Sunday, August 31, 2008

குஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்

தமிழ்மண நிருபர்: நீங்க கற்பு பற்றி கூறிய உங்க கருத்துக்கு விளக்கம் கொடுக்க போரதா சொல்லுறீங்க, அதை கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா ?

குஸ்பு : என்னோட கருத்துகளை மக்கள் தப்பா புரிஞ்சுகிட்டாங்க.அதை தெளிவாக விளக்கி இணைய தளம் முலமாக தமிழை பரப்பும் உங்கள் வழியாக மக்களுக்கு சென்று அடையனுமுனு என் நீண்ட நாள் ஆசை.

தமிழ்மண நிருபர்: உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றி. மேல சொல்லுங்க
குஸ்பு : நான் என்ன சார் சொன்னேன் " கல்யாணத்துக்கு முன் உறவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்"

தமிழ்மண நிருபர்: ஆமா.. நீங்க பெண்களை பத்தி சொன்னதினாலே தானே பிரச்சனையே வந்தது

குஸ்பு :நாம ஊருல(நம்ம ஊரா?) பொண்ண பெத்தவாங்க என்ன சொல்லுவாங்க. வயத்துல நெருப்பு கட்டிக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு

தமிழ்மண நிருபர்: ஆமா.. அதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்

குஸ்பு: இருக்கு, ஒரு பெண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி யாருகூட வேணுமுனாலும் பழகலாம் ஆனால் எல்லை மீற கூடாது.இந்த உள்கருதை யாரும் புரிஞ்சுக்கலை

தமிழ்மண நிருபர்: ஆகா என்ன ஒரு அருமையான விளக்கம்.உங்களுக்கு இப்படிஎல்லாம் பேசத்தெரியும்னு யாருக்கும் தெரியாது

குஸ்பு: இன்னொரு விளக்கமும் இருக்கு.. நான் அந்த உறவை சொன்னதாக நினைத்தாலும் அதிலேயும் தப்பு இல்லை

தமிழ்மண நிருபர்: எந்த உறவு ?

குஸ்பு: ஆமா பால் குடி மறக்காத பாப்பா .. உங்களுக்கு நான் சொல்லவாறது ஒண்ணுமே தெரியாது

தமிழ்மண நிருபர்: ஓஹோ.. நீங்க அங்க வாரீங்களா.. சீக்கிரம் சொல்லுங்க அதை கேக்க தானே தவியாய் தவிக்கேன் ..

குஸ்பு: அதுதான் உங்க மூஞ்ச பாத்தாலே தெரியுது. இன்னைக்கு தேதிக்கு இந்த உலகத்துலே ரெம்ப கொடிய நோய் எது?


தமிழ்மண நிருபர்: அது எய்ட்ஸ் மேடம்


குஸ்பு: ஒரு மனுஷன் புற்று நோய், இதய நோய் மற்றும் சக்கரை நோய் முலமாகவோ இல்ல உள்மூலம் வெளிமூலம் முலமா செத்தாலும் சாகலாம் ஆனா எய்ட்ஸ் வந்து சாக கூடதுநு நினைகிறாங்க

தமிழ்மண நிருபர்: எய்ட்ஸ் தவிர எந்த நோய் வந்தாலும் சந்தோசமா சாவாங்க


குஸ்பு: அதனாலே பாதுகாப்பான உறவு வைத்து கொள்ளவேண்டும் என சொல்லுறதுல என்ன தப்பு.. இதை புரிஞ்சுக்காத மக்கள் எனக்கு கண்டது கழுதை எல்லாம் தபால் மூலம் அனுப்பி என்னை கஷ்டபடுதிடாங்க


தமிழ்மண நிருபர்: மேடம் மக்களை தப்பா பேசாதீங்க என்ன நானும் அவங்களுல ஒருத்தன். அவங்க உங்களுக்கு நன்மை தான் செய்ய நினைத்தார்கள்.


குஸ்பு: அப்படியா..இது நாள் வரை இதை கேள்வி படவே இல்லை


தமிழ்மண நிருபர்: இதுதான் மக்கள் உண்மையாய் நினைத்து.உங்களுக்கு கோவில் கட்டினோமே ஞாபகம் இருக்கா?

குஸ்பு: அதை எப்படி வாழ் நாளில் மறக்க முடியும்.. அகில உலகிலும் தமிழர்களின் கலை பற்று பரவ காரணமே என் கோவில் தானே

தமிழ்மண நிருபர்: உங்கள் கோவிலின் அமைப்பை சொல்ல முடியுமா?

குஸ்பு: மனப்பாடமா இருக்கு .. நாலு பக்கமும் சுவர்கள் அதற்கு ஒரு நுழைவு வாயில்
தமிழ்மண நிருபர்: உங்க சிலை எங்க இருந்தது ?

குஸ்பு: ஒரு தனி அறையிலே மாலை மணி மகுடம் அணிந்து


தமிழ்மண நிருபர்: அந்த அறைக்குள்ள யாரவது வர முடியுமா?

