Friday, August 22, 2008

ரஜினியும் அரசியலும்

"கண்ணா நான் எப்ப வருவேன்..எப்படி வருவேன் தெரியாது..ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வருவேன் கண்டிப்பா" அப்படின்னு தலைவர் சொன்னாலும் சொன்னார்(அதாவது எழுத்தாளர் எழுதியதை) மனுசனை போட்டு என்ன பாடு படுத்துகிறோம்

அவரு "என்னை வாழ வைக்கும் ரசிக பெருமக்களே" சொன்ன மனுஷன் எதோ கஞ்சிக்கு வழி இல்லாம சொல்லுராருனு நினைத்து இவன் போய் படம் பாத்து ஓட வைகலைனா அவரு வீட்டுல உலை கொதிகாதுனு நினைப்பு எல்லாருக்கும்(என்னையும்)

ஐயா சாமிகளா... உடனே கண்டனம் தெரிவிக்க வரிஞ்சு கட்டிகிட்டு வராதீங்க முழுசா படிங்க.

மேல சொன்ன கணக்கு படி பாத்தா நாம தலைவர் படம் தான் தமிழ் நாட்டுல ஓடனும், ஏன்னா வேற யாரும் "என்னை வாழ வைக்கும் ரசிக பெருமக்களேனு" சொல்லுறது கிடையாது.அவரை தவிர எவ்வளவோ பேர் நடிச்ச நிறைய படங்கள் வெள்ளிவிழா, வெற்றி விழா னு கொண்டாடுது

சரி நீ(என்னையும் சேத்துதான்) சொன்ன மாதிரி வந்தாலும் ரஜினி நடிச்ச எல்லா படத்தையும் ஓட வைக்குரோமா இல்லையே...

நேத்து பாபா பட்ட பாடு நாடே அறியும்
இன்னைக்கு குசேலன் படுற பாடு உலகமே அறியும்

இந்த மாதிரி இருக்கப்ப நம்மளை நம்பி அரசியல்ல இறங்கினா அவருக்கே கோவிந்தா போட வைக்க மாட்டோம் என்று என்ன நிச்சயம்..

இல்ல... அப்படியே வந்தாலும் ஜெயிச்சி ஆட்சியை பிடிப்பார் என்பதக்கு யாராவது உத்திரவாதம் கொடுக்க முடியுமா(அப்படி கொடுத்த தமிழ் நாடை அவங்க பேருல எழுதி வைக்கலாம்)

பாவம் அந்த மனுசனும் ரசிகர்கள் சொல்லிடாங்கலேனு நினைச்சு படத்துல வார வசனத்தை நீக்கிட்டு உக்காந்து இருக்காரு .

சரி வசனத்தை நீக்கினதால படம் 200 நாள் ஓடும்னு சொல்லமுடியுமா?

அரசியலுக்கு வாரதும் வராததும் அவோரோட சொந்த விருப்பம், Audience puls நல்லா தெரிஞ்ச அவரு படத்துக்கே ஆப்பு வைக்கிற நாம Politics puls தெரியாம களத்துல இறங்கினா ஆப்பு *(பெருக்கல்) ஆப்பு வைக்கமாட்டோம்னு என்ன நிச்சயம்.

இப்ப படம் நல்லா ஓடலைனு கொடி புடிக்கிற திரைஅரங்கு உரிமையாளர்களும் நம்மளை மாதிரி ஒரு ரசிகர் தான், ஆனா அவரு பிரச்னை வேற தலைவர் படம் 200 நாள் ஓடின நல்லா கல்லா பெட்டி நிரஞ்சி வழியும், அப்படி வழியிரப்ப என்னமோ இவரு அதிகமா வார பணத்தை திருப்பி கொடுத்த மாதிரி, படம் ஓடலைனா உடனே பணத்தை திருப்பி கொடுனு கோசம் போட ஆரமிச்சுடுறாங்க. உண்மையான பச்சோந்தியை எங்கையும் தேட வேண்டாம் ஐயா ..

இவங்க ரூபத்துல இருகாங்க,இதை ஏன் இங்க சொல்ல வரமுணா, இவங்களும் மக்களுல ஒருத்தங்க நாளைக்கு நம்ம தலைவர் அரசியலுக்கு(ஒரு வேளை) வந்தால் இவர்களும் ஓட்டு போடுவார்கள்

இதை நம்ம சாலமோன் பாப்பையா பாணியில சொல்லனுமுனா
"ஆக மொத்ததுல எல்லாரும் கொடி புடிச்சுட்டு தான் இருக்கோம்

சிலபேரு வருவியா..வரமாட்டியா...
சிலபேரு தருவியா..தரமாட்டியா..
தரலைனா உன் பேச்சு கா..
வரலைனா உன் பேச்சு கா.."

இப்படியே பாடிகிட்டு இருந்தால் இப்ப அடிகடி இமையமலை போற நாம தலைவர் அங்கேயே நிரந்தமாக இருந்துருவாரு

முக்கிய குறிப்பு: இது யாரோட மனசை புண் படுத்தனுமுனு நினச்சு ஏழுதலை, அப்படி யாராவது இருந்தால் அவங்ககிட்ட கூல கும்புடு போட்டு மன்னிப்பு கேக்குறேன் சாமியோ.....


1 கருத்துக்கள்:

நசரேயன் said...

நன்றி

நாமக்கல் சிபி

அவர்களே