ஐ.டி யின் அவலம் - அழிச்சாட்டியம்
முதல் பாகம் வேணுமுனா இங்கே
நீ கிழிக்க கிழிப்புக்கு இதுவே போதும்னா அப்பிடியே கீழே
************************************************************
ரெண்டு நாள் கழித்து மின் அஞ்சல் வந்தது, தொலைபேசியிலே தொலை நேர்முகத்தேர்வுக்கு நாள் கேட்டு பதில் வந்தது,
மச்சான் பதில் போட்டாங்கடா!!!
நான் தான் சொன்னேன் இல்லை, அவங்களும் வேலை செய்யுற மாதிரி நடிக்கவேண்டாமா, அதுதான் கொஞ்சம் தாமதமா அனுப்பி இருப்பாங்க.
நாளை மறுநாள் ஆறு மணிக்கு மேல ௬ப்பிடுங்கன்னு பதில் போடு
அப்படியே செய்து விட்டு, "மச்சான் இன்டெர்விவுக்கு எப்படி தயார் பண்ணுவது"
"அதோ அந்த புத்தகத்தை எடுத்து படி உனக்கு தெரியும்"
"இவ்வளவு பெரிய புத்தகமா, இதை படிச்சி முடிக்க பத்து வருஷம் ஆகுமடா அதும்இல்லாம இப்ப ஒரு வாரமாத்தான் கம்ப்யூட்டர் பொட்டிய பாத்து இருக்கேன், நான்இப்பத்தாம் அதை எப்படி ஆன் பண்ணுறதுன்னு கத்து இருக்கேன்.எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"
௬ச்சப்படமா சொல்லு
எப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு
என்னது..ஆள் மாறாட்டமா?!!!!.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது
இது வரைக்கும் சொன்ன பொய்க்கு மாட்டுனா 10 வருஷம் உள்ளதான், முழுக்கநினைச்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு
சரி, எதோ நீ சொல்லுறன்னு பண்ணுறன், உனக்காக என் அமெரிக்கன் நடைபேச்சை கொஞ்சம் மாத்தி பேசுறேன்
இன்டெர்விவு அன்னைக்கு ஒரு இருபது பேப்பர் கொண்டு வந்தான், என்னை அந்தபேப்பர் எல்லாம் எடுத்து தயாரா வைக்க சொன்னான், அவங்க சொன்னநேரத்துக்கு போன் வந்தது அவங்க கிட்ட என் முழு விபரமும் சொல்லி,கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கு ஒரு நம்பர் சொல்லுவான், நான்அந்த பக்கத்தை எடுத்து காட்டுவேன், அதை அப்படியே படிச்சி பதிலாசொல்லுவான். அப்படியே அவங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில்சொல்லிட்டான்.அவங்களும் முடிச்ச உடனே வழக்கம் போல "எங்க ஹெச்.ஆர்சீக்கிரம் ௬ப்பிடுவாங்கனு சொல்லிட்டு வச்சி புட்டாரு
எல்லாம் முடிந்த உடனே நான் மச்சான் நீ பிட்டு அடிக்கிற பழக்கத்தை விடவேஇல்லையா!
"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "
அடுத்த நாளில் மெயிலில் வேலைக்கு சேர வேண்டிய உறுதி சான்றிதல் அனுப்பிஇன்னும் ஒரு வாரத்திலே வந்து சேரும் படியும், நான் முன்பு சம்பாத்திததை விட 500 மடங்கு அதிகம் சம்பளம் கிடைத்தது
வேலைக்கு சேரும் நாளில் மெயில்லில் வந்த உறுதி சான்றிதழைஎடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றேன், அதிலே தொடர்பு கொள்ளவேண்டிய பெண்ணை வரவேற்ப்பு அறையிலே சொன்னதும் என்னைஅமரச்சொன்னர்கள். கொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். அவள்என் பெயர் சொல்லி அழைத்தாள், நான் இன்னும் அவள் அழகை ரசித்து முடிக்காதநிலையிலே அவள் பேசிய ஏதும் என் காதிலே விழவில்லை.