குஸ்பு: கோவில் குருக்கள் தவிர யாரும் போகமுடியாது, அவர் வீட்டுக்கு போகும் பொது நல்ல பெரிய பூட்டு வைச்சு என்னோட அறையையும் கோவில் வாசல் கதவையும் பூட்டி விட்டு வீட்டுக்கு போவர்


தமிழ்மண நிருபர்: அவரு எது சிலை இருக்கும் அறையை பூட்ட னும் ?


குஸ்பு: நம்ம ஊரிலேதான் சிலை திருடுவதற்கு என்றே ஒரு கூ ட்டம் இருக்கே. நம்ம அகில உலக புகழ் பிள்ளையார் கதை ஊருக்கே தெரியுமே
தமிழ்மண நிருபர்: சிலையை தூக்க ஒரு கூ ட்டம் இருக்கும் போது உங்களையே தூக்க ஒரு கூ ட்டம் இருக்காதா?

குஸ்பு: அப்படியா ?


தமிழ்மண நிருபர்: என்ன மேடம் இப்படி சொல்லிடீங்க, உங்களை நம்ம இ...................

அப்புறமா

............. .................. .................. ...........

இவங்க எல்லாம் உங்களையே தூக்கிரத்க்கு முயற்சி செய்தாங்க

குஸ்பு: போதும் இது மேல வேண்டாம்

தமிழ்மண நிருபர்: அப்புறமா மும்பையிலே

...... ..... .... .. ....

டெல்லியிலே

..... ..... ....
( மேற் கூறிய பட்டியல்கள் இந்திய இணைய தள தனிக்கை குழுவினரால் தடை செய்யப்பட்டு விட்டது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்)

குஸ்பு: நீங்க போகிற வேகத்தை பார்த்தால் "குஸ்புவின் காதலர்கள்" என்று இன்னொரு கட்டுரை தமிழ் மணத்திலே வரும் போலே தெரியுது.


தமிழ்மண நிருபர்: இப்படி உங்களை சுற்றி ஒரு கூ ட்டம் இதுக்காவே இருக்கு, உங்களை அவர்களிடம் இருந்து காப்பற்ற நாங்கள் செய்த திட்டம்

குஸ்பு: மெய்யாலுமா ?

தமிழ்மண நிருபர்: ஆமா .. நான் பொய்யே சொன்னதே இல்லை

குஸ்பு: இப்படி ஒரு புண்ணிய பூமியில இருக்க கொடுத்து வைக்கணும்.இந்த தமிழ் மணம் வழியாக தமிழ் மக்களுக்கு ஒன்னு சொல்லட்டுமா?

தமிழ்மண நிருபர்: ஒ.. தாராளமா சொல்லலாம், ஆனா எவ்வளவு பேர் இதை படிப்பாங்கன்னு சொல்லமுடியாது.

குஸ்பு: பரவா இல்லை இதை படிக்க வார ஒன்னு ரெண்டு பேருக்காவது நான் மக்களை புரிச்சு கிட்டேன் தெரிந்சா போதும்.
கம்பிகளுக்கு பின்னால் நின்ற என் கற் சிலையை பாத்து காக்க வேலி அமைத்த நீங்க.
என்னை உண்மையிலே கம்பிக்கு பின்னால தள்ளி பாது காக்கணுமுனு நினைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.



தமிழ்மண நிருபர்: குஸ்புக்கு இப்படியெல்லாம் தமிழ் பேச தெரியும் இனிமேல எல்லாரும் தெரிஞ்சுகுவாங்க

குஸ்பு: அதுமட்டுமில்லை இனிமேல செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பக்த தரிசனம் கொடுக்க முடிவு செஞ்சுட்டேன். அதுல வர்ற காணிக்கை எல்லாம் தமிழ் மண இணைய தளத்திற்கு நன் கொடையா தருவேன். ( ஐயா சாமிகளா அவங்க கோவிலில் வந்து தரிசனம் கொடுகிறதை சொல்லி இருக்காங்க)
தமிழ்மண நிருபர்: தமிழ் வாழ்க .. தமிழ்மணம் வாழ்க ..


5 கருத்துக்கள்:

Anonymous said...

தமிழ்மணம் இனைய தளதில்?
தமிழ்மன நிருபர்?

நசரேயன் said...

நன்றி ஐயா..
பிழைகள் திருத்த பட்டுவிட்டன

Anonymous said...

'சிலையை தூக்க' என்ற இடத்தில் 'சீலையை தூக்க' என வாசித்துத்தொலைத்துவிட்டேன்

குஸ்புவின் பெயரைக் கண்டாலே புத்தி எங்கேயோ போவுது

Anonymous said...

தப்பு. எங்க குல தெய்வத்த எப்படி இப்படி எழுதலாம்?. அம்மாவ முன்னால பார்த்தாலே அருள் வந்துரும் எங்களுக்கு.

பழமைபேசி said...

அனானிக்கு நெம்ப குசும்பு!