கனடிய தமிழ்
125 parkway forest drive,don mills அப்படின்னு விலாசத்தோட டொரோண்டோ விலே இறங்கி குடியேற்ற துறையை கடந்து வெளியே வந்தேன், பெங்களூர், சென்னையையும் தவிர வேறு ஊருக்கு செல்லாத நான் வெளிநாட்டுக்கு வந்து இறங்கியதும் அடி வயறு கொஞ்சம் கலங்கி தான் போச்சி, விமானத்திலே குடிச்ச வெளி நாட்டு சரக்கு தான் காரணமோன்னு யோசித்து கிட்டு நிற்கும் போது
"தம்பி நீங்கோ எங்கே போகணுமுன்னு" மீசை இல்லாத நண்பர் ஒருவர் என்னிடம் தமிழிலே என்னிடம் பேசினார்.நான் ௬ட வடக்கூர் காரரா இருப்பார் போல, ஆனா அவங்க எல்லாம் தமிழ் தெரிஞ்சாலும் தமிழ் நாகி ன்னு சொல்லுவாங்களேன்னு யோசித்து கொண்டு இருக்கும் போதே "எங்கே போகணும்" னு கேட்டார், நான் விலாசத்தை காட்டி டான் மில்ஸ் போகணும், அது எங்க இருக்குன்னு தெரியலை, அலுவலகத்திலே டொரோண்டோ வரைக்கும் தான் பயணச் சீட்டு எடுத்து கொடுத்தாங்க ன்னு சொன்னேன்.
இங்கே பக்கத்திலே தான் இருக்கு, நான் உங்களை டாக்ஸி யிலே ௬ட்டிட்டு போறேன்னு சொன்னாரு, நான் உடனே "நீங்க எந்த ஊரு?"
அடுத்த நாளிலே இருந்து அலுவலகத்திலே ஆணி பிடுங்கும் வேலையை ஆரம்பித்தேன், முதல் நாள் நுழையும் போதே அலுவலகத்திலே வேலை பார்த்த பாதுகாப்பு காவலர் என்னைப் பார்த்து "எப்படி இருக்கீங்க தம்பி" ன்னு கேட்டார். ௬ட வந்த மனவாடு என்னை விட கருப்பா இருந்தாலும் அவருக்கு தமிழ் தெரியாதுன்னு எப்படி கண்டு பிடிச்சாருன்னு தெரியலை.
எங்கே போனாலும் தமிழன்னு கண்டு பிடிச்சிடுறாங்கன்னு இங்கே இருக்கிற கருப்பு அண்ணாச்சி மாதிரி முடியை பல வழிகளிலே மாத்தி, மீசை எடுத்து பார்த்தேன் ஒண்ணும் தேறலை. இதற்கிடையே அலுவலத்திலே முதல் நாள் சந்தித்த இலங்கை நண்பரும், நானும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம், நிறைய கதைக்க ஆரம்பித்தோம்.
நான் தம் அடிக்க போகும் போது சும்மாவே ௬ட வருகிறாரேன்னு அவருக்கு புகைக்க கத்து கொடுத்தேன், கொஞ்ச நாள்ல வட்டமா, சதுரமா எல்லாம் புகையை விட்டு எனக்கு காட்டினர், அதே மாதிரிதான் சரக்கும், பீர் அடிக்க சொல்லி கொடுத்தேன், எனக்கு அவரு ஹாட் அடிக்க சொல்லி கொடுத்தாரு, இப்படி உலக மகா நல்ல பழக்க வழக்கங்களை எல்லாம் கத்துகிட்டோம்.
ஒரு ஆறு மாசம் நாங்கள் இருவரும் டொரோண்டோவை சுத்தினோம். இடைப் பட்ட காலத்திலேயே ஊரிலே பெண் பார்க்க என்னோட புகைப்படம் அனுப்பி இருந்தேன், அவங்க எல்லாம் என்னோட புகைப் படம் பார்த்து விட்டு எங்க ஊரு திசைக்கே தலை வச்சி படுக்கிறதில்லை என கேள்விப்பட்டு வேற வழி இல்லாம ஊருக்கு போக வேண்டிய நிலைமை.அலுவலகத்திலே சொல்லி இரண்டு மாதத்திலே ஊருக்கு செல்ல வேண்டும் என்று உறுதியானது.
நான் ரெண்டு மாசத்திலே ஊருக்கு போறன்னு சொன்னதும், அலுவலகத்திலே வேலை பார்த்த பாதுகாப்பு காவலர் நண்பருக்கு கவலையாய்ப் போய்விட்டது, என்ன விசயமா ஊருக்கு போறீங்க, நான் பொண்ணு பார்க்க ஊருக்கு போறேன்னு சொன்னேன். இவ்வளவு தானே கவலைய விடுங்க, நான் உங்களுக்கு டொரோண்டோ தமிழ் பெண்ணை பார்த்து கட்டி வைக்கிறேன்னு சொன்னாரு.ஓசியிலே கனடா குடியுரிமை வாங்கி நிரந்தரமா இங்கேயே தங்கலாம் என்று ஒரு முடிவு எடுத்து நானும் சரின்னு சொன்னேன்.
