காதல் துடிப்பு
ஹாய்
தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்
ஹாய்
எழுதி கிழிச்சது நசரேயன் at 11/22/2009 10:55:00 PM 20 கருத்துக்கள்
உலகத்திலே ரெண்டாவதாக அதிக அளவிலே பேசப்படும் மொழி(அப்படித்தான் சொல்லுதாங்க), இந்தியாவிலே அதிக மக்கள் பேசப்படும் மொழி, இந்திய தேசிய மொழி(?) இத்தனை பெருமையுடை மொழி இந்தி மொழி, இப்பேர்ப் பட்ட மொழியை படிக்க முடியாமல் படிக்க முடியாமல் இழந்ததை எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்லும் அளவுக்கு திறமையுள்ள கணினி இன்றளவும் கண்டு பிடிக்கப் படவில்லை. இப்பேற்பட்ட அறிய மொழியை படிக்காமல் அழிந்து போன ஒரு ஆத்மாவின் கதை, இதை படித்து விட்டு உங்கள் கண்களிலே தாரை தாரையா கண்ணீர் வந்தா அது உலகத் தரம் வாய்ந்த இந்திக்கே சமர்ப்பணம்.
எழுதி கிழிச்சது நசரேயன் at 11/18/2009 06:10:00 PM 29 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: இந்தி, சமூகம், தமிழ், நிகழ்வுகள்
அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவங்க வீட்டிலே குடும்ப சண்டை நடக்கும், அவனோட அப்பா அந்த குடும்பத்திலே நடு, கிராமங்களில் மழை இல்லாமல் போன மனசு கொள்ளாது, அதுவரையிலே அவரவர் வேலையை செய்தவர்கள், விளை நிலங்களின் வெப்பம் பார்த்து கொதித்து போனவர்கள்,தங்களோட கோபத்தை கொட்ட வழி இல்லாமல்குடும்பத்திலே சண்டை ஆரம்பிக்கும்.
மூவரில் யாராவது ஒருத்தர் சண்டைக்கு திறப்பு விழா வைப்பார்கள், அதன் பிறகு அண்ணன், தம்பியும் இணைந்து மூவரும் இடையில்லாமல் வான் மழை இல்லாத பஞ்சத்தை வசவு மழைகளால் நிரப்புவார்கள்.
இவர்களோட சண்டையை வேடிக்கை பார்த்து விலக்கு தீர்க்க வந்தவர்களுக்கும் சில சமயங்களில் சண்டையிலே ஐய்கியம் ஆகி விடுவார்கள்,சில சமயங்களில் கணவன் மார்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும்,அவரவர்களின் மனைவி மார்கள் தனியாக சண்டை போடுவார்கள், குடுப்ப தலைவர்கள் தங்கள் சண்டையை வாயோடு முடித்து கொண்டாலும், தலைவிகளின் சண்டை குடுமிகளோடு நீண்ட நேரம் நடக்கும்.
குடும்ப தலைவர்கள் வாய் சண்டையில் மட்டுமல்ல குடியிலேயும் மன்னர்கள், சண்டை ஓய்ந்ததும் மூவரும் தனித்தனியே சாராய கடையை நோக்கி போவார்கள், குடியின் ஆரம்பத்திலே கோபத்தின் விளிம்பிலே இருந்தவர்கள், இறுதியிலே பாசத்தில் பிணைந்து சாராய கடையிலே இருந்து வரும்போது மூவரும் தோளிலே கைகளை போட்டு கொண்டு வருவார்கள். முன்பு இவர்களை வேடிக்கை பார்த்த அதே ௬ட்டம் இப்போதும் வேடிக்கை பார்க்கும்.
அவர்களின் மது மயக்கத்தின் பாசம், அது தெளியும் வரை மட்டுமே நிலைக்கும்,அதன் பின் மூவருமே அந்த சம்பவம் நடந்த சாயல் தெரியாமல் நடந்து கொள்வார்கள்.ஒவ்வொரு முறை சண்டை நடக்கும் போதும் இது ஒரு வாடிக்கையான விஷயம்.அவன் பள்ளி முடிந்ததும், நண்பர்களோடு விளையாடி விட்டு வரும்போது ஒரு வித பயத்திலே வருவான், வீட்டின் முன் ௬ட்டம் ௬டி இருந்தால் மீண்டும் விளையாட போய் விடுவான், அந்த நேரம் வீட்டிற்கு போனாலும் அவனை வரவேற்க ஆட்கள் இருந்தாலும் அவர்களின் கவனம் இவன் மேல் இருக்காது.
