய்வமே அவருதான் :)

RAMYA said...

//

"கட்ட வண்டிய கட்டிக்கிட்டு கார கொட்டைக்கைக்கு படம் பார்க்க போன நான் கண்டம் விட்டு கண்டம் பாயனும்னு சொல்லுற"
//

இதுலே ரொம்ப நல்லை பிள்ளை மாதிரி கேள்வி வேறே :)

RAMYA said...

//

"மச்சான் நாலு இடத்திலே இருந்து தேதி கேட்டு பதில் அனுப்பி இருக்காங்க, என்னடா செய்ய?,அடுத்த திங்கள் வாரேன்னு சொல்லவா?"
//

அப்போ கூட உருப்படத்திற்கு வழியை காணோம் :)

RAMYA said...

//

"மாப்ள நீ என்னைக்கும் இன்டெர்விவுக்கு நேரிலே போக ௬டாது, ப்ராஜெக்ட் ரீலீஸ் இருக்கு, நான் நேரிலே எல்லாம் வரமுடியாதுன்னு சொல்லு, அப்பத்தான் நீ கம்பெனி க்கு மாடு மாதிரி வேலை பார்க்கிறாய், நீ வேலை கொடுத்தா பின்னி படல் எடுப்பன்னு நினைப்பாங்க,பதிலிலே உன் போன் நம்பர் கொடுத்து கால் பண்ண முடியுமான்னு கேளு"
//

அது சரி, இனிமேல் உண்மையாவே வேலை இருந்தா கூட யாரும் நம்ப மாட்டாங்க மாட்டினீங்களா :)

RAMYA said...

//
"வேலை வெட்டி இல்லாத எனக்கு இவ்வளவு அலும்பு தேவையா?"
//

இதுக்கு பேருதான் மனசாச்சி மனசாட்சி :)

RAMYA said...

//
"அலும்பு பண்ணலை உனக்கு உண்மையிலே வேலை தெரியாதுன்னு நினைப்பாங்க, போகிற வழி முக்கியமல்ல, பொய் சேருற இடம் தான் முக்கியம், இதை பத்தி வள்ளுவர் என்ன சொல்லுராருனா?"
//

வள்ளுவரா அவரு யாருன்னு கேக்கலை ??

என்னா இது சி.பி தனமா இருக்கு ??

RAMYA said...

//
எருமை மாதிரி பொறுமையா இருக்கணும் கண்டிப்பா வரும், நான் ஹாலிவூட் படம் பார்க்க போறேன், நீ வாறியா?"
"இல்ல மச்சான், நீ போ வேலை கிடைக்க வரைக்கும் நான் தமிழ் படமே பாத்துக்கிறேன்"
//

வேலையே கிடைக்கலே இதுலே தமிழ் படம் வேறேயா ??

RAMYA said...

//
(அழிச்சாட்டியம் தொடருமுன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே)
//

ச்சே ச்சே அந்த மாதிரி எல்லாம் தப்பா நினைக்க மாட்டோம் :)

kailash,hyderabad said...

பயஙர சிரிப்பு.சர்தார்ஜி ஜோக்ஸ் அதிகமா சர்தார்ஜிக்கள்தான் (அவஙகளுக்குள்) சொல்லிக்குவாஙளாம்.
அதுமாதிரி இருக்கு.நமக்கு மட்டும் தெரி்ந்சது இப்ப எல்லாருக்கும் தெரின்சு போச்சே !!!
தொடரவும்

கீழை ராஸா said...

நல்லா இருக்குன்னு சொன்னா அவங்க கோவிச்சுக்குவாங்க...நல்லா இல்லைன்னா நீங்க தடி எடுத்துடுவீங்க...வழக்காமான வடிவேலு டயலாக் தான் இதற்கு சரி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வில்லன் said...

இதெல்லாம் எந்த ஊருல??????????/ உங்க கனவுல தென்பட்டதா????

இப்ப இருக்குற மார்க்கெட் நெலவரதுல புழிஞ்சி எடுக்குறாங்க மனுசன. கொஞ்சம் தம் அடிக்க போனா கூட மொபைல்ல கூபுடுரான் எங்க இருக்கன்னு??????? அதெல்லாம் வாழ்கைல பொன்னான நேரம் திரும்ப வராது தலைவா!!!!!!!!!!!!

வில்லன் said...

பின்னுட்டத்த படிச்சி பாத்தா பாதி பேரு இந்த மாதிரி தான் வேலைக்கு வந்துருப்பாங்க போல. எல்லாம் நேரமடா சாமி.