அடுத்த வாரத்திலே ஆசிய மக்கள் அதிகமா இருக்கிற ஸ்கார்பொரோவுக்கு என்னை அழைத்து சென்றார்.சென்னையை தாண்டி விட்டாலே தமிழையும் அங்கேயே விட்டுட்டு போற என்னைப் போன்ற தமிழ்வாதிகளுக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான், கண்டம் விட்டு கண்டம் வந்து தமிழிலே "பூம்புகார் மளிகை கடை" என்று தமிழிலே விளம்பர பலககைகள் பார்க்கும் போது,பார்க்கும் போது சந்தோசமா இருந்தாலும், கொஞ்சம் பொறாமையாவும் இருந்தது, இலங்கை தமிழர்களிடம் தமிழ் மொழி மேல இருக்கிற நம்பிக்கை, தைரியத்திலே பாதி அளவு ௬ட இல்லை, அவர்களோட தன் நம்பிக்கையைப் பார்த்து தான் எனக்கே தமிழில் எழுதும் ஆர்வம் வந்தது(மேல இருக்கிற ரெண்டு வரி எழுத்துப் பிழை இல்லாம இருக்கு, இடுகைக்கு அதான் கணக்கு, வேற இடத்திலே இருக்கிறதை சுட்டி காட்டினால் ஆட்டத்திலே சேத்துக்க மாட்டேன்)
அதோட நிற்காம, ஒருத்தர் தமிழர் என்று தெரிந்தால் தமிழிலே மட்டுமே தான் பேசுவது என்று முடிவு எடுத்தேன், இங்கிலிபிசுல சரியாப் பேச வராது என்பதை எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிய இருக்கு பாருங்க.
சரி அடுத்த பெண் யெங் தெருவிலே இந்த வார இறுதியிலே நடக்கிற தெற்கு ஆசிய கலைவிழாவுக்கு வந்து பார்க்க சொல்லி இருக்காங்க, மரண அடி விழுந்தாலும் முயற்சியை தளர விடாம ஓடுற நான், அவரு சொல்லி முடிக்கும் முன் தலையை ஆட்டினேன், அண்ணா என்னோட புகைப்படம் மட்டும் கொடுக்க வேண்டாம், என்னோட அழகை நேரிலே காட்டி அதிர்ச்சி கொடுக்கணுமுன்னு சொன்னேன்.நான் கடைசியிலே சொன்னதை எல்லாம் காதிலே வாங்காம அவரு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
வார இறுதியிலே அங்கே சென்றேன், அங்கே வடக்கூர் இசை குழு ஒன்று கச்சேரி ஹிந்தி பாட்டுகளை போட்டு எல்லோரிடமும் கை தட்டு வாங்கி கொண்டு இருந்தார்கள், அவங்க ஆட்டம் முடிஞ்ச உடனே நம்ம ஊரு, சத்தியமா தமிழ் நாட்டு காரங்க இல்லை, இலங்கை தமிழர்களின் இசை கச்சேரி ஆரம்பித்தது, மன்மத ராசா பாட்டு வெளி வந்து தமிழ் நாட்டை கலக்கி கொண்டு இருந்த நேரம், முதல் பாட்டு அந்த பாட்டுதான், பாட்டோட இசையை கேட்டதும் வேடிக்கை பார்க்க வந்த வெள்ளையம்மா, வெள்ளையப்பன், கருப்பம்மா, கருப்பையன் எல்லாரும் ஆட்டம் போட ஆரம்பித்தார்கள்.
ஆட்டம் பாட்டு எல்லாம் முடிந்து திரும்பி பார்த்தால் நண்பரை காணவில்லை,அவரோட அலைப் பேசியை தொடர்பு கொண்டேன், அது நேராக குரலஞ்சலுக்கு சென்றது.ரெண்டு மணி நேரம் தேடிட்டு வீட்டுக்கு வந்தேன்.அடுத்த நாள் காலை சந்தித்து விவரம் கேட்டா, நீ தான் மாப்பிள்ளை என்று உன்னை காட்டுற வரைக்கும் நல்லா இருந்தா, உன்னையப் பார்த்த உடனே சி.என் டவர்க்கு போய் தற்கொலை பண்ணுவேன்னு சொல்லிட்டு போய்ட்டா, அவ கையிலே காலிலே விழுந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியிலே விமான நிலையம் போய் எதோ ஒரு விமானத்திலே ஏறி எங்கோ போய்ட்டா,நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், இனிமேல உங்களுக்கு பெண் பார்த்தது போதுமுன்னு.அதோட பெண் பார்க்கிற வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஊருக்கு போக ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.
ஊருக்கு திரும்பி செல்லும் நாளும் வந்தது, அவர் என்னை விமான நிலையம் வரை வந்து வழி அனுப்ப வந்தார்,இவ்வளவு நாளா நாம சுத்தி இருக்கோம்,உங்களோட புகைப்படம் ஒண்ணை தாருங்கள் என்று சொன்னார். பாசத்திலேயும் உங்களை மிஞ்ச முடியாது போல ன்னு நினைச்சி கிட்டு கொடுத்தேன், வாங்கிட்டு என்னை வழி அனுப்பிவிட்டு நான் பயணச்சீட்டு வாங்கிட்டு உள்ளே செல்லும் போது, பிற்காலத்திலே கனடாவிலே ஆட்குறைப்பு செய்ய நினைத்தால் என்கிட்டே நல்ல திட்டம் இருக்கு ன்னு சொன்னார், என்ன திட்டம் அதுன்னு கேட்டேன்.