பொழுது விடிஞ்சு பொழுது போன, இதே வேலைய போச்சு, வீட்டுல என்ன நடக்கு, ஏதாவது வேணுமா, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
ஏன் எல்லாம் நல்லா தானே போகுது.
அலுவலகத்திலே இருந்து வந்த உடனே கணனி முன்னாடி உக்கார்ந்து கிட்டா வீட்டுல செய்ய வேண்டிய வேலை எல்லாம் யாரு செய்வார்?
இல்லை இதெல்லாம் படிச்சுட்டு கருத்து சொல்லலைனா யாரும் சம்பளம் கொடுக்கமாட்டாங்களா?
நாங்க இணைய தளம் வழியா தமிழ் வளர்க்கிறோம், ஏன் உனக்கு பிடிக்கலையா?ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் திருட்டு தனமா எல்லா படத்தையும் டவுன்லோட் பண்ணி பார்க்கிறேன். நீங்க ஒரு தனி உலகத்திலே இருகீங்க, எங்களை பத்தி கவலை படறதே இல்லைன்னு சொன்ன. அதனாலே உங்களை எல்லாம் தொந்தரவு பண்ண ௬டாதுனு பதிவு எழுத ஆரமிச்சேன்
அதுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை .நான் தெரியாம தான் கேட்கிறேன், வீட்டு வந்தா மக்க மனுசன்கிட்ட ஒரு நாலு வார்த்தை பேசனும்ன்னு தோணலையா?
நீ என்ன வேலை செய்த?வீட்டுல இருக்க சின்னது என்ன பண்ணுது?இப்படி ஏதாவது கவலை இருக்கா?நான் ஒருத்தி மாடு மாதிரி கத்திகிட்டு இருக்கிறது காதிலே விழுதா?ஹும் .. என்ன சொன்ன?
ஹும்.. சோத்துக்கு உப்பு இல்லன்னு சொன்னேன்.இப்ப நீங்க எழுந்து வரலை, நான் கம்ப்யூட்டர் யை ஆப் பண்ணிடுவேன் .
சரி சொல்லு கேட்கிறேன், என்ன பிரச்சனை உனக்கு?
நீங்க குடும்பம் நடத்துற லட்சனம் இதுதானா?வீட்டுல காய்கறி இல்லை, அரிசி இல்லை, துணி துவைக்க வில்லை, பாத் ரூம் கழுவலை இதெல்லாம் யாரு செய்ய?
ஏன் எல்லாம் காலி ஆகிடுச்சா?
நாம கடைக்கு போய் ரெண்டு மாசம் ஆச்சு, போனாதானே எல்லாம் வங்க முடியும். நீங்க கம்ப்யூட்டர் கழுத்தை கட்டி கொண்டு கிடந்தால், நான் என்ன செய்ய முடியும்?
உங்களுக்கு ஆபீஸ் ல சம்பளம் இதுக்கு தான் கொடுக்கிறார்களா?
இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும், யாரு இந்த வீட்டுல இருக்கனுமுன்னு, நானா இந்த கம்ப்யூட்டர் யா?
ஏன் இப்படி கொலை வெறி கோபத்திலே இருக்க இப்ப, நான் எதோ கொலை குத்தம் பண்ணின மாதிரி கேள்வி கேட்குற?
எனக்கு வார ஆத்திரத்திலே என்ன செய்யணுமுன்னு தெரியலை, உங்களை மாதிரி தமிழ்ல எழுதுற எல்லோருமே இப்படி குடும்பத்தை கவணிக்காம தான் இருக்காங்களா?
இந்த கேள்விக்கு மட்டும் என்கிட்டே பதில் இல்லை
என்னவோ நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒன்னு விடாம பதில் சொல்லி தவிச்சுட்டீங்க.
நீ ரெம்ப சூடா இருக்க, சுட சுட ஒரு காபி கொடு, குடிச்சுகிட்டே பேசுவோம்.
வீட்டுல பால், சர்க்கரை எல்லா தீர்ந்து ரெண்டு வாரம் ஆச்சு, உங்க பாணியிலே சொன்ன சரக்கு தீர்ந்து போச்சு .இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். யாரு முக்கியமுன்னு நானா? கம்ப்யூட்டர்யா ?
வர வர உனக்கு எது ௬ட போட்டி போடுறதுன்னு ஒரு வரம்பே இல்லாம போச்சு, அது ஒரு வாயில்லா பூச்சி.
கம்ப்யூட்டர் ரால நான் தான் வாயில்லா பூச்சி ஆகிவிட்டேன்.ஹலோ நான் இங்க பேசிகிட்டு இருக்கேன், மறுபடியும் அங்கே என்ன பாத்து கிட்டு இருகீங்க உங்களை... ( கன்னம் இரண்டியும் பிடித்து கிள்ளு, தலை முடியை இழுத்து ஆட்டு, இவ்வளவும் பண்ணி மடி கணினியை யும் ஆப் செய்து விட்டாச்சு)