Saturday, May 7, 2011

கனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி


2G வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மத்திய புலனாய்வு துறையினரால் கைது   செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்,மூத்த வக்கீல் ஜெத்மலானியின் வாதம் வீ ணாகப்போனது,இதை எதிர்பார்க்காத தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர், இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். திமுகவின் அறிக்கையில் ஒரு திராவிட தாய்க்கு,ஆரிய தாய் சதி செய்த்துவிட்டாள். வடக்கு வளர்வது நின்று தெற்கு வளர்வது பொறுக்காமல், தெற்கின் வளர்ச்சியை தடுக்க இந்த கைது நடவடிக்கை என்பதை கழகம் உறுதியாக நம்புகிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.


பாஜக தலைவரின் அறிக்கையில் கைது நடவடிக்கை வரவேற்கதக்கது, ஆனால் மிகவும் தாமதமான நடவடிக்கை, இந்த வழக்கிலே சம்மந்தப்பட்ட பிரதமர், மற்றும் பிற தலைவர்கள் இன்னும் கம்பி எண்ணாமல் வெளியே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு பதில் அளித்த பிரதமர், ௬ட்டணி கட்சிகளின் நடவடிக்கையை நான் கட்டுபடுத்த முடியாது , அது பொது குழுவிலே முடிவு செய்யப்படும். நான் எனது துறையைத் தவிர மற்ற துறைகளிலே மூக்கை நுழைப்பதில்லை என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 1c,2c என்ற பழக்கப்பட்ட எனக்கு 1g,2g என்றெல்லாம் ஒன்று இருப்பது இன்று செய்திதாள்களின் மூலமே அறிந்து கொண்டேன். இதற்கு மேல் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை கட்சி தலைமை முடிவு செய்யும்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கைது நடவடிக்கை ௬ட்டணியை பாதிக்காது, கைதுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த வெற்றி ௬ட்டணி 3G,4G என்று 100000G வரைக்கும் வழக்குகள் வந்தாலும் தொடரும். வட மாநிலங்களிலே கைது நடவடிக்கைய எதிர்த்து இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் மக்கள் அமைதியாக இருக்கின்றனர்,ஆனால் தமிழகம் தத்தளிக்கும் கத்தரி வெயிலிலும், மின் வெட்டுகளிலும் மக்கள் மனதிலே இருக்கின்ற சூட்டை விட, கைது நடவடிக்கை மக்களிடையிலே பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அனைவரும்  மெரினா கடற்கரையிலே ௬டி கடலும் பொங்குமா இந்த திராவிடத்தாய் கைது நடவடிக்கைக்கு ஆதரவாய் என்று எதிர்பார்க்கின்றனர்.


கழக பொதுக்குழு அவசமாக ௬ட்டப்படுகிறது என்ற தகவல் தெரிந்த உடனே, தமிழக பிற கட்சி தலைவர்கள் கலைஞரை சந்திக்கப்படை எடுத்துள்ளனர், தலைவர் விட்ட அறிக்கையிலே கழகம் தான் எனக்கு முதல் பிள்ளை, உறுப்பினர் அனைவருமே என் உடன்பிறப்புக்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொலைகாட்சிக்கு பணம் வந்த விசயத்திலே புலனாய்வு துறை அறிக்கை, தேர்தல் அறிக்கை போல இருக்கிறது, தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன் எங்களை எதிரியாக பாவித்தது போல,புலனாய்வு துறையும் பாவிக்கிறது.நான் ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன் குடும்பத்துக்காக கட்சியை அடகு வைக்கமாட்டேன். சட்டப்படி எந்த வழக்கையும் சந்திப்போம். நானே கலைஞர் தொலைகாட்சியிலே குறள் சொல்லி சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண குடிமகன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


கைது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவி, நீதி இன்னும் தலை தூக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது,இந்த வழக்கிலே மட்டுமல்ல எந்த ஊழல்  வழக்கிலேயும்  சம்பந்தபட்ட அனைவரையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்யவேண்டும்.ஆளுநர் விட்ட சிறப்பு அறிக்கையிலே தமிழகம் அமைதி பூங்காவாய் திகழ்கிறது,பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன் மாதிரியாக இருக்கிறது என்பதிலே எந்தவிதமான சந்தேகமே இல்லை.                

தமிழக மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் பயத்துடன் பஸ்சிலே பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். விடுமுறையை ஒட்டி, ரயில் நிலையங்களிலே மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அறிக்கைய நாளேடுகளிலே படித்தவர்கள் இன்னும் அதிர்ச்சி கலையாமல் அப்படியே இருக்கின்றனர், அதிர்ச்சியிலே ஏற்படும் இதய பிரச்சனைகளுக்கு காப்பிட்டு திட்டம் கை கொடுக்கும் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பிலே செய்தி வெளியிட்டுள்ளது.தீக்குளிக்கும் தொண்டர்களுக்கு கழக கண்மணி வேந்தர் பட்டம் கொடுக்கப்படும். 


பொறுப்பு அறிவித்தல் : இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்திலே,நீங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நலம்.


12 கருத்துக்கள்:

vasu balaji said...

இது கலைஞர் டிவி நிவிஸா தளபதி:))))

நசரேயன் said...

ஆமா .. ஆமா

ராஜ நடராஜன் said...

மெய்யாக வேண்டிய பதிவு.தப்பிச்சிடுச்சு:)

MANO நாஞ்சில் மனோ said...

14 ஆம் தேதி எல்லாம் தெரிஞ்சிரும் பார்ப்போம்...

ஜோதிஜி said...

அத்தனையும் உண்மையாக இருக்க எப்படி சிரிப்பு வரும்?

நண்பன் said...

muthalil jayalalithavai pidiththu ulle podungal avar enna uththamiya?

a said...

அய்யோ அய்யோ...

Anonymous said...

ம்..நடக்கும் கண்டிப்பா

அமுதா கிருஷ்ணா said...

என்னத்த சொல்றது. நிஜமா பயமா தான் இருக்கிறது.

யோகா.சு said...

தோற்றால் உள்ளே!வென்றால் வெளியே!!!!!!!

ஹேமா said...

மொக்கையா !

sakthi said...

நசர் அண்ணா இது என்ன???
உங்க பிளாக்கா இது ????
நம்பவே முடியலை !!!!