ஐ.டி அவலம் - சங்கு
மொத ரெண்டு பாகம் பாகம் 1,பாகம் 2
மத்தபடி மொக்கை கிழே
***************************************************************
காலையிலே அலுவலகம் கிளம்பும் போது வயறு புளி சாதம் கிண்ட முடியாத புளியை கரைக்கும்.ஆனாலும் கடமை தவறாம செல்வேன், அன்றைக்கு போன உடனே ஹெச்.ஆர் அழகி என்னைப்பார்த்து வணக்கம் சொன்னங்க. நானும் வணக்கம் சொல்லி விட்டு போக போனேன், மறுபடி என்னை ௬ப்பிட்டு
"உங்க பழைய டாமேஜர் எப்போதும் பிஸி யா?"
நாயர் கடைக்கு போன் போய் இருக்கு, அவன் சொன்ன மாதிரியே செய்து இருக்கிறான். அவனுக்கு நல்ல கடையிலே டீ வாங்கி கொடுக்கணும்
"ஆமா, சில சமயம் எனக்கே சந்தேகம் வரும், அவரு உண்மையிலே தூங்கு வாரான்னு"
"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்"
இப்படி ஒரு தர வரிசையை நான் அப்பத்தான் கேள்வி பட்டேன், நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய "பல் இருக்கவன் பக்கடா தின்பான்."
அவரு பேரை சொல்லி "ரெம்ப நல்ல மனுஷன்"
நான் அவரை கனவுல ௬ட பாத்தது கிடையாது, இருந்தாலும் அவங்களுக்கு ஆமா சாமி போட்டு வச்சேன், நான் அடுத்த முறை போன் பண்ணினால் உங்களை பத்தி சொல்லுறேன்.
"சோ ஸ்வீட்"
அதை கேட்டு மனசு காரமாகி போச்சி, அப்படியே பொடி நடையா இருக்கைக்கு சென்றேன்.அடுத்த அரை மணிநேரத்திலே அலுவலகம் பிஸி ஆகிவிட்டது, டேமேஜர் என்னிடம்
"நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் ,மெயில் அனுப்பிய லிங்க்ல இருக்கிற பயிலை டவுன்லோட் பண்ணி சேவ் பண்ணுங்க"
இந்த அட்டு கருப்புலேயும் நான் சேவ் பண்ணாது தெரிஞ்சு போச்சேன்னு ரெம்ப அவமான போச்சு, முதல்ல போய் சேவ் பண்ணிட்டு வருவோமுனு கடைக்கு போய் சேவ் பண்ணிட்டு வந்தேன்.
நான் திரும்பி வந்த பத்து நிமிசத்திலே டாமேஜர் என்னிடம்
"பையில் என்ன ஆச்சி?"
"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"
என்ன!!!
நான் திருப்பி சொன்னேன் "சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"
வேகமா என் பக்கத்திலே வந்தாரு.
நான் கண்ணத்தை தடவி கொண்டு "பாருங்க சேவ் பண்ணிட்டேன்"
அவரு எதுவும் பேசாமல் என்னை ரூம் க்குள்ளே வரச்சொன்னார்
உள்ளே போனதும்
உங்களுக்கு asp தெரியமா?
ம்ம்..தெரியும்
என்ன அது ?
a..s..p.
அப்பவே கண்டு பிடிச்சிட்டாரு நான் பொட்டி கடையிலே ௬ட வேலை பார்க்கவில்லைனு,நீ இந்த இடத்தை விட்டு வெளியே வராதேன்னு சொல்லிட்டு வெளியே போனார், கொஞ்ச நேரத்திலே அலுவலக செக்யூரிட்டி வந்தார்.