சிலசமயங்களில் அவன் விளையாடும் இடத்திற்கே விஷயம் வந்து விடும் வீட்டிலே சண்டையென்று, இந்த சம்பவங்களினால் அவன் பாதிக்க பட்டு, பின் பழக்கப் பட்டு விட்டான், இது அவன் அப்பாவை வெறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் சொன்னதற்கு எதிராகவே செய்து அதிலே ஆனந்தப் படுவான். நாட்கள் நகர்வது போல குடும்பச் சண்டையும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது, அவர்களின் சண்டையைப் பார்த்து சலித்துப் போனவன், யாரிடமும் சண்டை போடுவதில்லை. அவர்களின் சண்டையிலும் தலையிடுவதில்லை.
எழுதி கிழிச்சது நசரேயன் at 11/15/2009 08:12:00 PM 11 கருத்துக்கள்
என்னடா எந்நாளும் இல்லா திருநாளா, இன்னைக்கி ரெம்ப அலப்பறையா இருக்கே,ஆயிரம் மீனுக்கு வலை வீசி இருக்கேன்னு சொன்னே மீன் ஏதும் சிக்கி இருக்கா?
ஒண்ணு இல்ல மச்சான் இல்ல ரெண்டு வந்து இருக்கு, அதுவும் வடக்கூர்காரிங்க.
நம்மை எல்லாம் நாயா விட கேவலமா பாப்பாங்க, அவங்க எல்லாம், அது உனக்கு நம்பவே முடியலையே.
நீங்க இந்த விஷயத்திலே என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும் அதனால்தான் அவங்க அனுப்பிய ஈமெயில பிரிண்ட் பண்ணி எடுத்திட்டு வந்து இருக்கேன்.
எங்க குடு பார்க்கலாமுனு (ராம்நாடும், புது கோட்டையும் ஓடிவராங்க)
டேய் ராம்நாடு மெயில் பார்த்தா உண்மைனு தான் தெரியுது, அனுப்புனர் விலாசம் எல்லாம் சரியாத்தான் இருக்கு.
ஆமா எட்டப்பா, அதுவும் ஆபீஸ் ஐ.டி யிலே இருந்து வந்து இருக்கு.
டேய் கருப்பா எனக்கு ஒரு சந்தேகம், காதல் கடிதாசி எழுதுறவங்க எதுக்கு ஆபீஸ் ஐ.டி யிலே அனுப்பனும்.
எட்டப்பனுக்கு எப்போதுமே சந்தேகம் தான், என் அழகிலே மயங்கி, காதல் வெறியிலே எழுதி இருப்பாங்க.ஈமெயில் பார்த்த நிமிசத்திலே இருந்து என் ஈரக் கொலையெல்லாம் நடுங்குது.
பார்த்துடா, காதல் கை ௬டி வரும் முன்னே நீ காலாவதி ஆகிவிடாதே.
டேய் நீ மாநிறமா இருந்தும் உனக்கு உங்க ஊரு தண்ணி இல்லா காடு மாதிரி, உன் காதல் நிலம் வரண்ட பூமியா இருக்கிறதாலே என்னைப் பார்த்து பொறாமை படாதே.
எல்லாம் என் நேரம்டா இதை எல்லாம் கேட்கணுமுன்னு என் தலை எழுத்து.
டேய் ராம்நாடு அமைதியா இரு, கருப்பா இப்ப என்ன முடிவு எடுத்து இருக்கே, உனக்கு ரெண்டு துண்டு விழுந்து இருக்கு, எதையாவது ஒண்ணு எடுத்துட்டு, ஒண்ணை விடு ஆத்தேட போட்டும்.
ஆமாடா, ஒருத்தி வாழ்க்கை தான் வீணாப் போறதை எங்களால பார்த்து சகித்து கொள்ள முடியும்.
டேய் துண்டு வாங்கினவன் நான், நீங்க ரெண்டு பேரும் வாயிலே இனாமா வருதுன்னு அள்ளிப் போடுறீங்க, வாங்க தெரிந்த எனக்கு எப்படி எடுக்கணுமுன்னு தெரியும், நீங்க கொஞ்சம் அடங்குங்க.
அப்ப ரெட்டை தோணியிலே போகணுமுன்னு முடிவே பண்ணிட்டியா?