மீண்டும் மிஸ்டர் நாசாரேயா..நாசாரேயா
வடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள், அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்,அதற்குள் நண்பன்சொல்லிய குல தெய்வம் ஞாபகம் வரவும் ரசிப்பை நிறுத்தினேன், அவளிடம்என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவள் என்னை அழைத்தாலே அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன். இவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.அடிக்கடி குலதெய்வம் கண்ணுக்கு வரவே என் மனசுலேஉள் ஒதுக்கீடுக்கு வழி இருந்தும் வெளி நடப்பு செய்தேன்.
அலுவலக விதி முறைகள் அடங்கிய நிரல் ஒன்றை குடுத்து படிச்சிட்டுகையெழுத்து போடுங்க என்று சொன்னாள். அதிலே இருந்த இங்கிலிபிசு ஏதும்புரியாம ஆர்வமா எழுத்து ௬ட்டி படிச்சேன், ஒரு வரி படிச்சி முடிக்கும் முன்னாடிஅஞ்சு நிமிஷம் ஆகிப்போச்சு.இதுக்கு மேலும் தாமதிச்சா உண்மை தெரிஞ்சுபோகுமுன்னு கைஎழுத்து போட்டு கொடுத்தேன், அவள் என்னை நேராகப்ராஜெக்ட் டமாஜரிடம் அறிமுகபடுத்து விட்டு சென்றாள். அவள் போனாலும்அவள் மனுசுல ஏற்படுத்திய அலை ஓய அரை மணி நேரம் ஆச்சி .பல் இருக்கவன்பக்கடா தின்பான்னு நான் என்னை சாந்தப்படுத்தி அமைதியானேன்
அடுத்த அரை மணி நேரத்திலே டமஜெர் அழைத்தார், உங்களுக்கு html தெரியுமா?
எனக்கு டமில் மட்டும்தான் தெரியுமுனா சொல்ல முடியும், என்ன கேட்டாலும்தெரியுமுன்னு சொல்லுன்னு நண்பன் சொன்னதாலே ஆமா என தலைஆட்டினேன்
ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பொட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு. என் அலைபேசி ஒலித்தது
எதிர் முனையில் நண்பன் எடுத்ததும் "மச்சான் முதல் நாள் வேலை எப்படி?"
"ஹும்..எதோ போகுது, நான் அட்டை பெட்டியை எடுத்துகிட்டு தையல் கடைக்குபட்டன் வாங்க போறேன்"
"என்னடா சொல்லுறா?"
"ஆமா மச்சான் கேமேல் தெரியுமான்னு கேட்டாரு டமஜெரு, ஆமான்னுசொன்னவுடனே டேபிள் போட்டு ரெண்டு பெட்டி வச்சி பட்டன் போடசொல்லிட்டாரு, ஒட்டகம் தெரிஞ்சா டேபிள் லும்,பெட்டியும் பட்டனும்போடனுமா? , இங்க ஒட்டகப்பால் காச்சுவாங்கனு சொல்லவே இல்லை
"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொன்னது html , நான் உன் மெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு"
போட்டியை கீழே போட்டுவிட்டு அலுவலகம் சென்று நண்பன் அனுப்பியதுஅவரிடம் காட்டினேன்.
அவரு "ரெம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்" வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.ஒரு வழியாக அன்றை பொழுது கழிந்தது, அடித்து பிடித்துவீட்டுக்கு ஓடினேன்.என் நண்பன் ஏற்கனவே வீட்டிருக்கு பாட்டிலோடு வந்துஇருந்தான்,நான் கையில் வைத்து இருந்த சாப்பாடு முடிச்சை பார்த்து
"என்ன மச்சான் சாப்பாடு கட்டி கொண்டு வந்து இருக்கே"
கொஞ்சம் பசியா இருந்தது,அதான் வாங்கிட்டு வந்தேன்.
என்னது
இட்லி
நீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்
நாம்ம அரசாங்க ஆஸ்பத்திரியிலே வாங்கி குப்பையிலே போடுதை பொட்டியிலே வச்சி கொடுகிறதையும், இந்த பூச்சி கொல்லி மருந்தையும் குடிகிறதுதான் நாகரிகமா?
ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு
இவ்வளவு இருக்கா, இதையே ஒரு பாடமா வச்சா ௬ட தேவலாமுனு தோனுது.
தண்ணியை போட்டுட்டு தூங்கினாலும் நாளைக்கு நடக்க போறதைநினைத்து வயத்தை கலக்கி கொண்டு இருந்தது, நான் எதிரி பார்த்த மாதிரியே மறுநாளும்
(நாளையும் வரும்)