Sunday, September 14, 2008

தீவிரவாத தாய்

மவனே,

தொடர்ச்சியா பெங்களுரு, அகமதாபாத் இப்ப டெல்லில குண்டு வச்சு, அத நான் தான் பண்ணினேன் சொல்லி பெருமையா பீத்திகிட்டு அலையும் நதாரிக்களா .

என்னமோ சப்ப மூககன் சீனா காரன்கிட்ட சண்ட போட்டு ஜெய்ச மாறி பல்லை காட்டிகிட்டு மார் தட்டி நிக்கும் கோழை பெயளுவளா

இப்படி அடுத்தவன் குடி யை கெடுக்க கங்கணம் கட்டிக்கிட்டு நீ தெரு நாய் மாறி நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையுவனு தெரிஞ்சு இருந்தால் உன்னைய கள்ளி பால் ஊத்தி காலி பண்ணியிருப்பேனே

முதுகு காட்டி ஓடும் ஓடுகாலி உனக்கு பால் கொடுத்த என் மார்பை மட்டுமல்ல என் தலையையும் அல்லவா வெட்டி இருப்பேன்

கொஞ்ச நாளா சாமியை காப்பாத்த போறோம்னு சொல்லிக்கிட்டு அடுத்தவன் வாயில மண் அள்ளி போட்டீங்க, இப்ப பொழுது போகலைனா பெட்டியை கெட்டிகிட்டு குண்டு வைக்க கிளம்பிடுரீங்க.

அறிவு கேட்ட மவனே, என்னைக்கு நீ கடவுளை காப்பத்த கிளம்பிநியோ அன்னைக்கே சாமி செத்து போச்சுடா, அவரு இந்த உலகத்தை படைச்சவரா இருந்த அவர காப்பாத்த அவருக்கு தெரியாதா.

அவரை காப்பத்த நீ படுற பாட்டுக்கு நீ அவர கும்புட கூடாது, அவரு தான் உன்னை சாமியா கும்பிடனும். அவருக்கு சக்தி இருந்தா ஜனங்க முன்னால வந்து சொல்லி இருப்பார் நான் தான் கடவுள்னு

இல்லாத ஒன்னுக்கு சண்ட போட்டு இருகவன் குடியை கெடுகிறதா நினச்சு கிட்டு உன் குடியவே கெடுத்துகிட்டு அலையுற கிறுக்கு பெயலே

மூளை இருந்தா இதெல்லாம் உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, அதனால்தான் உனக்கு குதிரை மாறி லாடம் காட்டி கடிவாளம் போட்டு சுலபமா பழக்கி டுராங்க

இந்திய தாயே நீ மதசார்பு இல்லாதவள் னு சொல்லிக்கிட்டு மதத்துக்கு பின்னாடி போற பெரியாத்தா, நீ மனித நேயத்தை வளக்க முயற்சி எடுக்கணும் தாயி,இப்படியே போச்சுனா உன்னைய குழி தோண்டி புதைக்க மாட்டாங்க குண்டு வைச்சே புதைசுருவாங்க

இதை மாத்த ஊருக்குள்ள நாங்க தான் பெரிய பருப்புன்னு சொல்லிக்கிட்டு திரியுற அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல, அந்த பெரிய பருப்புகளை தேர்ந்து எடுக்கு சிறு பருப்பாகிய நமக்கும் இருக்கு

ஊருக்குள்ள இருக்க குப்பை யை கொட்ட குப்ப தொட்டி வச்சா அதுல குண்டு வச்சு, இருக்க மனுசனை எல்லாம் குப்பை ஆக்கிகிட்டு இருக்கிற இவனுக மனசே ஒரு குப்ப தொட்டி ஆத்தா

நான் சொல்லுறதை சொல்லிட்டேன், நீ சீக்கிரம் கேட்கலைனா உன்னை உலக வரை படத்துல இருந்து எடுதிடுவானுக இந்த எடுப்பட்ட பெயலுக


3 கருத்துக்கள்:

Anonymous said...

deei,
nee oru paithiyam daa.
Unmai theiyaamal oru katturai pottu irukkai.

Aero said...

innum koncham vera mari present pannirukalamonu thonuthu...

Anonymous said...

ரொம்ப சரி. நாம முன்னேத்தம் தங்கமா சில புல்லுருவிகள் இந்த நாச வேலைய செய்யுறாங்க. மொதல்ல அவங்கள போட்டு தள்ளனும். நமக்கு ஏன் துப்பாக்கி. அருவாள் போதும்.