நான் அழகா இருக்கிறதாலே, அளவுக்கு அதிகமா துண்டு விழுந்தாலே, எல்லாத்தையும் கள்ளத்தோணியிலே ௬ட்டிட்டு போற அளவுக்கு பேராசைக்காரன் இல்லை, நீங்க ரெண்டு பெரும் ஈமெயில் பார்த்தீங்க, அதை இன்னும் படிக்கலை, நான் இது வரைக்கும் ஐநூறு தடவை படித்து விட்டேன். இப்ப ஐநூத்தி ஒண்ணாவது தடவையா உங்களுக்காக,மாப்பிளைகளா அவங்க பேரு எல்லாம் உங்க வாயிலே நுழையாது, அதனாலே காதலி ஒண்ணு, காதலி ரெண்டு.
காதலி ஒண்ணு:
என் கண்கள் எப்போதுமே உன்னைத் தேடும், அது உன்னோட கவர்ச்சியா இருக்குமோன்னு நினைப்பேன், ஆனா இப்ப என்னோட இதயமும் உன்னைத் தேடுது, இது காதலா இருக்குமோன்னு நினைக்கிறேன், நினைவலைகளை வானலைகளாக மாற்ற சந்திக்க விரும்புகிறேன், சனிக்கிழமை காலை 11 மணிக்கி லால் பார்க்கிற்கு வரவும்.
உங்கள் அன்புள்ள,
(பெயர் பாதுகாப்பு காரணம் கருதி குறிப்பிட வில்லை)
காதலி ரெண்டு:
மும்பையிலே இல்லாதது என்ன இங்கே இருக்கிறது என் வேலையை தவிர என்று பல ஆயிரம் முறை யோசித்து இருக்கிறேன். விருப்பம் இல்லாமல் வந்தேன், இப்போது உங்களை விரும்புவதற்காகவே வருகிறேன், உங்கள் விருப்பம் அறிய விண்ணை நோக்கி காத்து இருப்பேன் லால் பார்க்கிலே சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு
அன்புடன்,
(மேல சொன்னதுதான் இங்கேயும்)
கருப்பா நெஞ்சை பிழிஞ்சிடாங்க, எனக்கு ஒரு சந்தேகம் ஈமெயில்ல அவங்க பேரு இருக்கு, ஆனா உனக்கு எழுதுதற்குன்னு அத்தாட்சியா உன் பேரை போடலை.
ஒருவேளை புருஷன் பேரை சொல்லக்௬டாதுன்னு விட்டு
இருப்பாங்களோ
அடி செருப்பால, ஆடே அறுக்கலை அதுக்குள்ளே தலைக்கு பறக்கியோ.
எனக்கும் ஒரு சந்தேகம், அவளுங்க இங்கிலீஷ்ல எழுதி இருக்காளுங்க, அதை எப்படி கிட்டத்தட்ட தமிழாக்கம் பண்ணின.
டேய் என் ஆங்கில அறிவைப் பத்தி என்ன நினைக்குறீங்க.
அடச்சீ.. உண்மைய சொல்லு மூதேவி.
சென்னைகாரனுக்கு அனுப்பி தமிழாக்கம் பண்ணினேன்.
டேய் கடைசியிலே ரெண்டு மூனு வரிக்கு இன்னும் சரியா தமிழாக்கம் பண்ணலியே.
அது அவனுக்கே தெரியலைன்னு சொல்லிட்டான், ஆனா ஒண்ணும் பயப் படுற மாதிரி எழுதலைன்னு சொல்லிட்டான்.
சென்னைகாரனுக்கே தெரியலைன்னா வடக்கூர் காரிங்க எல்லாம் இங்கிலீஷ் புலி தான் போல.
சனிக்கிழமை போறேன், சந்திக்கிறேன், அப்புறமா முடிவு எடுப்பேன். ரெண்டிலே எது அளவுக்கு அதிகமா என் மேல பைத்தியமா இருக்கோ, அதுக்கு வாய்ப்பு கொடுத்திட்டு.
இன்னும் ஒண்ணை !!!!!!!!!!! இன்னும் ஒண்ணை !!!! (இருவரும் சேர்ந்து)
டேய் நான் இன்னும் முடிக்கலை. கொஞ்ச நாள் கழிச்சி தான் முடிவு எடுப்பேன் ரெண்டாவதை என்ன பண்ணலாமுன்னு.
அப்ப நானும் உன் ௬ட வாரேன்.
காதல் பூமியிலே கந்தக காட்டுக்கு என்னடா வேலை?
