Monday, July 18, 2011

ரயில் பயணம்

சென்னை மத்திய ரயில் நிலையத்திலே இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் விரைவு வண்டியைப் பிடிக்க வேண்டிய நான், காலையிலே இருந்து பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தேன், ரெண்டு நாளுக்கு தேவையான துணிகளை பையிலே அள்ளி வைத்து விட்டு ரயில் பயணச்சீட்டையும் கவனமாக அணிந்து இருந்த சட்டையிலே வைத்து விட்டு எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைச் சரிபார்த்தேன்.

காலைச் சாப்பாடு மறந்து போனது. மதியம் வந்த போது பசி தெரிந்தாலும் கிளம்பும் அவரசத்திலே சாப்பாடு தவறி விட்டது. தாம்பரத்திலே இருந்து சரியாக ரெண்டு மணிக்கு புறநகர் ரயிலைப் பிடித்தேன்.    

பூங்கா ரயில் நிலையத்திலே இறங்கி வேகமாக நடந்து சென்னை மத்திய ரயில் நிலையம் வந்தடைய மூன்று பத்து, நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் பத்தாவது நடை மேடையிலே ரயில் நிற்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். ரயிலை அடைந்து என்னுடைய இருக்கை இருக்கும் பெட்டியத் தேடினேன் ஐந்து நிமிட தேடலுக்குப்  பின்  இடத்தை  கண்டு பிடித்தேன். இருக்கையிலே ஏறி அமர்ந்துவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தேன். 

இதை தொடர்கதையா எழுதி இருந்தா ரெண்டு முட்டை கண் ஆம்லேட் போடமா வெறிக்க வெறிக்க பார்த்தது, இல்ல வெளிய நான் கண்ட காட்சி நடு மண்டையிலே இல்லாதா மூளை அதிரும் படியாக என்னை உலுக்கியதுன்னு சொல்லிட்டு தொடரும் போடுவாங்க. நானும் தொடருமுன்னு போட்டு உங்களோட கொலைவெறி பொறுமையா சோதிக்கிற அளவுக்கு 
கொடுமைக்காரன் இல்ல. 

வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்த நான் சாப்பிட எதாவது வாங்க கிளம்பலாம் என்று எண்ணினாலும் வண்டி புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது என்னால் போகமுடியலை, அதானலே வெளியே வேடிக்கை பார்தேன். வண்டி புறப்படும் நேரம் வந்தது, ஆனால் ரயில் கிளம்பலை, ஐந்து, பத்து நிமிடம் ஆச்சி., கடைசியா அரை மணி நேரம் கழித்து கிளம்பியது. நான் இந்திய ரயிலில் பயணம் செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்த இடைப்பட்ட அரைமணி நேரத்திலும் என்னாலே சாப்பாடு வாங்க முடியலை,வண்டி எந்நேரம் வேண்டுமானாலும் கிளம்பலாம் என்று வாங்க முடியாமல் போனது. 

வண்டி கிளம்பிய பத்து நிமிசத்துக்குள் நடைபாதை டீ,காபியிலே இருந்து டாஸ்மாக் கடையிலே கிடைக்கும் சரக்கை தவிர அனைத்து சரக்குகளை விற்பவர்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. விற்பவர்களில் சிலர் சீருடை அணித்து இருந்தார்கள். அவர்கள் ஒப்பந்த உழியர்கள் என்று அவர்கள் அடையாள அட்டையை வைத்து தெரிந்துகொண்டேன், இவர்கள் நடைபாதையிலே செல்லும் வேகம் ரயிலின் வேகத்துக்கு கொஞ்சமே குறைவாக இருக்கும். அசதியாக இருக்கிறது என்று சிறிதுநேரம் எழுந்து நடைபாதையிலே நின்றால் ௬ட "சார் சைடு" என்று நொடிக்கொரு முறை உங்களை கடந்து செல்வார்கள் இந்த ஊழியர்கள்.  

சாதாரண நேரமாக இருந்தால் இவற்றை எல்லாம் கவனித்து இருக்க மாட்டேன், நான் ஒரு எழுத்தாளர் என்று போனவாரம் தெரிந்ததாலே கண்ணில் தென்படுபவை எல்லாம் கனவிலே தென்பட்டு எழுத்துக்களாகிறது(எங்க போய் முடியுமோ)

இப்படி ரயில் நடப்புகளை கவனித்து கொண்டு இருக்கும் போது பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார், எனது மின்னணுச் சீட்டைக் காட்டினேன். வாங்கிப்பார்த்துவிட்டு என்னிடம் ஏதோ கேட்டாரு, எனக்கு அவரு பேசுனது புரியவே இல்ல. அவரிடம் 

தமிழ் ஆர் இங்கிலீஷ் ன்னு சொன்னேன், அதற்குள் பக்கத்திலே இருந்தவர் "உன்னோட அடையாள அட்டை கேட்கறாரு என்று சொன்னார், உடனே தேடிப்பார்க்க ஆரம்பித்தேன், தேடாத எல்லாம் கிடைத்தது அடையாள அட்டையைத்  தவிர, நான் தேடி முடிக்கும் முன்னே என்னைய பார்த்தது ஹிந்தியிலே சொல்லிட்டு பக்கத்து இடத்துக்கு போனார், அங்கே இருந்த குடும்பம் ஒன்றும் என்னை மாதிரி மின்னணு சீட்டு வாங்கி இருந்தவர்களிடம் அடையாள அட்டை நகலை கொடுத்ததற்காக வாக்குவாதம் பண்ணிவிட்டு கடந்து போனார்.

