திமுக பெயர் மாற்றம் -கலைஞர் அறிக்கை
கழக உடன் பிறப்புகளே,
1949 ல் இருந்து கழகத்திலே என்னை இணைத்து இன்று வரை எனக்கு இட்ட பணியை மனநிறைவோடு செய்து வருகிறேன். கழகம் 1967 முதல் முதலா அரிதி பெரும்பான்மையாக அரியணையிலே ஏறிய போது அண்ணாவுக்கு தோள் கொடுத்தேன். அடுத்த இரண்டு வருடத்திலே அண்ணா இந்த பூஉலகை விட்டு விட்டு கழக பணிகளை என் தோள் மீது இறக்கி வைத்து விட்டு இந்த தம்பியை பிரிந்து சென்றார். அண்ணாவிற்கு பின் கழக தலைமையை ஏற்று நடத்த நான் பட்ட இன்னல்கள் என்னில் அடங்கா.வாழ்க்கை ஓட்டப் பந்தயத்திலே முன்னால் வர தீயை தீண்டினேன். தென்றலை தாண்டியதில்லை.
முயற்சியிலே மனம் தளராமல் ஓடினேன், கை மேல் பலனாய் அண்ணாவின் மறைவுக்கு பின் கழக தலைமைக்கும், மக்கள் தலைமைக்கும் முதல்வன் ஆனேன். அன்றிலிருந்து அரியணையை காக்கவும், கழகத்தை காக்கவும் நான் கடந்து வந்து காட்டு பாதைகளை நினைக்கும் போது கண்கள் பனிக்கவில்லை, இதயம் இனிக்க வில்லை.
கழகப் பொருளாளர் அண்ணன் எம்.ஜி,ஆர் கழக கணக்கு வழக்குகளை பற்றிய விவகாரங்களை கேட்டதும், அரியணை போட்டியிலே எனக்கு அடுத்து நிற்கும் நண்பனை புறம் தள்ள கட்சியிலே இருந்து நீக்க வழி செய்தேன்.சென்றவர் திரும்பி வந்தார் புது அணியாய், அதுவரை காங்கிரஸ் கட்சியோடு மல்லு கட்டிய கழகம், புது கழகத்தோடு மல்லு கட்ட ஆரம்பித்தோம்.விளைவு விட்டு தந்தேன் அரியணையை, காத்து இருந்தேன் பத்து வருடம் இலவு காத்த கிளி போல. இந்த இடைப்பட்ட காலத்திலேயே எனது போர் வாளாக இருந்த கழகத் தூண் தம்பி வைகோ சுறாவளியாகவும், சுனமியாகவும் கழகத்தை கலக்கினார்.
கழகத்தை கலக்கிய போர் வாள் அரியணைக்கு வெகு பக்கத்திலே தென்றலாய் வந்த அவரை புயலாய் விரட்டி அடிக்க வேண்டிய சோதனை, சோதனையும் வேதனையும் என்னை கொல்ல, நானே கொலை குற்றம் சாட்டினேன், நாடு நன்மையடைய, மக்கள் வளம் பெற, வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததாக போர் வாளை திருப்பி அனுப்பினேன், வாளாய் போனவர் வந்தார் புது அணியாய், வாழையடி வாழையா தொண்டு செய்ய செயல் வீரர்களை அனுப்பினேன், கடமையை செய்து புது கழகத்தை உடைத்தார்கள். வாள் வெற்று பலூன் ஆனது.
திராவிட கழகத்திலே இருந்து அண்ணா, திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றை மட்டுமே உருவாக்கினார், ஆனால் நானோ அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு பெரிய கிளை கழகங்களை உருவாக வகை செய்தேன்.
கழகப் பணிகளை திறம்பட செய்ய குடும்பத்தையும், கழகத்தையும் இணைத்தேன், மா மனிதன் மாறன் வந்தார், அவர் பின் இளைய மாறன் வந்தார்,வந்தவர் உண்ட வீட்டுக்கு பிண்டம் வைத்தார், உதறி தள்ளினேன், ஓரம் கட்டினேன்.அடிப்பது போலே அடித்தேன், அழுவது போல அழுது கழகத்திலே மீண்டும் இணைத்தேன்.முத்தவன் இந்திய தாய்க்கும், இளையவன் தமிழ் தாய்க்கும் கடன் பட கட்டளை இட்டேன். கனவாய் வந்த கானல் நினைவாய் நடை முறையானது.
கடந்த 60 பது வருட பொது வாழ்வு பணியிலே நான் கடந்து வந்த பாதைக்கு அன்பும், ஆதரவும் தந்த உடன் பிறப்புகள், இந்த மாற்றத்திற்கும் இனி வரும் மாற்றத்திக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே கழகத்திலே பெயரை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி எனப் பெயர் மாற்றம் செய்து பொது குழுவில் பேராரசியர் அன்பழகன் முன் மொழிந்த தீர்மானத்தை நான் வழி மொழிகிறேன்.
ஆகையால் இன்றிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம், திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என் அழைக்கப்படும், இந்த சந்தோச சமயத்திலே தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாரு கொண்டாட அவைத் தலைவர் அன்பழகன் கேட்டு கொள்கிறார்.
அடுத்து வரும் தீர்மானமாகிய உதய சூரியன் படத்திலே எனது படத்தை இணைக்க பொது குழுவிலே எடுத்த முடிவுக்கு நான் உடன் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம் என நானே கேட்டு கொள்கிறேன்.
இனிவரும் காலங்களை எனது சந்ததியரும்,எனது தமக்கையார் சண்முக சுந்தரம்மாள், பெரிய நயம் அம்மாள் சந்ததியரும் கழகப்பணிகளில் தங்கள் திருப்பாதங்களை பதித்து தமிழ் தாய்க்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டு செய்வார்கள் என்பதையும் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்,
திரு.மு.கருணாநிதி