மச்சான், நீ கழட்டி விட நினைச்சதுகிட்டே எனக்கு ஒரு அறிமுகம் கொடு, உன் பேரை சொல்லி நானும் கொஞ்சம் முயற்சி செய்யுவேன். நீ வேண்டாமுன்னு சொல்லும் போது நான் துண்டை போட்டுறேன்.
அடத்தூ ....இந்த பொழைப்புக்கு நீ எல்லாம் நாண்டுகிட்டு நின்னு சாகலாம்.
கொஞ்சம் கருணை காட்டுடா.. ரெம்ப பசியா இருக்கேன்
சரி..சரி வந்து தொலை, ஆனா என் பக்கத்திலே நீ வரவே ௬டாது
நீ என்ன சொன்னாலும் கேட்டுகிறேன்.
அப்ப நான் என்ன செய்ய???
எட்டப்பா ரெண்டு தானே இருக்கு, வச்சிட்டா வஞ்சகம் பண்ணுறேன், அடுத்த முறை மாட்டிச்சினா சொல்லுறேன்.பாவம் ராம் நாடு பொழைச்சி போகட்டும்.
அப்ப அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நல்ல பிகரா தேத்து.
ராம், எதுக்கும் சனிக்கிழமை நீ குளிக்காம வா, என்னை விட நீ கொஞ்சம் அழகு குறைவா இருக்கணும், நீ என்ன என்ன பண்ணனுமுன்னு இதிலே தெளிவா எழுதி இருக்கேன். ஒழுங்கா படி, பரிச்சசைக்கு படிச்ச மாதிரி படிக்க ௬டாது.
எப்படி இப்படி?
முசப் பிடிக்கிற நாய்க்கு மூஞ்சை பார்த்தா தெரியாது(மணி அண்ணே?). அதான் முன் எச்சரிக்கையா தயார் பண்ணினேன்.
நீ ஒரு காதல் குரு மச்சான்.
(சனிக்கிழமை காலை)
டேய் ராம்நாடு கருப்பனை காணும், உன்னை விட்டுட்டு ஓடிப் போய்ட்டானா?
இல்லடா கோயிலுக்கு போய் இருக்கான், ரெண்டு பேரு பேரிலையும் அர்ச்சனை பண்ண.
அவன் அலும்பு தாங்கலைடா, அவன் ஆட்டத்தை நிப்பாட்டுடா.
சென்னைக்கரனையும் வரச்சொல்லி இருக்கான், சாயந்திரம் பெரிய விருந்தே இருக்கு.இதோ காதல் மன்னன் வந்துட்டான்
ராம்நாடு சீக்கிரம் வாடா, போய் காதல் இன்டெர்வியு போகலாம், சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா?
ஒ..எல்லாம் இருக்கு
எட்டப்பா சென்னைக்காரன் வருவான், அவனை இருக்க சொல்லு, அவனுக்கும், உனக்கும் அடுத்த முறை உசார் பண்ணும் போது பாத்துக்கலாம்.
(சனிக்கிழமை மாலை 7 மணி)
எட்டப்பா என்னடா இன்னும் கருப்பனையும், ராம்னாடையும் காணும்.
உசார் பண்ணி ஹிந்தி படம் பாக்க போய்ட்டாங்களா? அதுக்கு வாய்ப்பே இல்லை.
எழுதி கிழிச்சது நசரேயன் at 11/11/2009 11:55:00 PM 23 கருத்துக்கள்
தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்படி இருக்கும் என் அயராத பணிகளுக்கு கிடையிடையே இல்லாத மூளையை கசக்கி பிழிந்து வெள்ளாவியிலே வைத்து துவைத்த போது எழுந்தது தான் இந்த காவிய கதை, இது பல விருதுகளை பெற்று ஆஸ்கார் உட்பட தயாரித்தவர் துண்டை போடும் அளவுக்கு வந்தால் அந்த பெருமை இதை எழுதிய எழுத்தாளரை (???) யல்ல பதிவர்களையே சேரும் என்பதை மிக்க பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்.முன்னுரையோட பேரை சொல்லி ஒரு பாராவுக்கு தேத்தியாச்சி, முன்னுரை முக்கியமல்ல கதையே முக்கியமுன்னு நினைக்கிறவங்க கிழே போகலாம்.
எழுதி கிழிச்சது நசரேயன் at 11/08/2009 11:33:00 PM 28 கருத்துக்கள்
எழுதி கிழிச்சது நசரேயன் at 11/03/2009 10:45:00 PM 14 கருத்துக்கள்
வகைபடுத்தப்பட்டது: சமூகம், நிகழ்வுகள், மொக்கை