மணல் சிற்பி
காலையிலே எழுந்து என்ன வேலை செய்யணுமுன்னு தெரியலைனாலும் நேராக மெரீனா கடற்கரைக்கு போக ஆயத்தமானேன், போகும் முன் மாற்று சட்டைக்கு வழி இல்லாத பையன் இனிமேல பள்ளிக்கு சொல்வதில் என்று நேற்று இரவு வெகு நேரம் அழுது கொண்டே தூங்கி இருந்தவன் இன்னும் ஆள் உறக்கத்திலே இருப்பதைப் பார்த்தேன்.
தூங்கி எழுந்தும், எழும்பி செய்ய வேலை இல்லாமல், துகில்வது போல நடிக்கும் மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்து கொண்டே முந்தாநாள் பெய்த மழையின் மிச்சத்திலே கொஞ்சத்தை குடித்து விட்டு கிளம்பினேன்.
கடற்கரைக்கு ஓடி வேகமாக ௬ட்டம் வரும் முன்னே வேலையை ஆரம்பித்தேன், முதலில் காந்தியை மண் சிற்பத்தால் செய்தேன். பின்னர் உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை சிலையாய் செய்தேன், கொஞ்ச நேரத்திலே ௬ட்டம் வந்தது, அனைவரும் ரசித்தனர், அருகே நின்று புகைப் படம் எடுத்து கொண்டனர்.அனைவரின் பாராட்டு பசியை கடல் கடந்து தள்ளியது.
கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். இப்படி எதிர் பாராமல் நடந்த மகிழ்ட்சி விபத்துகளால் நிலை குலைந்து தான் போனேன்.
ஒரு கலைஞரின் வெற்றி அடுத்தவரின் பாராட்டிலே இல்லை என்றாலும், பாராட்டப் படும் போது வெற்றியின் விளிம்பை தொட்ட ஒரு ஆனந்தம்.அனைவரின் பாராட்டு மழையிலே நனைந்து நான் யாசிக்க வந்தேன் என்பதை மறந்து, வாசகர் வட்டத்திலே விழுந்து நான் சிற்பக் கடவுளானேன்.
நேரம் கடந்தது கடற்கரை ௬ட்டமும் குறைய ஆரம்பித்தது மாலையும் நெருங்கியது ,அந்தி மாலையிலே சூரியனை காணாத மேகம் மழையா விழுந்தது, காற்று படும் போது ௬ட உடையாமல் பார்த்து கொண்ட மணல் சிற்பங்கள் எல்லாம் மழையிலே கரைந்து, மண்ணோடு மண்ணாகிப் போனது.
மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.
கொஞ்ச நேரத்திலே மழையும் நின்றது, எட்டி நின்ற பசியும் வந்து ஒட்டிக் கொண்டது, எதுவும் இல்லை என்றாலும் எனக்கான இருப்பிடமான என் குடிசையை நோக்கி நடந்தேன்.
பின் குறிப்பு :
அடுத்த மாதத்திலே எனது சிற்பங்கள் மின் அஞ்சல் வழியாக அனைவரின் முகவரிகளையும் தட்டி கொண்டு இருந்தது, பூட்டு இல்லாத கதவு இருந்தும் என் வீட்டை தட்ட எவருமில்லை.