கல்லூரி முடிச்ச உடனே எல்லாரையும் போல சென்னைக்கு பெட்டியை கட்டிக் கிட்டு வந்தேன்.ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான சென்னை நண்பனுடன், இத முறை ராமநாதபுரம் நண்பனையும் அறிமுகம் செய்ய வேண்டிய இருக்கு, ஏன்னா அவரு எனக்கு முன்னாடியே வந்து சென்னையிலே துண்டை போட்டு ஒரு குளிர் சாதன பொட்டி தயாரிக்கிற அலுவலகத்திலே வேலையும் வாங்கிட்டாரு,அவரை தொடர்ந்து லால்குடி நண்பனும் அதே அலுவலகத்திலே வேலை வாங்கிட்டாரு.
"மச்சான் சி.வி கொடுத்த உடனே வேலை டா, அதனாலே நீ நாளைக்கு அலுவலகத்துக்கு வா"
அவங்க சொன்னதிலே எனக்கு வேலை கிடைச்சமாதிரியே ஒரு நம்பிக்கை வந்தது, அடுத்த நாள் நண்பனின் அலுவலகத்திற்கு சென்றேன். சி.வி எல்லாம் வாங்கி பாத்து விட்டு, ௬ப்பிடுறோம் உக்காருங்கன்னு சொன்னங்க.
கொஞ்சம் நேரம் கழிச்சி உள்ளே ௬ப்பிட்டாங்க, உள்ளே போனேன் ஒரு ஆள் நாற்காலியிலே உக்கார்ந்து இருந்தாரு,என்னையும் உக்கார சொன்னாரு.
வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு
என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு.
"நீங்க கேட்டது எனக்கு புரியலை சார்" ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன்.
இப்படி சொன்னதும் கையிலே இருந்த சி.வி கீழே வச்சிட்டு என்னை ஒரு பார்வை பாத்தாரு
"யப்பா நான் நீ படிச்ச பாடத்திலே இருந்து கேட்கலை, நீ எங்க தங்கி இருக்கன்னு கேட்டேன்"
முதல் கேள்வியிலே உண்மை வெளி வந்துவிட்டதேன்னு கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் அவரு ரெம்ப நல்ல மனுஷன் என் மேல உள்ள அபார நம்பிக்கையாலே ரெண்டாவது கேள்வியை கேட்டாரு.
பான்(fan) எப்படி சுத்துது?
இப்படி ஒரு கஷ்டமான கேள்வியை எதிர் பார்க்காத மாதிரி நடிக்க வேண்டிய கடமை, வேற வழி அவரு என்ன கேட்டாலும் பதில் சொல்லத் தெரியாதுன்னு எனக்கு தானே தெரியும்,பயங்கரமா யோசிக்கிற மாதிரி யோசனை பண்ணி.
"சுவிட்ச் போட்டா ஓடும் சார்"
அவரு "வாட்?"
நான் சொன்னது சரியா கேட்கலைன்னு நினைச்சுகிட்டு, ரெம்ப சத்தமா
"சுவிட்ச் போட்டா ஓடும்" ன்னு மறுபடியும் சொன்னேன்.
என் பதிலுக்கு என்ன பதில் சொல்லன்னு அவருக்கு தெரியலை, அமைதியா மேசையிலே இருந்த தண்ணியை எடுத்து குடிச்சாரு.
நான் சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன் எனக்கு ஒரே சந்தோசம்.
ஏன்னா தண்ணியை குடிச்சு முடிச்சு விட்டு அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்தார்.
இளநிலை மின்னணு பொறியாளர் அதாவது விளக்கமா சொல்லனுமுனா Electronics and communication engineering படிச்ச எல்லோருக்கும் தெரியும் Digital signal processing எவ்வளவு கஷ்டமுன்னு, அதிலே இருந்து அவரு ௬ச்சமே படமா ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு
ஒரு கேள்விக்கு நல்ல முறையிலே பதில் சொன்னதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை ன்னு மனசுல நினைச்சுகிட்டு, என்ன பதில் சொல்ல ன்னு யோசித்து பார்த்தேன். ஒன்னும் பிடி படலை.
ஒரு புது முயற்சியா "சிலபஸ்(Syllabus) ல இல்லன்னு" சொல்லிபுட்டேன்.
இதை சொன்ன உடனே அவருக்கு ஒரே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது, அங்கே அலுவலதிலே வேலை செய்யும் ஒருத்தரை ௬ப்பிட்டு பாட புஸ்தகத்தையும் சிலபஸ்ம் எடுத்து என்கிட்டே காட்ட சொன்னாரு.
உண்மையை கண்டு பிடிச்சுட்டாங்கன்னு மன்னிச்சுடுங்கோ உங்களுக்கு சிலபஸ் தெரியாதுன்னு சொல்லிபுட்டேன்.
என்னை கேள்வி கேட்டவரு என்னிடம் ஏதும் சொல்லலை, என்னிடம் சிலபஸ் காட்டின நபர்
"நீங்க வீட்டுக்கு போகலாம், நாங்க சீக்கிரம் சொல்லி அனுப்புகிறோம்" ன்னு சொல்லி விட்டார்.
ஒரு வழியா வேலை கிடைச்ச சந்தோசம், இனிமேல நண்பர்களிடம் அலுவலகம் செல்வதற்கு தேதி கேட்டு கொள்ளலாம் என மனதில் நினைத்து கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினேன்
இரவு 10 மணியாகியும் நண்பர்கள் வீடு வந்து சேர வில்லை, ஒரு வழியாக 11 மணிக்கு வந்தார்கள்.
மச்சான் எப்படி என திறமை நான் சந்தித்த முதல் தேர்விலே வெற்றி, உங்களுத்தான் நன்றி சொல்லணும்,அதனாலே நீங்க வர முன்னாடியே சரக்கு வாங்கி வைத்து விட்டேன்.
இருவரும் என்னை ஏற இறங்க பார்த்தார்கள், எதுவும் பேசாமல் உள்ளே சென்று நண்பர் போர்வையை எடுத்து வந்தார்.
"எதுக்கு டா, துவைக்க போகிறாயா?" ன்னு கேட்டு முடிக்கலை.
என தலையிலே போட்டு என்னை துவைக்க ஆரம்பித்தார்கள், அடிக்கும் போதே
"கொலைகார பாவி.. கொஞ்சம் விட்டா ஒரு ஆளை கொலை பண்ணி இருப்பே, உன்னை கேள்வி கேட்டு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி, அவருக்கு மாரடைப்பே வந்து விட்டது".
நல்ல வேளை உயிருக்கு பயப்படும் படி ஏதும் இல்லன்னு தமிழ் பட டாக்டர் மாதிரி சொன்னான், எனக்கும் கொலை பழியிலே இருந்து விடு பட்ட சந்தோசம்.
என்னை துவைத்தத்தில் சோர்வு ஆகி உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தார்கள், அதிலே என்னையும் ஊறுகாயாய் சேர்த்து கொண்டார்கள். அடுத்த நாள்களில் வேறு அலுவலகங்களுக்கு நேர்முகத் தேர்விருக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன்.
அடுத்த இரு மாதங்களில் நான் கற்று கொண்ட பாடம்.
"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம்.