"சார், உங்க பைய எடுத்து கிட்டு நீங்க கிளம்பலாம்,உங்களை வேலையை விட்டு தூக்கியாச்சி"
நான் என்னத்தை சொல்ல அவரு ௬ட பையை எடுத்து கிட்டு கிளம்பினேன், நான் போகும் போது யாரவது என்னைப் பார்கிறார்களான்னு எல்லோரும் உலக பிஸி யா வேலை செய்து கொண்டு இருந்தனர்
சட்ட சபையிலே குண்டு கட்டா தூக்கி போடுற மாதிரி எல்லாம் செய்யலை, மரியாதையா கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினாங்க, வெளியே வரும் போது வேலை தேடி நின்று கொண்டு இருந்த பெண்கள் என்னை பரிதாபமா பார்த்தாங்க, வேலை போனதை விட அது பெரிய அவமானமா இருந்தது.
இப்ப என்ன செய்ய வீட்டுக்கா?? சரக்கு அடிக்கவா ??
ஒரு சோக வெறி மனப்போரட்டம். கையை ஆட்டி யோசனை செய்து கொண்டு இருந்த என்னை பார்த்த ஒரு ஆட்டோ நண்பர்
"சார், ஆட்டோ வேணுமா"?
ஆட்டோ விலே ஏறிவிட்டேன்
"எங்கே போனும்"
"தண்ணி அடிக்க"
"எந்த பார்?"
"எதோ ஒன்னு" வழியிலே ஒரு இடத்திலே நிறுத்தி
"சார், இங்க நல்லா இருக்கும்"
"போகலாம் அண்ணே, நான் தனியா அடிக்க மாட்டேன், நீங்களும் வரணும்"
அடுத்த ரெண்டாவது வினாடி, நானும், ஆட்டோ நண்பரும் அரை குவாட்டரை காலி பண்ணி விட்டோம்.என் கதையை கேட்ட அவரு சோக மலை ஆகிவிட்டார், அடுத்த ரவுண்டுக்கு என்னை காசு கொடுக்க விடலை, என் கிட்ட காசு வேற இல்லை என்பது வேற விஷயம். அடுத்த அரை மணி நேரத்திலே அவருக்கு 500 ரூபாய் காலியாகி விட்டது, கொஞ்ச நேரத்திலே கடைக்கு வாரவங்க, போறவங்ககிட்ட கிட்ட எல்லாம் என் சோகத்தை சொல்லி ஒப்பாரி, அவரோட ஒப்பாரிலே யாருக்கு வேலை போச்சுன்னு எனக்கே சந்தேகம் வந்தது.
ஆட்டோ காரர் பணத்தை எல்லாம் சரக்கு முழுங்கி விட, நாங்க ரெண்டு பேரும் தள்ளாடி வெளியே வந்தோம், வெளியே வந்து பிரிவு உபச்சாரமா இலவச அழுகை காட்சி காட்டினோம், எங்க பாச மலரை பார்த்த வங்க எப்படி எங்களை அடிக்காம விட்டாங்கன்னு இன்னும் எனக்கு சந்தேகம்.
ஆட்டோ காரர் என்னை வீட்டிலே விடாம போகமாட்டேன்னு ஒரே அடம், தண்ணி பாசத்தை கட்டு படுத்த முடியுமா, நானும் சரி சொல்லி ஆட்டோ பக்கம் போனோம், ஆட்டோ நின்ன இடத்திலே ஒரு தெரு நாய் படுத்து இருந்தது, ஆடோவை எவனோ ஆட்டையை போட்டுட்டு போய்ட்டான், தண்ணி அடிக்கிற அவசரத்திலே சாவியை எடுக்க மறந்து போய்ட்டார்
ஆட்டோ சோகத்துக்கு மறுபடியும் ஒப்பாரி, போதை தெளிஞ்சா ஆட்டோ காரார் என்னை காலி பண்ணிடுவருன்னு அவரை மல்லாக்க படிக்க வைத்து விட்டு நான் வீட்டு ஓடி வந்தேன்.அறைக்கு சென்ற நான் கண்ட காட்சி என்னை உண்மையிலே அதிர்ச்சி படுத்தியது.
(மறுபடியும் வரும் அதிர்ச்சி )