  அவர் போனதும் கொஞ்ச நேரத்திலே டீ,காபி விற்பவர்களை எல்லாம் தவிர்த்து இன்னும் சில வீட்டு அத்தியாவசிய பொருட்கள், மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்துகொண்டு வியாபாரம் செய்ய வியாபாரிகள் வந்தார்கள், அந்த வியாபாரிகள் அனைவரும் கிட்டத்தட்ட மாற்று திறனாளிகள், ஒருவருக்கு கண் இருப்பதை கண்டுபிடிப்பதே கஷ்டம், இன்னொருவருக்கு கை மெலிந்து தட்டையாக இருந்தது, இன்னும் சில வித்தியாசமான முக அமைப்பு கொண்ட மனிதர்கள்,இவர்களின் உழைப்பு திறனை பாராட்டுவதா இல்லை இவர்களைப் பார்த்தது பரிதாப்படுவதா என்று யோசித்துக்கொண்டே நான் எந்த பொருளும் வாங்கவில்லை. என்னைமாதிரி மற்ற பயணிகளும் நினைத்தார்களோ என்னவோ,அவர்களும் எந்த பொருளும் வாங்கவில்லை. 

வண்டி சோலார்பேட்டை தாண்டியதும்,சிறிது நேரத்திலே நான் இருந்த ரயில் பெட்டி முன்பதிவு செய்யாத பெட்டியைப்போல ௬ட்டம் நிறைந்து வழிந்தது. எனது  அருகில்  இருந்த காலி இடத்தை துண்டு போட்டு பிடிக்க இருவர், இருவரில் ஒருவர் வென்றுவிட, என் அருகிலே இருந்தவரிடம் கேட்டேன். நீங்க முன்பதிவு செய்தீங்களா என்று, அவரு அதற்கு இல்லைன்னு பதில் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.

பசிமயக்கம்  கண்களை பிறட்டிகொண்டு வந்தாலும், ஏனோ ரயிலில் விற்பனை செய்யப்பட்ட தின்பண்டங்களை வாங்கி சாப்பிட பிடிக்கவில்லை. கண்களை  மூடிக்கொண்டு இருந்த சிறிது நேரத்திலே பசி மயக்கத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. எனது  சட்டைய பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, எழுந்தால் எனக்கு எதிரே பயண சீட்டு பரிசோதகர் நின்றுகொண்டு எனது அடையாள அட்டையை கேட்டுக்கொண்டு இருந்தார்,நான் எனது பக்கத்திலே இருந்தவரைப் பார்த்தேன். அவர் இல்லாமல் வேறொருவர் அமர்ந்து இருந்தார்.

பசிமயக்கம், தூக்க கிறக்கம் ரெண்டிலும் வந்த ஆத்திரத்திலே எதிரே நின்ற  
இவ்வளவு நேரமும் மாட்டு சந்தை மாதிரி பயணச்சீட்டு எடுத்தும், எடுக்காமலும் ரயில் பெட்டி முழுவதும் மக்கள் வெள்ளமா இருந்தது,அவங்களை எல்லாம் பார்த்து ஒரு வார்த்தை பேசாத நீ உண்மையிலே முன்பதிவு செய்து சீட்டு வாங்கிய என்னையப் பார்த்து அடையாள அட்டை கேட்கிற உனக்கு மனசாட்சி இல்ல என்று சொன்னேன், கொஞ்ச நேரத்திற்கு எதிரில் நின்றவர் மட்டுமல்ல, அந்தப் பெட்டியிலே இருந்த அனைவரும் அமைதியானார்கள், பரிசோதகர் என்னிடம் 

தம்பி இது உங்க பையிலே இருந்து விழுந்த கடவுசீட்டாய் இருக்கும், உனது புகைப்படத்தை பார்த்து நான் உன்னிடம் திரும்பி கொடுக்க வந்துள்ளேன் என்று சொன்னவரிடம் வேறவொன்றும் பேசாமல் கடவுச்சீட்டை வாங்கிவிட்டு அமைதியாக அமர்ந்தேன்.அதுவரை பக்கத்திலே இருந்தவர்களிடம் இந்தியன் ரயில்வே யை குறைசொல்லிகொண்டு வந்த நான் எதுவுமே பேசவில்லை, கொஞ்ச நேரத்திலே என் ரயில் பயணம் முடிந்துவிட்டது,ஆனால் இன்னும் வாழ்கைப்பயணம் முடியவில்லை.    
  
         


9 கருத்துக்கள்:

ILA (a) இளா said...

ம்ம். ஊருக்கு போனதும் நேட்டிவிட்டு கலக்குது..

John said...

ஆனால் இன்னும் வாழ்கைப்பயணம் முடியவில்லை....apadinu soogama mudicurikeenga???....

ஹேமா said...

நசர்...நேர்மையான ஒரு நல்ல அதிகாரியைப் பாத்திருக்கீங்க.
இதுவே சந்தோஷம்தானே !

ஓலை said...

நல்ல அனுபவம்.

சாந்தி மாரியப்பன் said...

ஒரு நேர்மையான இந்திய அதிகாரியை பார்த்த சந்தோஷத்துலயே உங்க பசி பறந்துபோயிருக்கணுமே :-)))))

Jackiesekar said...

Dei JCpenny lla 90 days return policy edutha t-shirt thanna padivar sandippula pottitturuntha?!?!?!

நட்புடன் ஜமால் said...

இன்று காலை எனது சிற்றுண்டி இதே நிலையில் கிடைக்காமல் போய் கொண்டிருக்கிறது ...

நல்லவர்களும் இருக்கத்தானே செய்கின்றார்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல அனுபவம்.

அமுதா கிருஷ்ணா said...

நல்ல அனுபவம்..