இருந்தாலும் பாத்து. எங்க கம்பெனில ஒரு ஐந்நூறு பெற ஒரே நாலுல தூகிட்டானுக பழைய கம்பெனி பத்தி விசாரிச்சு. எல்லாம் ரெண்டு வருசத்துக்கு முன்னால சேந்தவங்களுக்கு மட்டும் தான்.... நமக்கொண்ணும் ப்ரெச்சனை இல்ல.

andal said...

google thaan culathevam

Prabhu said...

ஐடில வேல பாக்குறீங்களா... இல்ல வேற செக்டரா... வர... வர எல்லாரும் ஐடி மேல கொல வெறியா இருக்கீங்களே!

கணினி தேசம் said...

நண்பா,

நல்ல கற்பனை. நல்ல காமெடி!!


அனா, நிறைய பேரு அடிபட்டு மிதிபட்டு, பிழியப்பட்டு வந்துருக்கோம். படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு :(((

Unknown said...

ஹ ....ஹ .....ஹ ......!! நெம்ப அருமையா இருக்குங்கோ தம்பி......!!!

நானுமும் இப்பிடிதாங்கோ தம்பி நெம்ப " வருசமா " அலைஞ்சேன்....... அப்பறம் எம்பட பிரென்ட் கல்தா குடுக்க.......... இப்போ நான் தனியார் கம்பனியில் எலக்ட்ரிகல் சைட் எஞ்சினியர் . இப்போ எனக்கு திருச்சியில் N.H ரோட்டில் ப்ராஜெக்ட்...... !! வெயில் நெறையா இருந்தாலமும் ....... நெறியா பிகர் பாக்க முடியுது தம்பி......!!!

நமக்கு கீழ நாலு பேரு ..... சார்....!! சார்....!! ன்னு கூபுடும்போது கொஞ்சம் ஜிலுஜிலுப்பு....!!

ஆனா ஐ.டி கம்பனிக்கு போனா நெம்ப கஷ்டம்.....!!

குழு ...குழு .... ஏசியில்..... கொத்தடிமை மாதிரி வேல செஞ்சுகிட்டு இருக்கணும் .......!!!

Poornima Saravana kumar said...

வேலையே செய்யாம, வேலை கிடைக்கிற ஒரே இடம் ஐ.டி டா
//

அட பாவமே!!

Poornima Saravana kumar said...

அழிச்சாட்டியம் தொடருமுன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே//

கோவிச்சுக்குவோம்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே..

ச.பிரேம்குமார் said...

// பி.ஈ முடிச்சுட்டு மொபைல் கம்பெனி டவர் ல தொங்கி கிட்டு இருந்த நான் வேலையை விட்டு புட்டு ஐ.டி யிலே வேலை தேட ஆரம்பித்தேன்//

இந்த கிரகத்தால தான் இருக்கறவனுக்கும் வேலை போகுது போல

அது சரி, வேலை செய்யாமயே வேலை கொடுக்குற கம்பெணி எங்கெங்க இருக்கு? சொல்லுங்க, நானும் அங்கு விண்ணப்பிக்கனும்

ச.பிரேம்குமார் said...

அவ்வளவு சோம்பேறித்தனம்னா அப்போ அரசு அலுவலகங்களில் உட்கார்ந்து கொண்டு ஆனந்த விகடன் படித்து கொண்டு, செய்ய வேண்டிய வேலைக்கும் கையூட்டு வாங்கும் அதிகாரி பதவிக்கே விண்ணப்பம் செய்யலாமே???

என்னத்துக்கு ஐ.டி உலகத்துக்கு டார்ச்சர் பண்ணனும்?

Anonymous said...

இப்பல்லா தெரியுது ...இங்கிலீஷ்லே நாலு வார்த்தை ஒழுங்யா பேசத் தெரியாத பயல்களெல்லாம்,ஐ டி வேலைலே எப்படியோ நுழஞ்சப்புரம்...பண்னுவாங்களே தெனாவெட்டு ,நாய்க்கு லைசன்ஸ் கட்டின மாதிரி ஐ டி கார்டை கழுத்திலே மாட்டிட்டு ...
வீட்டிலே கேட்டா எம் பையன் சாப்டுவேர் இஞ்சினியர்னு அம்மாக்காரி விவரம் புரியாம சந்தோசப் பட்டுட்டு இருக்கா.....

G.Srinivas said...

after getting job in I.T and visiting a foreign country they feel they have come from heaven and they forget their relatives,their help and visiting friends is a sin. And when they need help they weep like ladies and ready to fell at feet.Totally they are chameleon.

Anonymous said...

//
G.Srinivas said...

after getting job in I.T and visiting a foreign country they feel they have come from heaven and they forget their relatives,their help and visiting friends is a sin. And when they need help they weep like ladies and ready to fell at feet.Totally they are chameleon.
//

True.

But there is another side for this.. if someone coming from US, others treat them as if they are coming from HEAVEN and asking non-stop silly questions. Why you are giving more importance after he is returning from US?