அமெரிக்காவிலே தமிழுக்கு இருட்டடிப்பு
அமெரிக்காவிலே நமக்கு எல்லாம் ரெம்ப காலத்துக்கு முன்னாடி வந்து துண்டை போட்டு தங்கி இருக்கும் சிங்கங்களும்(சீக்கியர்), குஜ்ஜு மக்களும் வந்து "இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க.
எப்படி நம்ம நாயரை சந்திர மண்டலம் போன டீ கடையில் சந்திக்கலாமோ, அதே மாதிரி இவங்க ரெண்டு பேரையும் அமெரிக்காவிலே இருக்கிற குக் கிராமங்களிலும் பார்க்கலாம். வந்த மக்கள் வேலையோட வேலையா ஹிந்திக்கும் நல்லா வேலை செய்து இருக்கிறார்கள்.
நாடோடியா வந்த ரெண்டு கும்பலும் நாட்டையே ஆளுற மாதிரி வளைச்சி சொத்து சேத்து வச்சி இருக்காங்க, அவங்ககிட்ட வேலை பார்க்கும் என்னை மாதிரி ஒரு சில கருப்பு அண்ணாச்சிமார்கள் ஒருசில ஹிந்தி வார்த்தை தெரிந்து வைத்து கொள்வார்கள்.நம்ம ஊருக்காரர்களை பார்த்தல் "நமஸ்தே" ன்னு சொல்லி குஸி படுவாங்க
இங்க உள்ள ஆபிரிக்கன் அமெரிக்கன் மக்கள் எல்லாம் என்னை மாதிரி கருப்பா இருக்கிறதாலே அவங்களை செல்லமா நான் கருப்பு அண்ணாச்சி ன்னு ௬ப்பிடுவேன்
ஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்யும் போது ஒரு அண்ணாச்சி என்னை பார்த்து "நமஸ்தே" ன்னு சொன்னாரு.நானும் பதிலுக்கு ஒரு "நமஸ்தே" போட்டு வைத்தேன். உடனே ஒரு ஹிந்தி பாட்டு என்கிட்டே போட்டு காட்டினார், அந்த பட்டை எங்கையே கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தால் "ரோஜா" படத்தோட ஹிந்தி பாட்டு.பாட்டோடு நிக்காம இவரு "இந்தி" யா விலே பெரிய இசை அமைப்பாளர் இவரு பேரு ஏ.ஆர் ரகுமான்கான்.
நான் சொன்னேன் அவரு பேரு ஏ.ஆர் ரகுமான். அந்த கருப்பு அண்ணாச்சி என்கிட்ட ஹிந்தி படவுலகிலே இருக்க எல்லாரோட பெயரும் "கான்" ன்னு முடியும் சாருக்கான்,அமீர்கான் மற்றும் சல்"மான்" கான் உட்பட அடங்கும்.
இப்படி சொல்லுகிறவரிடம் நான் என்னத்தை சொல்ல, நம்ம பங்காளி நாட்டுக்கு சொந்தக்காரர் இம்ரான்கான் இருக்காருன்னு சொல்லமுடியுமா?
இங்கே உள்ள பெண்களுக்கு புடவைன்னா என்னன்னு தெரியாதோ அதே மாதிரி கிரிக்கெட்ன்னா யாருக்கும் தெரியாது.
ஹிந்தி படவுலக மக்கள் ஹாலிவுட்காரன் படத்தை திருப்பி அவனுக்கே போட்டு எனக்கு ஆஸ்கர் கொடுன்னு...எனக்கு ஆஸ்கார் கொடுன்னு.. சண்டை போடுற மாதிரி, இவரு நம்ம பாட்டையே எனக்கு திருப்பி போட்டு ஹிந்தி பாட்டுன்னு சொன்னாரு.
அமெரிக்கா வந்த புதுசிலே இங்க உள்ள மக்கள் எல்லாம் காதுல சங்கிலி மாதிரி ஒன்னை மாட்டி பாட்டு கேட்டுகிட்டு இருக்காங்கன்னு நானும் ஒன்னை வாங்கி வச்சி இருந்தேன், நல்ல வேளை "ரோஜா" வோட தமிழ் பாட்டு இருந்தது அதிலே,அதை அவருக்கு போட்டு காட்டினேன்.
பாட்டை கேட்டுட்டு அண்ணாச்சி "நல்லா பாட்டை காப்பி அடிச்சி இருக்கீங்க" ன்னு சொன்னாரு.அண்ணாச்சி ரெம்ப பொறுமையை சோதிக்கிறார்னு தமிழ் கலந்த இந்திய வரலாறை எனக்கு தெரிஞ்ச வரையிலே அவுத்து விட்டேன்.
ஐயா இந்தியாவிலே 200 க்கு அதிகமான மொழி பேசுறாங்க, அதுல ஒன்னுதான் இந்தியும், தமிழும்.அதோட நிக்காம தமிழ் மொழி, லத்தின், கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழி யைப்போல மிக பழைமையான மொழி, இந்த உலகத்திலே வாழும் தொன்மை மொழி தமிழ்ன்னு சொன்னேன். அதோட இன்னு ஒன்னையும் சேத்துகிட்டேன், திருக்குறள் பைபிள்க்கு அடுத்த படியாக உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்படும் ஒரு நூல்னு சொன்னேன்.
இவ்வளவு சொல்லியும் மனுஷன் என்னை கொஞ்சம் ௬ட நம்பலை, உடனே அவரிடம் தற்காப்புக்கு வச்சி இருந்த ஒரு பத்து ரூபாயை கட்டி இதிலே
உள்ள எல்லா மொழியும் அரசாங்க மொழிகள்னு சொன்னேன்.
அவரு நம்ம ஊரு மொழிகளோட எழுத்தை எல்லாம் பாத்துட்டு
"இதுல எந்த சிலேபி உங்க சிலேபின்னு கேட்டாரு?". அதிலே தமிழைக் காட்டி
"இது தான் எங்க சிலேபின்னு" சொன்னேன்.
அவரு கேட்கவே ரெம்ப சுவாரசியமா இருக்கு, நான் இது நாள் வரையிலே "இந்தி" யா வில் இந்தி மட்டும் தான் பேசுவாங்கன்னு நினைச்சு கிட்டு இருதேன். சமிபத்திலே ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர் ரகுமான் நல்ல வேளை "எல்லா புகழும் இறைவனுக்கேன்னு தமிழ்ல சொன்னாரு.அந்த புகழ் இறைவனுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தான்.
தமிழ் மக்கள் இருக்கும் போதே இப்படி ஒரு விஷ பிரச்சாரம் ஹிந்திக்கு பண்ணுகிற மக்கள் மத்தியிலே நாமே எல்லாம் வெளியே வரலைன்னா தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல!!!!!!!