திட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி?
௬ட்டிட்டு போய் ரெண்டு கிலே அரிசியும், நாலு ஆப்பிள் பழமும் வாங்கி தாரேன்"
தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்
எழுதி கிழிச்சது நசரேயன் at 7/28/2010 09:52:00 PM 29 கருத்துக்கள்
பொறுப்பு அறிவித்தல் :
எவ்வளவோ பேரு என்னை தொடர் இடுகை எழுத ௬ப்பிட்டாங்க, அவங்க பேரு எல்லாம் ஞாபகம் இருக்கு, அதை எல்லாம் சொன்னா இந்த இடுகை தாங்காது, அதனாலே பொறுப்பு அறிவித்தல்ல அவங்க கிட்ட எல்லாம் ஒரு மன்னிப்பு கேட்டுகிறேன், தொடர் பதிவுன்னு இல்ல , சில தொடர் கதைகள ஆரம்பித்து அப்படியே விட்டேடேன், என்ன ஆச்சின்னு கேட்க ஆள் இல்லை
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
நசரேயன், நான் கும்மி அடிக்கும் வார பேருதான், அடிக்கடி பேரு மாத்த நான் என்ன குடுகுடுப்பையா?
2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மையான பேரு என்னன்னு தெரிஞ்சிக்க இப்படி ஒரு உக்தியா? உண்மையான பேரை சொன்னா ஒரு கோடி கொடுப்பீங்களா?
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
இந்திய அரசாலே அவசர நிலை பிரகனப் படுத்தப் பட்ட நேரம், என்னுடைய கொலை வெறி கருத்துக்களை பரப்ப உதவியா இருந்த பேனாவை உடைச்சிடாங்க,அதனாலே கூகுள் ஆண்டவரிடம் சொல்லி பிளாக்கர் ஓசியிலே வேண்டி வாங்கிகிட்டேன். அல்லோ இப்படி எல்லாம் கதை சொல்லுவேன்னு எதிர் பார்த்தீங்களா?
யாஹூ குழுமத்திலே நான் கல்லுரியிலே பரிசு வாங்கிய கவுஜையை தமிழிலே வெளியிட்டேன், அதைப் பார்த்ததும் நண்பன் ஒருவன்,நீ இங்கே சொம்பு அடிச்சது போதும், நாங்க ஏற்கனவே கடையை திறந்து வைத்து இருக்கோம், நீயும் வந்து உன் யாவாரத்தை கவனின்னு சொன்னான்.அந்த கடையிலே துண்டை விரிச்சி உட்கார்ந்தேன், ஈ காக்கா வரலை. கூகுள் ஆண்டவரிடம் கொலைவெறியோடு தேடுறப்ப தமிழ் மணம் கண்ணிலே பட்டு விட்டது, நான் அவங்க கிட்ட சொன்னேன், நாமளும் போகலாமுன்னு சொன்னேன், அவங்க வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க, அடுத்த நாளே நான் சொந்தமா கடையை திறந்து தமிழ் மணத்திலே நுழைந்து யாவரத்தை ஆரம்பித்தேன்.நான் காலை வைத்து இவ்வளவு நாளும் நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு, இருக்கும்
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலம் என்பதற்கு வரைமுறைகள் அடையாளம் இருந்தா சொல்லுங்க, பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைகள் இருக்கிறதா என்ன?
கொடுக்கிற காசிலே சம்பள வேலையையோட எதோ கும்மி அடிச்சி பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன், பிரபலத்துக்கு சொம்பு அடிச்சி, பார்க்கிற ஆணிக்கு ஆப்பு அடிச்சா இந்த பிரபலம் சோறு போடுமா?
கேள்வியெல்லாம் போதும், பதிலா சொல்லுன்னு சொல்லுறீங்களா?
கடையை திறந்த அன்றைக்கே எல்லோரும் பிரபலம் தான், தனியா பிரபலம் ஆக வேண்டிய அவசியம் இல்லை.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம்பனும்,
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதிலே சம்பாதிக்கிற ஒரு பதிவரைச்சொல்லுங்க, நான் பார்க்கிற வேலையை விட்டுட்டு முழு நேரமா கடையை திறந்து யாவாரம் பண்ணுறேன்.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூட்டம் வாங்க நாக்கு தள்ளுது, இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
எதுக்கு கோபப்படனும், அவரு என்ன என் சொத்தையா எழுதி வாங்கிட்டாரு?
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
அணிமா, இப்ப காணாம போயிட்டாரு
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
யாரும் பயப்பட வேண்டாம், நான் யாரையும் தொடர் இடுகைக்கு அழைக்கலை,வாய்ப்பளித்த சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி
எழுதி கிழிச்சது நசரேயன் at 7/27/2010 03:42:00 PM 48 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: சுய சொரிதல், தொடர் இடுகை
எழுதி கிழிச்சது நசரேயன் at 7/22/2010 09:03:00 PM 26 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: ஆறரை அறிவு, கதை, கற்பனை, சிறுகதை
எழுதி கிழிச்சது நசரேயன் at 7/13/2010 11:56:00 PM 15 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: movie review, The twilight saga eclipse
எழுதி கிழிச்சது நசரேயன் at 7/07/2010 10:40:00 PM 17 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: FETNA-2010, waterbery, அமெரிக்கா, அனுபவம், பயணக்கட்டுரை
எழுதி கிழிச்சது நசரேயன் at 7/02/2010 12:42:00 PM 18 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: அழகிப் போட்டி குறிப்புகள், உரையாடல், கற்பனை, நகைச்சுவை, மொக்கை
"என்னைய கடத்தல் காரி ஆக்கி விட்டானே படு பாவி பய" என்று சொல்லும் போது எதிர் முனையிலே கேட்டுக் கொண்டு இருந்தவன் உள்ளம் உடைந்தே விட்டது, கடத்தலிலே பத்து சதவீதம் பணம் தள்ளுபடி பண்ண வேண்டும் என்று மனதிலே நினைத்துக் கொண்டான், இன்னும் அவள் அழுவதை கேட்டுக் கொண்டு இருந்தால் காசு வாங்க முடியாத நிலை ஆகி விடும் என்பதாலே, வளவளத்தாவிடம்
எழுதி கிழிச்சது நசரேயன் at 7/01/2010 12:52:00 PM 23 கருத்துக்கள்